🍁ஓஷோ ஞானக் கதைகள்🍁
🌸 நான் உனக்கு ஒரு கதையைச் சொல்கிறேன்...
புத்தர் இந்தக் கதையை அநேக தடவை கூறியுள்ளார்.
🌸 புத்தர் ஒரு காட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தார்...
அப்போது ஒரு மனிதன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான்...
யாரோ வேட்டையாடுபவர்களின் அம்பானது அவனது உடலில் பாய்ந்திருந்தது.
அவன் உயிருக்குப் போராடுகிறான்.
அவன் ஒரு தத்துவவாதி.
🌸 புத்தர் அவனிடம்,
"இந்த அம்பை உனது உடலில் இருந்து எடுத்துவிட முடியும்.
அதை எடுப்பதற்கு என்னை அனுமதி" என்று கேட்டார்...
அந்த மனிதன்,
"கூடாது, தயவுசெய்து இதற்குக் காரணம் யார் என்று முதலில் எனக்கு தயவு செய்து கூறுங்கள்?
🌸 எனது விரோதி யார்?
இந்த அம்பு ஏன் எனது உடலைத் துளைத்தது?
என்ன கர்மத்தின் பலன் இது?
இந்த அம்பில் விஷம் தடவப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்று கூறுங்கள்"என்று கேட்டான்.
🌸 அதைக்கேட்ட புத்தர்,
"விசாரணையை,
நீ பின்னர் வைத்துக் கொள்ளலாம். ஆனால் முதலில் இந்த அம்பை வெளியே எடுக்க விடு.
ஏனெனில், நீ இப்போது சாவின் விளிம்பில் இருக்கிறாய்.
🌸 முதலில்
இந்த விசாரணைகள் எல்லாம் செய்யப்பட்ட பிறகுதான்
இந்த அம்பு வெளியே எடுக்கப்பட வேண்டும் என்றால்,
நீ உயிர்பிழைக்கப் போவதில்லை." என்று
பதில் கூறினார்.
🌸 இந்தக் கதையை புத்தர் நிறைய தடவை கூறியுள்ளார்.
இதன் மூலம் அவர் கூறுவது என்ன?
"நாம் அனைவரும் சாவின் விளிம்பில்தான் இருக்கிறோம் என்று அர்த்தம்."
மரணத்தின் அம்பு உன்னை ஏற்கனவே துளைத்து விட்டது.
நீ அதை அறிந்திருக்கலாம். அல்லது அறியாமல் இருக்கலாம்.
🌸 மரணத்தின் அம்பு ஏற்கனவே உன்னுள்
ஊடுருவி விட்டது.
அம்பு கண்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.
ஆனால் கஷ்டம் இருக்கும்.
நீ படும் துன்பம்,
"மரணத்தின் அம்பு
உனக்குள் ஊடுருவிச் சென்று விட்டதாகக் காட்டுகிறது."
🌸 எனவே,
"இந்த உலகைப் படைத்தது யார்?
ஏன் படைத்தான்?
நான் ஏன் படைக்கப்பட்டேன்?
எனக்குப் பல பிறவிகள் உண்டா? அல்லது
ஒரு பிறவிதானா?
நான் இறந்த பிறகு உயிரோடு இருப்பேனா அல்லது இல்லையா?"
என்று கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்காதே.
🌸 அதனால்தான் புத்தர்,
"பிறகு விசாரணை செய்து கொள்.
முதலில் துன்பம் என்னும் இந்த அம்பு வெளியே எடுக்கப்படட்டும்"
என்று கூறுகிறார்.
🌸 மேலும் புத்தர் சிரித்துக் கொண்டே,
" துன்பம் என்னும்,
இந்த அம்பு வெளியே எடுக்கப்பட்ட பிறகு,
இதைப் போன்று விசாரணை செய்கின்ற யாரையும்,
நான் ஒருபோதும் கண்டதில்லை."
என்று கூறினார்.
🌿ஓஷோ🌿