Wednesday 27 April 2022

பொருளாதாரம் முன்னேற்றம்



ஒரு செம்பு பாத்திரம் அல்லது கப். அதில் அரை cup தண்ணீர் அதில் ஏதேனும் பூக்கள் சிகப்பு நிறம் செவ்வரளி போன்றவை சிறப்பு.

எனினும் எந்த பூ என்றாலும் பரவாயில்லை.

அதையும் தண்ணீருடன் அந்த cup இல் போட்டு சூரியன் உதிக்கும் கிழக்கு திக்கு நோக்கி தரையில் ஏதாவது செடிக்கு ஊற்றி விட வேண்டும்

" ஓம் சூர்யாய நமஹ " மனதில் 3 முறை அல்லது அமைதியாக சொல்லலாம்.

காலை 5.30 to 6.00 நலம்.

எல்லா நாளும் செய்யலாம் அல்லது நடுவில் அவ்வப்பொழுது gap விட்டாலும் தவறில்லை.

செம்பு cup இல்லாதவர்கள் plastic, பீங்கான் அல்லது கண்ணாடி cup அல்லது டம்ளர் பயன்படுத்தலாம்.



விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது சொந்த அனுபவம் - 

Sunday 27 March 2022

போர்ஸ் பயம்

*இந்த ஜாதகம் கட்டம் நல்ல நேரம் கெட்ட நேரம்  இதனால மனுசனுக்கு பயம் ஏன் வருது*

*அப்ப சாதரண பயத்திற்கும் அசாதரண பயத்திற்கும் என்ன விஷயம்*

*இப்ப மனிதர்கள் எல்லாரும் கிரக சேர்க்கை சனி நகர்வு பெயர்ச்சி இராகு கேது குரு பெயர்ச்சி ஜோசியம் வாஸ்து  இப்படி பார்த்துட்டு யாரோ சொன்ன ஒரு வார்த்தைக்கு அதிக அளவு முக்கியதுவம் கொடுக்குறதுனால தான் இந்த பய உணர்வு மனிதர்களுக்கு ஏற்படுகின்றது*

*சரி இதை பத்தி லாஜிக்கா சொல்ற என் மூளை கிட்ட கேட்டா*

*மனிதனின் தொடர்ச்சியான  எண்ணத்தை நிறுத்த மனிதனின் மூளைக்கு இருக்குற ஒரே வழி பயம் இந்த பயம் வந்த மனிதர்களால தன்னோட அடுத்த வேலையை செய்யறதுக்கு தேவையான புதிய யோசனையை மூளை நிறுத்துமாம்*

*அப்புறம் என்ன மனுசனுக்கு ஏற்பட்ட அந்த பயம் போக வரைக்கும் பசி எடுக்காத வகையில் மூளை வேலை செய்ய ஆரம்பிக்குமாம் அதனால மனிதனுக்கு பசிங்கிற உணர்வே இந்த பயம் போற வரைக்கும் ஏற்படாதவாறு பார்த்துகுமாம் மூளை*

*அப்புறம் என்ன ஆகும்னா நம்ம ஏற்கனவே நம்ம மூளைல படிச்சது கேட்டது பார்த்து வைச்சது எல்லாத்தையும் சேர்த்தி வச்சியிருப்போம் அதுல ஒன்றை நாம் தேர்ந்தெடுத்து சால்வ் பண்ணுற வரை இந்த பசிங்கிற உணர்வை நம் மூளை தள்ளி போடும்*

*அதனால் தான் பயம் வந்த மனுசங்க கிட்ட கேட்டிங்கனா வயிறு கும்முனு இருக்குது பசிக்கலை இப்பவேண்டாம்னு சொல்லுறது இல்லாட்டி கொஞ்சம் சப்பிட்டு போதும்னு சொல்லுறது*

*மனிதர்களுக்கு ஏற்பட்ட அந்த பயத்தை பத்தி மட்டுமே யோசிச்சு தெளிந்து ஒரு முடிவுக்கு வருவாங்க அப்புறம் இந்த பயம் போனதுக்கு அப்புறம் மூளை எப்பவும் போல வாப்பா நாம புதுசா யோசிச்போம்னு நம்மல வழிநடத்தும் எப்பவும் போல பசி உணர்வு ஏற்பட்டு நார்மலா சாப்பிடுவோம்*

