Wednesday 26 February 2020

நன்றியுணர்வு

அனைவருக்கும் அன்பு வணக்கம்🙏🙏🙏🙏

 இது ஒரு புதிய முறை இந்த முறையை நீங்கள்  ஏற்கனவே உங்கள் வாழ்க்கையில்  பல  பேர்  பண்ணியிருந்தாலும் மிகவும் மகிழ்ச்சி மேலும் இதை பண்ணினால் மிகவும் ரொம்ப மகிழ்ச்சி. 

இவ்வளவு பிரபஞ்சம் சம்பந்தமாக  புத்தகங்கள்  படிக்கிறீர்கள் அதிகமாக, ஆனால் புத்தகத்தை தேடி தயவுசெய்து  அதிகமாக செல்லாதீர்கள்.
 புத்தகம் வேண்டும் ஆனால் புத்தகம் மட்டுமே வாழ்க்கை இல்லை. நீங்கள் இதை நேரடியாக இறை சக்தியுடன் தொடர்பு  கொள்ளுங்கள் இறை சக்தியை உள் வாங்குங்கள்.
  
இந்த முறையை செய்து விட்டால்  பிரபஞ்சத்தின் ஒரு ஏணியை ஏறி விடுவீர்கள் என்று என்னால் உறுதியாக கூற முடியும். உங்களது ஈகோ   சுக்குநூறாக உடையும்.  மனசு லேசாகும். 
 
  உங்கள் வீட்டிலில்   உள்ள  மரம், பக்கத்தில் எங்கேயாவது உள்ள மரம், எங்க வேண்டுமானாலும் சரி ஒரு மிகப்பெரிய மரம்  அதற்கு முதலில் குறைந்தபட்சம் ஒரு லிட்டர் தண்ணீராவது ஊற்றிவிட வேண்டும் தண்ணீர் ஊற்றும் பொழுது அதில் உங்கள் அன்பு மட்டுமே இருக்க வேண்டும் தண்ணீரை நீங்கள் குடிப்பது போல் இருக்கும் தண்ணீரை மரத்திற்கு கொடுக்க வேண்டும் (நோ கேன் வாட்டர்.)

 பிறகு  உங்களது   இதயப் பகுதி மற்றும் உங்களது நெற்றிப்  பகுதி மரத்தோடு  ஒட்டியிருக்க வேண்டும்.   கட்டிப்பிடித்து உங்களுடைய கஷ்டங்களை  அப்படியே கொட்டி விடாதீர்கள் அந்த மரம்  பாவம்  முதலில் அன்பை செலுத்துங்கள் நீ கொடுக்கின்ற  ஆக்சிஜன்   தான் இதுவரை  நாங்கள் வாழ்ந்த நாட்களுக்காக உனக்கு நன்றி கூறுகிறேன்.
 அந்த நன்றி  இதுவரை கூறியதில் இருக்கக்கூடாது அப்படி ஒரு உணர்வு பூர்வமாக நீங்கள் கூற வேண்டும் அப்படி ஒரு பாசம் இருக்க வேண்டும் உங்கள் குழந்தையை முதன்முதலில் எப்படி கையில் வாங்கும் போது எந்த அளவுக்கு   அன்பு வைத்தீர்கள்  அதைவிட  பலகோடி மகிழ்ச்சியோடு  அன்பை செலுத்த வேண்டும்.  

 பிறகு  உங்களுடைய கஷ்டங்களை   நீக்கியதற்கு நன்றி கூறுங்கள்.  கூறிவிட்டு உங்களுடைய அனைத்து கஷ்டங்களும் வலிகளும் எல்லாமே   அழிந்துவிட்டது  போல் இமேஜின் பண்ணுங்க அந்த மரத்திற்கு நன்றி கூறிக்கொண்டே. 
 
 ஒரு சில பேருக்கு மிகவும் அழுகை வரும்  மனசு ரொம்ப லேசாகி   சந்தோசத்தை  உணர்வீர்கள். 

 உங்களுடைய கைகள் உடம்பின் வழியாக அந்தக் கெட்ட எனர்ஜி உங்களை விட்டு செல்வதை நீங்கள் உணர முடியும்.  பிறகு அன்பு என்னும்   சக்தியால் நீங்கள் சூலப் படுவீர்கள்.

 இணைபிரியாது மகிழ்ச்சி பல ஆண்டுகளுக்கு முன்னர் போல்.  இப்படி தான் நாம் வாழ்ந்து  கொண்டிருந்தோம்  நண்பர்களே.

 உங்களுக்கு என்ன வேண்டுமோ நீங்கள் அந்த மரத்திடம் கேளுங்கள் அந்த மரம் உங்களுடைய உண்மையான தாய் தான் இதை பல விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள் ஒரு குழந்தை தாய் கிட்ட எப்படி கேட்குமோ உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் கண்டிப்பாக கொடுக்கும் அன்பு பாசம்  செல்வ செழிப்பு மற்றும் அனைத்து வளமும் கண்டிப்பாக கிடைக்கும்

 உங்களுடைய   ஈகோ சுக்கு நூறாக உடைந்து விடும் என்று என்னால் தைரியமாக கூற முடியும் இது ஒரு அற்புதமான விஞ்ஞானம் விஞ்ஞானம் என்று சொன்னால் மட்டுமே தான்  பலர் ஒத்துக் கொள்கிறீர்கள்.

அப்பொழுதே நீங்கள் இறை சக்தி  உடன் அப்போது  இணைந்து விடுவீர்கள் இதுவரை நீங்கள் கண்டிராத இந்த ஒரு அற்புதமான ஒரு மகிழ்ச்சி நீங்கள் அடைவீர்கள்.

  உங்களது உள்ளுணர்வு உங்களிடம் பேச ஆரம்பித்துவிடும். அதை நீங்கள் கவனிக்கத் தொடங்கினால் மட்டுமே போதும்.

 இறுதியாக உங்கள்  வீட்டிலுள்ள அரிசி குறைந்தபட்சம் ஒரு கைப்பிடி   அவற்றை கழுவி காயவைத்து மிக லேசாக உங்கள் வீட்டிலுள்ள மிக்ஸியில்  அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும் ஒரு எறும்பு தூக்கிக்கொண்டு செல்லும் அளவிற்கு.  இறுதியாக அந்த அரிசிமாவை மரத்தை சுற்றி பல இடங்களில் தூவி விட வேண்டும் அந்த அரசி  மாவு பல  உயிர்களுக்கு
 உணவாகும். 


. வாருங்கள் பிரபஞ்சத்தின் குழந்தையாக இணைவோம்.🙏🙏🙏🙏

நன்றி.

மன்னிப்பு

"அன்பும், மன்னிப்பும், கருணையும் தான் இந்தப் பூமியை வாழ்விக்க வல்ல
சக்திகள்!,"
உலகின் தீமைகள் ஒரு எதிர்மறை எண்ணத்தில் தான் தோன்றுகின்றன. அதற்கு நியாயமான காரணங்கள் கூட இருக்கலாம். ஆனால் தீமைகள் கண்டிப்பாக ஒரு ஆரோக்கியமற்ற சிந்தனையில் தான் உருவாகின்றன. ஒரு மனதில் வரும் ஒரே எண்ணம்தான் விதை. அது வெளியில் சொல்லாய்ச் செயலாய் மாறுகையில் பலரைப் பாதிக்கிறது. பின் அது சங்கிலித் தொடராகிச் சரித்திரமாய் மாறுகிறது. ஆரம்ப எண்ணம் மட்டும் மட்டுப்பட்டிருந்தால் பல எதிர்வினைகள் நிகழாமல் மட்டுப்பட்டிருக்கும்.

உறவுச் சிக்கல்கள்

வெறுப்பு, நிராகரிப்பு, அச்சம், சந்தேகம், ஆத்திரம், பொறாமை என ஏதோ ஒரு எதிர்மறை உணர்வுடன் தான் முதல் எண்ணம் பிறக்கிறது. உங்கள் உணர்வு எதிர்மறையாக இருந்தால் எண்ணம் நிச்சயம் எதிர்மறையாகத்தான் இருக்கும். கடுங்கோபத்திலோ அல்லது துக்கத்திலோ நேர்மறை எண்ணங்கள் வர முடியுமா என்ன?

ஒருவர் உணர்வும் சிந்தனையும் இன்னொருவரைத் தீவிரமாகப் பாதிக்கிறது. இதனால்தான் நம் உறவுகள் நம் உணர்வுகளைப் பல சமயம் தீர்மானிக்கின்றன. உறவுகளில் காயங்களும் விரிசல்களும் பிளவுகளும் நிகழ்வதற்கும் ஆயிரம் நிகழ்ச்சிகளைக் காரணமாகச் சொல்லலாம். ஆனால், அத்தனைக்கும் மூலக் காரணம் சில ஆதார எதிர்மறை உணர்வுகளும் எண்ணங்களும்தான்.

இன்றைய சந்ததியினரிடம் உறவுச் சிக்கல்கள் ஏராளமாக உள்ளன. பெற்றோர்கள், வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், அண்ணன், தம்பி அக்கா ,தங்கை பணியிடத் தோழர்கள் என அனைவரிடமும் கருத்து வேறுபாடுகளும் ஒவ்வாமைகளும் பெருகி வருகின்றன.

குடும்ப வாழ்க்கை பெரிதும் மாறிவிட்டது. மனிதர்களின் எண்ணிக்கையை விட அறைகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. நாமே சுவர்களை எழுப்பிக்கொண்டு நாமே தனிமையில் வாடுவதாகப் புலம்புகிறோம். எல்லா மனிதர்களின் மேலும் புகார் பட்டியல் இருக்கிறது. நீங்கள் யாருடனும் நிம்மதியாய், அமைதியாய் இல்லை என்பது உண்மை என்றால் ஒன்று தான் நிஜம். நீங்கள் உங்களிடம் மனதளவில் நிம்மதியாய், அமைதியாய் இல்லை!

உறவுகள் யாரையும் தனியாகக் குற்றம் சொல்ல முடியாது. உங்களைப் போலவே உங்கள் எதிராளியும் அமைதி கெட்டுப்போய்ப் புகார் பட்டியலோடு சுற்றிக்கொண்டிருக்கிறார் என்பதுதான் பல நேரங்களில் நிஜம். யாரோடு பிரச்சினையோ அவரிடம் பேசினால் அவர் தரப்பு நியாயங்களைப் புட்டு புட்டு வைப்பார். யாராவது அதை முதலில் தனியாகக் கேட்டிருந்தால் உங்களைத் தான் குற்றவாளியாகப் பார்ப்பார்கள்.

உறவுகளைப் புரிந்து கொள்ளப் பிறர் நிலையில் தன்னை வைத்துப் பார்க்கும் திறன் வேண்டும். இதை ஆங்கிலத்தில் எம்பதி என்பார்கள். அலோபதி, ஹோமியோபதியை விட உங்கள் உறவைக் காப்பது இந்த எம்பதியாகத் தான் இருக்கும்!

உறவுச் சிக்கல் வரும் நேரத்தில் அடுத்தவர் நிலையில் நம்மை நிறுத்திப் பார்ப்பது தான் புரிதலை ஏற்படுத்தும். இது சுலபமல்ல. ஆனால் சற்று முயன்றால் சாத்தியப்படும்.

