Sunday 31 July 2016

கேஸ்

😇😇😇
நண்பர் ஒருவர் மனநல மருத்துவர்.
.
அவரிடம்
”ஏன் டாக்டர், ஒருத்தருக்கு பைத்தியம் குணமாயிடுச்சான்னு எப்படிக் கண்டு பிடிப்பீங்க?” என்று கேட்டேன்.
.
“சின்னச் சின்ன டெஸ்ட் இருக்கு அதுக்கு” என்றார்.
.
“ஃபார் எக்ஸாம்ப்பிள்?”
.
“ஒரு பக்கெட் நிறைய தண்ணி வச்சிட்டு பக்கத்துல ஒரு ஸ்பூன், ஒரு மக் ரெண்டும் வச்சிடுவோம். போய் அந்த பக்கெட் தண்ணியை காலி பண்ணுன்னு சொல்வோம்”
.
“ஓ.. புரியுது. குணமாகாத ஆளா இருந்தா ஸ்பூன்ல தண்ணியை எடுத்து எடுத்து வெளில ஊத்தி காலி பண்ணிகிட்டு இருப்பான், சரியா?”
.
“எக்ஸாட்லி. உங்க கிட்ட சொன்னா நீங்க என்ன பண்ணுவீங்க?”
.
“நான் மக்குல எடுத்து மள மளன்னு காலி பண்ணுவேன்”
.
“இது மாதிரி கேஸ்களை நாங்க செமின்னு சொல்வோம்”
.
“என்ன டாக்டர் இப்படிச் சொல்லிட்டீங்க! அப்ப குணமானவன் என்ன பண்ணுவான்?”
.
“பக்கெட்டை எடுத்துக் கவுத்துட்டுப் போய்கிட்டே இருப்பான்”
.
( நிறையப்பேரு_செமி_தானாம்.)
😃😃😃😃😃😃😜😜😜😜