*கதை சொல்லுறவுக்கும் ஒரு லிமிட் இருக்குனு என் மூளை கிட்ட கேட்டா*

*மனுசங்க பார்த்து பயந்துட்டு இருக்குற இந்த சனியை பத்தி ஒரு சூப்பர் குட் பிலிம் ஸ்டோரி மாதிரி சொல்லுறேனு சொன்ன தகவல் என்னனா*

*ஒட்டு மொத்த உலகத்தையும் ரூல் பண்ணுறது. சனி தான்*

*ஒவ்வொரு மாதமும் சந்திரன் மறைந்துவிடும்.  ஒவ்வொரு மாதமும் பூமி மறைந்து போக வேண்டும் இது தான் எழுதிய விதினு வெச்சுகலாம் எழுதப்படாத விதினு கூட வெச்சுகலாம்*

*எப்பவும் போல உதாரணம் கேட்டா உன்னோட செல்லுல இருக்குற இமோஸில இந்த சனிக்கு🪐 உள்ள முக்கியதுவத்தை பார்த்து தெரிச்சுக்க சொல்லுது*

*உலக டாப் பிராண்ட் செருப்பு லோகோ கணினி லோகோ கார் லோகோ ஏன் தினசரி பயன்படுத்துற எல்லா பொருள் லோகோவிலும் இந்த இந்த சனியின் சாராம்சம் இருக்குமாம்*🪐

*என்னோட எண்ணத்துக்கும் சனிக்கும் தொடர்பு இருக்கானு கேட்டா கண்டிப்பா இருக்குதாம் அது என்னன்னா பயமாம்*

*உதராணம் கேட்டா மனுசனோட அமைப்பு எப்படினா எதிலும் வேகம் அதுவும் இப்பவே முடியனும் இந்த நிமிசமே செய்யனும்னு நினைச்சு அந்த விஷயத்தில் எக்ஸ்பெர்ட் இல்லாம செஞ்சு சொதப்பும் போது இந்த கோள்களை கைகாட்டிட்டு  இதனால தான் இப்படினு சொல்லுவாங்களாம்*

*அப்ப சனி கிரகத்தை சாரி சாமியை நேருக்கு நேராக நின்னு கும்பிட கூடாதுனுங்குறதுக்கு காரணம் கேட்டா*

*அதெல்லாம் சும்மாங்கிறது மூளை*

*எல்லா விளைவுக்கும் ஓர் எதிர் விளைவு இருக்கும் அதே போல தான் மனித உடம்பு தாங்க கூடிய அளவுகளை விட போர்ஸ் அதிகபடுத்தினா(அதவாது ஆற்றல்)  எப்பவும் சமநிலையில் மூளை இருக்கும்*

*சிம்பிளா சொல்லனும்னா மனிசன் இந்த சனி கிரக ஜியோ போர்ஸை விட ஒன்னு அதிகப்படுத்தலாம் இல்லாட்டி சமநிலை படுத்தலாம் ஜோக்கா சொல்லனும்னா ஒன்னு சூப்பர் மேன் போல ஆகனும் இல்லாட்டி சின் சான் போல ஆகனும்*

*எப்படி இந்த போர்ஸ்ஸை மனிதன் அதிகப்படுத்தினானு பார்த்தா ஒன்று அவனுடைய மனநிலையில் மாற்றம் ஏற்படுத்துவது  இன்னொன்று கல் தங்கம் வைரம் இயற்கையா கிடைக்கிற பொருட்களை வைத்து*

*மேக்னட்டிக் போர்ஸ் போல பரவி இருக்குற இந்த ஜியோ போர்ஸ் ஒர் அளவுக்கு  தான் மனித உடம்பினால் தாக்கு பிடிக்க முடியும்*

*இந்த ஜியோ போர்ஸ் அதிகமா இருக்குற இடத்துல மனுசனுக்கு தடுமாற்றம் ஏற்படும் அதனால தான் சாலையில் ஒரே இடத்துல அடிக்கடி விபத்து ஒரே இடத்துல பூகம்பம் சுனாமி போன்றவை ஏற்படுறது*