அதற்கு முதலில் சில பாலபாடங்கள் அவசியம்.

பார்வைக் கோணம்

எந்த விஷயத்திலும் ஒருவர் மட்டும் சரி, மற்றொருவர் தான் தவறு என்ற நிலையிலிருந்து விலகி வர வேண்டும். இருவரும் சரியாகவோ அல்லது இருவரும் தவறாகவோ கூட இருக்கலாம். அதனால் குற்றத்தை யார் மீது திணிக்கலாம் என்ற பார்வையை விடுத்து நடுநிலைக்கு வாருங்கள்.

எங்கிருந்து பார்க்கிறோமோ அங்கிருந்து உண்மைகள் மாறும். நமக்குப் பகத் சிங் விடுதலை வீரர். பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு தீவிரவாதி. அதே போல நாம் தீவிரவாதி என்று கருதுபவர்களை வேறுபலர் விடுதலை வீரர்களாகக் கொண்டாடுவார்கள். இது பார்வைக் கோணம் சம்பந்தப்பட்ட பிரச்சினை.

பிறரைக் குற்றம் சொல்லுமுன் அந்த நிலையில் நாம் இருந்தால் என்ன செய்வோம் என்று கற்பனை செய்து பார்ப்பது இந்த எம்பதியை வளர்க்கும்.

அரசு இலவசங்கள் பற்றிக் குறை சொல்பவர்கள், ‘ உங்கள் ரேஷன் கார்டில் இலவசமாகக் கார் கிடைத்தால் என்ன செய்வீர்கள்’ என்று யோசியுங்கள். ‘அந்த ஆள் கேரக்டர் சரியில்லை’ என்று குற்றம் சொல்லுமுன் அந்த வாய்ப்பும் வசதியும் வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று யோசியுங்கள்.

இது பிறர் குற்றங்களை நியாயப்படுத்தும் செயலில்லை. பிறர் சூழலைப் புரிந்து கொள்ளும் முயற்சி. அவ்வளவு தான்.

எல்லா மனிதர்களும் தங்களுக்கு அந்த நேரத்தில் சரி என்று படும் விஷயங்களைச் செய்கிறார்கள். அந்த நேர அறிவுக்குத் தக்க முடிவுகள் எடுக்கிறார்கள்.

மன்னிப்பு

பிறர் செய்த தீங்கால் மனதில் வரும் வன்ம எண்ணம் கூட மிகவும் தீமையானது என்று சொல்கிறார் புத்த மகான்.

வெறுப்பு அன்பை வளர்க்காது. பழி உறவைச் சரி செய்யாது. ஒன்று மட்டும் தான் உறவைச் சுகப்படுத்தும் வழி. அது மன்னிப்பு.

மன்னிப்பவர்கள் திடமானவர்கள். அன்பு மயமானவர்கள். அறிவாளிகள். வெறுப்பும் கோபமும் எதிராளியைவிட தன்னை அதிகமாக அழிக்கும் என்று உணர்ந்தவர்கள். சிக்கல் சங்கிலியைத் தங்கள் பக்கத்திலிருந்து அறுக்கத் தெரிந்தவர்கள்.

மன்னிப்பவர்கள் தாழ்ந்து போவதில்லை. மாறாகப் பெரும் ஆன்மப் பலம் பெறுகிறார்கள். உறவுகளில் குற்றம் பார்த்தால் நீங்கள் தனிமைப்பட்டுப் போவீர்கள். எதிராளியின் பலவீனத்தை உணர்ந்து, அந்த நிலையில் தன்னை வைத்துப் பார்த்து, மன்னித்து விடும்போது மீண்டும் உறவு பலப்படும்.

மன்னிக்க முடியாத தவறு என்று ஒன்று இல்லை. அதை உங்கள் எதிராளி மட்டும் செய்யவில்லை. அதே போல நீங்களும் தவறே செய்யாத பிறவி அல்ல. பிறர் தவறை மன்னிக்கையில் நீங்கள் உங்கள் தவறுகளுக்கு உங்களை மன்னிக்கிறீர்கள். அன்பும், மன்னிப்பும், கருணையும் தான் இந்தப் பூமியை வாழ்விக்க வல்ல சக்திகள்.

‘என் வாழ்க்கையில் என்னைக் காயப்படுத்திய அனைவரையும் மனமாற மன்னிக்கிறேன்!’ என்ற தொடர் எண்ணம் உங்களுக்கு மனஅமைதி தரும். பல உடல் உபாதைகளிலிருந்தும் காப்பாற்றும். நோய்களின்றி வாழ வழிவகை செய்யும். 

மனதார மன்னிக்கும் மனப்பான்மை உள்ளவர்களை என்றும் துன்பங்கள் நெருங்குவதில்லை. 

நன்றி...🙏🏻 
✨ *வாழ்க வளமுடன்*✨

Tuesday 25 February 2020

உளவியல் நெருக்கடி

மிட்லைஃப் நெருக்கடி ஒரு பேரழிவு.


மிட்லைஃப் நெருக்கடி ஏற்படுவது, உளவியல் நெருக்கடி என்றும் அழைக்கப்படுகிறது, இதில் அடையாளம் மற்றும் தன்னம்பிக்கை மாற்றம் நிகழ்கிறது. ஒரு நபர் அவர்களின் தற்போதைய வாழ்க்கை முறையில் பல்வேறு கடுமையான மாற்றங்களை எதிர் கொள்ளும்போது, ​​வாழ்க்கையில் சில அத்தியாயங்களால் கொண்டு வரப்படுகிறது.


இந்த தற்செயலான நிகழ்வு பெரும்பாலும் 30 முதல் 50 வயதிற்குட்பட்ட மனித ஆயுட்காலத்தின் நடுப்பகுதியில் நிகழ்கிறது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, ஆண்களும் பெண்களும் தங்கள் மிட் லைஃப் காலத்தில் மிகவும் அதிர்ச்சிகரமான சம்பவங்களுக்கு ஆளாகின்றனர். வாழ்க்கையில் ஏமாற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளன, அது மிட் லைப்பில் ஏற்பட்டால், நீங்கள் “மிட்லைஃப் நெருக்கடியை” எதிர்கொள்கிறீர்கள்.

மிட்லைஃப் நெருக்கடி எடுத்துக்காட்டுகள் / அறிகுறிகள்:

மனநலத்தை சீர்குலைக்கும்:

சுய-நாசவேலை நடத்தைகள் தோல்வி காரணமாக பெரும் மனச்சோர்வு அல்லது பதட்டத்தை எதிர்கொள்ளச் செய்யலாம் அல்லது வாழ்க்கையில் தோல்விகளை எதிர்கொள்ளும் என்ற அச்சத்தைக் கொண்டிருக்கலாம். தோல்விகளின் சாத்தியக் கூறுகளைத் தவிர்ப்பதற்கான நமது சொந்த திறனை நாம் ஆழ்மனதில் குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறோம். இது மிட் லைப்பில் பெரிய ஏமாற்றங்களை எதிர்கொள்ள வழிவகுக்கும்.

உணர்ச்சி நெருக்கடிகள்:

உணர்ச்சி அல்லது நடத்தை கோளாறு அல்லது இளம் பருவத்தின் தொடக்கத்திலோ அல்லது சில உயிரியல் கோளாறு காரணமாகவோ ஏற்படும் மன உளைச்சல்.

ஆட்டோ பைலட் பயன்முறையில் வாழ்க்கை:

குறைந்த சுய மரியாதை மற்றும் குறைந்த தன்னம்பிக்கை காரணமாக உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களை ஒரு ஆட்டோ பைலட் பயன்முறையில் ஈடுபடுத்தும் நேரங்கள் உள்ளன.

Habits பழக்கவழக்கங்களில் கடுமையான மாற்றங்கள் மற்றும் திடீர் முடிவெடுப்பது.


Depression மனச்சோர்வு காரணமாக தூக்க பழக்கத்திற்கு மாறுதல்

•தற்கொலை எண்ணங்கள்

Any எந்தவொரு பணியையும் செய்ய நீங்கள் இடைவெளியைக் கண்டால்

• சலிப்பு

Produc குறைந்த உற்பத்தித்திறன்


பின்னடைவுக்குத் திரும்புவது கடினம்: 

ஏமாற்றங்களிலிருந்து பின்வாங்க சிரமங்களை எதிர்கொள்வது, மிட்லைஃப் முன் அதிர்ச்சிகரமான மற்றும் வேதனையான நிகழ்வுகள் நிகழ்ந்தன. 

Loved நேசிப்பவரின் மரணத்தை வெல்வது கடினம்

Div விவாகரத்து அல்லது முறிவு ஆகியவற்றைக் கையாள்வது

Loss நிதி இழப்பு காரணமாக உங்களுக்கு பிடித்த கார் அல்லது பிளாட் விற்கப்பட்டது.

Ex திருமணத்திற்கு புறம்பான விவகாரங்களைக் கொண்ட மனைவி / கணவர்கள்

• கருக்கலைப்பு

Child குழந்தையின் கல்வியில் நல்ல நிதி இல்லாமை

Job வேலை இழப்பு

மிட்லைஃப் நெருக்கடியை ஞானமாக மாற்றுவது எப்படி

நபர் எப்போதும் தங்கள் வாழ்க்கையை நெருக்கடிகளிலிருந்து வாய்ப்புகள் மற்றும் புத்திசாலித்தனமாக மாற்ற முடியும். நெருக்கடியை எவ்வாறு எதிர்ப்பது என்று பார்ப்போம்

Bit பிட்-பை பிட் தீர்க்க முயற்சிக்கவும் - உங்கள் பிரச்சினைகளை பட்டியலிட்டு கவனமாக பரிசீலிக்கவும் உறுதியுடனும் ஒவ்வொன்றாக உரையாற்றவும். 

Negative எதிர்மறை / தேவையற்ற எண்ணங்களை குறைத்தல் - தேவையற்ற எண்ணங்கள் நேரத்தை வீணடிப்பதாகும். வாழ்க்கையில் நேர்மறையான அணுகுமுறை மற்றும் அணுகுமுறையுடன் உங்களைத் தழுவுங்கள், தெளிவற்ற பயத்தில் வாழ்வதை நிறுத்தவும், உங்கள் பணியில் கவனம் செலுத்தவும் உதவுகிறது.

Positive நேர்மறையான உறுதிமொழியை வடிவமைப்பது ஒரு சக்திவாய்ந்த கருவி வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தப்படலாம். நீங்கள் ஒரு எதிர்மறையைப் பெற்றவுடன், நீங்கள் வலுவாக உணர ஒரு உறுதிமொழியைக் கூறலாம். உங்களைப் பார்த்து, கண்ணாடியின் முன் நின்று உறுதிமொழிகளையும் படிக்கலாம்.

It அதை எழுதி அழிக்கவும்: 

நீங்கள் எதிர்மறை எண்ணங்கள் என்றால் பயம், சோகம் போன்ற குறிப்பிட்ட வலுவான உணர்ச்சிகளுடன் இணைக்கப்பட்டிருந்தால். அதை ஒரு காகிதத்தில் எழுதி அதை எரிக்கவும்.

