Sunday 24 January 2021

புரிதல்

துக்கத்தைப் புரிந்து கொள்ள, நிச்சயமாக நீங்கள் அதை நேசிக்க வேண்டும், இல்லையா? அதாவது, நீங்கள் அதனுடன் நேரடி தொடர்பில் இருக்க வேண்டும்.

நீங்கள் எதையாவது புரிந்து கொள்ள வேண்டும் என்றால் - உங்கள் நண்பர், உங்கள் மனைவி, உங்கள் மேலதிகாரி -  நீங்கள் அதற்கு அருகில் இருக்க வேண்டும். எந்தவொரு ஆட்சேபனையும், தப்பெண்ணமும், கண்டனமும், கணிப்பும் இல்லாமல் நீங்கள் அதைப் பார்க்க வேண்டும், இல்லையா?

நான் உங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், உங்களைப் பற்றி எனக்கு எந்தவிதமான கருத்துகளும்  இருக்கக்கூடாது. நான் உங்களை நேரடியாக பார்க்கும் திறன் கொண்டவனாக இருக்க வேண்டும், தடைகள், என் தப்பெண்ணங்கள் மற்றும் நிபந்தனைகளின் திரைகள் வழியாக அல்ல. நான் உங்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும். அதாவது நான் உங்களை நேசிக்க வேண்டும்.

இதேபோல், நான் துக்கத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்றால், நான் அதை நேசிக்க வேண்டும். நான் அதனுடன் தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால், என்னால் அவ்வாறு செய்ய முடியாது. ஏனென்றால் நான் விளக்கங்கள் மூலமாகவும், கோட்பாடுகள் மூலமாகவும், ஒத்திவைப்புகள் மூலமாகவும் துக்கத்திலிருந்து விலகி ஓடுகிறேன்.

இவை அனைத்தும் வாய்மொழியின் செயல்முறை. எனவே சொற்கள் - விளக்கங்கள், கோட்பாடுகள் - என்னை துக்கத்துடன் நேரடியாக தொடர்பு கொள்வதைத் தடுக்கின்றன.

நான் துக்கத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளும்போதுதான், அதை என்னால் புரிந்து கொள்ள முடியும்.

~ ஜே. கிருஷ்ணமூர்த்தி
வாழ்க்கையெனும் புத்தகம்.


பிராத்தனை

🤲🏽 *பிரார்த்தனைகள் நிறைவை தருமா...?* 🤲🏽

இதை யார் நம்புகிறார்களோ இல்லையோ என்பதை பற்றிய கவலையோ, தேவையோ இறைவனுக்கு ஒரு போதும் கிடையாது. அவனின் கட்டளைகள் படி இங்கே எல்லாமுமே நடந்து அடித்துக் கடந்து,
போய்க் கொண்டே தான் இருக்கும். 

இவ்வாழ்வும் எம்மை அதன் போக்கில் தான், இல்லை அதன் போக்கில் மட்டும் தான் இழுத்துக் கொண்டு போகும். நாமும் முட்டி மோதி நகர்ந்து கொண்டே தான் இருக்க வேண்டும். நான் இதன் பின்னால் வர மாட்டேன் இத்தோடு நின்று கொள்கிறேன், என்னால் இனி எந்த சங்கடத்தையும் வாழ்வில் ஏற்க வலிமை கிடையாது, போதும் வாழ்ந்தது, என்றெல்லாம் சொல்லி விட்டு ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டாலும், 

சூரியன் உதிக்கும், இரவும் பகலும் மாறுகின்ற சுழற்சி நடக்கும், கடல் இயங்கும், வானம் மழையை பொழியும், பூமியில் தாவரங்கள் வளரும், சந்திரன், நட்சத்திரம் என இப்பிரபஞ்சத்தின் எதுவும் நமக்காக காத்திருக்கப் போவதில்லை.