*அதனால் தான் ரோட்டுல கவனம் விபத்து பகுதினு அங்க அங்க போட்டு வைக்கிறது*

*இதுக்கு ரெமிடி தான் என்ன எப்படி என்னோட (ஜியோ போர்ஸ்) பய உணர்வை போக்குறதுனு கேட்டா ஏற்கனவே எல்லாத்தையும் சொல்லிட்டேன் இருந்தாலும் சிம்பிள் ரெமிடி சொல்லுச்சு*

*நார்மலா நாம படுக்குற இடத்தை இந்த பய உணர்வு வரும் போது மாத்தி படுத்த வே போதுமாம் எல்லாம் மறந்து நமது எண்ணங்கள் மறுபடியும் சிறகடிக்க தொடங்கிடுமாம் பசியும் உடனே எடுக்குமாம்*

*அப்புறம் என்ன நமக்கு.எப்பவும் போல ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்*

*அப்ப இந்த ஜியோ போர்ஸ் வேற மேக்னடிக் போர்ஸ் வேற கிராவெட்டி போர்ஸ் வேறையானா*

*இந்த போர்ஸ் எல்லாத்துக்கும் ஒரே ஒரு விஷயம் மட்டும் எப்பவுமே ஒற்றுமையா இருக்கு நான் பார்த்த வரை அதன் துருவங்கள் 100% மேட்ச் ஆகுது ஆனா போர்ஸ் மட்டும் டிபர் ஆகுது*

*சரி எல்லாத்தையும் கலந்துவிட்டு பார்க்கலாம்னா ஒன்னு ஒரே அடியா நமக்கு பிடிச்ச மாதிரி இருக்குது இல்லை ஒரே அடியா சூப்பர் பாஸ்ட்டா மாறிடுது*

*சிம்பிளா சொல்லனும்னா நமக்கு காத்து எவ்வளவு வேனும்னு நம்ம வீட்டு பேன்   ஒன்னுலையா இல்லை ஐந்திலயானு ஒடுறதை பொறுத்து*

*தொடர்ந்து பயணிப்போம் இந்த போர்ஸ் பற்றியும்*🥰🥰🥰

Saturday 26 March 2022

மாணவன்

சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்தான்.

 ''ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டான்.

அதற்கு சாக்ரடீஸ்,
''மாணவன் என்பவன், 
கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப் போல இருக்க வேண்டும். உப்பைப் போல இருக்க வேண்டும். உன்னைப்போல இருக்க வேண்டும்'' என்றார்.

மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்'' என்றான்.

''கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும். அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்'' என்றார்.

''கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?'' என்று கேட்டான் மாணவன்.

''கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும். அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத்  தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார் சாக்ரடீஸ்.

''அடுத்தது, உப்பைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே...''

''ஆமாம். உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும். ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும். அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்'' என்றார்.

''எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே... அதற்கு என்ன அர்த்தம்?'' என்று கேட்டான்.

''மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் எனச் சொன்னேன்'' என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ்.

அந்த மாணவன் மகிழ்ச்சியுடன் அவரை வணங்கினான்.

🙏🙏🙏

Friday 28 January 2022

இரசவாதம்

ரசவாதம் என்பது ஓர்விஞ்ஞானம் அல்ல,
 அப்புறம் மாயாஜாலம்மா இல்ல, 
 தத்துவமா இல்ல.  

இது தெளிவற்றது ஆனால் முறையானது

அப்புறம் இது என்னதான் இரசவாதம்
இது எல்லாவற்றின் கலவையாகும்

இது குறியீடுகள் மற்றும் உருவகங்களால் நிறைந்துள்ளது, மேலும் அதன் குறியீடு சிக்கலானது ஆனா மிகப்பெரிய இரகசியத்தை உள்ளடக்கியது இந்த இரசவாதம்.