Life வாழ்க்கைக்கு முழுமையான அணுகுமுறை:

முழுமையான அணுகுமுறை உங்கள் உளவியல் சிக்கல்களை இயற்கை வைத்தியம் மூலம் குணப்படுத்துகிறது. தியானம் மற்றும் யோகா பயிற்சி செய்யுங்கள், இது உங்கள் உடலில் 7 சக்கரங்களை சமநிலைப்படுத்த உதவுகிறது.

• ஆறுதல் மண்டலம்: 

சாகசமாக மாற தைரியம்! ஆம் வாழ்க்கையில் புதிய விஷயங்களை ஆராயுங்கள், உங்கள் ஆறுதல் மட்டத்திலிருந்து வெளியேறுங்கள், புதிய இலக்குகளை உருவாக்குங்கள், புதிய செயல்பாடுகளை முயற்சிக்கவும், அறிவின் தளத்தை மேம்படுத்தவும். வாழ்க்கையில் புதிய படைப்பு விஷயங்களை பின்பற்ற இது ஒருபோதும் தாமதமாகாது.

Yourself உங்களைப் பேசவும் ஊக்குவிக்கவும்: 

மிட்லைஃப் பயிற்சியாளர் அல்லது வாழ்க்கை முறை பயிற்சியாளரால் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது எப்போதும் சிறந்தது.

புத்திசாலித்தனமாக சிந்தியுங்கள்:

திருமணங்கள், உறவுகள், விவாகரத்து, நிதி, முதலீட்டு திட்டமிடல், பெற்றோருக்குரியது, தொழில் திட்டமிடல் மற்றும் வாய்ப்புகளுக்கான வாழ்க்கையில் முக்கிய முடிவு மிகவும் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும்.

Wednesday 19 February 2020

வாழ்வின் இரகசியம்

முதன் முதலாக வியன்னா நகருக்கு மின்சாரம் அறிமுகமான புதிதில் 

சிக்மன் பிராய்டு கிராமிய நண்பர் ஒருவர் அவரைக்காண வந்து இருந்தார் .

 பிராய்டு இரவு அவரை ஒரு அறையில் தங்க வைத்தார் 

மின்சார விளக்கு கிராமத்தவருக்கு புதிது .

அவருக்கு அது பற்றி பயம் .

ஆகவே அவர் அறையில் உள்ள மின் விளக்கை உடனடியாக அணைக்க விரும்பினார். 

படுக்கையில் ஏறி நின்று வாயால் ஊதி பார்த்தார் .

விளக்கு அணையவில்லை .

விளக்கை அணைப்பதற்கு பிராய்டை எழுப்பி கேட்கலாம். 

ஆனால் அவர் இது கூட தெரியலயே என மிகவும் மட்டமாக கருதிவிடலாம். 😏😏😏

ஆகவே மின்விளக்கு பளிச்சென்று எரிய பயந்துக்கொண்டே தூங்கினார்.

 காலையில் பிராய்டு வந்ததும்

“என்ன இரவு நல்ல உறக்கமா? ” என்று கேட்டார் .

“எல்லாம் சரிதான் ஆனால் எவ்வாறு இந்த விளக்கை அணைப்பது ?” என்று கேட்டார் .

பிராய்டுக்கு அப்போதுதான் புரிந்தது இவருக்கு மின்சார பயன்பாடு பற்றி ஏதும் தெரியாது என்பது 

”இங்கே வா சுவரில் உள்ளது சுவிட்ச், இதை இப்படி அழுத்தினால் போதும் விளக்கு அணைந்துவிடும் என்றார்.

“பட்டனை தட்டினால் போதுமா, இப்போது புரியுது கரண்ட் என்றால் என்னவென்று ” என்றாராம் .

மின்சாரம் என்பதைப்பற்றி உண்மையில் உங்களுக்கு என்ன தெரியும் ? 

பட்டனை தட்டுவது தான் தெரியும் .

அன்பை, காதலை பற்றி என்ன தெரியும் ?

உள்நோக்கிசென்று அதன் உணர்வுத்தளத்தில் இவற்றை எல்லாம் சந்தித்து. அதன் இயக்கப்போக்கை அறிந்து கொண்டீர்களா? 

யோசித்து பாருங்கள் 

.எதுவும் தெரியாது. 

உங்களுக்கு உங்களைப் பற்றி எதுவும் தெரியாது 

.உங்களின் மனதைப் பற்றி எதுவும் தெரியாது .

வாழ்வின் உள்ளடக்கம் பற்றி எதுவும் தெரியாது 

.அனாதிகாலமாக இந்த பிரபஞ்சத்திலு தான் நீங்கள் வாழ்ந்து கொண்டு உள்ளீர்கள் ..

தொடர்ந்து பல ஜென்மங்களாக நீங்கள் வாழ்ந்தபோதும் 

உங்களை நீங்களே உணர்ந்து கொள்ளாத நிலையில் ,

மிக சொற்ப காலத்தில் உங்கள் மனைவியாகட்டும் ,மக்களாகட்டும் அவர்களை எவ்வாறு உங்களால் புரிந்துக்கொள்ள முடியும் . 

மகிழ்ச்சி எங்கிருந்து வருகிறது ?

கோபம் எங்கிருந்துவருகிறது ? 

அதன் உற்பத்தி களம் எங்கே ? 

எதுவும் தெரியாது .

ஒரு முறை மகிழ்ச்சியாக இருக்கின்றவர் அடுத்த கணத்தில் சோகமாக மாறிவிடுகின்றார் .

ஏன்?

என்னதான் நடைபெறுகிறது ?

அதன் ஆரம்ப புள்ளி எங்கே ?

அதன் ஆதாரசுருதி எங்கே ? 

உங்களுக்கு தெரியாது .

உங்களிடம் எழும் இது போன்ற உணர்வுகளின் 

இயக்கபோக்கை உணர்த்து கொள்ளாத நிலையில் 

நீங்கள் எவ்வாறு மற்றவர்களின் கோபதாபங்களை

அறிந்துகொள்ள முடியும் ?

உங்களின் மனதை உங்களின் இருப்புணர்வை சரியாக அறிந்துகொண்டுவிட்டால் 

அப்போது இந்த வாழ்வின் அத்தனை இரகசியத்தையும் நீங்கள் உணர முடியும் .

*ஓஷோ*

Tuesday 18 February 2020

குளியல்

*குளியல் ரகசியம்*
 
குளியல் பற்றி  இந்திரா  சௌந்தர்ராஜனின் "கன்னிகள்  ஏழு பேர் " என்ற  நூலில்; 

*எந்த  ஒரு  நல்ல  காரியம்  செய்யும்   முன்னர்  குளிப்பது  விசேஷம். குளிப்பது  அழுக்கு  போறதுக்கு  மட்டும்  அல்ல.  நம்மை  சதாசர்வ காலமும்  ஆக்கிரமித்து  இருக்கும் காற்றின்  பிடியிலிருந்து விலகி  இருக்கவும்தான்.  எப்படி  மீன்  தண்ணீரில்  இருக்கிறதோ அதுபோல் நாம்  காற்றுக்குள் இருக்கிறோம்!   

*ஒன்பது கிரகங்கள்  சதாசர்வ  காலமும்  வழிநடத்திக்கொண்டு  இருக்கிறது.  அவற்றின் கதிர்கள்  காத்தோட கலந்துதான் நமது  உடலை  வந்தடைகிறது.  நாம் சுவாசிக்கும்  போது  அது  நமக்குள்ளேயும் நுழைகிறது.  ஒவ்வொரு கணமும்  எல்லோருக்கும் இதுதான் நடக்கிறது. 
இதில்  ஒவ்வொருவர் உடம்பும்  ஒவ்வொரு  விதம். அனைவரும்  ஒரே  நேரத்தில் பிறந்தவர்கள் கிடையாது. 

*மனித உடம்பு  தூசு,  தும்பு போன்ற  அழுக்குகளால் மட்டும் பாதிக்கப்படுவது  இல்லை, மற்ற மனிதர்களின் பார்வை  என்னும்  திருஷ்டி,  எண்ணங்களின்  தாக்குதல்,  உடம்பில்  இருந்து  வெளிப்படும்  கதிர்வீச்சு தாக்குதல்  உட்பட  பல  பாதிப்புகளுக்கு  ஆளாகிறது.

*இந்த  பாதிப்புகள் இரண்டு விதம்;  ஒன்று நல்ல விதம், இன்னொன்று கெட்ட  விதம்.  ஒருவர்  நம்மைப்  பார்த்து  மகிழ்ச்சியடைந்தால் அது  நல்ல  விதம்,  பொறாமைப்பட்டால் அது  கெட்ட  விதம்!  இவற்றை  நாம்  கண்டறிய  இயலாது,  அது சாத்தியமும்  இல்லை.  ஆனால்  இத்தகைய  பாதிப்புகள்  இல்லாமல்  நானும் இல்லை, நீங்களும் இல்லை.  இந்த  பாதிப்பு  கூடிக்கொண்டே போகும்போது ஒரு  கட்டத்தில்  உடம்பு  வலி,  மன அசதி, மன அழுத்தம் என்றெல்லாம் பாடாய் படுத்தும்.  நாம் இதை நமது உடலின் தன்மை என்று  நினைத்துக் கொள்கிறோம்.

*இந்த  உலகிலேயே  தோஷம்  தாக்க  முடியாத  ஒன்று  தண்ணீர்  தான்! குளிக்கும்  போது, நமது  உடல்  முழுவதும்  நீரில்  மூழ்கி  இருக்கும்  போது உலகத்  தொடர்பை இழக்கிறோம்.  நீர் உச்சந்தலையில்  படும்  போது, உடம்பில் இருக்கும்  சர்வநாடிகளும் ஒரு சிலிர்ப்பு சிலிர்ப்பி நமது உடலில் உதறல் ஏற்படுகிறது. இதனால் நம்மை ஆக்கிரமித்து  இருக்கும் கதிர்கள் அனைத்தும்  உதிர்ந்து நீரில் அடித்துச் செல்லப் படுகிறது. குளித்து  முடித்தவுடன்  காற்று  உலகத்துடன்  புதிதாகத்  தொடங்குகிறது! உற்சாகம் உடம்புக்கு  மட்டுமல்ல, மனத்துக்கும்  உண்டாகும்! 

*இறந்த வீட்டிற்கு சென்று வந்தவுடன்  குளிக்க காரணம் இதுதான்.  சவத்தீட்டு என்று சொல்வதும் அந்த  சவம்  கிடக்கும்  இடத்தில்  இருக்கும்  கதிர்களைத்தான். எல்லார்  மனமும்  துக்கத்தில்  இருக்கும்  இடத்தில்  சூழ்நிலை  நல்ல  கதிர்களுடன் நல்லவிதமாக  இருக்காது.  இவை நாம்  குளிக்கும்போது  நீரோடு அடித்துச்  செல்லப்படுகிறது. 