இப்படி மரணத்தின் பிடிக்குள் சிக்கும் வரை இவ்வாழ்வின் இன்ப துன்பங்களை எல்லாம் மாறி மாறி கடந்தே தீர வேண்டும் என்பதே அழுத்தமான நியதி.

அப்படி கடக்கையில் பிரச்சனைகள், சோகங்கள், கவலைகள், அரண்ட சூழ்நிலைகள், தாங்கிக் கொள்ள இயலாத ரணங்கள், வலியின் விளிம்புகளில் வாழ வேண்டிய கட்டாயங்கள் எல்லாம் மனிதனுக்கேற்ப மாறி மாறி இங்கே உண்டாகிக் கொண்டு தான் இருக்கும்.

அச்சூழலில் தான் பிரார்த்தனைக்கும் நமக்குமான தொடர்பாடலும், அதற்கான முக்கியத்துவமும் உள்ளத்தில் அதிகமாக உண்டாகும், ஏனெனில் மனிதனால் இயலாத எல்லாவற்றையும் இறைவனால் சாத்தியப்படுத்த இயலும் என்ற பூரண நம்பிக்கை தான் காரணம்.

அப்படியும் கூட பலர் சொல்வார்கள், என்ன பிரார்த்தித்து என்ன பயன்? நான் கேட்டவைகள் கிடைக்கவுமில்லை, எனது எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேறவுமில்லை, எனது இத்துனை கால சோக வாழ்வு மாறவும் இல்லை, இப்படி பல காரணங்களை கூறி விரக்தியுற்று பேசுவதை காணலாம். 

சரி, அப்படியே பிரார்த்தனை செய்யாது இருந்திருந்தால் மட்டும் இந்நிகழ்வுகள் ஏதும் எம்மை விட்டு தூரமாக போயிருக்குமா? அல்லது அதை விட்டு நாம் தப்பியிருக்கலாம் என்ற உத்தரவாதம் ஏதும் நம் கையில் உண்டா? அரங்கேறுவதையும், நடந்தேற இருப்பதையும் ஒரு போதும் இயலாமை கொண்ட இந்த மனித இனத்தால் நிறுத்தி விட முடியாது. ஆதலால் நம்  சிந்தனைகளுக்குள் எட்டாத அளவுக்கான ஒரு சக்தி கொண்ட, படைத்தவனிடம் தான் நாம் சரணடைய வேண்டும்.

அத்தகைய இறை சக்தியில் நாம் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை பற்றிய கவலை எல்லாம் இறைவனுக்கு கிடையாது, அவன் கர்மாக்களின் நிகழ்வுகளுக்கான தீர்வை அறிந்தவன், அதை நாம் முறையிட்டு அவனிடம் கேட்க வேண்டும் என்பதையும் விரும்புபவன். 

எனவே நம்  முறைப்பாடுகளை அவன் முந்நிலையில் சமர்ப்பிப்பதே சாலச்சிறந்தது. அதில் மிகப்பெரிய மகிழ்ச்சி உண்டு. யாரிடமும் தலை குனிந்து நிற்க தேவையற்ற ஓர் மகிழ்ச்சி, உதவி பெற்றதற்காக யாருக்கும் நாசுக்காக நன்றி செலுத்த தேவையற்ற நிரப்பமான மகிழ்ச்சி. நேர்மறையான நம்பிக்கை சக்தி தரும் மகிழ்ச்சி... 

இந்த நேர்மறையான சக்தியின் நம்பிக்கையே நமது துயரங்களை தாங்கும், தாண்டும் வலிமையை தரும் என்பதை முழுமையாக புரிந்து கொண்டால் இறை சக்தியின் மேல் நம்பிக்கை மேற்கொள்ளும் பிரார்த்தனைகள் எப்போதும் நிறைவு தரும்.

நன்றி... 
✨வாழ்க வளமுடன், நலமுடன்✨ 

🚩சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🚩

கோபத்தை குறைக்க தியானம்

 கோபத்தைக்_குறைப்பதற்கான_எளிய_தியானமுறை...