*பண்டைய ரசவாதிகளின் சின்னம் கடவுள் ஆண் மற்றும் பெண் சக்திகளின் கலவை மற்றும் சமநிலை, ஒளி மற்றும் இருள், ஈரப்பதம் மற்றும் வறட்சி*

இயற்கையானது சூரியனின் வெப்பத்தால் மனிதனை உருவாக்குகிறது என்று கூறுகிறது இரசவாதம்,

ரசவாதக் குறியீடானது மிகவும் குழப்பமானது  ஆனால் சரியான முறையில்  கையாண்ட முதல் இரசவாதிக்கு தான் தெரியும் அதன் உண்மை தன்மை

சரி தத்துவம் பேசுறவங்க என்ன சொல்லுறாங்க இந்த இரசவாதம் பத்தி
புத்தகத்தில் என்ன தான் சொல்லி இருக்காங்க

இந்த உலகத்தின் முடிவில், வானமும் பூமியும் சந்தித்து கொள்ள வேண்டும் இது உண்மையில் அவசியம் என கூறுவார்கள் - ஹெர்ம்ஸ் டிரிஸ்மெஜிஸ்டஸ்


சூரியனும் மனிதனும் ஒரு மனிதனை உருவாக்குகிறார்கள், ஏனென்றால் சூரியனின் சக்தியும் ஆவியும் உயிர் கொடுக்கின்றன சூரியனின் வெப்பத்தின் மூலம் இந்த செயல்முறை ஏழு முறை கடந்து செல்ல வேண்டும்.  - அரிஸ்டாட்டில்

வெப்பம் அவசியம், ஏனென்றால் அதன் சக்தியின் மூலம் பூமி இருளில் இருந்து விடுபட்டு அதற்கு பதிலாக ஒளியால் ஆசீர்வதிக்கப்படுகிறது.
 - டிரிஸ்மோசின்

 பூமியிலிருந்து எழுகிறது  வானத்திலிருந்து இறங்குகிறது;  அது மேலே உள்ளவற்றின் வலிமையையும் கீழே உள்ளவற்றின் வலிமையையும் தன்னகத்தே சேகரிக்கிறது.  - எமரால்டு டேபலட்

பூமியில் இவ்வாறு வெப்பத்துடன் கலந்துள்ள அனைத்தும் நிலவின் குளிர்ச்சியால் மாற்றியமைக்கப்படும்.  - டிரிஸ்மோசின்

 சரி இந்த  ரசவாதம் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது இந்த வெப்பத்துடன் நம் உலகில் 

இந்த வெப்பம் பூமியில் இருக்குற அனைத்து உயிர்களுடன் ஒட்டி உறவாடும் எப்போதும் ஒர் உயிர் முதல் பல்லுயிர் வரை

ஆனால இந்த வெப்பத்தை சரியா கையாளத் தெரியத உயிர்களுக்கு இந்த வெப்பம் எதிரியா தெரியும் கடைசில கருப்பாகி அழுகி தன்னை விடுவித்து வேறு பரிணாமத்தை நோக்கி நகர்திடும்
ஆனால்

இரசவாதிகள் மத்தியில் இந்த வெப்பத்தின் கலவை வேறுபட்டது

இந்த அளவு வெப்பம் இதுக்கு போதும் உதரணமா தங்கத்தை உருக்கிறது , சமையல் பண்ணுறது. காய்ச்சுறது. போன்றவற்றில் வெப்பத்தின் தன்மை மாறும்

ரசவாத செயல்முறையின் முடிவில் இரசவாதி என்ன பண்ணுவார்னா தான் கண்டுபிடித்த வெப்பத்தின் அளவை தத்துவமா கல்லில் குறியீடாக வரைவார் 

இப்படி தான் குறியிடுகள் கல்லில் சொல்லப்பட்டது இரசவாதிகள் மூலம் நமக்கு

சரி நம்ம உடம்ப பத்தி இரசவாதிகள் என்ன தான் சொல்லி வைச்சாங்க அந்த காலம் முதல் இந்த காலம் வரை