*கோயிலுக்கு  போய்ட்டு  வந்தா குளிக்க  கூடாது என்று  சொல்லும்  காரணமும்  முக்கியம். கோயில் நல்ல சக்தி, நல்ல சூழ்நிலை, நல்ல கதிர்வீச்சு  நடமாடும் ஒரு இடம்.  அத்தகைய  கதிர்வீச்சை, குளித்து  நீருடன்  கலந்து  வீனாக்கக் கூடாது  என்பதால்தான்!💥💥👍🏻👍🏻🌹🌹💐

Monday 17 February 2020

தர்க்கம் பண்ணாதீர்

*"நிதானம்"*

ஒரு பைத்தியகாரன் மீது கருணை கொண்ட சீடன்,

அவரை தனது மடலாயத்து குருவிடம் அழைத்து சென்றான்.
குரு சொன்னார், 

*"அவரை அப்படி ஓரமா மூலையில் உட்கார விடுங்கள்.*
*உணவை, நீரை அருகில் வையுங்கள்* 
*ஆனால் உண்ணும் படி கூற வேண்டாம்.*

பசித்தால் அவரே எடுத்து சாப்பிடுவார்.
*அவருக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம்,*
*நீங்கள் யாரும் கண்டு கொள்ளவும் வேண்டாம்,"* என்றார்.

அவர் கத்துவார், கற்களை வீசுவார்.
ஆனால் அவரை யாரும் அங்கு கண்டு கொள்ளவில்லை.
சீடர்கள் அவரவர் வேலைகளை பார்த்தனர்.

அந்த பைத்தியக்காரருக்கு எதிர்வினையாற்றுவது இல்லாது போனது.
நாட்கள் நகர்ந்தன,

ஒரு நாள் அமைதியாக குரு முன் வந்த பைத்தியகாரன், *"எனக்கும் தியானம் சொல்லி தருவீர்களா..?"* என்று கேட்டான்.

இது இன்றும் திபெத்திய புத்தமடலாயங்களில் நடக்கும் சிகிச்சை முறை.

*"எதிர்வினையாற்ற யாரும் இல்லை என்றால் அவர் அமைதியாகிவிடுகிறார்",*
என்கிறார்கள் திபெத்திய லாமாக்கள்.

*"மற்றவர் பார்க்கவில்லை என்றால்* *பைத்தியகாரத்தனங்கள் வளர்ந்து கொண்டே போகாது"!!!*

தர்க்கம் பண்ணாதீர்கள் ..
நம்முடைய பேச்சே 
தர்க்கத்திற்கு தீனி...
நம் அமைதியே அதற்கு பட்டினி ..!!

*அமைதியாக இருங்கள் ..*
*எல்லாம் சரியாகும் .*
*ஒரு வேளை சரியாக வில்லை என்றாலும் பரவாயில்லை ..!!*

*நீங்கள் சரியாக இருப்பீர்கள் ..*

*நிதானம்*
*நீளமானது ..!!*

*வாழ்க நிதானத்துடன் .*

Saturday 15 February 2020

மேளம்

தட்டாமல் ஒலி எழுப்பும் 
மேளம் …!!

தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் என்பது ஒரு ஜப்பான் நாட்டுக் கதையாகும்.

முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது.

அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று, மலைப் பகுதியில் விட்டு விட வேண்டும்.

இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின் எண்ணம்.

அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்த போது ஒரு தந்தையும் மகனும் ஒருவரிடம் ஒருவர் மிகுந்த அன்பு கொண்டவர்களாக விளங்கினர்.

நாளடைவில் அந்த‌த் தந்தை வேலை செய்ய இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தார்.

ஆதலால் அந்நாட்டின் சட்டப்படி அவரை மகன் மலைப்பகுதியில் கொண்டு விட்டு விட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானான்.

தந்தையைப் பிரிய அவனுக்கு மனமே வரவில்லை. 
எனினும் அரச தண்டனைக்குப் பயந்து அவன் தன்னுடையத் தந்தையை மலைப்பகுதிக்கு முதுகில் சுமந்து சென்றான்.

மலைப்பகுதியை அடைந்த போது அவனுடைய மனம் மிகவும் வருந்தியது. ஆதலால் அவன் தந்தையை தன்னுடனே அழைத்துக் கொண்டு திரும்பி வீட்டிற்கு வந்து விட்டான்.

வீட்டின் பின்பகுதியில் தந்தையை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தான். மிகவும் ரகசியமாக அவருக்கு உணவளித்து வந்தான்.

சாம்பல் கயிறு.

ஒரு நாள் அரசன், தன் மக்களின் அறிவுத் திறனை சோதிக்க எண்ணி, போட்டி ஒன்றை அறிவித்தான்.

சாம்பலால் திரிக்கப்பட்ட கயிறினை கொண்டு வர வேண்டும் என்பதே அப்போட்டியாகும்.

போட்டியைக் கேட்டதும் எல்லோரும் சாம்பலால் எவ்வாறு கயிறு திரிக்க இயலும் என்று எண்ணினர். யாராலும் சாம்பல் கயிறு உருவாக்க முடியவில்லை.

அரசனின் போட்டி பற்றி அந்த‌ மகன் தன் தந்தையிடம் தெரிவித்தான்.

போட்டியைக் கேட்ட தந்தை, மகனிடம் பெரிய தாம்பாளத்தில் கயிறினை முறுக்கி வைத்து, அதனை எரியச் செய்தால் சாம்பலால் திரித்த கயிறு கிடைக்கும் என்றார்.

மகனும் தந்தை கூறியபடி தாம்பாளத்தில் கயிறினை வைத்து எரித்தான். கயிறு எரிந்து சாம்பாலான பின்பும் அதே கயிறு வடிவில் இருந்தது. இதனை அரசனிடம் காண்பித்து பரிசினைப் பெற்றான்.

அடி எது? நுனி எது?

ஒரு மாதம் கழித்து அரசன் இரண்டாவது போட்டியை அறிவித்தான்.

அரசன் ஒரு மரக்கொம்பைக் கொடுத்து இதனுடைய அடிப் பாகம் மற்றும் நுனிப் பாகத்தைக் கண்டு பிடிக்குமாறு மக்களுக்கு ஆணையிட்டான்.

கிட்டத்தட்ட இரு பகுதியும் ஒன்றாகத் தெரிந்ததால் யாராலும் அடி எது? நுனி எது? என்று சொல்ல முடியவில்லை.

*மகன் தந்தையிடம்  அரசனின் கேள்வியைக் கேட்டான்.

தந்தை மரக்கொம்பை தண்ணீரில் போட்டால், அது லேசாக சாய்வாக மூழ்கும்; அப்போது கீழ் நோக்கி இருக்கும் பகுதி அடி, மேல் நோக்கி இருக்கும் பகுதி நுனி என்றார்.

மகனும் தந்தை கூறியவாறே அரசனுக்குச் செய்து காண்பித்து இம்முறையும் பரிசினைப் பெற்றான்.

தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம்.

அரசன் மூன்றாவது போட்டியை மிகவும் கடுமையானதாக வைத்தான்.

அதாவது தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் ஒன்றினைத் தயார் செய்து வருமாறு மக்களிடம் கூறினான்.

வழக்கம் போலவே எல்லா மக்களும் பின்வாங்கி விட்டனர்.

அரசனின் கேள்வியால் மகன் மிகவும் சோர்ந்து தந்தையிடம் வந்து நடந்ததைக் கூறினான்.

தந்தை அவனிடம் “மேளத்திற்குத் தேவையான தோல்களை எடுத்துக் கொள். மலைப்பகுதிக்குச் சென்று தேனீக்கூடு ஒன்று கொண்டு வா. அதனை உள்ளே வைத்து மேளத்தை தயார் செய்” என்றார்.

மகனும் தந்தை கூறியவாறே மேளத்தை தயார் செய்து அதனை அசைக்காமல் கொண்டு சென்று அரசனிடம் தந்தான்.

அரசன் மேளத்தைக் கையில் எடுத்து மேளத்தை அசைத்தான். மேளத்திற்கு உள்ளே இருந்த தேனீக்கள் அசைவினால் மேளத்திற்குள் இங்கும் அங்கும் பறந்தன. இதனால் மேளத்தில் தட்டாமல் ஒலி உண்டானது.

இதனைக் கண்டு ஆச்சர்யமடைந்த அரசன் “உன்னால் எப்படி மூன்று கேள்விகளுக்கும் சரியான விடைகளை செய்து காண்பிக்க முடிந்தது?” என்று கேட்டான்.

அனுபவம் தந்த பதில்கள்.

“அரசே உங்களுடைய கேள்விகளுக்கு விடை காணும் அளவிற்கு எனக்கு அனுபவம் கிடையாது. என்னுடைய வயதான தந்தை என்னுடன் இருக்கிறார். அவர் மூலமே எனக்குத் தங்களின் கேள்விக்கான பதில் கிடைத்தது.” என்று கூறினான்.

இளைஞனின் பதில் அரசனை நெகிழச் செய்தது.

சிக்கலான பிரச்சினைகளைத் தீர்வு செய்ய‌ வயதானவர்களின் அனுபவம் உதவியாக இருக்கும் என்பதை அரசன் உணர்ந்து கொண்டான்.

உடனே அவன் “இனி வேலை செய்ய இயலாத வயதானவர்களை, மலைப்பகுதிக்கு கொண்டு போய் விடத் தேவையில்லை” என்று உத்தரவு போட்டான்.

அதுமுதல் வயதானவர்கள் தங்கள் கடைசிக் காலத்தை பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகக் கழித்தனர்.

அனுபவ அறிவு என்றைக்கும் விலை மதிப்பில்லாதது என்பதைத் தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் கதை மூலம் அறியலாம்.

ஆம்,

வயதான பெரியவர்கள் 
வீட்டில் இருப்பதே நமக்கு இறைவன் கொடுத்த அருள் என்று உணர்வோம்.

நம்மை ஆளாக்கிய பெற்றோரின் வயதான காலத்தில் அவர்கள் 
நம்மோடு இருப்பதும் அவர்களை பராமரிப்பதும் 
நமக்கான கடமை மட்டுமல்ல 
நமக்கு கிடைத்த அருள் என்று உணர்வோம்.

தொப்புள் கொடியில் இருந்தே தொடங்கிய தாயும்
மார்பிலும் தோளிலும் தூக்கிச் சுமந்து கால் தேய உழைத்து நம்மை உருவாக்கிய தந்தையும்
நம்மிடம் நன்றியை எதிர்பார்க்கவில்லை 
என்றாலும்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் 
உய்வில்லை 
செய்நன்றி கொன்ற மகற்கு.

Wednesday 12 February 2020

தியானம்

முயற்சியற்ற தியானம்

ஜென் – மரபில், முயற்சியற்றதன்மை மிகவும் வலியுறுத்தப்படும் அதில்,

குரு சீடனிடம் கூறுவார் – வெறுமனே அமரு. எதுவும் செய்யாதே. – அந்த சீடன்முயற்சிப்பான். முயற்சிப்பதைத் தவிர நீ வேறு என்ன செய்ய முடியும். அந்த சீடன்
வெறுமனே அமர முயற்சிக்கிறான், அவன் வெறுமனே அமர முயற்சிக்கிறான், அவன் எதுவும் செய்யாமலிருக்க முயற்சிக்கிறான். அப்போது குரு தனது கைத்தடியால் அவனது தலையில் அடித்துவிட்டுக் கூறுகிறார் – இதை செய்யாதே. 

