Tuesday 26 January 2016

வெற்றியும்- ஆரோக்கியமும்

தன்னம்பிக்கையும்- வெற்றியும்- ஆரோக்கியமும்
உலகில் வாழும் எந்தவொரு சிறு உயிரினமும் தான் வாழும் சூழலில் போராடி தான் உயிர் வாழ வேண்டும். போராடினால் தான் உயிர் வாழ முடியும். இது இயற்கை விதி. உலக பொது நியதி.
*இதில் தன்னம்பிக்கை ஒன்றுதான் நம்மை வாழவைக்கும். உறவு பணம் பலம் எல்லாம் இரண்டாம் பட்சமே .
*உன்னுள் இருக்கும் உன்னை நம்பினால் உன்னாலும் வெற்றிபெற முடியும்.
*நான் ஜெயிப்பேன் என்ற சொல்லும். என்னால் முடியாது என்ற சொல்லும் உன்னிடம் இருந்து தான் வருகிறது . உன் மனம் உறுதி பட்டால் உடல் தன்னால் ஒத்துழைக்கப்போகிறது பிறகு வெற்றி நிச்சயம்
*நீ எதை கண்டும் பயந்து போகாதே . உன்னை சோர்வடைய எப்பொழுதும் அனுமதிக்காதே .
*உனக்குள் ஒரு லட்சியத்தை வை அதற்க்காக பாடுபடு . பல தடைகள் வரத்தான் செய்யும் தடைகளை உடைத்துவிட்டுத்தான் செல்லவேண்டும் என்ற அவசியமில்லை தடைகளை எளிதாக தாண்டிச்செல் .முன்னேறு முன்னேறு முன்னேறிக்கொண்டே இரு .
*ஒரு வெற்றிகிடைத்தால் அடுத்த வெற்றிக்கு உடனே ஆயுத்தமாகிவிடு.
*யாராவது தனக்கு உதவுவார்களா என எதிர்பார்க்காதே . நீச்சல் தெறியாதவன் தண்ணீரில் விழுந்தால் தன்னை காப்பாற்றிக் கொள்ள என்ன முயற்ச்சி செய்வானோ அதை நீ செய் .
*மற்றவர் உண்னை வெற்றிக்கொள்ள பார்க்கிறார்கள் நீ அவர்களை முந்திச்செல் .
*உன் தன்னம்பிக்கையை விட சிறந்த தோழன் யாருமே இல்லை . தன்னம்பிக்கை இருந்தால் தான் இறைசக்தியும் வேலைசெய்யும் என்பதை நினைத்து பார் . தன்னம்பிக்கை சக்தி எவ்வளவு வலிமையானது என்று உனக்கே புரியும் .
*மனதில் கொஞ்சம் தன்னம்பிக்கையை வை அது ஆயிரமாயிரம் தைரியத்தை உன்னுள் சேர்க்கும் . முயன்று பார் தெறியும் . முடங்கிவிடாதே .
*உன் இறப்பு இப்போதைக்கு இல்லை அதுவரையில் வாழத்தான் போகிறாய் தன்னம்பிக்கையின் துனண கொண்டு வெற்றியை பதிவிட்டுச் செல்லேன் .
*வெறுமனே சாவது ஒரு வாழ்க்கையா? . வாழ்க்கையை தோல்வியோடு முடிப்பதை விட கடைசி வரை வெற்றிக்காக போராடி மடிவதே மேல் . மடிவது குற்றமல்ல.அது போர்க்களமாக இருக்கட்டும்.