மனிச உடம்புல முக்கியமானது கண்ணும் காதும்

இது மனிதனின் உணர்வு உறுப்புகளாகும்

இந்த ரெண்டும் சரியா கையாளப்பட்டால் தனக்குள் மேன்படுவான்

 இதன் மூலம் மனிதனின் ஆன்மா மற்றும் ஆன்மீக உலகங்கள் அவனுக்கு திறக்கப்படுகின்றனவாம்

சரி இந்த கன்னும் காதும் இல்லாத  உடல் உயிர்களுக்கு உலகம் எப்போதும் இருண்டு மௌனமாக இருக்குமாம்

 இவ்வுலகங்கள் அவைகளுக்கு இருளாகவும் மௌனமாகவும்தான் எப்போதும் காட்சி அளித்து கொண்டு இருக்கின்றன இன்றளவும்

நாம் வாழும் உலகங்கள்  சாதாரண சூழ்நிலையில் நமக்கு எதுவும் தெரியாது
பார்த்து கொள்ளும்

நமக்கு அப்பாற்பட்ட உலகங்களை, நாம் அணுக முடியாத உலகங்களை நமக்கு அறிமுகப்படுத்த அவைகள்  விரும்பவில்லை

ஆனா இரசவாதி இந்த உலகத்தில் எப்படி தன்னை மேம்படுத்த என்னுனார்கள்னா மனித இயக்கத்தின் பணியானது, ஒவ்வொரு நாளும் மற்றும் ஒவ்வொரு மணிநேரமும் நம்மைச் சுற்றியுள்ள உலகங்களை நமக்குத் தெரியப்படுத்துவதாகும் அதை தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுனாங்க

சாதரண மனிதன் தன் உலகத்தில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தும் உலகங்களை அறிய விரும்பினான்.

ஆனா இரசவாதி இந்த உயர்ந்த உலகங்களை உணரும் உறுப்புகளைத் திறக்கும்செயல்களில் பங்கேற்க முயன்றான்

அதனால தான் உயர்ந்த உலகங்களை அவர்களே பார்த்து இரசிக்கும் திறனை  பெற முடிந்தது அவர்களால்.



























Friday 27 August 2021

கத்திரிக்கோல்

*''கத்திரிக்கோல் வேண்டாமே...!*
......................................................... 

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு பற்றி கேள்வி பட்டு இருக்கிறோம். கற்றிருந்தாலும் கைவிடப்பட வேண்டிய கலை ஒன்று இருக்கிறது தெரியுமா...?
அதுதான் ''கத்தரிக்கோல் கலை.'' 

இயல்பாகவே சிலருக்கு இது கைவந்த கலையாக இருக்கும். இக்கலை வல்லுனர்களை எளிதில் இனம் காணலாம். 

அவர்கள் வேலை ஆகும்வரை வளைந்து நெளிந்து குழைந்து பேசுதல்;, அடிக்கடி தொலைப்பேசியில் அழைத்து நலம் விசாரித்தல், நம்மைப் பாராட்டி நம்மிடமே அளப்பு அரிப்பார்கள்... 

அவர்கள் வேலை முடிந்ததும் காணாமல் போய் விடுவார்கள்... 

நாம் வலியப்போய் பேசினாலும், 
"எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருக்கிறது, நாளைக்கு பேசலாமா..?"என்று நழுவி சென்று விடுவார்கள்.... 

இப்படிபட்ட கத்திரிக்கோல் கலைஞர்களை நாம்தான் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்... 

"ஏதோ!, ஒரு உதவி செய்து விட்டார் என்று, திரும்பத் திரும்ப நாமே அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எப்படி இவர் எதிர்பார்க்கலாம்.?" 

அதற்காக இப்போது என்னுடைய மரியாதைக்கு இவரிடம் இப்போது நான் தொடர்பு வைத்து கொள்ள முடியுமா.? 

இப்படி எண்ணி எண்ணி அத்தகைய நட்பும், உறவும் இனி தேவையில்லை என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள்... 

நீங்களும் இந்த வகை கலைஞரில் ஒருவரா...? அப்படி என்றால் உங்களுக்கு சில வார்த்தைகள்: 

எவரையும் குறைத்து மதிப்பு இடாதீர்கள். இவரால் நமக்கு இனி ஆக வேண்டியது ஒன்றுமில்லை என யாரையும் எடை போட வேண்டாம்...
யார் உதவி!, எப்போது தேவைப்படும் என்பது இப்போது தெரியாது... 