Saturday 30 July 2016

தாழ்மை வந்தால்தான் மேன்மை வரும்: -

தாழ்மை வந்தால்தான் மேன்மை வரும்: -
நம்முடைய அகந்தை நம்மை என்ன செய்யும்?
ஒரு குரு இருந்தார். அவர் வில் வித்தையில் கைதேர்ந்தவர். அவருடைய குரு குலத்தில் பல மாணவர்கள் தங்கி வில் வித்தை பயின்று வந்தார்கள். அதில் ஒரு மாணவன் மிகச் சிறப்பாக சகல வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தான். குருவுக்குப் பிறகு அவன்தான் அடுத்த குரு என்று குருகுலத்தில் பேசிக்கொண்டனர். இதையெல்லாம் கேட்கக் கேட்க அவனையறியாமலே அவனுக்குள் ஆணவம் வளர்ந்தது. அது கற்றுக் கொடுத்த குருவையே அலட்சியமாக நினைக்க வைத்தது. அவனுக்குள் ஒரு தீய எண்ணம் வேர்விட்டது.
இனியும் நான் ஏன் பொறுத்திருக்க வேண்டும்? குருவுக்குத் தெரிந்த சகலமும் இப்போது எனக்கும் தெரியுமே! இன்னும் கூட அதிகமாகக் கற்றுக் கொள்ள எனக்கு இளமையும், வயதும் இருக்கிறது. இனி நான்தான் குரு. பழைய குருவை விரட்டுவேன். நானே குரு ஆவேன் என்று எண்ணி ஒரு ஆலோசனை செய்தான். மறுநாள் அவனுக்கு வேண்டிய சில பெரிய மனிதர்களை அழைத்துக் கொண்டு குருவின் வீட்டுக்குப் போய் வாசலில் நின்று சத்தமிட்டான்.
"கிழட்டு குருவே வெளியே வாரும். இனி நீரல்ல, நான்தான் குரு. உம்மோடு போட்டியிட்டு ஜெயிக்க வந்திருக்கிறேன். தைரியம் இருந்தால் மோதிப் பாரும். இல்லை என்றால் இப்போதே தோல்வியை ஒப்புக் கொண்டு ஆசிரமத்தை என்னிடம் ஒப்புவியும்" என்றான்.
குரு இதை சற்றும் எதிர்பார்த்திரு
க்கவில்லை. வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததில் கொஞ்சம் நிலை குலைந்து போனார். ஆனாலும் உறுதியான குரலில் சொன்னார்." போட்டி துவங்கலாம் ". துவங்கியது.
முதலில் குரு அம்பை எடுத்து தூரத்திலிருந்த ஒரு மரத்தை நோக்கி எய்தார். அது சரியாய் ஒரு காயை வீழ்த்தியது. சிஷ்யனும் அதே போல் ஒரு அம்பை எய்ய அது இரண்டு காய்களை வீழ்த்தியது. சிஷ்யனின் ஆதரவாளர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
அடுத்து குரு இரண்டு அம்புகளை ஒன்றாக விடுத்தார். அதில் சரியாக ஒரு இலையும், ஒரு காயும் விழுந்தன. சீடன் அலட்சியமாக மூன்று அம்புகளை ஒன்றாய் எய்ய அது ஒரு இலையையும், ஒரு காயையும், ஒரு பூவையும் கூட அழகாய் வீழ்த்தியது. சீடனின் கூட்டம் இன்னும் சத்தமிட்டது. குரு இப்போது தரையைப் பார்த்து தலைகுனிந்தபடி வானத்தை நோக்கி அம்பு விட்டார். அது குறிபார்த்து எய்ததுபோல் விண்ணில் பறந்து கொண்டிருந்த ஒரு பறவையின் மார்பில் தைத்து அதைக் கீழே விழ வைத்தது.
சிஷ்யனின் கூட்டம் சற்றே மிரண்டது. சிஷ்யனோ சற்றும் மிரளவில்லை. புன்னகைத்தபடியே அவனும் தலையைக் குனிந்தவாறே ஒரு அம்பை எய்தான். அவனது அம்போ இரண்டு பறவைகளை ஒன்றாக வீழ்த்தியது. சிஷ்யனின் கூட்டம் கூத்தாடியது.
மரியாதை இல்லாமல் குருவின் அருகே வந்து அவரை சுற்றி நின்று கைதட்டியது.
மற்ற சீடர்களின் கண்களில் கண்ணீர். குரு அவமானப் படுத்தப்படுவதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. குரு வில்லையும், அம்பையும் கீழே போட்டுத் தரையில் மண்டியிட்டுக் கண்களை மூடிக்கொண்டார்.
குரு தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டாரோ?
எல்லாரும் மௌனமாய் குருவின் முகத்தையே பார்த்தனர்.
திடீரென்று குரு கண்ணைத் திறந்து வானத்தை ஏறிட்டுப் பார்த்தார். அவர் பார்த்த மாத்திரத்திலேயே வானத்தில் பறந்து சென்று கொண்டிருந்த சில பறவைகள் பொத்தென்று கீழே விழுந்தன. இப்போது சீடனின் முகம் இருண்டது.
"குருவிடம் இப்படி ஒரு வித்தையை நான் பார்த்ததே இல்லையே "
மனதுக்குள் மிரண்டாலும் அவனும் அவரைப் போலவே மண்டியிட்டு வானத்தில் பறக்கும் பறவைகளைப் பார்த்தான். ஒன்று கூட விழவில்லை. பதற்றமாக மீண்டும் பார்த்தான். அப்போதும் எதுவும் விழவில்லை. மீண்டும் ஒரு முறை பார்த்தான். அப்போதும் பயனில்லை. அவமானத்தில் குன்றிப் போனான் . திடீரென எழுந்து குருவின் பாதங்களில் விழுந்து அழுதான்.
"குருவே! எப்போதுமே நீங்கள் மட்டுமே பெரியவர். என்னை மன்னிப்பீர்களா?" என்றான். குரு அவனைக் கட்டித் தழுவிக் கொண்டார்.
"நீங்கள் பார்க்கும்போது விழுந்த பறவைகள் நான் பார்க்கும்போது விழவில்லையே. ஏன் குருவே?
குரு சொன்னார்
"தாழ்மை வந்தால்தான் மேன்மை வரும். அகந்தை வந்தால் அழிவுதான் வரும்"
"ஆம் குருவே, நான் பாவி. ஒன்றும் அறியாத நிர்மூடன்" என்று அவரது பாதத்தைப் பிடித்து அழுதான்.
குரு சொன்னார், "இப்போது மேலே பார்" பார்த்தான். பறந்து கொண்டிருந்த ஐந்தாறு பறவைகள் பொத்தென்று கீழே விழுந்தன.
செல்லமே! மேன்மைக்கு ஏதுவான தாழ்மையை இந்த நாளில் ஆண்டவரிடம் வேண்டிப் பெற்றுக் கொள்வோமா?
*"மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்: மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான் ".*
படித்ததில் பிடித்தது

தியானம் என்பது ஒரு பரிசோதனை"

தியானம் என்பது ஒரு பரிசோதனை"

கடவுளிடம் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா.......???

பரவாயில்லை;தியானத்திற்கு அது ஒரு தடையாக இருப்பதில்லை.

ஆன்மா இருக்கிறது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா.....???

பரவாயில்லை;தியானத்திற்கு அது ஒரு தடங்கலாக இராது.

எதிலுமே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா......???