முதலில் நமக்கு #கோபம் வருவதற்கும், அந்தக் கோபத்தை சரிசெய்ய #தியானம் செய்வதற்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

கோபம் என்பது நம் உள்ளே மலர்வது, அதேபோல தான் தியானம் என்பதும் நம் உள்ளே மலர்வது. நம் உள்ளே உருவாகக்கூடிய ஒன்றை சரிசெய்ய வேண்டுமெனில் நாம் உள்ளே சென்றால் தானே முடியும் அதற்கான சிறந்த பயிற்சி  முறை தான் தியானம்.

உதாரணமாக,

நமக்கு கோபம் வரும் வேளையில் நம் உள்ளே என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதை கவனித்துப் பாருங்கள். கோபம் என்கிற உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக நம்முள்ளே அதிகரித்துக் கொண்டிருக்கும் அது நம் வயிற்றுப் பகுதிக்கும் இதயத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ஏற்படும் முயற்சி செய்தாள் அதை உங்களால் உணர முடியும்.

அப்படி அதை உணர முடிந்தால் உங்களால் கோபத்தை எளிமையாக சரி செய்யவும் முடியும் ஆனால், இதற்கு மிகவும் பொறுமையும் நிதானமும் அவசியம் ஏனென்றால் நீங்கள் செய்யப்போவது ஒரு சாகசம் ஏனென்றால் நீங்கள் கோபம் ஏற்படும் போது உணர்வு அதிகமாக உள்ள அந்த நேரத்தில் அதை கவனிக்க வேண்டும். 

அப்படி கவனிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த உணர்வு உங்கள் கட்டுப்பாட்டில் வரும் அப்படி வந்ததும் உங்களுக்கு கோபம் ஏற்படும் போது அதை எளிமையாக சரிசெய்யவும் முடியும்.

இரண்டாவதாக,

நீங்கள் அமைதியாக அமர்ந்திருக்கும் நிலைகள் நிலையில் கோபம் ஏன் வருகிறது? எதற்காக வருகிறது? இதற்கு முன் எப்போதெல்லாம் என்ன காரணத்திற்காக கோபம் வந்தது? என்பதைப்பற்றிய சுய தேடல் செய்திட வேண்டும்.

இதை சில நாள் பயிற்சியில் புரிந்து கொள்ள முடியும். அப்படி புரிந்து கொண்டால் அதுபோன்ற காரணங்கள் ஏற்படும்போது தானாகவே சரிசெய்து விடும் ஏனென்றால் அப்படித்தான் நடக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் எனவே அது மீண்டும் நிகழாது.

மூன்றாவதாக, 

இயற்கையாய் நமக்கு ஏற்படும் கோபத்திற்கும், செயற்கையாய் மற்றவர்கள் வழியாக நம்முள் சேகரித்து வைத்துள்ள இப்படி இருந்தால் கோபம் வரவேண்டும், இப்படி நடந்தால் கோபம் வரவேண்டும் என்றெல்லாம் உங்களுக்குள் திணிக்கப்பட்டுள்ள குப்பைகளால் வரும் கோபத்திற்கும், 

அடுத்ததாக,

நான் இதற்காகவெல்லாம் கோபப்படுவேன் இப்படி எல்லாம் எனக்கு கோபம் வரும் என்னால் கோபத்தை அடக்க முடியாது இதுபோன்று உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்ட தேவையற்ற சுயபிரகடன கோபங்களுக்கும் வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.

இதைப் புரிந்து கொள்ளும்போது உங்களால் மட்டுமல்ல வேறு யாராலும் உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்த இயலாது.

இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் எந்த ஒரு செயலுக்கும் நகருக்கும் ஏதாவது ஒரு காரணம் இருந்தே தீரும்.