சிறு உதவி செய்ததற்கே நீங்கள் நன்றி உள்ளவராக இருக்கும்போது மேலும் பெரிய உதவிகளை அவராக முன்வந்து செய்யக்கூடும்தானே...! 

அவருக்கு பெரிய மனம் இருந்ததால்தானே உங்கள் வேலையை வெற்றிகரமாக அவர் மூலம் சாதித்து இருக்கிறீர்கள்...! 

நீங்கள் கத்தரிக்க நினைப்பதை புரிந்து கொண்டால், அவர் முந்திக் கொள்வதுடன் நன்றி கெட்டவர் என்கிற பட்டத்தையும் உங்களுக்குத் தருவார்... 

பிறகு, நீங்கள் வலியப் போனாலும் அவர் மனதில் நீங்கள் செல்லாக்காசு ஆகிவிடுவீர்கள்தானே...! 

சின்னஞ்சிறு உதவி செய்தவரைக்கூட மறக்காதீர்கள். எதையும் சிறிது என மதிப்பு இடாதீர்கள். சில  நேரங்களில் சின்னச் சின்ன உதவிகள்தான் நமக்கு தேவையாக இருக்கும்... 

பணக்காரர் இல்லையே என ஏளனமாக நினைக்க வேண்டாம். ஆபத்து காலத்தில் உதவி செய்யாத செல்வந்தர்களைக் காட்டிலும் கையில் இருந்ததை அப்படியே கொடுத்து உதவிய ஏழை நண்பனே மேல்... 

*ஆம் நண்பர்களே...!* 

🟡 *கத்தரிக்கோல் கைவசம் வைத்திருப்பவர்களுக்கு அன்பான நண்பர்களோ!, உறவினர்களோ!, இருக்க மாட்டார்கள்...!* 

🔴 *"இவரைத் தெரியாதா...? இவர் தன் வேலையாகும்வரை காலைச் சுத்தி வருவார். வேலை ஆனதும் காலை வாருவார்" என்று நிச்சயம் உங்களைப் பற்றி அவர்கள் மத்தியில் ஒரு பேச்சிருக்கும்...!!* 

⚫ *உங்களால் கத்தரிக்கப்பட்டவர்கள் உங்களைப் பற்றி அவதூறாக தமக்குள் மட்டுமல்ல, உறவினர், நண்பர்களிடமும் பரப்புரை செய்வார்கள். மொத்தத்தில் அதனால் உங்கள் குடும்பத்தினரும் மரியாதை இழக்க நேரிடும்...!!!* 

🔘 _*எனவே!, எரையும் எந்த காலத்திலும், எக்காரணம் கொண்டும் கத்தரித்து விடாதீர்கள்.*_ 

*- வாழ்க வளமுடன்.*✒️

Monday 14 June 2021

எஜமானர்

 
உங்கள் வாழ்க்கையின் எஜமானர் யார்❓❓

இந்த வாழ்கை எவ்வளவு வித்தியாசமானது. ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு விசயத்தை நமக்குச் சொல்லிக் கொடுத்துக்கிட்டே தான் இருக்கு. வாழ்க்கை என்பது எப்போதும் சந்தோசம் நெறஞ்சது இல்லை, இன்பமும், துன்பமும் கலந்து இருப்பது தான் வாழ்க்கை. 

ஒரு விசயத்தை நாம தெளிவா புரிஞ்சுக்கணும், நம்ம வாழ்க்கையில் நடக்கிறது எல்லாமே ஒரு நிகழ்வுகள் தான், அது சந்தோசமா இல்லை கஷ்டமானதா என்பது நம்மளும் நம்மளைச் சுற்றி இருக்கிறவங்களும் ஏற்படுத்துற ஒரு தோற்றம்.

உங்க வீட்டிலேயோ இல்லை பக்கத்து வீட்டிலேயோ சின்ன பையனோ பொண்ணோ இருந்தா ஒரு அரை மணி நேரம் அமைதியாக உட்கார்ந்து அந்த பையன் என்ன என்ன பண்ணிட்டு இருக்கான்னு பாருங்க. விளையாடுவான், கீழ விழுவான் அப்புறம் அவனே எழுந்திருச்சிடுவான், அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவான்.