நல்லது. அதுவும் ஒரு தடை அல்ல.

நீங்கள் தியானிக்க முடியும்.

ஏனெனில் உள் நோக்கிச் செல்வது எவ்வாறு.......??? என்பதை மட்டுமே தியானம் தெரிவிக்கிறது.

ஆன்மா இருக்கிறதா இல்லையா என்பது ஒரு பிரச்சினையே இல்லை. கடவுள் உண்டா இல்லையா என்பது பற்றி கவலையே இல்லை.

நீங்கள் (உயிரோடு) இருக்கிறீர்கள்-இந்த ஒரு விஷயம் நிச்சியமானது.

சாவுக்குப் பிறகு நீங்கள் இருப்பீர்களா இருக்க மாட்டீர்களா என்பது முக்கியமான விஷயம் அல்ல.

இந்தக் கணத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற ஒரு விஷயம் மட்டுமே முக்கியமானது.

நீங்கள் யாராக-என்னவாக இருக்கிறீர்கள்........??? அதற்குள் நுழைவதே தியானம் ஆகும்.

உங்கள் சொந்த உயிர்த்தன்மைக்குள் அதிக ஆழமாகச் செல்வதே தியானம் ஆகும்.

அது தற்காலிகமானதாகக்கூட இருக்கலாம்;நீங்கள் நித்தியமானவராக இல்லாதிருக்கலாம்;எல்லாவற்றையுமே சாவு முடிவு கட்டிவிடலாம்.

நீங்கள் நம்பியே ஆகவேண்டும் என்று எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.பரிசோதனை செய்து பாருங்கள் என்று மட்டுமே சொல்கிறேன்.

முயன்று பாருங்கள், ஒரு நாள் அது நிச்சியம் நிகழ்கிறது.

எண்ணங்கள் இல்லாது ஒழிகின்றன.எண்ணங்கள் மறைந்ததும்,திடீரென்று, உடம்பும் நீங்களும் வெவ்வேறாக இருக்கிறீர்கள்.

ஏனென்றால், எண்ணங்களே இணைப்புப் பாலமாக இருக்கின்றன.எண்ணங்கள் வாயிலாகத்தான் நீங்கள் உடம்புடன் சேர்ந்திருக்கிறீர்கள்.அதுவே இணைப்புக் கண்ணி.

திடீரென அந்த இணைப்புக்கண்ணி மறைகிறது. நீங்கள் ஓரிடத்தில் இருக்கிறீர்கள், உடம்பு ஓரிடத்தில் இருக்கிறது.

இவ்விரண்டிற்கும் இடையில் எல்லையற்ற இடைவெளி இருக்கிறது.

இந்த உடம்பு அழியும். ஆனால் நீங்கள் அழிய முடியாது. அழிவில்லை என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள்.

அதன்பின்,அது ஒரு வறட்டுக் கோட்பாடு போன்ற ஒன்றாக இருப்பதில்லை. அது ஒரு மத நம்பிக்கையாகவும் இருப்பதில்லை.

அனுபவமாகவே-தானே கண்டுணர்ந்து தெளிந்த அனுபவமாகவே-இருக்கிறது.

அந்த நாளிலேயே மரணம் மறைகிறது.

அன்றே சந்தேகம் மறைகிறது.

ஏனென்றால் இனி நீங்கள் உங்களை ஓயாமல் தற்காத்துக் கொண்டிருப்பதில்லை.

யாராலும் உங்களை அழிக்க முடியாது.

நீங்கள் அழிக்கப்பட முடியாதவராக இருக்கிறீர்கள். அப்போதுதான் விசுவாசம் உருவாகிறது.

நிரம்பித் ததும்புகிறது.அப்படிப்பட்ட விசுவாசத்தில் இருப்பதே பரவசத்தில் இருப்பதாகும்.

அப்படிப்பட்ட விசுவாசத்தில் இருப்பதே கடவுளில் கலந்து இருப்பதாகும்.

அம்மாதிரியான விசுவாசத்தில் இருப்பதே பூரண நிறைவடைந்து இருப்பதாகும்.

எனவே "விசுவாசத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்" என்றுகூட நான் கூறுவதில்லை.

தியானத்தில் பரிசோதனை மேற்கொள்ளுங்கள் என்றே சொல்கிறேன்.

