Monday 12 June 2017

நம்பிக்கை

ஒரு தவளையை பிடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள்,
*
தண்ணீரின் வெப்பம் அதிகரிக்கும் போது, தவளை தன் உடலை அந்த வெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றி கொண்டே வரும்......
*
வெப்பம் ஏற ஏற தவளையும் அந்த வெப்பநிலைக்கு ஏற்ப தன் உடலை அந்த வெப்பத்துக்கு ஏற்ப மாற்றி கொள்ளும்.
*
தண்ணீர் கொதிநிலையை அடையும் போது, வெப்பத்தை தாங்க முடியாமல் தவளை பாத்திரத்தில் இருந்து வெளியே குதிக்க முயற்சி செய்யும்.
*
ஆனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் தவளையால் வெளியேற முடியாது.
*
ஏன் என்றால்..... வெப்பத்துக்கு ஏற்ப தன் உடலை மாற்றி கொண்டே வந்ததால் அது வலுவிழந்து போய் இருக்கும். சிறிது நேரத்தில் அந்த தவளை இறந்து விடும்.
*
எது அந்த தவளையை கொன்றது...?
*
பெரும்பாலானோர் கொதிக்கும் நீர் தான் அந்த தவளையை கொன்றது என்று சொல்வீர்கள்.
*
ஆனால், உண்மை என்னவென்றால், "எப்போது தப்பித்து வெளியேற வேண்டும் என்று சரியாக முடிவெடுக்காத அந்த தவளையின் இயலாமை தான் அதை கொன்றது"......
*
நாமும் அப்படித்தான் எல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்.
*
ஆனால்..... நாம் எப்போது அனுசரித்து போக வேண்டும், எப்போது எதிர்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
*
மன ரீதியாக, உடல் ரீதியாக, பண ரீதியாக மற்றவர்கள் நம்மை நசுக்க ஆரம்பிக்கும் போது, நாமும் சுதாரிக்காமல் போனால் மீண்டும் அதையே தொடர்ச்சியாக செய்ய ஆரம்பிப்பார்கள்.
*
உடலில் வலிமை இருக்கும் போதே, அவர்களிடமிருந்து தப்பித்து விடுதல் நன்று.
*
"நாம் அனுமதிக்காமல் நம்மை அழிக்க எவராலும் முடியாது"...
👉🏿விழுந்தால் அழாதே . . .
எழுந்திரு 👈🏿
🗣
👉🏿தோற்றால் புலம்பாதே . . .
போராடு 👈🏿
🗣
👉🏿 கிண்டலடித்தால் கலங்காதே . . .
மன்னித்துவிடு 👈🏿
🗣
👉🏿தள்ளினால் தளராதே . . .
துள்ளியெழு 👈🏿
🗣
👉🏿நஷ்டப்பட்டால் நடுங்காதே . . .
நிதானமாய் யோசி👈🏿
🗣
👉🏿ஏமாந்துவிட்டால் ஏங்காதே . . .
எதிர்த்து நில் 👈🏿
🗣
👉🏿நோய் வந்தால் நொந்துபோகாதே . .
நம்பிக்கை வை 👈🏿
🗣
👉🏿கஷ்டப்படுத்தினால் கதறாதே . . .
கலங்காமலிரு 👈🏿
🗣
👉🏿 உதாசீனப்படுத்தினால் உளறாதே . .
உயர்ந்து காட்டு 👈🏿
🗣
👉🏿 கிடைக்காவிட்டால் குதிக்காதே . . .
அடைந்து காட்டு 👈🏿
🗣
👉🏿மொத்தத்தில் நீ பலமாவாய் 👈🏿
🗣
👉🏿சித்தத்தில் நீ பக்குவமாவாய் 👈🏿

💐💐💐💐💐💐💐💐
💐உன்னால் முடியும் .💐
💐உயர முடியும் . . .
💐

💐உதவ முடியும் . . .
💐
💐💐💐💐💐💐💐💐
⚜உனக்கு உதவ நீ தான் உண்டு ⚜
❇❇❇❇❇❇❇
👉🏿உன்னை உயர்த்த நீ தான் 👈🏿. . . ⚜நம்பு⚜ . .
✳✳✳✳✳✳✳✳
👉🏿 உன்னை மாற்ற நீ தான் 👈🏿. . .👉🏿 முடிவெடு👈🏿 . . .
👤
👉🏿நீயே பாறை👈🏿👉🏿.நீயே உளி . 👈🏿. .
👤
👉🏿நீயே சிற்பி . . .நீயே செதுக்கு 👈🏿. . .
👤
👉🏿நீயே விதை . . .நீயே விதைப்பாய் 👈🏿. . .
👤
👉🏿நீயே வளர்வாய் 👈🏿. 👉🏿நீயே அனுபவிப்பாய் 👈🏿. . .
👤
👉🏿நீயே நதி👈🏿 . . .👉🏿 நீயே ஓடு👈🏿 . . .
👤
👉🏿நீயே வழி👈🏿 . . .👉🏿 நீயே பயணி👈🏿 . . .
👤
👉🏿நீயே பலம் 👈🏿. . . 👉🏿நீயே சக்தி 👈🏿. . .
👤
🌸நீயே ஜெயிப்பாய் 🌸
💯எப்பொழுதும் நம்பிக்கை இழக்காதே

