Sunday 28 January 2018

சாதிக்கும் நேரம் வெகுதூரம் இல்லை. "

ஒரு சமயம், ஒரு யானையும், ஒரு நாயும் ஒரே நேரத்தில் கர்பமானது.
மூன்று மாதத்தில் நாய் தன் குட்டிகளை ஈன்றது. ஆறு மாதங்கள் கழித்து மறுபடியும் நாய் கர்பமானது. அடுத்த மூன்று மாதத்தில் மறுபடியும் நாய் தன் குட்டிகளை ஈன்றது. இது வழக்கமாக தொடர்ந்தது.
தன் பதினெட்டாவது மாதத்தில், நாய் யானையிடம் சென்று கேட்டது. "யானையே, நீ உண்மையிலே கர்ப்பம் தரிதாயா? நீயும் நானும் ஒரே சமயத்தில் தான் கர்பமாநோம், நான் இதோடு மூன்று முறை கருத்தரித்து குட்டிகளை ஈன்றுவிட்டேன். இப்பொழுது அவைகள் வளர்ந்து விட்டன, ஆனால் நீ இன்றுவரையில் கார்பமாகவே இருக்கிறாயே, என்னதான் நடக்கிறது சொல்! என்றது.
அதற்கு சற்றும் பதட்டப்படாமல் யானை பதிலளித்தது "தோழியே நீ ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், நான் சுமந்துகொண்டிருப்பது நாய்க்குட்டி அல்ல, யானை குட்டியை.
நான் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறைதான் ஈன்றெடுக்க முடியும். என் குழந்தை விழுவதை உணரும் இந்த பூமி. என் குழந்தை நடந்தால், அதை மனிதர்கள் நின்று பிரமித்து பார்ப்பார்கள். நான் பிரம்மாண்டத்தை சுமக்கிறேன், அதுவே பெருமை எனக்கு " என்றது.
நீதி:-
உங்களது உழைப்புக்கும், தேடலுக்கும் அங்கீகாரமும், புகழும் கிடைக்கவில்லை என்று காணாமல் போய்விடாதீர்கள். வாழ்க்கையை வாழ்வதை விட, சாதிப்பதுதான் பெருமை.
அதனால்....... நீங்களே உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள், " எனக்கென்று ஒரு நேரம் வரும், வானம் வசப்படும். என் சாதனைகள் மக்கள் பிரமிப்பாக பார்ப்பார்கள். நான் சாதிக்கும் நேரம் வெகுதூரம் இல்லை. " என்று