ஓஷோ

எண்ணெய்க்குடம்

#  எண்ணெய்க்குடம் போலத் தான் நானும் என்பதை மறந்து விட்டேன்.

ஒரு முறை எண்ணெய் வியாபாரி ஒருவர், ராமகிருஷ்ண பரமஹம்சரைத் தரிசிப்பதற்காக வந்திருந்தார். அவர் நெடுநேரம் பரமஹம்சரின் செயல்பாடுகளைப் பார்த்தபடியே பேசாமல் அமர்ந்திருந்தார். பரமஹம்சரின் தீர்க்கமான பார்வை அவரின் மவுனத்தைக் கலைத்தது. “குருதேவா! நான் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தேன். நல்லமுறையில் வியாபாரம் நடந்ததால் பெரும் பொருள் சேர்ந்தது. வயது அதிகமானதால் தெய்வதரிசனம் பெற வேண்டும் என்ற ஆவல் எனக்குள் வந்துவிட்டது. என் சொத்துக்களைப் பிள்ளைகளுக்கு எழுதி வைத்து விட்டு, வியாபாரத்தையும் அவர்களிடம் ஒப்படைத்து விட்டேன். பொருள், வியாபாரம் என்று அனைத்தையும் விட்ட பிறகும் எனக்கு தெய்வ தரிசனம் கிடைக்கவில்லையே ஏன்?'' என்று ஏக்கத்துடன் கேட்டார். ராமகிருஷ்ணர் அந்த வியாபாரியைப் பார்த்து, "வியாபாரியான நீ நேற்று வரை வியாபாரத்தில் அக்கறை காட்டினாய். உமக்குத் தெரியாத தொழில்நுட்பமா நான் சொல்லித் தரப்போகிறேன். நேற்று வரை கடையில் இருந்த எண்ணெய்க் குடத்தை எடுத்துக் கொள்வோம். அதில் இருந்த எண்ணெய்யை இன்று காலி செய்ததாக வைத்துக் கொள். அதில் இருந்த எண்ணெய்தான் போகுமே ஒழிய எண்ணெய் வாசனை அவ்வளவு எளிதில் போய் விடுமா?'' என்று கேட்டார். வியாபாரி, "குருவே! என்னை மன்னித்து விடுங்கள். நான் அவசரப்பட்டு விட்டேன். எண்ணெய்க்குடம் போலத் தான் நானும் என்பதை மறந்து விட்டேன். சொத்துக்களை வேண்டுமானால் பிள்ளைகளுக்கு எழுதி வைக்கலாம். ஆனால், அதிலிருந்து பற்றை அவ்வளவு எளிதில் போக்க முடியவில்லை. பிறவிக்குணம் ஒரே நாளில் மாறி ஞானம் வருவதில்லை என்ற உண்மையை உணர்ந்து விட்டேன்,'' என்று சொல்லியபடி பரமஹம்சரை வணங்கினார்.