பத்து அடிப்படை கோட்பாடுகள்

வாழ்க்கை வளத்திற்கான பத்து அடிப்படை கோட்பாடுகள் முதலில் அறியுங்கள் பிறகு தன்னம்பிக்கையை அதில் கூடுதலாக வளர்த்துக்கொள்ளுங்கள்:
1. உயரிய எண்ணங்கள் - Mindfulness
2. வாழ்கையின் நோக்கம் - Life's Purpose
3. சுய உணர்வு - Self Awareness
4. குறிக்கோள் - Goals
5. செயல் - Action
6. ஆற்றல் - Energy
7. ஞானம் - Wisdom
8. தன்னம்பிக்கை - Self Confidence
9. அன்பு - Love
10. கடவுள் நம்பிக்கை - En*theos
1 . உயரிய எண்ணங்கள்:
நாம் நமது எண்ணங்களை மேன்படுத்தாவிட்டால் நமது வாழ்க்கை முன்னோக்கி செல்லாது. நமது வாழ்க்கையின் அடிப்படை நமது எண்ணங்களை பொறுத்தே அமைகிறது. இதையே புத்தர் "நமது எண்ணங்களே நாம்" என்று கூறுகிறார்.
2 . வாழ்கையின் நோக்கம் :
நமது வாழ்கையின் நோக்கம் என்னவென்று நாம் அறிந்துகொள்ள வேண்டும். நாம் எதை செய்தால் நமது மனம் மகிழ்ச்சி அடைகிறது ? நாம் எதை செய்தால் நமது மனம் முழுவதுமாக முழ்கிவிடுகிறது, புத்துணர்ச்சி அடைகிறது என்று அறிந்துகொள்ள வேண்டும்.
3 . சுய உணர்வு :
"நீ உன்னை அறிந்தால்...உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்..." என்ற பாடல் தான் நினைவிற்கு வருகிறது. ஒருமுறை டெல்பி-யின் ஆரக்கிள் சாக்கரடிஸ் தான் உலகத்தின் தலை சிறந்த ஞானி என்று உரைத்தது, ஏன் என்றால் அவருக்கு தான் தனக்கு என்ன தெரியாது என்று தெரியும் என்று கூறியது. நாம் நம்மை பற்றி எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறோம் என்பதை பொறுத்தே நம் வாழ்கையின் வெற்றி தோல்வி அமைகிறது.
4 . குறிக்கோள் :
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை இருட்டில் விளக்கு இல்லாமல் நடப்பதற்கு சமம். நமக்கு குறிக்கோள் இல்லாவிட்டால் வாழ்க்கை என்னும் ஓடத்தில் காய்ந்த இலைகளை போல நாம் அடித்து செல்லப்படுவோம். குறிக்கோள் ஒரு கலங்கரை விளக்காக இருந்து நமது செயல்களை ஒருமுகப்படுத்துகிறது.
5 . செயல் :
"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்"
இதற்கு மேல் "செயல்"-லை நான் சொல்ல என்ன இருக்கிறது.
6 . ஆற்றல் :
நமக்கு அளவிட முடியாத ஆற்றல் இருப்பதாக நம்மில் பலர் தவறாக எண்ணி கொண்டிருக்கிறோம். ஆற்றலுக்கு வரையரை உள்ளது. ஆற்றலை கையாளும் அறிவு நமக்கு தேவைபடுகிறது. தேவையில்லாத சொற்ப காரியங்களில் நமது ஆற்றலை செலவிட்டால் நாம் எவ்வாறு நமது குறிக்கோள்ளை அடையமுடியும்.
7 . ஞானம் :
நமக்கு வயது கூடி கொண்டே போனால் ஞானமும் அதிகரித்து கொண்டே செல்லும் என்பது சாத்தியம் அல்ல. நமக்கு வாழ்க்கை தரும் அனுபவங்களை அலசி ஆராய்ந்த பின்னரே நமக்கு ஞானம் தோன்றும்.
8 . தன்னம்பிக்கை:
தன்னம்பிக்கை என்பது தூண். அதுவே நம்மை தோல்வியை கண்டு துழன்று விடாமல் நம்மை தாங்கி நிற்கும். தன்னம்பிக்கை என்பது ஒரு திறமை அதை நம்மால் வளர்த்து கொள்ள முடியும்.
9 . அன்பு:
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது" - அன்புள்ள வாழ்கையே பயண்ணுள்ள வாழ்க்கை என்கிறார் உலகத்தின் முதல் சுய முன்னேற்ற நூலை எழுதிய நமது திருவள்ளுவர்.
10 . கடவுள் நம்பிக்கை :
மனிதனுக்கு இறை நம்பிக்கை மனித வாழ்க்கைக்கு தேவை. நமது வாழ்கையின் பல்வேறு இடங்களில் நாம் இறைவனை பார்க்கலாம். உன் மீது நம்பிக்கை கொண்டுள்ள இறையாற்றலின் மீது நீ நம்பிக்கைவை.