காரண இல்லாமல் காரியம் நிகழ்வதில்லை. முதலில் காரணம் அதன்பிறகே இதுபோன்ற நிகழ்வுகள்(காரியம்) நம் வாழ்வில் நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

எந்த ஒரு நிகழ்வாக இருப்பினும் அதற்கு நாமே முதல் காரணம், நம் செயல்களே முதல் காரணம் எனவே நம்மை நாம் சரிசெய்து கொள்வதுதான் இதற்கு உண்மையான தீர்வாக இருக்கும்.

நம்மை நாம் புரிந்து கொள்வோம், நம்மை நாம் சரிசெய்து கொள்வோம் மகிழ்ச்சியாக வாழ்வோம்...

நன்றி நண்பர்களே...
[1/20, 10:27 PM] +91 90920 20809: #கோபத்தைக்_குறைப்பதற்கான_எளிய_தியானமுறை...

முதலில் நமக்கு #கோபம் வருவதற்கும், அந்தக் கோபத்தை சரிசெய்ய #தியானம் செய்வதற்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

கோபம் என்பது நம் உள்ளே மலர்வது, அதேபோல தான் தியானம் என்பதும் நம் உள்ளே மலர்வது. நம் உள்ளே உருவாகக்கூடிய ஒன்றை சரிசெய்ய வேண்டுமெனில் நாம் உள்ளே சென்றால் தானே முடியும் அதற்கான சிறந்த பயிற்சி  முறை தான் தியானம்.

உதாரணமாக,

நமக்கு கோபம் வரும் வேளையில் நம் உள்ளே என்ன மாற்றம் நிகழ்கிறது என்பதை கவனித்துப் பாருங்கள். கோபம் என்கிற உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக நம்முள்ளே அதிகரித்துக் கொண்டிருக்கும் அது நம் வயிற்றுப் பகுதிக்கும் இதயத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் ஏற்படும் முயற்சி செய்தாள் அதை உங்களால் உணர முடியும்.

அப்படி அதை உணர முடிந்தால் உங்களால் கோபத்தை எளிமையாக சரி செய்யவும் முடியும் ஆனால், இதற்கு மிகவும் பொறுமையும் நிதானமும் அவசியம் ஏனென்றால் நீங்கள் செய்யப்போவது ஒரு சாகசம் ஏனென்றால் நீங்கள் கோபம் ஏற்படும் போது உணர்வு அதிகமாக உள்ள அந்த நேரத்தில் அதை கவனிக்க வேண்டும். 

அப்படி கவனிக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த உணர்வு உங்கள் கட்டுப்பாட்டில் வரும் அப்படி வந்ததும் உங்களுக்கு கோபம் ஏற்படும் போது அதை எளிமையாக சரிசெய்யவும் முடியும்.

இரண்டாவதாக,

நீங்கள் அமைதியாக அமர்ந்திருக்கும் நிலைகள் நிலையில் கோபம் ஏன் வருகிறது? எதற்காக வருகிறது? இதற்கு முன் எப்போதெல்லாம் என்ன காரணத்திற்காக கோபம் வந்தது? என்பதைப்பற்றிய சுய தேடல் செய்திட வேண்டும்.

இதை சில நாள் பயிற்சியில் புரிந்து கொள்ள முடியும். அப்படி புரிந்து கொண்டால் அதுபோன்ற காரணங்கள் ஏற்படும்போது தானாகவே சரிசெய்து விடும் ஏனென்றால் அப்படித்தான் நடக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் எனவே அது மீண்டும் நிகழாது.

மூன்றாவதாக, 

இயற்கையாய் நமக்கு ஏற்படும் கோபத்திற்கும், செயற்கையாய் மற்றவர்கள் வழியாக நம்முள் சேகரித்து வைத்துள்ள இப்படி இருந்தால் கோபம் வரவேண்டும், இப்படி நடந்தால் கோபம் வரவேண்டும் என்றெல்லாம் உங்களுக்குள் திணிக்கப்பட்டுள்ள குப்பைகளால் வரும் கோபத்திற்கும், 

அடுத்ததாக,

நான் இதற்காகவெல்லாம் கோபப்படுவேன் இப்படி எல்லாம் எனக்கு கோபம் வரும் என்னால் கோபத்தை அடக்க முடியாது இதுபோன்று உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்ட தேவையற்ற சுயபிரகடன கோபங்களுக்கும் வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.