பழக்கத்தின் வலிமை

பழக்கத்தின் வலிமை:
~~~~~~~~~~~~~~~

தனியாக வாழ்வது
மிக மிக கடினம்.

அதுவும் இந்த உலகத்தோடு ஒட்டாமல் பழக வேண்டும்.

இது முதலில் சாத்திய மற்றதாகவே தோன்றும்.

ஆனால், யாருக்காவது சூழ்நிலையின் காரணமாக தனியாக இருக்க நேர்ந்தால்.
ஆரம்பித்தில் பல கஷ்டங்களை அனுபவித்திருப்பாா்,

பிறகு நாட்கள் ஆக, ஆக
அதுவே பழகி போயிருக்கும்.

நீங்கள் அவா்கிட்ட போய் கேட்டீங்க என்றால்.

என்ன செய்வது, இதுதான் எனக்கு அமைந்தது, இதுவே பழகி போச்சு.
என்று தானே சொல்வாா்.

இது தான் பழக்கத்தின் வலிமை.

முதலில் கட்டாயமாக்க வேண்டும்.
மனம் எதிா்க்கும்.
பிறகு நீங்கள் வேறு வழியில்லாமல் அதை பொறுத்து கொள்வீா்கள்.
கடைசியில், மனம் உங்கள் வழிக்கு வந்து விடும்.

இது தான் பழக்கத்தின் பயிற்சி.

எதை திரும்ப திரும்ப செய்கிறீா்களோ
அதுவாகவே நீங்கள் ஆகிவிடுகிறீா்கள்.

Thursday 28 July 2016

மன்னித்தல்

மன்னித்தல்

ஒரு பள்ளியில் ஓர் ஆசிரியை ஒரு விளையாட்டை மாணவர்களுக்குக் கற்பிக்க நினைத்தார்.   அவர் மாணவர்களிடம் சென்று ”நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு கூடை கொண்டுவரவேண்டும் அந்தக் கூடையில் நீங்கள் வெறுக்கும் நபரின் பெயரை ஒரு உருளைக்கிழங்கின் மீது எழுதி அதில் போட்டு கொண்டுவரவேண்டும்” என்று கூறினார்.  அதே போல் மாணவர்கள் கூடையைக் கொண்டு வந்தனர்.  சில மாணவர்கள் ஒரு உருளைக்கிழங்கையும், சிலர் இரண்டு, மூன்று உருளைக்கிழங்கையும் இன்னும் சிலர் ஐந்துக்கு அதிகமான உருளைக்கிழங்குகளையும் கூடையில் போட்டு கொண்டுவந்திருந்தனர்.

ஆசிரியை மாணவர்களைப் பார்த்து ”நீங்கள் கொண்டு வந்த உருளைக்கிழங்குகளை  ஒரு பையில் போட்டு 15 நாட்கள் நீங்கள் செல்லும் இடம் எல்லாம் உடன் கொண்டு செல்ல வேண்டும்” என்று  கூறினார்.   மாணவர்களும் அதை  ஒப்புக் கொண்டனர்.  நாட்கள் செல்ல செல்ல உருளைக்கிழங்குள் அழுகி நாற்றம் எடுக்க ஆரம்பத்தன.  அதிக உருளைக்கிழங்குகளை வைத்திருப்பர்கள் அதிக துர்நாற்றத்தை அனுபவிக்க வேண்டி வந்தது. குறைவான உருளைக்கிழங்கை வந்திருந்தவர்கள் குறைவான நாற்றத்தையும் அனுபவித்தனர்.  15 நாட்களுக்குப் பிறகு இந்த விளையாட்டு முடிவுக்கு வந்தது.

ஆசிரியை மாணவர்களைப் பார்த்து” 15 நாட்கள் உருளைக்கிழங்கை நீங்கள் உங்களுடன் வைத்திருந்த போது எப்படி உணர்ந்தீர்கள்” என்று கேட்டார்.  உடனே மாணவர்கள் ” நாற்றமடைந்த  உருளைக்கிழங்கை தங்களுடன் செல்லும் இடம் எல்லாம் கொண்டுசென்றது மிகவும் வெறுக்கத்தக்கதாகவும் மிகவும் கடினாமாகவும்  இருந்ததாகக் கூறை கூறினர். 

உடனே ஆசிரியை மாணவர்களைப் பார்த்து இந்த விளையாட்டின் பின் உள்ள உண்மையை இப்பொழுது உங்களுக்கு சொல்லப் போகிறேன் என்று கூறினார்.  எப்படி நாற்ற மடைந்த உருளைக்கிழங்குகளை உடன் வைத்துக் கொண்டிருப்பது உங்களால் எப்படி பொறுக்க முடியவில்லையோ அதே போல் மற்றவர்கள் மீது உள்ள கோபத்தையோ அல்லது வெறுப்பையோ நம் இதயத்தில் தொடர்ந்து சுமந்து கொண்டிருப்பது உங்கள் இதயத்தை தொடர்ந்து மாசு அடைய செய்து கொண்டிருக்கும்.  அதனால் உங்கள் இயத்தில் மற்றவர்கள் மீது இருக்கும் கோபம், வெறுப்பு மற்றும் பொறாமை ஆகியவற்றை வீசி எறியுங்கள்.  மன்னித்தல் என்ற மருந்தால் இதயத்தை சுத்தப் படுத்துங்கள்.  இப்பொழுது உங்கள் இதயம் அமைதி அடைவதை உணர்வீர்கள்.