என்னோட சக்தி

என்னுடைய சக்தி ,
எனக்காகவே இருக்கும் சக்தி ,
எனக்கு மட்டுமே தெரிந்த சக்தி,
என் வளர்சிககாவே உள்ள சக்தியை ,
நான் தினம் தினம் பயன் படுத்துவேன் ,
என்னுடைய சக்தி,
எனது choice,
நான்,
எதை எடுக்கவேண்டும்,
எதை விடுக்கவேண்டும்,
என்று நானே முடிவு செய்வேன்,
எனக்கு முடிவு எடுக்க தெரியாத பட்சத்தில் ,
என் நண்பர்களையோ, சொந்தகாரர்களையோ,
அறிவுரை கேட்க மாட்டேன்,
அந்த சமயத்தில் ஒரு professional இடம் மட்டுமே கேட்பேன்,
அதுவும் சந்தேகம் தரும் பட்சத்தில் ,
second opinion கேட்க தயங்க மாட்டேன் என்று எனக்கு நானே
உறுதி மொழி எடுத்து கொள்கிறேன்,
இப்படிக்கு ,
என் மனம் ,
என்ன சரிதானே நண்பர்களே

Monday 25 January 2016

கவலை மாற

கவலைகள் மனதில் இருந்தாலே தோல்வியையும். மூதேவியையும் விருந்து வைத்து அழைப்பது போலாகும், கவலைகள் உள்ள உள்ளத்தில் தெய்வ தேவாதைகள் குடிகொள்ளாது , அதனால் தான் முன்னோடிகள் ஆசையை ஒழித்தால் அனைத்தையும் பெறலாம் என கூறினார்கள், ஆசை நிறைவேறாத போது கவலைகள் உண்டாகும்,
ஆசையில்லாத போது கவலைகள் குடிகொள்ளாது , எனவே மனதில் தெய்வ தேவாதைகளுக்குத்தான் இடம் கொடுக்க வேண்டுமே தவிர கவலைகளுக்கு அல்ல,
கவலை இருந்தால் சிந்தனை சிதறும். மனதை அடக்கமுடியாது , எனவே எப்பிரச்சினை உங்களுக்கு இருந்தாலும் அதை முதலில் மறக்கவும், அல்லது விலக்கவும்,
ஜெயம் உண்டாகும்,
கவலையில்லாத மனிதன் யாருமே இல்லைதான், கடந்தகால கவலை. நிகழ்கால கவலை. வருங்கால கவலை. இந்த மூன்று கவலையில் ஏதாவது ஒரு கவலையில் மனிதன் வாழ்கிறான்,
இதில் எதிலுமே கவலை இல்லாதவன் வாழ தகுதி அற்றவன் என சாஸ்திரம் கூறுகிறது , எனினும் லட்சியக் கவலை இருக்கலாமே தவிர. வீண்கவலை இருக்க கூடாது .
அக்காலத்தில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் ஆசையை அழித்துதான் வெற்றி பெற்றிருக்கிறார்கள்,
மன்னர்களெல்லாம் போர்க்களம் செல்லும் போது உயிர் மேல் ஆசை வைக்காமல் சென்றவர்கள் அவர்களெல்லாம் கூட வெற்றி பெற அது ஒன்றே காரணம் என வரலாறு கூறுகிறது , வெற்றி என்ற லட்சிய கவலையை ஆயுதமாக கொண்டு வெற்றி பெற்றவர்கள் அவர்கள்,
தாங்களும் நம்பிக்கையும். விடாமுயற்சியையும் கேடயமாக கொண்டு அன்பை ஆயுதமாக கொண்டு முயற்சியுங்கள் வெற்றி உண்டு, நமக்கு இருப்பது ஒருமனம் அதை கவலைக்காக இடம் ஒதுக்கிவிட்டால் தெய்வத்திற்கு இடம் இல்லாமல் போய்விடும் உணர்வீராக