நான் உன்னை வெறுமனே அமர முயற்சிசெய்யச் சொல்லவில்லை, அப்போது அது செய்வதாகி விடுகிறது. எதுவும் செய்யாமலிருக்க முயற்சி செய்யாதே, அப்போது அதுவும் ஒரு செயல்பாடாகி விடுகிறது. வெறுமனே உட்கார்.

நான் உன்னிடம் வெறுமனே உட்கார், என்று கூறினால், நீ என்ன செய்வாய். நீ ஏதாவது செய்வாய், அது அதை வெறுமனே உட்காருவதாக இல்லாமல் செய்துவிடும். ஒரு செயல்பாடு நுழைந்துவிடும். நீ முயற்சிசெய்து உட்கார்ந்து கொண்டிருப்பாய், ஒரு இறுக்கம் அங்கிருக்கும். உன்னால் வெறுமனே உட்கார முடியாது. இது வேடிக்கையாகத் தோன்றலாம், ஆனால் நீ வெறுமனே உட்கார முயற்சிக்கும் கணத்திலேயே, அது சிக்கலாகி விடுகிறது. வெறுமனே உட்கார முயற்சிப்பதே அதை சிக்கலாக்கி விடுகிறது. ஆகவே என்ன செய்வது.

வருடங்கள் கழிகின்றன, சீடன் அமர்ந்துகொண்டே இருக்கிறான், தவறுசெய்வதாக குருவால் தண்டிக்கப்பட்டும், குறைகூறப்பட்டும் வருகிறான். ஆனால் அவன் தொடர்ந்து கொண்டே போகிறான், தினமும் அவனுக்கு தோல்விதான், ஏனெனில் முயற்சி அங்கிருக்கிறது. மேலும் நீ குருவை ஏமாற்ற முடியாது. ஆனால் ஒருநாள், பொறுமையோடு உட்கார்ந்திருக்கையில், இப்படி உட்கார்ந்திருக்கிறோம் என்கிற உணர்வு கூட மறைந்துவிட்டது, ஒருநாள் திடீரென அவன் உட்கார்ந்திருக்கிறான் – ஒரு மரம் போல, ஒரு பாறை போல – எதுவும் செய்யாமல். அப்போது குரு கூறுகிறார் – இதுதான் சரியான முறை. இப்போது நீ அதை அடைந்துவிட்டாய். 

இதை நினைவில் வைத்துக்கொள். இதுதான் உட்காரும் முறை.- ஆனால் இந்த முயற்சியற்ற நிலையை அடைய நிறைய பொறுமையும், நீண்ட முயற்சியும்
தேவை. ஆரம்பத்தில் முயற்சி தேவை, செயல்பாடு தேவை, ஆனால்      ஒரு தேவைப்படும் தீமையாக ஆரம்பத்தில் மட்டும் இது தேவை. மேலும் நீ
இதை தாண்டி செல்ல வேண்டும் என்பதை நீ தொடர்ந்து ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும். 

நீ தியானத்திற்காக எதுவுமே செய்யாத ஒரு கணம் கண்டிப்பாக வரும் – வெறும் இருப்பாக அங்கு இருப்பாய், அது நிகழும், வெறுமனே நிற்கையில் அல்லது அமர்ந்திருக்கையில் அது நிகழும். எதையும் செய்யாதிருக்கையில், வெறுமனே விழிப்புணர்வோடிருக்கையில், அது நிகழும்.

இந்த எல்லா யுக்திகளுமே உன்னை ஒரு முயற்சியற்ற கணத்திற்கு கொண்டுவர உதவி செய்பவைகளே. உள் நிலைமாற்றம், உள் நிலையுணர்வு, முயற்சியினால் நிகழாது, ஏனெனில் முயற்சி ஒருவகை இறுக்கம். முயற்சியில் நீ முழுவதுமாக தளர்வடைவது சாத்தியமல்ல, முயற்சியே தடையாக மாறிவிடும். இந்த பின்புலத்தை மனதில் வைத்துக்கொண்டு நீ முயற்சித்தால், மெது மெதுவாக அதையும் விடக்கூடிய திறனை நீ பெறுவாய்.

ஓஷோ----

நன்றி கூறல்

உங்களுக்கு நன்றி


நன்றி கூறுதல் ஒரு நல்ல பழக்கம் என்று மட்டும் நினைத்துக் கொள்கிறோம். “தேங்க்ஸ்” என்பதை மேலோட்டமாக உதிர்த்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கிறோம். அதற்கும் மேலாக, நன்றி பாராட்டுதல் எவ்வளவு பெரிய உளவியல் சிகிச்சை தெரியுமா?

நீங்கள் இதைப் படிக்கிறீர்கள் என்றால் நீங்கள் பிறந்து, வளர்ந்து, படிப்பறிவு, வசதி பெற எவ்வளவு பேர் உதவியிருப்பார்கள் என்று பட்டியல் போடுங்கள். பெற்றெடுத்த அம்மா, அப்பா, வளர்த்த பாட்டி, தாத்தா, மருத்துவர்கள், எழுத்தறிவித்த ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், காதல் கொண்டவர்கள், அக்கம்பக்கத்தினர், வேலைக்குத் தேர்ந்தெடுத்தவர், பயிற்சி கொடுத்தவர், திருமணம் முடிக்க உதவியவர், உங்கள் வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், தூர இருந்து ஆறுதலும், அறிவும், அன்பையும் தரும் எண்ணற்றவர்கள்...!

இவர்கள் இல்லை என்றால் இன்று நீங்கள் இந்த கட்டுரையை வாசிக்க முடியாது. இவர்களை எத்தனை முறை நாம் நன்றியோடு நினைக்கிறோம்? மாறாக பல நேரங்களில் இவர்களில் பலரை குற்றம் சொல்கிறோம். எப்படிப்பட்ட நன்றியில்லாத செயல் பாருங்கள்!

பெத்த மனம் பித்து

குறிப்பாக பெற்றவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மேலதிகாரிகள். அதிகமாக தூற்றப்படும் உறவுகள் இவர்கள் எனலாம். ஒரு தாய் படும் வலியும் வேதனையும் எந்த உறவும் பட முடியாது. ஆனாலும் தாயிடம் தான் ஆயிரம் குறைகள் கண்டுபிடிப்போம். நமக்கு அள்ளித் தரும் கைகளைத்தான் அதிகம் கடிக்கிறோம். ‘பெத்த மனம் பித்து. பிள்ளை மனம் கல்லு’ என்ற பழமொழி எவ்வளவு செறிவானது என்று உட்கார்ந்து யோசித்தால் புரியும்.

“எனக்கு பெரிசா எதுவும் எங்கப்பா செய்யலை!” என்று பேசத் துவங்குவதற்கு முன் அப்பா இல்லை என்றால் இந்த உயிரே இல்லை என்பதை உணர வேண்டும். ஒவ்வொரு தகப்பனும் தனக்குத் தெரிந்ததைத் தன்னால் முடிந்ததைத் தன் பிள்ளைக்கு செய்கிறான். தந்தையின் பொருள் உதவி இல்லாமல் யாரும் பிழைத்திருக்க முடியாது.

அதே போல ஆசிரியர்கள். ஒரே நேரத்தில் 50 குழந்தைகளுக்குப் பெற்றோராகவும் போதகராகவும் செயல்படுகிறார்கள். அவர்கள் அறிவில் குறை இருக்கலாம். வழிமுறைகளில் தவறுகள் இருக்கலாம். ஆனால் அவர்கள் பங்களிப்பில்லாமல் யாரும் ஒரு பைசா சம்பாதித்திருக்க முடியாது. உங்கள் விரல் பிடித்து முதல் எழுத்து எழுதிய ஆசிரியர், முதல் வேலை சொல்லித்தந்த ஆசிரியர் வரை எத்தனை ஆசிரியர்கள் நம்மைச் செதுக்கியிருப்பார்கள்? ஆசிரியர்களை கேலி செய்த அளவுக்கு நன்றி கூறியிருக்கிறோமா?

மறைமுக உதவி

செய்கிற வேலை தப்பு என்று எடுத்துரைக்கிற போது வருகின்ற கோபம் இயல்பானதுதான். ஆனால் உங்கள் திறனை நுட்பமாக வடிவமைக்க, உங்கள் தொழிலில் நீங்கள் பிரகாசிக்க உங்கள் மேலதிகாரி தரும் நெருக்கடிகள் அனைத்தும் பாடங்கள்தானே? உங்களை உயரத்துக்கு இட்டுச் செல்லும் முதலாளிகள், மேலாளர்கள், மேலதிகாரிகள் என எத்தனை பேர்? அத்தனை பேரை நினைவுகூருகிறோமா?

பிரிவிலும் மறைவிலும் மட்டும் உணரும் வாழ்க்கைத் துணையின் அருமையை வாழ்கின்ற காலத்தில் உணர்ந்து நன்றி பாராட்டுபவர்கள் எத்தனை பேர்?

இவர்களைத் தவிர நம் வாழ்க்கையில் முகம் தெரியாத பலர் நேரடியாகவோ மறைமுகமாகவோ நமக்கு உதவியிருப்பார்கள். பிரசவ நேரத்தில் உதவுவார் ஆட்டோக்காரர். வேலை கிடைத்தும் ஒருவர் சேராததால் ‘வெயிட்டிங் லிஸ்ட்’டில் அந்த வேலை உங்களுக்கு கிடைக்கிறது. இப்படி நிறைய நடந்திருக்கும்.

அது மட்டுமா? உங்களை ஒவ்வொரு நாளும் பத்திரமாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு சேர்க்கும் ஒவ்வொரு ஓட்டுநருக்கும் நன்றி சொல்ல வேண்டுமே? ஒரு விபத்து நடக்க இருக்கையில் அதைத் தடுத்த ஓட்டுநருக்கு நன்றி சொல்வோம். ஆனால், தினம் ஒழுங்காக ஓட்டிச்சொல்லும் ஓட்டுநருக்கு சொல்வோமா?

பட்டியல் நீண்டுகொண்டே இருக்கும். எங்கோ வளர்ந்த கீரை உங்கள் தட்டுக்கு வரும் வழியில் எத்தனை கைகளை கடந்து வந்திருக்கிறது? உங்கள் பத்து ரூபாயையும் மீறி எத்தனை பேரின் உழைப்பால் அது உங்களுக்கு கிடைக்கிறது? உங்கள் உணவுக்கு உழைத்த அத்தனை பேருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்றால் எத்தனை பேர் இருப்பார்கள் யோசியுங்கள்!

உங்கள் பட்டுப்புடவைக்காக உயிர் தந்த பட்டு பூச்சிகள் முதல் உங்களின் அழகு சாதனங்களைத் தயாரிப்பதற்காகச் செய்யப்படுகிற சோதனைக்காக உயிர் விட்ட எண்ணற்ற பறவைகள், மிருகங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நன்றி சொல்லுங்கள்

நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளிலும் பல மனிதர்களின் பங்களிப்பு உள்ளது. உங்கள் சொகுசு வாழ்க்கைக்காக பலர் வலியையும் வேதனையையும் அனுபவிக்கிறார்கள். அவர்களை ஒரு முறையாவது நினைக்கிறோமா?