ஞானம்

பிறப்பும், இறப்பும் சரி விகிதத்தில் இருக்கும்போது ஞானம் மட்டும் இங்கொன்றும் அங்கொன்றுமாக தான் இருக்கிறதே தவிர சரிவிகிதமாக இல்லையே....!!! ஏன் இந்த தாமதம்....???

ஞானம் தாமதிப்பதில்லை ஆனால், நாம் தான் தள்ளிப் போட்டுக்கொண்டு இருக்கிறோம்.

புத்தத் தன்மையை புரிந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை.

ஆனால், புத்தரைப் போல ஆக வேண்டும் எனபதில் தான் சிக்கல் இருக்கிறது.

ஞானத்தைப் பற்றிய ஏராளமான புனைக் கதைகளால் நாம் நிரபபப் பட்டிருக்கிறோம்.

அது தான் ஞானம் தெளிவதற்கு தடையாக இருக்கிறது.
ஞானிகள் அடைந்த பெயர், புகழ், நடை, உடை, பாவனை, அற்புதங்கள் செய்யும் திறன், இவைகளில் மட்டுமே பெரும்பாலும் ஈர்க்கப்பட்டிருக்கிறோம்.

மனமானது தந்திர உபயங்கள் நிரம்பியது. அதனால் தொடர்ந்து அது கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்க முயற்சிக்கிறது.

நாம் கேட்கும் கேள்விகளுக்கு உள்ளாகவே பதிலும் இருக்கிறது.

ஆனால், மனம் நுணுகி செல்லாமல் மேலோட்டமாகவே நின்றுகொண்டு கேள்வி வந்த உடன் புறத்தில் கேட்டக் கற்றுக் கொண்டிருக்கிறது.

ஏனெனில், கேள்வி கேட்பதும் ஞானம் என்று சொல்லப்பட்டிருப்பதால் கேள்வியே ஞானம் என்று தவறான முடிவுக்கு வந்துவிடும் பழக்கமாகிவிட்டது.

மனதிற்குள் பதிலை தயார் நிலையில் வைத்துவிட்டு தான் கேள்வியானது புறத்தில் எழுகிறது.

ஆனால், மனம் நுணுகி செல்ல மறுப்பதால் புறத்தில் தேடிக்கொண்டிருக்கிறது.

பதிலை தெரிந்த பிறகு கேள்வியும், பதிலும் வேறு வேறாக இல்லாமல், இணைந்தே இருபது தெரிய வரும்.

அப்படி தெரிய விடாமல் செய்வது மனம் தான்.

எப்படி என்றால், மனம் ஏதோ ஒரு வழியில் அடையாளங்களை பிடித்து வைத்திருக்கிறது.

அந்த அடையாளங்களை வைத்துக்கொண்டு பதிலை தேட முயற்சிப்பதால் தான் பதில் கிடைத்தும் அதை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது.

இன்னும் வேறு ஒருவரிடம் கேட்டால் தெளிவு பிறக்கும் என்று எண்ணி வாழ்க்கை முழுவது தேடுதலிலேயே அலைந்து கொண்டிருக்கிறது.

மனம் தேடுதலை முடித்துக் கொள்ள தயார் நிலையில் இருப்பதில்லை.

இன்னும் கொஞ்சம் ஆழமாகவும், அகலமாகவும் செல்லலாமே என்று சமாதானம் செய்து கொண்டு தன் தந்திரத்தை உயிர்பித்துக் கொள்கிறது.

இது புரியாமல் நாமும் மனதின் வழியே சென்று பயணித்து காலத்தால் விரக்தி நிலையை மனம் எய்துகிறது.

அதன்பின் ஞானம் குழப்பம் என்ற முத்திரையும் கொடுத்து விடுகிறோம்.

இது யார் தவறு.....???

மனதின் தவறா....???

இல்லை ஞானத்தின் தவறா.....???

உச்சி வாசலைத் திறப்போம் வாருங்கள்

உச்சி வாசலைத் திறப்போம் வாருங்கள்
*********************************************

முத்திரைகளின் அரசன் என்று கேசரி
முத்திரையைச் சொல்வார்கள். அதைப்போல
ராஜயோகத்தில் யோகத்தின் யோகம் என்று
குண்டலினி யோகத்தைக் கூறுவார்கள். நம்
மூலாதாரத்தில் சுருண்டு இருக்கும்
உயிர்சக்தியே குண்டலினி ஆகும்.

அ...தாவது ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும் பேரண்ட
சக்தியே குண்டலினி. குண்டலம் போல
வளைந்திருப்பதால் இந்தப் பெயர் வந்தது என்ற
கருத்தும் உண்டு. குண்டலினிக்கு