எதாவது ஒரு நிகழ்ச்சியை நினைத்து அவனே சிரிச்சுக்குவான், எத்தனை முறை விழுந்தாலும் சாதாரணமா எழுந்து போயிடுவான். எந்த நேரமும் துறு துறுன்னு எதாவது ஒரு வேலையைப் பார்த்துக்கிட்டே இருப்பாங்க, ரொம்ப ஆச்சரியமான விசயமாக இருக்கும் . #மகரயாழ் எப்படி இந்த சின்ன பசங்களாலே ஏதாவது ஒரு வேலையை பண்ணிக்கிட்டே இருக்க முடியுது.

கீழே விழுவதும் பின்னர் எழுவதும் ஒரு சாதாரண நிகழ்வுதான், நீங்களும் நானும் ஒவ்வொரு மனிதரும் கீழே விழுந்து பின்னர் எழுந்திரிக்கிறோம் . ஆனால் , பெரியவர்கள் ஆன பின்பு பின்னர் ஒரு சின்ன தோல்வியை நம்மால் தாங்க முடியவில்லை .சின்ன தோல்வியிலே இருந்து எழுந்திருக்க முடியாம அழுது புலம்பிக்கிட்டு இருக்கோம்.

குழந்தைகளுக்குத் தோல்வியைப்பற்றி சொல்லி கொடுங்க, வாழ்க்கையிலே ஜெயிக்கிறது எப்படியோ, அப்படித்தான் தோல்வியை சந்திக்கிறதும். வெற்றியோ தோல்வியோ அது ஒரு சாதாரண நிகழ்வுகள் என்று சொல்லிக் கொடுங்க.

எந்த ஒரு தோல்வியிலே இருந்தும் உங்களால் மீண்டு வர முடியும், உங்க மனசுக்குச் சொல்லுங்க இது ஒரு சாதாரண நிகழ்வுதான் , என்னாலே மீண்டும் மீண்டும் எழுந்து வெற்றியை அடைய முடியும். நீங்க மனசு வச்சா உங்களாலே முடியும், 

ஏன்னா இது உங்க வாழ்க்கை, "நீங்க தான் உங்க வாழ்க்கையுடைய எஜமான்".*


 

Thursday 10 June 2021

தூக்கம்

தூங்குவதும் ஒரு வகை தியானமே:

வீட்டில் மின் விசிறி ஓடுகிறது.
தொலைகாட்சி சத்தம் போடுகிறது.
ரேடியோ கத்துகிறது.

இந்த சத்தங்களை தவிர்த்து, வேறு பல வகையான சத்தங்களும் வெளியிலிருந்து கேட்கிறது.

இந்த சத்தங்களில், நாம் மிகவும் முக்கியமான ஒன்றை தொலைத்து விடுகிறோம்.

ஆம். நாம், நம்மை தொலைத்து விடுகிறோம்.

நாம் சத்தமான சூழலிலேயே வாழ்கிறோம் என்பதையே கவனிக்க தவறி விடுகிறோம்.

திடீரென, மின்சாரம் 'கட்' ஆகிவிடுகிறது.

மின்விசிறி ஓடவில்லை.
தொலைகாட்சி, ரேடியோ கத்தி உயிரை வாங்கவில்லை.

எல்லா வகை சத்தமும் நின்றுவிட்ட மாதிரி ஒரு சூழல்.

நன்கு கவனியுங்கள். இவ்வளவு நாள் நாம் கவானிக்காத ஒரு சத்தம், ஒரு புது வகை சத்தம் மெல்லிதாக கேட்கும்.

அந்த சத்தம் வெளிப் பொருளிலிருந்து வரவில்லை.

மாறாக, அது 'வெளியின்' சத்தம்.

நம் காதுக்கு ஒரு இரைச்சல் போல் கேட்கும்.

அந்த இறைச்சலையே கவனித்தால், அது பெருகும். 