இன்று இந்த பயிற்சியை மேற்கொள்ளுங்கள்: உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு உதவிய அனைவரையும் பட்டியலிட்டு ஒவ்வொருவருக்கும் மானசீகமாக நன்றி சொல்லுங்கள். இத்தனை நாள் நினைக்காததற்கு மன்னிப்பு கேளுங்கள்.

அதன் பிறகு உங்கள் உடலுக்கு நன்றி செலுத்துங்கள்.

நன்றி கூறுகையில் நீங்கள் கொடுத்தது எவ்வளவு, எடுத்தது எவ்வளவு என்று புரியும். இந்த உலகில் நீங்கள் மட்டுமே தனியாக எதையும் செய்து விட முடியாது என்று தெரியவரும். பணிவும் அன்பும் பெருகும். அகந்தை அழியும்.

கடைசியாக இத்தனை பேரை உங்கள் வாழ்க்கையில் இணையச் செய்த அந்த மகா சக்திக்கு நன்றி கூறுவீர்கள்.

பெருங்கடலில் சிறு துளி நாம். கடலை உணர்கையில் துளி தொலைந்து போகும். ஆழ்கடலாய் மனம் அமைதி கொள்ளும்.

Monday 10 February 2020

மாற்றம்

மனசு போல வாழ்க்கை 24: மாறட்டும் மனம்


பெற்றோர்களுக்கு எப்போதும் தங்கள் குழந்தைகள் மீது அளவற்ற அன்பு. அதனால் விரைவில் “சுற்றியுள்ள உலகம் மோசமாகி வருகிறது. நம் காலம் போல எதுவும் இல்லை. இவர்கள் என்ன ஆவார்களோ?” என்ற எண்ணத்துக்குப் போய்விடுவார்கள்.

“இந்தக் காலத்துல குழந்தை வளத்தறது பெரிய வேலை!” என்பார்கள். என்ன பிரச்சினை என்று கேட்பதற்கு முன்னே பெரிய பட்டியல் வந்து விழும்.

மாற்றத்தின் தெளிவு

“ நேரத்துக்கு எழுந்துக்கறது கிடையாது. சதா செல்போன் நோண்டறது. பெரியவங்ககிட்ட பயமோ மரியாதையோ கிடையாது. சொந்தக்காரங்க பத்தின எண்ணமும் கிடையாது. எல்லாத்துலயும் ஆயிரம் சாய்ஸ் வேணும். எதுலயும் திருப்தி கிடையாது. சாப்பிடறது எல்லாம் ஜங்க் ஃபுட் தான். செலவு பத்தி கவலையே கிடையாது.

ஒரு அஞ்சு நிமிஷம் முகம் கொடுத்துப் பேச முடியாது. நினைச்ச மாதிரிதான் எல்லாம் நடக்கணும்னு நினைக்கிறாங்க. சின்ன விஷயத்துக்குக் கூட இடிஞ்சு போயிடறாங்க. இவங்கெல்லாம் நாளைக்கு எப்படி அட்ஜஸ்ட் பண்ணிக் குடும்பம் நடத்துவாங்களோ? நினைச்சாலே பயமா இருக்கு!”

இந்தக் கவலையில் நிறைய நிஜங்களும் நியாயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், காலத்தின் மாற்றம் பற்றிய தெளிவு முதலில் வேண்டும்.

எல்லாக் காலத்திலும் பிள்ளைகள் பொறுப்பற்றவர்களாகப் பக்குவமற்றவர்களாகத் தான் பெற்றோர்களுக்கும் பெரியவர்களுக்கும் தெரிவார்கள். அதே போல உலகில் வரும் மாற்றங்களைப் பயத்தோடும் சந்தேகத்தோடும் அணுகுவது வயதானவர்களின் இயல்பு. உலகில் ஏற்படும் மாற்றங்கள் எதுவும் நல்லதல்ல என்று வயதானவர்கள் நினைக்கக் காரணம் தங்கள் அறிவும் அதிகாரமும் ஆட்டம் கண்டு விடுமோ என்ற அச்சம்தான்.

மாற்றத்தின் பயம்

மாற்றம் வெளியிலிருந்து வருகையில் எதிர்ப்பதும், அவை நல்லதில்லை, நிலைக்காது என்று ஆருடம் சொல்வதும் என்றும் நடந்து வருபவை தான்.

“உலகில் கம்ப்யூட்டர்கள் கொஞ்சம்தான் பயன்படும் ” என்று 50-களில் பேசினார்கள். பேசுகிற முதல் திரைப்படம் வந்த போது, “இந்த நடிகர்களை யார் பேசச்சொன்னது, நடித்தால் போதாது?” என்றார்கள். ரயில் வண்டியைப் பார்த்துப் பயந்து ஏற மறுத்தவர்கள் நம் ஆட்கள்.

கிரஹாம் பெல் தொலைபேசிக்கான தனது காப்புரிமையை விற்க நினைத்த போது, “ஒலியைக் கடத்தும் இந்தக் கருவியால் எந்த வியாபாரப் பலனும் இல்லை” என்று மறுத்தன பிரபல நிறுவனங்கள். தாமஸ் ஆல்வா எடிசன் எதிர்ப்புகளையும், வழக்குகளையும், துரோகங்களையும், தோல்விகளையும் கண்டவர். அடிப்படைக் காரணம், எல்லா மாற்றங்களையும் உலகத்தினர் என்றும் பயத்தோடு எதிர்த்ததுதான்.

சாதகங்கள் பாதகங்கள் இரண்டையும் மாற்றங்கள் ஏற்படுத்தும். ஒன்றை அனுபவிக்கும்போது இலவச இணைப்பாய் மற்றதும் கூடவே வரும். கால்குலேட்டர் வந்தது. பெரிய கணக்குகள் சுலபமாய்த் தவறில்லாமல் கைக்குள் வந்தது. மனக் கணக்கு போய்விட்டது. என் பாட்டி காலத்தில் அனைவருக்கும் மனக் கணக்கு தெரியும். என் பெற்றோர் காலத்திலேயே அது வழக்கொழிந்துவிட்டது.

இந்தத் தொடர்ச்சியில் தான் இன்றைய தொழில்நுட்பத்தையும் அது ஏற்படுத்திய வாழ்வியல் மாற்றங்களைப் பார்க்க வேண்டும்.

கொடுத்தது நாம்தானே!

ரயில் டிக்கெட் வாங்க அரை நாள் லீவு போட்டுவிட்டுக் கியூவில் நின்ற பெற்றோருக்கு இன்று உட்கார்ந்த இடத்தில் செல்போனில் இருக்கைகள் பதிவு செய்யப்படுகின்றன. தொழில்நுட்பம் என்பது பூதம் போல. நீங்கள் சொல்வதையும் செய்யும். சொல்லாததையும் செய்யும். எல்லாப் பரிமாற்றங்களும் செல்போனில் நடக்க ஆரம்பித்தால், அப்புறம் நேரத்துக்கு வெளியில் போய்க் காத்திருப்பது குறையத்தானே செய்யும்?

எல்லாக் கியூவிலும் நின்று நின்று பொறுமையும் சகிப்புத்தன்மையும் வந்தது முன்பு. கேட்டது அனைத்தும் உடனே கிடைக்கையில் காத்திருத்தல் எப்படிச் சாத்தியமாகும்? பொறுமையும் மனப்பக்குவமும் எப்படிக் கிடைக்கும்? பிறரிடம் கை நீட்டி கடன் வாங்குவது கேவலம் என்று இருந்த சமூகம் கடன் அட்டையில் காலம் தள்ளுகையில் எப்படிப் பழைய நல்ல பண்புகளைத் தூக்கிப் பிடிக்க முடியும்?

இன்று நம் பிள்ளைகள் வாழும் வாழ்க்கை முறை அனைத்தும் நாம் அருளியவை. எல்லாவற்றையும் கொடுத்துவிட்டுப் பிள்ளைகளை நோவதால் என்ன பலன்?

ஒவ்வொரு அறைக்கும் ஒரு டி.வி. பீட்சா, மாத தவணையில் வண்டி, வீடியோ விளையாட்டுக்கள், விலை உயர்ந்த உடைகள், டி.வியில் பார்த்து, வீட்டுக்குப் பயன்படாப் பொருட்களையும் கூட தருவித்தது நாம். அவர்கள் அனுபவிக்கையில் ஏற்படும் எதிர்மறை விளைவுகளுக்கும் நாம் தானே பொறுப்பேற்க வேண்டும்!

நாம் அவர்களிடம் எதிர்பார்க்கும் ஒவ்வொரு விஷயத்திலும் ஒன்றுக்கு ஒன்று முரணான விஷயத்தை எதிர்பார்க்கிறோம். அதை நீங்களே புரிந்து கொள்ளாத போது எப்படி உங்கள் பிள்ளைகள் புரிந்து கொள்ள முடியும்?

ஒப்படைத்தலே வழி!

முன்பெல்லாம் மாமியார்- மருமகள் சண்டைகளின் காலம். அடுத்த தலைமுறையில் கணவன் மனைவி சண்டை தான் பிரதானம். இன்று பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் சண்டை. ஆக, உறவுச்சிக்கல்கள் என்றும் இல்லாமல் இல்லை.

என்ன செய்யலாம்? உங்களின் நேற்றைய கனவுகளை அவர்களின் நாளைய கற்பனைகள் மேல் திணிக்காதீர்கள். அவர்களுக்கான நேரத்தையும் இடைவெளியையும் கொடுத்து விட்டு, கண்ணியமாக விலகியிருங்கள். அவர்கள் வாழ்க்கையை அவர்கள் மட்டும் தான் தீர்மானிக்கப் போகிறார்கள். தடுமாறுகையில் பின்னாலிருந்து தாங்குவதற்கு நான் இருக்கிறேன் என்று மட்டும் உணர்த்துங்கள். உங்கள் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக வெளியேற்றுங்கள். இதனால் உங்களுக்கு ஏற்படும் மன நெருக்கடிகளை என்றாவது சாவகாசமாகப் பேசுங்கள். புரிய வையுங்கள். பணிய வைக்க நினைக்காதீர்கள்.

அவர்கள் மாறணும் என்றால் அதற்கு நீங்கள் முன் மாதிரியாக இருங்கள். கோபப்படாதே என்று அறிவுரை சொல்வதற்குப் பதில் நீங்கள் கோபப்படாமலிருங்கள். “யோகா செய்” என்று அறிவுரை செய்வதை விட நீங்கள் செய்து காட்டுங்கள்.

உங்கள் பிள்ளையை நீங்கள் மட்டும் தான் காக்க வேண்டும் என்ற மமதையிலிருந்து வெளியே வாருங்கள். உங்கள் பிள்ளையை உண்மையில் காக்கும் சக்தி ஒன்று உண்டு. அதனிடம் ஒப்படைப்பதுதான் சிறந்த வழி.