சித்தர்களும், ஞானிகளும் பல பெயர்களைச்
சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.

பாம்பாட்டி சித்தர் அதைப் பாம்பு என்பார். மேலும்
குடிலாங்கி, புஜங்கி, சக்தி, ஈஸ்வரி, வாலை,
அருந்ததி, வாமி, காமி, துரைப் பெண், ஆத்தாள்,
ஞானம்மா, கண்ணம்மா, பத்து, கன்னி, மௌனி,
வன்னி, பரப்பிரம்மம், காற்றறியாத் தீபம், சிவ
சொரூபம், சஞ்சஞார சமாதி, மூல அங்கி,
தணல், மூலக்குடி வன்னித் தேவர் என்று
இன்னும் பல பெயர்கள் குண்டலினிக்கு
உண்டு. குண்டலினிச் சக்தியை மூலாதாரச்
சக்கரத்தில் இருந்து சகஸ்ராரம் வரை
கொண்டு செல்வதையே குண்டலினியை
எழுப்புதல் என்பர். பொதுவாக யோக சாதனம்
என்றாலே உள்ளூர இருக்கும் வெப்பத்தைத்
தூண்டுவதே ஆகும். தபஸ் என்றால் வெப்பம்
என்று ஒரு பொருள் உண்டு.

அதாவது வெப்பத்தை எழுப்புவதற்கான முயற்சியே
தவம். அப்படி வெப்பத்தால் தூண்டப்பட்ட
குண்டலினி ஒவ்வொரு சக்கரங்களையும்
கடந்து சகஸ்ராரத்தை அடையும். நமது
உடலில் விளங்கும் குண்டலினி சக்தியானவள்
சகஸ்ராரத்தில் சிவனுடன் ஐக்கியமாவதையே
சிவசக்தி ஐக்கியம் என்பார்கள். இதுவே
மோட்சம், இதுவே முக்தி. இதையே
ஞானமடைதல் என்கிறோம்.

பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவில் உள்ள சூட்சுமமும்,
நோக்கமும் சாதகருக்கு புரியும். ஞானவாசல்
திறந்தது என்று சொல்வது இதைத்தான். கபாலத்தில் உள்ள பத்தாம் வாசல் திறக்கும்.

இதையே திருமூலர், மூலாதாரத்
துவாரத்தையும், கபலத்தில் உள்ள மேலைத்
துவாரத்தையும் திறக்க வல்லவர் களுக்கு,
காலனைக் குறித்த கவலையில்லை, பயமும்
இல்லை என்கிறார்.

மூலாதாரத்தில் இருந்து
குண்டலினி மேல் நோக்கி பயனப்படும் போது
ஒவ்வொரு ஆதாரத்தைக் கடக்கும் போதும்
அதன் இதழ்கள் மேல் நோக்கி விரிந்து
அதிர்வை வெளிப்படுத்தி ஓசைகளை
உண்டாக்குகின்றன. சமுத்திர ஓசை,
பேரிகைச்சத்தம், மத்தளம், சங்கு, கண்டாமணி,
காகனம் போன்ற ஓசைகளைச் சாதகர்கள்
கேட்பார்கள். கிண்கிணி, வேணி, வீணை, தந்திரி,
வண்டு போன்றவற்றின் இனிய ரீங்காரமும்
கேட்கும். மேலும் ஒவ்வொரு நிலைகளைக்
கடக்கும் போதும் ஆன்மீக மலர்ச்சி
உண்டாகும். அதனால் ஏற்படும் சக்திதான்
சித்தி எனப்படும். மூலாதாரத்தில் இருந்து
அனாகதம் வரை பயனப்படும் குண்டலினியை
அக்கினிகுண்டலினி என்பர்.

அனாகதம் தொடங்கி ஆக்ஞாவரை பயனப்படும் போது
சூரிய குண்டலினி என்பார்கள். அதையும்
தாண்டி சுழுமுனையின் இறுதிவரை
செல்லும் போது சந்திர குண்டலினி
என்பார்கள். முடிவில் சகஸ்ராரத்தில் நிலை
பெறும் போது துரிய குண்டலினி என்பார்கள்.

மேலும் குண்டலினியானது தோற்றம்,
நிலைபேறு, அழிவு என்கிற மூன்று
நிலைகளைக் குறிக்கும் முக்கிரந்தி எனப்படும்
மூன்று முடிச்சுகளையும் துளைத்தபடி
மேலே செல்கிறது. அவை மூலாதாரத்தில்
உள்ள பிரம்ம முடிச்சு, அனாகதத்தில் உள்ள
விஷ்ணு முடிச்சு, ஆக்ஞாவிலுள்ள சிவ
முடிச்சு என்பனவாம். யோகத்தின் குறிக்கோள்
இந்த மூன்று முடிச்சுகளையும் அவிழ்த்து
குண்டலினியை சகஸ்ராரத்தில் நிலைபெறச்
செய்வதே ஆகும். அங்ஙனம் நிலைபெற்று,
ஒடுங்கி சிவனோடு இணையும் போதுதான்
சோமாசலம், மதியமுது, மாங்காய்ப்பால்,
காயாப்பால், அமுதப்பால், கருநெல்லிச் சாறு,
கபாலத்தேன், சோமப்பால், பஞ்சாமிர்தம்,