ஜென் கதை………

ஒரு ஜென் கதை………

அவர் ஒரு கவிஞர். பெரிய விருதுகள், பாராட்டுகளைப் பெற்றவர்.

அவரது கவிதைகளுக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இப்போதும் உண்டு.

ஒருநாள், கவிஞர் ஒருவர் நண்பரைப் பார்க்க வந்திருந்தார். ‘எழுத்து வேலையெல்லாம் எப்படிப் போகிறது?’

என்று விசாரித்தார்.
’பிரமாதம்!’ என்றார் கவிஞர்.

‘நேற்றுமுழுவதும் கஷ்டப்பட்டு உழைத்து ஒரு கவிதை எழுதினேன், ஏழு வரிகள், அருமையாக அமைந்துவிட்டன!’

‘அப்படியா? ரொம்ப மகிழ்ச்சி’ என்றார் நண்பர்.

‘இன்றைக்கு என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?’

’இன்றைக்கு இன்னும் பிரமாதமான வேலை ஒன்று செய்தேன்’

பெருமிதத்தோடு சொன்னார் கவிஞர். ‘நேற்று எழுதிய கவிதையை மீண்டும் படித்துப் பார்த்தேன், அதில் ஆறு வரிகள் அவசியமற்றவை என்று தோன்றியது.

நீக்கிவிட்டேன்!’
எது அவசியம், எது அநாவசியம் என்று யோசிக்கும்போது, ஜென் சொல்லும் ஒரே வரி விதி, *‘நத்திங் எக்ஸ்ட்ரா’* – தேவையில்லாத ஆடம்பரங்களை ஏற்றுக்கொள்ளாதீர்கள், தேவையில்லாத பாரங்களைச் சுமக்காதீர்கள், உன்னதம் என்பது செதுக்குவதால் வருவது அல்ல, அநாவசியமானவற்றை நீக்குவதால் வரும்!

Friday 2 June 2017

எல்லாம் அவனே

எல்லாம்
அவனே
சூஃபி மகான்,,,

சூஃபி மகான் காட்டு வழியே சென்று கொண்டிருந்தார்.

வாலிப வயதை எட்டாத ஒரு பையனும் வெறுங் காலோடு அங்கே நடந்து சென்று கொண்டிருப்பதை கண்ட மகான் "நீங்கள் எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டார்.

மக்காவுக்கு " என்றார் அவர்.

ஏதோ முணு முணுத்துக் கொண்டிருந்தீரே, என்ன அது?

இறைவனின் வேதம்."

இந்த வயதிலேயே மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறீரே " என்றார் மகான்.

சிறுவர், பெரியவர் என்றெல்லாம் மரணம் பார்ப்பதில்லை."

இந்த சிறுவயதிலேயே இவ்வளவு பெரிய பயணத்தை மேற்கொண்டிருப்பது ஆச்சரியத்தை தருகிறது. பாதங்கள் சிறியதாயினும் பயணம் மிகப் பெரியது. "

என்னுடைய பணி பாதத்தை தூக்கி வைப்பது மட்டுமே. இலக்கை அடைய வைக்க வேண்டியது இறைவனின் பணி " என்றார் இளைஞர்.

பயணத்திற்கான ஒரு பொருளுமின்றி, ஒரு வாகனமுமின்றி வந்திருக்கின்றீரே?"

நம்பிக்கையே என் பயணப் பொருட்கள். என் கால்களே என் வாகனம்."

உண்பதற்காக ஏதாவது பொருள் வாங்கி வந்திருக்கலாமே?"

பெரியவரே,,, உங்களுடைய நண்பர் தம் வீட்டிற்கு விருந்தளிக்க அழைக்கிறார் என்றால் நீங்கள் உங்களுடன் ரொட்டியும் தண்ணீரும் சுமந்து கொண்டா செல்வீர்கள்?

அதே போல என் இறைவன் என்னைத் தம் இல்லத்திற்கு அழைத்திருக்கிறான் எல்லாவற்றையும் தரிசிக்கச் செய்திருக்கிறான் என்றால் பயணத்திற்கான பொருட்களை எடுத்து வருவது அவன் மீது நமக்குள்ள நம்பிக்கையின்மையை அல்லவா காட்டுகிறது?"