நம்புபவர்கள் அதை இறைமை என்பர். மற்றவர்கள் அதை இயற்கை என்பர்.

தோல்வி- நன்றி

மனசு போல வாழ்க்கை 25: தோல்விகளுக்கு நன்றி!


தோல்விகள் நமக்கான பாடங்கள் என்று தெரிந்தும் தோல்விகளைப் பற்றி நாம் அதிகம் நினைப்பதில்லை. வெற்றியைக் கொண்டாட நினைக்கிறோம். தோல்வியை மறக்க நினைக்கிறோம். தோல்வி தரும் வலிதான் காரணம். தோல்வியை நினைக்கையில் நம்மையும் அறியாமல் சிறுமைப்பட்டுப் போகிறோம். வெளியில் சொல்லாவிட்டாலும் குறுகிப்போகிறோம். இது எனக்கு நடந்திருக்க வேண்டாம் என்று நினைக்கிறோம்.

மூடி மறைத்தல்

காரணம் இல்லாமல் காரியம் இல்லை. தோல்வி வருவது நமக்கு ஒரு பாடம் புகட்டத்தான். அந்தப் பாடத்தை வலிமையாகக் கற்றுத்தரத் தோல்வியால் தான் முடியும். வெற்றியால் வரும் பாடங்கள் அகந்தையை வளர்க்கும். தோல்வி தரும் பாடங்கள் அகந்தையை அழிக்கும்.

நம் அகந்தை அழிய அவ்வளவு சீக்கிரம் நாம் அனுமதிப்போமா?

பொய்யான காரணங்களை அகந்தை உற்பத்தி செய்யும். ஒரு தற்காலிக அமைதியை உருவாக்கி அதில் தோல்வி அனுபவத்தை மூடி வைக்கும். அந்த மூடி மறைத்தலில் தோல்வி நமக்குக் கற்பிக்கும் பாடங்களும் மனதில் ஏறாமல் போய்விடும்.

தோல்வி நிலையானதா?

வெற்றியாளர்களின் சாகசங்களைக் கேட்பதில் 100- ல் ஒரு பங்கு கூடத் தோல்வியாளர்களின் அனுபவங்களை நாம் கேட்பதில்லை. வெற்றி பெற்றவர்களின் பழைய தோல்வி அனுபவங்கள்கூட சாகசங்களாகத்தான் பார்க்கப்படும். நிறைய தோல்விகளைச் சந்தித்தவர்களின் அனுபவங்கள் வளமான வாழ்க்கைப் பாடங்கள். அனைத்துத் தோல்விகளையும் நாமே பெற்றுக் கற்றுக்கொள்வதைவிடப் பிறர் தோல்விகளில் பாடம் கற்பது புத்திசாலித்தனம்.

தோல்வியடைந்தவர்களை உடனே உதாசீனப்படுத்துவது போன்ற மடத்தனம் எதுவுமில்லை. முதலில், வெற்றி, தோல்வியை வைத்து மனிதர்களை மதிப்பிடுவது மலிவான செயல். இரண்டாவது, தோல்வி என்பது நிரந்தர நிலையில்லை. ஒரு வெற்றி கூடச் சமயத்தில் வாழ்க்கையின் உச்சத்துக்கு இட்டுச் செல்லலாம். மூன்று, தோல்வியாளர்கள் தங்கள் பாடங்களைப் பகிரத் தயாராக இருப்பார்கள். ஆறுதல் கிடைக்கக் கூடப் பகிரலாம். ஆனால், வெற்றி பெற்றவர்கள் பலர் தங்கள் தோல்வி அனுபவங்களைப் பகிர மாட்டார்கள். ஆதலால் தோல்விகள் பாடங்கள் என்றால் தோல்வி அடைந்தவர்கள் ஆசிரியர்கள்.

நாம் ஏன் தோல்வி களைக் கண்டு இப்படிப் பயந்து நடுங்குகிறோம்? சிறு வயது முதலே தவறுகளையும் தோல்விகளையும் ஒதுக்கத்தான் சொல்லித் தந்திருக்கிறார்கள்.

வெற்றியின் மீதான வெறி

சரியும் தவறும் கலந்ததுதான் வாழ்க்கை. வெற்றியும் தோல்வியும் இணைந்திருப்பது தான் இயல்பு. ஒன்றை மட்டும் கொண்டவர்கள் யாரும் இல்லை. நம் தெய்வங்கள் கூட இதற்கு விதி விலக்கல்ல.

வாழ்க்கையில் வெற்றியை மட்டும் தனியாகப் பிரித்து முழுமையாக உரிமை கொண்டாடிவிடலாம் என்று நினைப்பதினால் தான் இன்று வெற்றியை விற்கும் சந்தைகள் பெருகி விட்டன. இதைப் படி, இதைக் குடி, இதைச் செய், இதை வாங்கு, இங்கு செல், இவரிடம் போ என்றெல்லாம் பிரித்துப் பிரித்துச் சந்தையைப் பிடித்துக் கொண்டதன் காரணம் நமக்கு வெற்றியின் மீது இருக்கிற வெறி தான்.

வாழ்க்கையில் வெற்றியை மட்டும் தனியாகப் பிரித்து முழுமையாக உரிமை கொண்டாடிவிடலாம் என்று நினைப்பதினால் தான் இன்று வெற்றியை விற்கும் சந்தைகள் பெருகி விட்டன. இதைப் படி, இதைக் குடி, இதைச் செய், இதை வாங்கு, இங்கு செல், இவரிடம் போ என்றெல்லாம் பிரித்துப் பிரித்துச் சந்தையைப் பிடித்துக் கொண்டதன் காரணம் நமக்கு வெற்றியின் மீது இருக்கிற வெறி தான்.

படிக்காதவர்கள், நல்ல மதிப்பெண்கள் வாங்காதவர்கள், நல்ல வேலை கிடைக்காதவர்கள், பணம் சம்பாதிக்காதவர்கள், சொத்து சேர்க்காதவர்கள் இவர்கள் எல்லாம் தோல்வியடைந்தவர்கள் என்று நம்ப ஆரம்பித்து விட்டோம். அப்படி என்றால் படிப்பு, வேலை, சொத்து சேர்த்தவர்கள் முழுமையான வெற்றியாளர்களா? பின் ஏன் இவர்களில் பலரிடம் இத்தனை வியாதிகள், விவாகரத்துகள், விவகாரங்கள்? இவையெல்லாம் தோல்விகள் இல்லையா?

நம்பிக்கையே மருந்து

யோசித்துப் பார்த்தால், வெற்றியும் தோல்வியும் அவரவர் மதிப்பீடு சார்ந்தவை. வாழ்க்கையில் எதை நோக்குகிறோமோ அது கிடைத்தால் வெற்றி. அது தவறினாலோ அல்லது தாமதமானாலோ அதைத் தோல்வி என்று சொல்கிறோம். அவ்வளவு தான்.

எந்தத் தோல்வியும் பெரிதல்ல. அதைப் பூதாகரமாக ஆக்கி விடுவது நம் எண்ணங்கள் தான். அந்தந்தப் பருவத்தில் பெரிதாகத் தெரியும் தோல்விகள் காலமும் தூரமும் கடந்து நோக்குகையில் அற்ப விஷயமாகத் தெரியும்.

மதிப்பெண்கள் குறைவதும், காதல் கை கூடாததும் அந்தந்தக் காலத்தில் வாழ்க்கையே ஸ்தம்பிக்க வைப்பவை. ஆனால் அதைக் கடந்தும் வாழ்க்கை ஓடும். அதை விடச் சிறப்பான நிகழ்வுகளும் வாய்ப்புகளும் வாய்க்கும். நாளை பற்றிய நம்பிக்கைதான் நேற்றைய காயங்களுக்கு மருந்து.

தோல்விகளுக்கு நன்றி

மரணம் நிகழ்ந்த வீட்டிலும் காபி குடிக்கிறார்கள். விபத்து நடந்த இடத்தில் சில நிமிடங்களில் போக்குவரத்து சகஜமாகிறது. இயற்கை சீற்றம் நிகழ்ந்த இடம் சுற்றுலா மையம் ஆகிறது. எல்லா இழப்புகளும் ஏதோ ஒரு விதத்தில் ஈடு செய்யப்படுகின்றன.

உங்களுக்கு முன்பாக மலையேறுபவர் தடுக்கி விழும் போது, “அங்கு வழுக்கல் அதிகம். பார்த்துப் போ!” என்று சொல்லாமல் சொல்கிறார். உங்கள் விபத்தைத் தடுக்கிறார்.

உங்களுக்குக் கிடைத்த அனைத்துத் தோல்விகளுக்கும் நன்றி செலுத்துங்கள். உங்கள் தோல்விக்குக் காரணமான அனைவரையும் மனதாரப் பாராட்டி நன்றி சொல்லுங்கள். நீங்கள் செல்லும் பாதையில் உங்களுக்கு முன்பாக சென்று தோற்றவர்கள் அனைவரையும் நினைவு கூறுங்கள்.

வெற்றியைத் தலைக்கு மேலே எடுத்துக் கொள்ள வேண்டாம். தோல்வியை மனதுக்குள் எடுத்துக் கொள்ள வேண்டாம். இரவும் பகலும் போல வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக்கொள்வோம்!

Tuesday 4 February 2020

வெற்றி

*சாணக்கியர் உரைத்த வெற்றிக்கான தந்திர குறுக்கு பாதைகள் பற்றி தெரியுமா?*


மௌரிய பேரரசின் ஒரு முக்கிய பங்காற்றியவர் சாணக்கியர். இன்றைய அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள தக்ஷஷிலாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் சார்ந்த துறையில் பணியாற்றியவர். நீதி சாஸ்திரம், அர்த்த சாஸ்திரம் போன்ற சிறந்த படைப்புகளை இந்த உலகதிற்கு அளித்த தத்துவ ஞானி. இவரது படைப்புகள் 1915இல் தான் கண்டுபிடிக்கபட்டது என்பது குறிப்பிடதக்கது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சாணக்கியரின் தந்திரம் பற்றி நம்மில் அறியாதவர்கள் இருக்க முடியாது. அவரை போன்ற அறிவுடையோர் தத்துவங்களை ஏற்பதால் நாமும் நம் வாழ்வில் ஏற்றம் பெறலாம்.



இந்த உலகம் ஜெய்த்தவர்களை தான் திரும்பி பார்க்கும். தோற்றவர்களை ஏளனம் மட்டுமே செய்யும். தட்டி கொடுக்க ஒரு கை நமக்கு இருந்தால் போதும் எட்டி பிடிக்க ஒரு வானம் பத்தாது. உன்னால் முடியும் என்ற சொல்லை கேட்டாலே போதும் ஒரு புதிய உத்வேகம் வந்து விடும் மனதிற்குள். அது தான் மாயை. சிறிய தீப்பொறி போதும் காட்டையே சாம்பாலக்க. அது போல தான் சிறிய வழிகாட்டுதல் போதும் அனைத்தையும் நம் வசப்படுத்தி விடலாம்.