அதில் ஒரு லயம் தோன்ற ஆரம்பிக்கும்.

மிகவும் இனிமையான இரைச்சல் அது.

இப்போதைக்கு அதை இரைச்சல் என்றே குறிப்பிடுகிறேன்.

இந்த இரைச்சலை பிடித்துக் கொள்ளுங்கள்.

தியானத்துக்கு இதுதான், பாதை.

தூக்கத்துக்கு இதுதான் தூக்க மருந்து.

ஒரு தடவை இந்த இரைச்சலை நன்கு அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

இரவில் தூங்கும் போது, மின் விசிறி ஓடினாலும் பரவாயில்லை. வேறு சின்ன - சின்ன சத்தங்கள் கேட்டாலும் பரவாயில்லை.

நன்கு கவனியுங்கள் இந்த இரைச்சலும் அங்கு இருக்கும்.

தெளிவாக கேட்கவில்லைஎன்றால், ஒரு பக்க காதை தலையணை மேல் மூடும்படி வையுங்கள். 

இரைச்சல் கேட்கும்.

இன்னும் தெளிவாக கேட்க வேண்டுமென்றால், இரண்டு காதுகளையும் மூடுங்கள்.

படுக்கையில் படுத்தபடி, அந்த இரைச்சலையே கவனியுங்கள்.

நன்கு தூங்கி விடுவீர்கள். 

எப்பொழுது தூக்கம் வந்தது என்றே தெரியாது.

நல்ல ஆழ்ந்த தூக்கம் வந்து விடும்.

சரி, இங்கு என்னத்தான் நடக்கிறது?

அந்த இரைச்சல் சத்தத்தை கேட்கும்பொழுது, கவனிக்கும்பொழுது மனத்திற்கு வேலை குறைகிறது.

வேலை குறைவதை மனம் ஏற்காது. 

மனத்திற்கு எந்நேரமும் வேலை செய்தாக வேண்டும். 

இல்லாவிட்டால் அது செத்துவிடும்; நீங்கள் ஞானியாகி விடுவீர்கள்.

மனம் விடாது. நாம் இரைச்சலை கவனிக்கும்போது , தியானம் செய்கிறோம்.

விழித்திருந்தால்தானே நாம் தியானம் செய்ய முடியும்!

நாம் விழிப்பை முடிவுக்கு கொண்டுவர மனம் நம்மை தூங்க விடுகிறது. 

நாம் தூங்கிவிட்டால், கனவில் அது ஆட்டம் போடலாமே!

எல்லாமே நாம் மனத்தின் தந்திரம்.

இப்போதைக்கு மனத்தின் இந்த இயல்பை நாம், நாம் தூக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதில் ஒரு சிக்கல் உண்டு.

நாம் தூங்கும்போது, இந்த இரைச்சலையே கேட்டபடி தூங்கினால், நாம் நம்மை அறியாமல் தியானம் செய்கிறோம்.

தியான நிலையிலேயே தூங்குகிறோம்.

இவ்வாறு தூங்குவதால், உடலுக்கு போதிய ஓய்வு கிடைத்தவுடன் நாம் விழித்துக் கொள்வோம்.

இந்த வகை தூக்கத்தில் வரும் கனவுகள் மிகவும் ஆழத்திலிருந்து வருகின்றன. 

ஆரம்பத்தில் சற்று பயமாக இருந்தாலும், போகப் போகப் பழகி விடலாம். 

அவை வெறும் கனவுகள்தான்.

ஆனால், நாம் தியானத்திற்குள் நுழைய உதவும் கனவுகள் அவை. நம்மை பற்றி நாமே அறியாத பல விசயங்கள் இப்படி ஆழ்ந்த கனவு மூலம் வெளிப்படுகின்றன.

தியானம் செய்வது பிறகு இருக்கட்டும்.

முதலில் நன்றாக தூங்குவோம்.

புற சத்தங்கள் குறைந்தபின், நம் காதில் கேட்கும் அந்த இரைச்சலையே கேட்போம்.

ஆழ்ந்து தூங்குவோம்...

நிம்மதியாக தூங்குவோம்...

தூங்குவதும் ஒரு வகை தியானமே!