எனக்கு அது பிடிக்கவில்லை. பணிவை மட்டுமே நான் விரும்புகிறேன். என்னை அவன் கைவிட்டு விடுவானா?"

இவ்வாறு கூறிவிட்டு அந்த இளைஞன் மளமளவென்று அவரைக் கடந்து வேகமாக சென்று விட்டான்.

சூஃபி மகான் மெய்மறந்து நின்றார்.

Thursday 1 June 2017

சலிப்பு

💢 *சலிப்பு* 💢

♥ உங்களது காம ஆசைக்கு ஆதரவு கொடுப்பதற்காகவே ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நிர்வாணமான பெண் நீங்கள் கற்பனை செய்வதற்கு எந்த இடமும் கொடுப்பதில்லை.

அதனால்தான் நிர்வாணமான பெண்கள்அந்த அளவுக்கு கவர்ச்சியாக இருப்பதில்லை.

அதே போன்று நிர்வாணமான ஆண்களும் கவர்ச்சியாக இருப்பதில்லை.

ஆனால்,ஒரு ஆணோ,பெண்ணோ ஆடைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் போது

அவர்கள் உங்களது கற்பனைக்கு
அதிகம் விட்டுவிடுகிறார்கள்.

இந்த ஆடைகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று நீங்கள் கற்பனை செய்ய முடியும்.

நீங்கள் மீண்டும் கற்பனை செய்யலாம்.

ஆனால், உங்களது மனைவியை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாது.

அதுதான் சிக்கல்.

உங்களால் உங்களது பக்கத்து வீட்டுக்காரரின் மனைவியை கற்பனை செய்து பார்க்க முடியும்.

அவள் கவர்ச்சியாக தெரிவாள்

உங்களது மனைவியிடம் உங்களுக்கு சலிப்பு ஏற்பட்டுவிட்டதென்றால்

உங்களுக்கு அவளது ஆன்மாவிற்குள் நுழைவது எப்படி என்று தெரியவில்லை.

நீங்கள் அவளது உடலில் நுழைய முடியும்.

ஆனால் அது விரைவில் சலிப்பாக ஆகிவிடும்.

ஏனெனில் அது ஒரே விஷயத்தை
மீண்டும் மீண்டும் செய்வதாக இருக்கும்.

உடல் என்பது மேம்போக்கான விஷயம்.

நீங்கள் உடலோடு
ஒருமுறை, இருமுறை, மூன்றுமுறை
உறவுகொள்ளலாம்.

அதன்பிறகு அந்த உடலோடும்,

அதன் வளைவு நெளிவுகளோடும்
உங்களுக்கு பரிச்சயம் ஏற்பட்டுவிடுகிறது.

அதன் பின்னர் அங்கே எதுவும் புதிதாக இருக்காது.

நீங்கள் அடுத்த பெண்ணின் மீது ஆர்வம்
கொள்ள ஆரம்பித்து விடுகிறீர்கள்.

உங்களது மனைவியைவிட அவர்களிடம்
ஏதோ ஒன்று வித்தியாசமாக இருப்பதாக
நீங்கள் நினைக்கிறீர்கள்.

அவர்களது ஆடைகளுக்குப் பின்னால்
அவர்கள் ஏதோ ஒன்றினை வித்தியாசமாக பெற்றிருப்பார்கள் என்று
குறைந்தபட்சம் உங்களால் கற்பனையாவது செய்து பார்க்க முடியும்.

"மக்கள் தங்களது மனைவி மற்றும் கணவன்களோடு
சலிப்படைந்து விட்டனர்."

அதற்கான காரணம் ஒருவர் மற்றொருவரின் ஆன்மாவோடு தொடர்பு கொள்ளமுடியாமல்
போகின்றனர்.

நீங்கள் ஆன்ம நண்பர்கள் ஆகிவிடும்போது அங்கே சலிப்பு என்பது இருக்கவே இருக்காது.

"அதனால்தான் தந்த்ரா மார்க்கமானது

எல்லா மனிதர்களுக்கும் கல்வியில் தேவையான ஒரு பகுதியாக ஆகவேண்டும் என்று நான் கூறுகிறேன்.

"தந்த்ரா என்பது ஆன்மாக்களோடு தொடர்பு கொள்கின்றன,

அடுத்தவரின் ஆழ்ந்த மையத்திற்கு செல்கின்ற ஒரு விஞ்ஞானம்."

"இந்த கலையை அறிந்துகொண்ட ஒரு உலகில் மட்டுமே இந்த சலிப்பு மறைந்துபோகும்." ♥

🌹 *ஓஷோ* 🌹