 
வாழ்க்கையில் ஜெய்க்க நேர்மை தேவை தான். ஆனால் தந்திர வழிகளும் தேவைப்படுகிறது. யாரையும் பாதிக்காத எந்த தந்திரமும் ஒரு மகத்தான மந்திரமே. இந்த தந்திரத்தை பற்றி சாணக்கியர் என்ன கூறுகிறார் என்று இப்பதிவில் காண்போம் வாருங்கள்.



எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் அதை மற்றவர்கள் காணும் விதத்திலும் நீங்கள் காணும் விதத்திலும் வித்தியாசம் இருக்குமாறு மாற்றி கொள்ளுங்கள். உங்களுக்கான தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கி கொள்ளுங்கள். யாரையும் பின் தொடராதீர்கள்.

போட்டி என்று வந்துவிட்டால் எப்போதும் மற்றவர்களை சந்தோஷப்படுத்த நினைக்காமல் உங்களை பற்றியும் சிந்திக்க வேண்டும். யாரையும் 100% திருப்தி படுத்திவிட முடியாது. இலக்கை அடையும் போது அங்கு கருணைக்கு வேலை இல்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் உங்களை சுலபமாக இவ்வுலகம் தோற்கடித்துவிடும்.



செல்வம் இல்லாதவர்களை உலகம் துச்சமாக நினைக்கும், அலட்சியபடுத்தும், தூக்கி எரிந்து விடும். செல்வம் பெற்ற ஒருவன் என்ன கூறினாலும் அதை நிஜம் என்று உலகம் நம்பும். செல்வம் படைத்தவன் மென்மேலும் செல்வத்தை சேர்த்து கொண்டே போக முடியும். இல்லாதவன் தன்னை காத்து கொள்ளவே பெருமளவு போராடுவான். எனவே செல்வம் இல்லையென்றாலும் அதை வெளியில் கட்டி கொள்ளாமல் தந்திரமாக இருந்து சாதிக்க வேண்டும். வெற்றி பெற்ற யாவரும் ஒரு காலத்தில் பல அவமானங்களை சந்தித்தவர்களே என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாதை சரியான பாதையா? என்று நிச்சயம் ஒரு முறைக்கு ஆயிரம் முறை சிந்தித்து அதன் பின் அதை நோக்கி பயணிக்க வேண்டும். அவ்வாறு பயணிக்கும் பயணத்தில் கண்ணை மூடி கொண்டு குதிரைக்கு கடிவாளம் போட்டது போல் அல்லாமல் 360 டிகிரி கோணத்தில் சுற்றியும் உங்களது பார்வை இருக்க வேண்டும். எந்தெந்த வழிகளில் எல்லாம் உங்களுடைய இலக்கிற்கான குறிப்புகள் தென்படுகிறதோ அவற்றையெல்லாம் சேகரித்து கொள்ள வேண்டும். மனதை ஒருமுகபடுத்தி எந்த குழப்பமும் இல்லாமல் பயணிக்க வேண்டும் என்று உரைக்கின்றார்.



நீங்கள் எடுத்த முயற்சிகள் பலனளிக்காவிட்டால் அதை எண்ணி கவலைபடக்கூடாது. கவலைப்படுவதால் எதுவும் மாறிவிட போவதில்லை. அறிவுடையோர் நிச்சயம் இதை செய்யமாட்டார்கள். முயற்சியை காட்டிலும் விடாமுயற்சியே வெற்றியை தேடி தரும். தொடர்ந்து சிந்தித்து கொண்டே இருங்கள். கவலைபட்டு உடலையும், மனதையும் பலவீனமாக்கினால் வெற்றியை ஈட்ட முடியாது.

உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்ய வேண்டும். நீங்கள் என்ன செய்ய வேண்டும்? செய்யும் அந்த செயலினால் விளைய இருக்கும் விளைவுகள் என்னென்ன? நீங்கள் செய்ய இருக்கும் அந்த செயல் எந்த அளவிற்கு பயனுடையது? இதை பற்றிய தெளிவான அலசல் செய்து கொள்ளுங்கள்.



பிறரை ஏமாற்றுபவர்கள் உங்களையும் ஏமாற்ற தயங்க மாட்டார்கள். அத்தகையவர்களிடம் இருந்து சற்று தள்ளி இருப்பது தான் அறிவு. நமக்கு தெரிந்தே சில தவறுகள் நாம் செய்து விடுவோம். அதற்கு காரணம் விரைவாக யோசிக்கும் ஆற்றல் இல்லாமையே. விரைவாக சிந்திக்க வேண்டும். அறிவாக செயலாற்ற வேண்டும். யோசிப்பதில் நேரத்தை செலவிடுபவர்களால் எதையும் சரியாக செய்ய முடியாது. அந்த தகுதியை நீங்கள் தான் வளர்த்து கொள்ள வேண்டும்.

ஒரு விஷயத்தில் முடிவெடுத்த பின்னர் பின்வாங்க கூடாது. அதனால் விளையும் பிரச்சனைகளை கையாள்வதில் உறுதி கொள்ள வேண்டும். பின் வாங்குபர்களால் வெற்றி பெற முடியாது என்கிறார் சாணக்கியர். உங்களின் பலவீனம் உங்களை தவிர வேறு ஒரு நபருக்கு தெரியவே கூடாது.

ஒரு செயலில் ஈடுபடும் போது நேர்மறை விமர்சனங்கள் மற்றும் எதிர்
மறை விமர்சனங்கள் இரண்டையுமே எதிர்கொள்ள வேண்டும். 
ம், எதிர்மறை விமர்சனங்களால் துவண்டும் போகாமல் உங்கள் வேலை என்னவோ அதை மட்டும் கருத்தில் கொண்டு தொடர்ந்து சென்றால் வெற்றி எளிதில் வந்தடையும்.

உங்களுக்கு கீழ் உள்ளவர்களை எடை போடுவதில் தவறு செய்து விடாதீர்கள். கீழே தானே இருக்கிறார்கள் நம்மை என்ன செய்ய முடியும் என்று ஒருபோதும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. அது வெற்றியின் தூரத்தை அதிகரிக்கும் ஒரு முட்டாள் தனமான செயல் என்று சாணக்கியர் உரைக்கிறார்.



Sunday 2 February 2020

நிதானம்

"நிதானம்"

ஒரு பைத்தியகாரன் மீது கருணை கொண்ட சீடன்,அவரைத் தனது மடலாயத்து குருவிடம் அழைத்து சென்றான்.

குரு சொன்னார், 
"அவரை அப்படி ஓரமா மூலையில் உட்கார விடுங்கள்.உணவை, நீரை அருகில் வையுங்கள்.ஆனால் உண்ணும் படிக் கூற வேண்டாம்.பசித்தால் அவரே எடுத்து சாப்பிடுவார்.அவருக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம்,நீங்கள் யாரும் கண்டு கொள்ளவும் வேண்டாம்,"* என்றார்.

அவர் கத்துவார், கற்களை வீசுவார்.
ஆனால் அவரை யாரும் அங்கு கண்டு கொள்ளவில்லை.சீடர்கள் அவரவர் வேலைகளைப் பார்த்தனர்.

அந்த பைத்தியக்காரருக்கு எதிர்வினையாற்றுவது இல்லாது போனது.
நாட்கள் நகர்ந்தன,

ஒரு நாள் அமைதியாக குரு முன் வந்த பைத்தியகாரன், "எனக்கும் தியானம் சொல்லித் தருவீர்களா..?" என்று கேட்டான்.

இது இன்றும் திபெத்திய புத்தமடலாயங்களில் நடக்கும் சிகிச்சை முறை.

"எதிர்வினையாற்ற யாரும் இல்லை என்றால் அவர் அமைதியாகி விடுகிறார்",
என்கிறார்கள் திபெத்திய லாமாக்கள்.

"மற்றவர் பார்க்கவில்லை என்றால் பைத்தியகாரத்தனங்கள் வளர்ந்து கொண்டே போகாது"!!!

தர்க்கம் பண்ணாதீர்கள் ..
நம்முடைய பேச்சே தர்க்கத்திற்கு தீனி...
நம் அமைதியே அதற்குப் பட்டினி ..!!

அமைதியாக இருங்கள் ..
எல்லாம் சரியாகும் .
ஒரு வேளை சரியாகவில்லை என்றாலும் பரவாயில்லை ..!!

நீங்கள் சரியாக இருப்பீர்கள் ..

நிதானம் நீளமானது ..!!

வாழ்க நிதானத்துடன் .

அவசரம்





இன்றைய காலசூழலில் எங்கும் அவசரம் எதிலும் அவசரம்.. எல்லாம் அவசரம் என்று அவசர மயமாகி விட்டதை தினம் தினம் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். 

அர்ஜன்ட்( Urgent) என்கிற வார்த்தையை அதிக பட்சமாக அனுதினமும் நடைமுறையில் நாம் சொல்லி வருகிறோம் 

பெரும்பாலும் சாதாரணமாக இந்த வார்த்தையை உபயோகித்தாலும் காலப்போக்கில் நவீனங்கள் தலைதூக்கிய பிறகு இன்றைய நிலையில் இந்த வார்த்தை உயிர்பெற்று தற்போதைய வாழ்க்கை முறையாவும் அவசரமாகவே ஆகிவிட்டது என்பதே உண்மை.

இப்படி அவசரத்தால் செய்யும் செயல்களும் அவசரப் போக்காலும் எதையும் நாம் பெரிதாக சாதிக்கப் போவது இல்லை.

 மாறாக பல இழப்புக்களையே சந்திக்க வேண்டி உள்ளது. அவசியத்திற்கு அவசரப்படுவதை ஏற்றுக் கொள்ளும்படி இருந்தாலும்,

அதிகபட்சமாக அவசியம் இல்லாதவைகளுக்கெல்லாம் ஏன் அவசரப்படுகிறோம் என்று யாரும் யோசிப்பதில்லை.

அதிகமாக அவசரப்படுவதால் சில எளிதாக செய்ய வேண்டிய அலுவலக, செயல்கள் கூட அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகி இன்னும் காலதாமதமாகிப்போய் விடுகிறது. 

ஆகையால் அவசரத்தால் அதிகமாக ஏதாவது ஒரு வகையில் இழப்புக்களையே சந்திக்க நேரிடுகிறது.

இன்னும் சொல்லப் போனால் பின் விளைவுகளை யோசிக்காமல் அவசரப்பட்டு முடிவு எடுப்பதாலும் அவசரப்பட்டு வார்த்தைகளை அள்ளி வீசி விடுவதாலும் உறவுகளையும் நல்ல நட்புக்களையும் இழந்துவிட நேரிடுகிறது. 

அப்படியானால் எல்லாம் அவசரத்தால் வரும் இழப்புக்கள்தானே.

ஆம், நண்பர்களே.,

நாம் எதிலும் அவசரப்பட்டு இழப்புக்களை சந்திக்காமல் நிதானமாக செயல்பட்டு நிம்மதியாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும். 

அவசரத்தின் தடுமாற்றத்தால் தவறுகள் ஏற்ப்படுவதை தவிர்க்க பொறுமையைக் கடைப்பிடித்து நிம்மதியுடன், மகிழ்வுடன் வாழ வழி வகுத்துக் கொள்வோம்.