இதைப் புரிந்து கொள்ளும்போது உங்களால் மட்டுமல்ல வேறு யாராலும் உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்த இயலாது.

இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் எந்த ஒரு செயலுக்கும் நகருக்கும் ஏதாவது ஒரு காரணம் இருந்தே தீரும்.

காரண இல்லாமல் காரியம் நிகழ்வதில்லை. முதலில் காரணம் அதன்பிறகே இதுபோன்ற நிகழ்வுகள்(காரியம்) நம் வாழ்வில் நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

எந்த ஒரு நிகழ்வாக இருப்பினும் அதற்கு நாமே முதல் காரணம், நம் செயல்களே முதல் காரணம் எனவே நம்மை நாம் சரிசெய்து கொள்வதுதான் இதற்கு உண்மையான தீர்வாக இருக்கும்.

நம்மை நாம் புரிந்து கொள்வோம், நம்மை நாம் சரிசெய்து கொள்வோம் மகிழ்ச்சியாக வாழ்வோம்...

நன்றி நண்பர்களே...

Monday 18 January 2021

பாடல் மூலம் உளவியல்



*ஒரு "பாடலில்" உளவியல்..!!*

தினமும் நீங்கள் இதை கடந்திருப்பீர்கள். (கற்பனை செய்தபடியே படியுங்கள்) எங்காவது ஒரு மூலையில் மெல்லிய சப்தத்தில் ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் அதைக் கேட்டவுடன் நீங்களும் அந்தப் பாடலைப் பாடத் தொடங்குகிறீர்கள். 

சிறிது நேரத்தில் எங்கோ ஒலித்துக்கொண்டிருந்த பாடல் நின்றுவிடும் அது உங்களுக்குக் கேட்காது ஆனாலும் நீங்கள் தொடர்ந்து பாடிக் கொண்டே தான் இருப்பீர்கள். சிலநேரம் அந்த நாள் முழுவதும் அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் பாடுவீர்கள். 

ஏன் பாடல் நின்ற பின்னும் நீங்கள் பாடுகிறீர்கள்? இதுவரை அதை ஏன் என்று சிந்தித்து உள்ளீர்களா? இன்று
சிந்திக்கலாம் வாருங்கள்...! 

உங்கள் மூளையில் நீங்கள் கேட்ட பாடல் ஏற்கனவே பதிந்திருக்கும் அந்தப் பாடலை பலமுறை இரசித்துப் பாடியிருப்பீர்கள். (நீங்கள் அதற்கு முன் கேட்காத பாடலை அப்படி பாட மாட்டீர்கள் சரிதானே) இந்த முறை அதைக் கேட்டதும் உங்கள் மூளையில் பதிந்துள்ள அந்தப் பாடல் மீண்டும் உங்கள் நினைவுக்கு வருகிறது. நீங்கள் ரசித்து கேட்டதை நினைவுபடுத்தி உங்களை அறியாமலேயே பாட வைக்கிறது. 

இது சரியாகப் புரிந்து விட்டால் போதும் உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்றப்போகும் இரகசியம் புரிந்துவிடும். ஏன் என்றால் இதுபோல தான் உங்களுடைய ஒவ்வொரு எண்ணங்களும் செயல்படுகிறது.

நீங்கள் ஒவ்வொரு செயலையும் இப்படித்தான் செய்கிறீர்கள் முதல் முறை ஒன்றைக் கேட்கிறீர்கள் மீண்டும் மீண்டும் அதைக் கேட்கும் பொழுது அது உங்களுக்கு பிடிக்க ஆரம்பிக்கிறது பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் மனதில் பதிந்து பின்னர் தொடர்ந்து கேட்பதால் ஆழ் மனதில் பதிகிறது. 