Thursday 25 January 2018

செல்வம் வளம் நிரந்தரமாக

செல்வம் வளம் நிரந்தரமாக தெய்வீக ரகசியங்கள் (எல்லோரும் பயன் பெற ஷேர் செய்யுங்கள்) வீட்டின் உள்புறம் வாசல் படி அருகே ஒரு ஒரு பெரிய கண்ணாடி கிண்ணத்தை திறந்தபடி வைத்து, ஒவ்வொரு நாளும் வீட்டின் தலைவர்/தலைவி (சம்பாத்தியம் செய்வோர்) யாரேனும் ஒருவர், வெளியே கிளம்பும் சமயம் ஒரு ருபாய் நாணயம் ஒன்றை அதில் போட்டு விட்டு வெளியே செல்லவும். திரும்ப வீடு சேரும் சமயம் அதை பார்த்து விட்டு உள்ளே செல்லவும். இப்படி ஒரு வருடம் முடிந்ததும் சேர்த்த நாணயங்களை கொண்டு அன்னதானம் செய்து விடலாம். பண வரவை அதிகபடுத்தும் அதீத சக்தி கொண்ட பரிகாரம் இது. கண்ணாடி குப்பி நிறைந்து விட்டால், அதன் அருகே மற்றொன்று என அடுத்தடுத்து வைத்து வரவும். எந்த காரணத்தை கொண்டும் அதில் இருக்கும் நாணயங்களை ஒரு வருடம் முடியும் முன் எடுக்காமல் பார்த்து கொள்ளவும். குறிப்பு : வாசல்படி அருகில் ஏதேனும் ஸ்டாண்ட் அல்லது அலமாரி இருபினும் வைக்கலாம். கீழே தான் வைக்க வேண்டும் என அவசியமில்லை. இதை எந்த நாளும் தொடங்கி செய்து வரலாம். இஞ்சியை (காய்ந்தது) நன்கு பொடி செய்து அதை சிறு சிகப்பு காகிதத்தில் வைத்து மடித்து பாக்கெட் / பர்சில் வைத்து செல்ல தடைப்பட்ட பண வரவு பிரச்சனைதீரும். வீட்டில் / வியாபார இடத்தில் பணம் வைக்கும் இடத்தில் சிறு துண்டுகளை போட்டு வைத்து அவ்வப்போது மாற்றி வரலாம். இதை ஆரம்பிக்க உகந்த நாள் : செவ்வாய் ஆகும். மதியம் 1:15 மணி முதல் 2 மணிக்குள் செய்யலாம். தெற்கு திசையில் நின்றவாறு செய்ய பலன் கூடும். பணம் திரும்பி வர கொடுத்த நியாயமான பணம் திரும்பி வர, வாங்கிய கடன் விரைவில் அடைபட , அபகரிக்கப்பட்ட பணம் திரும்ப கிடைக்க, இரண்டு பசுக்களுடனும், மயிலுடனும் ஆனந்தமாக குழல் இசைத்து கொண்டிருக்கும் கிருஷ்ணரின் படத்தை வீட்டில் வடக்கு நோக்கி வைத்து வழிபட மேற்கண்ட அசுபங்கள் சுபமாகும். ஆடை ஆபரணங்கள் மற்றும் பொன் பொருள் சேர சிகப்பு துணியில் 11 உலர்ந்த பேரீட்ச்சைகளை முடிந்து, வீட்டில் விலையுயர்ந்த பொருட்களை வைத்திருக்கும் இடத்தில் அல்லது பொன், பொருள், ஆடைகள் வைத்துள்ள இடத்தில் வைக்க, வாழ்வில் சுக போகங்கள் மேம்படும். மாதம் ஒரு முறை பழையதை அகற்றி விட்டு, புதிதாக செய்யவும். இதை எந்த நாளிலும்-நேரத்திலும் செய்யலாம்.

Monday 15 January 2018

மன்னிக்க மறக்காதீர்கள்.

மன்னிப்பைப் பற்றி
மருத்துவம் சொல்வது
பகீர் தகவலாக உள்ளது.

'நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது. உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது. அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது. அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும்' என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

'மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.

'கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச்' சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.

ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் தனது 'லேர்ன் டு பர்கிவ்' (மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார்.

மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கின்றன ஏல் மெடிக்கல் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகள். மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இதுவே காரணமாம்.

இந்தியா மதங்களின் நாடு. மதங்கள் எல்லாமே மன்னிப்பைப் பேசுகின்றன. `ஒரு மனிதன் தேவ நிலையை அடையவேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்' என்கிறது பகவத் கீதை.

இஸ்லாம் கடவுளை 'அல் கபிர்' என்கிறது, முழுமையாய் மன்னிப்பவர் என்பது அதன் அர்த்தம்.

'மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்ல முடியாது' என்கிறது கிறிஸ்தவம்.

ஆனால் மதங்களைப் பின்பற்றும் நமது நாட்டில் மன்னிப்பு எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கிறது? நாட்டில் நடைபெறும் இன்றைய நிகழ்வுகளை மீடியாக்களில் பார்த்தாலே உண்மைத்தன்‍ையை தெரிந்துகொள்ள முடியும்..

மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை. மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது. மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால் பெற்றோர் களைப் பார்த்து வளரும் குழந்தைகள் மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள். குழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும்போது எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்துவிடும்.

அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும். குறிப்பாக கணவன் மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்குகள், எரிச்சல்கள், வெறுப்புகள் போன்றவையெல்லாம் கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும்.

பலவேளைகளில் நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம். கோபம் என்பது வீரத்தின் அடையாளம் என்று போலியாக கற்பனை செய்து கொள்கிறோம். எதிர் நபர் மன்னிப்புக்குத் தகுதியற்றவர் என்று முடிவு கட்டி விடுகிறோம். அப்படி நினைப்பதன் மூலம் நாம் பெரியவர்களாக முயலும் உளவியல் சிக்கலே இது.

மன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது. ஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும். வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல. அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது.

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளைவிடும்.

மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள்.

மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள்.

Sunday 7 January 2018

ஜீவசரணாலய மந்திரங்கள் 

ஜீவசரணாலய மந்திரங்கள்  💥
ஆன்மிகத்துக்கு முதல் படி 60
உடல்நலத்திற்கு நல்ல படி
அனைவருக்கும் புரியும் படி
வாழ்க்கையில் சகல நன்மைகள் பெற!
தடுங்கள்களை தடுக்க!
வில்லங்கம் விலக!
காலை,மாலை மானசீகமாக அமைதியாக ஒரே இடத்தில்அமர்ந்து கொண்டு பின்வரும்;
; 💥ஜீவசரணாலய மந்திரங்கள்  💥
மகான்களை வணங்குகிறேன்,உங்கள் ஆசி எமக்கு தினமும் பூரணமாக கிடைக்குமாக என்று தொடங்கி,!
1."நான் தெரிந்தும்,தெரியாமல் செய்த தவறுகளால் பாதிக்கபட்ட மனிதர்களிடம் மன்னிப்பு கேட்கின்றேன்.
2.எனக்கு தெரிந்தும்,தெரியாமல் துன்பம் கொடுத்தோரை மன்னிக்கின்றேன்
.3.என்னுடைய தேவைக்காகவும்,ஆசைக்காகவும்,அறியாமையாலும் பாதிக்கபட்ட ஜீவன்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்
.4.எம்முடைய முன்னோர்கள் ஆத்மாக்கள் ஆனந்த அமைதியடையட்டும். இவற்றை சொல்லிய பின்பு,
5. "என்னுடைய புண்ணியத்தை எல்லா உயிர்களிடமும் பகிர்ந்து கொள்கின்றேன்
" 6.என்னுடைய அன்பை எல்லா உயிர்களிடமும் பகிர்ந்து கொள்கின்றேன்.
7.என்னுடைய அமைதியை எல்லா உயிர்களிடமும் பகிர்ந்து கொள்கின்றேன்
.8.என்னுடைய இணக்கத்தை எல்லா உயிர்களிடமும் பகிர்ந்து கொள்கின்றேன்.
9.என்னுடைய சந்தோஷத்தையும் எல்லா உயிர்களிடமும் பகிர்ந்து கொள்கின்றேன்.
10.என்னுடைய நண்றியுனர்வையும் எல்லா உயிர்களிடமும் பகிர்ந்து கொள்கின்றேன்
.11.மனிதர்களிடம் உள்ள மனமாசுகள் நீங்கடும்.
12.எல்லா உயிர்களும் அமைதியை உணரடும்
.13.எல்லா உயிர்களும் ஆனந்தத்தை உணரடும்
.14.எல்லா உயிர்களும் விடுதலை பெறட்டும்
.15.எல்லா உயிர்களிடமும் அன்பு ஊற்றாக பெருகடும்.
16.சித்தர்கள்,மகான்கள்,ஞானிகளின் கருனை மழை எல்லா ஜீவன்கள் மீதும் பொழியுமாக!
மேற்படி ஜீவசரணாலய மந்திரம் சகல நன்மைகளை தர கூடியது.