செம்மதிப்பால் என்றெல்லாம் சித்தர்களால்
போற்றிப் புகழப்பட்ட அமுதத்தைப்
பருகுகிறான். அமரத்துவம் பெறுகிறான்.
பேரின்பத்தில் திளைக்கிறான்.

இதையே உச்சியில் தாகம் தீர்த்தல் என்பார்கள். இந்த
அமிர்தத்தை தானும் பருகித் திளைத்த
பரவசத்தோடு குண்டலினியானவள் மீண்டும்
சுழுமுனை வழியாக மூலாதாரத்தை
அடைந்து சுகமாய் நித்திரை கொள்வாள்
என்று சொல்லப்பட்டுள்ளது. அவளோடு
அமிர்தமும் மூலாதாரத்தை சேருவதால்
உடம்பு கொழுந்து போன்று என்றும்
பொலிவுடன் விளங்கும் என்று திருமூலர்
சொல்கிறார். முதல் ஆறு சக்கரங்களையும்
யோகா, தியானம், பக்தி, மந்திர உச்சாடனம்
போன்ற பயிற்சிகளை முறையாகத் தொடர்ந்து
செய்துவர தாண்டிவிடலாம், ஆனால்
ஏழாவதான சகஸ்ராரத்தை அடைவது
அவ்வளவு எளிதல்ல. அதற்கு நீண்ட
பயிற்சியும், பக்குவமும் தேவை. ஒரு சிறந்த
குருவின் கீழ் பயிற்சிகளை மேற்கொள்ள
வேண்டும். சக்கரங்களின் வாசல் எளிதில்
திறக்காது. விடாமுயற்சியும், வைராக்கியம்,
இந்திரிய ஒழுக்கமும் அவசியம்.
இவையெல்லாம் கூடுமானால் மெல்ல
மெல்லத் திறக்கும

தினமும் அரைமணி நேரம் தியானம் செய்தால்
5 மணிநேரம் தூங்கினால் கிடைக்கின்ற ஆற்றல்
கிடைக்கும். எப்படியெனில் நமது மூளையில்
ஒஜோன் என்ற பகுதி இருக்கிறது. அதன்
ஆற்றலை தியானம் செய்வதால் அதிகரிக்க
முடியும். இதன்மூலம் அதிகம்
தூங்காமலேயே உடலை சுறுசுறுப்பாகவும்
ஆரோக்கியமாக வும் வைத்துக் கொள்ள முடியும்.

சித்தர்கள், விஞ்ஞானிகள் , படைப்பாளர்கள்,
சிந்தனையாளர்கள் ஆகியோருக்கு இயல்பாகவே
இந்த பகுதியின் ஆற்றல் சிறப்பாக இருக்கும்.

தூக்கத்திற்கும் தியானத்திற்கும் ஒரு முக்கிய
வித்தியாசம் உண்டு. அது என்னவெனில்
தூக்கத்தில் உடல் தன் செல்களை
புதுப்பித்துக் கொள்ளும்.அதன் மூலம்
மூளைக்கு தேவையான அக்ஸிஜனை
எடுத்துக்கொள்ளும்.

ஆனால் தியானத்தில் மூளை தன்
இயக்கத்தையே முழுதாக புதுப்பித்துக்க
ொள்ளும். அதன் மூலம் உடலுக்குத்
தேவையான ஓய்வும் கிடைக்கும். சரி புரியும்
படியாகவே கூறுகிறேன்.உடலை மூன்று
அடுக்குகளாக கற்பனை செய்யுங்கள்.இதில்
இதயம் மையப்பகுதி சிறுநீரகம்
கீழ்ப்பகுதி.மூளை மேல்பகுதி.இதில் தியான
ஆற்றல் என்பது மேல் முறையில் மூளையின்
செயல்பாடுகளையே முற்றிலும் நிறுத்தி
ஓய்வெடுக்க செய்து, தேவைப்படும் போது
அதன் ஆற்றலை முழுமை படுத்தவும்
செய்யும் உபயம். தூக்கம் என்பது உடலை
ஓய்வெடுக்க செய்ய இருக்கின்ற ஒருவழி
அவ்வளவுதான். சுருங்க கூறுவதென்றால்
தியானமும்
தூக்கமும் ஒரு நாணயத்தின் இரண்டுபக்கம்.
சரியா? இரண்டும் ஒன்றாகவே ஆகாது.

சிலருக்கு கண்ணை மூடி அமர்ந்தாலே கொஞ்ச
நேரத்தில் குறட்டை வரும். தியானத்தில்
தூக்கமோ குறட்டையோ வராது. இன்னொன்று
வழக்கமாக செய்யும் ஓம்கார தியானம்,
குண்டலினி தியானம், பிரபஞ்சா தியானம்,
ஆனந்தா தியானம், ஆல்பா தியானம் இது
எதுவுமே மனதை கடந்த தியானம் அல்ல,
இவை அனைத்துமே தியானத்தின் ஆரம்ப
நிலை தயார்படுத்தலே.
உண்மையான தியானத்தில் அதன்பிறகு கலக்க
வேண்டும்.

அந்த நேரத்தில் மதம், கொள்கை, வழிபாடு,
துன்பம், இன்பம், நோய், அனைத்தும்
நின்றுவிடும் மனது முற்றிலும்
இறந்துவிடும்.
இதுவே தியானநிலை.
இந்த வகை தியானத்தில் தேர்ந்தவர்களுக்கு
தூக்கம், துக்கம் எதுவுமே வராது. அது
தேவையும் படாது.!

நலம் பெருகட்டும் …