அந்த எண்ணம் அங்கேயே தான் இருக்கும் அதற்கு சம்பந்தமான வார்த்தைகளை கேட்கும் பொழுது அது உங்கள் நினைவில் வந்து அதை பேசுவதற்கும் அல்லது செயல்படுத்துவதற்கும் தூண்டுகிறது. 

நீங்கள் ஒரு மொழியைப் பேசுவதும் இந்த முறையில் தான் ஒரு குழந்தைக்கு இது அம்மா இது அப்பா இது தாத்தா இது பாட்டி என ஒவ்வொன்றாக பதிய வைக்கிறோம் அதைத் திரும்பத் திரும்பக் கூறி ஆழ்மனப் பதிவாக மாறுகிறது பின்னர் அவர்களைப் பார்க்கும் பொழுது தானாகவே மூளை நினைவு படுத்திக் கொள்கிறது சரியாக அவர்களை அழைக்கிறது.

இதே முறையை உங்கள் அனைத்து வளர்ச்சிக்கும் பயன்படுத்துங்கள் உங்களுக்கு தேவையானதை மட்டும் கேளுங்கள் மற்றும் பாருங்கள் திரும்பத் திரும்ப கேளுங்கள் அதைப் விரும்புங்கள் அது உங்கள் ஆழ்மனப் பதிவாகும். பின்னர் அதை மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவு படுத்தும் வகையில் தொடர்ந்து ஏதாவது வகையில் செயல்படுத்துங்கள் மூளை உங்களுக்கு நினைவு படுத்தும்  (அதுவே உங்கள் மூளையின் வேலை) பின்னர் அதை செயல்படுத்துங்கள். 

இதை சரியாகப் புரிந்துகொண்டால் வெற்றி பெறுவது மிகவும் எளிமைதான். அதற்கு இதை மீண்டும் மீண்டும் படித்து உங்கள் ஆழ்மனதில் பதியவையுங்கள்.


வாழ்க🙌வளமுடன்

*அன்பே🔥சிவம்*

Friday 15 January 2021

வெகுமதி

உங்களை தேடி பல வெகுமதிகள் வர போகிறது 
.
உங்கள் மனதை ரணப்படுத்திய அவமானங்களும், துயரங்களும் நீங்கள் வடித்த கண்ணீரும் என்றும் அர்த்தமில்லாமல் போகாது.
.
இது உங்கள் ஆழ்மனதின் சத்தியமான உண்மை!
.
தற்போது உங்கள் வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள் எல்லாமே உங்களுக்கு எதிராக தான் இருக்கிறது, 
.
அதற்காக கவலைப்படாதீர்கள்...
.
ஆழ்மனதின் ஆற்றலை நம்பியவர்கள் என்றும் தோற்றது இல்லை.
.
உங்கள் ஆழ்மனதில் இருந்து வரும் உள்ளுணர்வுகள், வார்த்தைகள் மீது நம்பிக்கை வையுங்கள்
.
நீங்கள் அசைக்கமுடியாத நம்பிக்கையோடும், பொறுமையோடும் இருங்கள். 
.
உங்களை ஏமாற்றியவர்களை நினைத்து மனம் தளராதீர்கள்...!
.
இவை எல்லாம் இன்னும் சில நாட்களில் முடிவுறும். .
.
உங்கள் நிலை மாறும். மாறும்...! 
.
அதை ஆழ்மனம் நிச்சயம் செய்யும்
.
நீங்கள் அனைவரும் வியக்கும் வண்ணம் அனைத்திலும் வெற்றியடைவீர்கள். 
.
உங்களை தேடி நிச்சயம் பல வெகுமதிகள் வரப் போகிறது.
.
உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு முன் நீங்கள் பட்ட அவமானங்களுக்கும், நீங்கள் வடித்த கண்ணீர்க்கும் அவர்கள் முன்னால் நீங்கள் தலைநிமிர்ந்து வாழ்வீர்கள்.
.
அவர்கள் உங்களுக்கு செய்த தவறையும் துரோகத்தையும் உணர்ந்து உங்களிடம் மன்னிப்பு கேட்பார்கள்.

Wednesday 13 January 2021

முன்னோர்கள் சொன்னது

*ஒரு விமானத்தில்,,, தன்னருகே அமர்ந்திருந்த ஒரு சிறுமியிடம்.......,*

 *" தன் அறிவுக்கூர்மையை காட்ட விரும்பிய ஒரு தத்துவமேதை"....,*

*அந்த சிறுமியிடம் கேட்டார்,,..!!*

*"உன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா".....?*  என்றார்.

*படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு,*

 *"என்ன மாதிரி கேள்விகள்".....?*
*என்று சிறுமி கேட்டாள்.....!!*

     *"கடவுள் பற்றியது".....!!*

ஆனால்...,
    கடவுள், 
         நரகம்,
         சொர்க்கம்,
        புண்ணியம்,
     பாவம் என
            *எதுவும் கிடையாது....!!*

*"உடலோடு இருக்கும் வரை உயிர் "......!!*
*"இறந்த பிறகு என்ன"......?*

 *தெரியுமா என்றார்....!!*

*அந்த சிறுமி யோசித்து விட்டு........ ,*

  *"நானும் சில கேள்விகள் கேட்கட்டுமா"......?*  என்றாள்.

       ஓ எஸ்..!
        *"தாராளமாக கேட்கலாம்"..* என்றார்....!!

*ஒரே மாதிரி புல்லை தான்.....,*
    பசு, 
         மான், 
              குதிரை 
                     *உணவாக                   *எடுத்துக்                     *கொள்கிறது.....!!*

 ஆனால்,
    *வெளிவரும்  'கழிவு"...( shit ) ஏன் வெவ்வேறாக இருக்கிறது......!!!* 

*"பசுவிற்கு சாணியாகவும்",,,,,*

 *"மானுக்கு சிறு உருண்டையாகவும்"......,*

 *"குதிரைக்கு கட்டி கட்டியாகவும் வெளி வருகிறது".....!!*

 *'ஏன் அப்படி'....?*
  என்று கேட்டாள்.

*'தத்துவவாதி'.*
  *" இது போன்ற கேள்வியை எதிர்பார்க்கவில்லை".......!!*

*திகைத்துவிட்டார்'......!!!*

*"தெரியவில்லையே".....,*
என்று கூறினார்....!!

*கடவுளின் படைப்பில் நிகழும் மிக சாதரண விசயமான....,*

 *"உணவு கழிவு பற்றிய ஞானமே".....  நம்மிடம்  இல்லாத போது*

 பின் ஏன் நீங்கள்
     கடவுள்,
         சொர்க்கம், 
              நரகம் பற்றியும், 

*"இறப்புக்கு பின் என்ன என்பது பற்றியும் பேசுகிறீர்கள்".....?*

*"சிறுமியின் புத்திசாலித்தனமான இந்த கேள்வியால்."......,*

 *"தத்துவமேதைக்கு தலை தொங்கிப்போய்".....,*
*"வாயடைத்து போய்விட்டார்"......!!*

நம்மில் பலரும் இது போலத் தான்.....

 தனக்கு எல்லாம் தெரியும் என அகங்காரத்தோடு.....

மற்றவர்களை மட்டம் தட்டுவார்கள்.....!!
நிறைகுடம் ததும்பாது....!!
குறைவிடம் கூத்தாடும் என.....

முன்னோர்கள் சொல்லியது இதையே......!!

எவரையும் குறைவாகவும் எடை போடக்கூடாது.....!!
தலைக்கனமும் கூடாது.....!!
கற்றது கைமண் அளவு",.....!!
 கல்லாத்து உலகளவு......!!

சிவ ஓம் நமசிவாய.