வார்த்தைக்கு ஏற்ற வாழ்க்கை

வார்த்தைகள் நமது மனப்பான்மையை உருவாக்குகின்றன. நாம் எதைப் பெறப்போகிறோம் என்பதை அவை நிர்ணயிக்கின்றன.
நாம் மனம் மகிழ வேண்டும் என்பதை மனதார, உண்மையாகவே விரும்பினால் அதற்கு முதல் வேலையாக நமது வாயைக் காத்துக்கொள்ள வேண்டும். எப்படி? வாயை ப்ளாஸ்திரி போட்டு ஒட்டிக்கொண்டா? அப்படியில்லை! நம்மைப் பற்றிய நல்ல விஷயங்களைப் பேசவேண்டுமேயன்றி, ‘நான் ஒரு மொள்ளமாரி, கேப்மாரி, பேமானி’ என்றெல்லாம் சொல்லித் திரிவது தகாது. உண்மையிலேயே ஒருவர் சிலாக்கியமற்றவராக இருந்தாலும் இங்கு வார்த்தையைக் காப்பது என்பதை ‘நான் ஒரு யோக்கிய சிகாமணி’ என்று பாவ்லா செய்வதாக அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது.
நாம் நம்மைப் பற்றிய குறைகளையே முணுமுணுத்துக் கொண்டிருந்தால் சரிவராது என்பது ஒருபுறம் இருக்கட்டும்; நமக்கே நம்மைப் பற்றிய நல்ல சிந்தனை இல்லாது இருந்தால் ஊரும் உலகும் நம்மைப் பற்றி என்ன அபிப்ராயம் கொள்ளும்? யோசித்துப் பாருங்கள்!
உளவியலாளர் ஒருவரை அவரது நண்பர் சந்தித்தார். அந்த நண்பருக்கு ஏகப்பட்ட மன அழுத்தம். மகிழ்ச்சி என்றால் என்ன என்பதே அவருக்கு மறந்து போய்விட்டது. உளவியலாளரிடம் கேட்டார், “மகிழ்ச்சியற்று, மன அழுத்தத்துடன் இருந்து, இருந்து எனக்கு அலுத்துப் போய்விட்டது. எனது குடும்பத்திற்கு நான் ஒரு பெரும் சுமையாகி விட்டேன். நான் மகிழ்வாய் இருக்க வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?”
“நல்ல முடிவு. நீங்கள் மன மகிழ்வாய் இருக்க வேண்டும் தானே? அது ரொம்ப ஸிம்பிள். வாயைத் திறக்காதீர்கள். நல்லதாக, ஆக்கபூர்வமாக ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் மட்டும் வாய் திறந்து வார்த்தையை உதிருங்கள். மற்றபடி ‘கப்சிப்’ உங்களது மொழி. எப்படி மாற்றம் ஏற்படப் போகிறது என்று பாருங்கள்.”
ஒருவாரம் கழிந்தது. யதேச்சையாக இருவரும் மீண்டும் சந்தித்தனர். அந்த நண்பர் இன்னமும் சரியாகாமல் இருந்தார். “நான் மகிழ்வாய் இருக்கவே விரும்புகிறேன். ஆனால் என்னிடம் மகிழ்வில்லை. என்னதான் செய்வது?”
“அதான் சென்ற வாரம் நல்லதொரு அறிவுரை கூறினேனே?”
“ம்ஹும்! அப்படியும் மகிழ்வில்லை.”
அந்த நண்பர் தமது வார்த்தைகளை அடக்கியாள்வதாக நினைத்துக் கொண்டிருந்தார். ‘இல்லை’ என்பதை உளவயிலாளர் அவருக்கு இப்படிச் சொன்னார் -
“புரிகிறது! நீங்கள் மகிழ்வாய் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இன்னமும் தீவிரமான தீர்மானத்திற்கு வரவில்லை. என்றிலிருந்து அப்படித் தீவிரமாக நம்புகிறீர்களோ அன்று முதல் நீங்கள் மகிழ்வடைய ஆரம்பிப்பீர்கள்.”
அவரவர் வாயை அவரவர்தாம் அடக்க வேண்டும். அதை முதலில் நாம் சிந்தித்து உணர வேண்டும்.
நமக்குள் உருவாகும் சிந்தனைகளுக்கு நாம் தானே பொறுப்பு. “இன்னிக்கு ஓர் அரை மணி நேரம் இதைச் சிந்தியுங்கள்,” என்று பக்கத்து வீட்டுக்காரர் சொல்லியா செய்கிறோம்? எனவே நமது மண்டைக்குள் என்ன சிந்தனை உதிக்க வேண்டும் என்பதை நாம் கட்டுப்படுத்த ஆரம்பிக்க வேண்டும். அந்தக் கட்டுப்பாட்டினால் நாம் மகிழ்வாய் இருக்க வேண்டும் என்ற தீவிர சிந்தனை நம்முள் உருவாகி வலுப்பெறும்.
நாம் என்ன சிந்திக்கப் போகிறோம், என்ன பேசப் போகிறோம் என்பதற்கான ஓர் ஒழுங்கை நாம் கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டால் போதும்; மகிழ்ச்சி நெருங்கிவர ஆரம்பித்துவிடும். ‘இதற்குமேல் என்னால் நொந்து போகமுடியாது’ என்ற அளவிற்கு ஒருவர் மோசமான நிலையை அடைந்து விட்டாலும்கூட அவர் தமது மனோபாவத்தை மாற்றிக் கொண்டால் போதும்! அதன் பயனாய் அவருடைய பேச்சும் தொனியும் நல்லவிதமாய் மாறிவிடும்.
“நல்வார்த்தை சொல், இல்லையென்றால் எதிராகச் சொல்லாதே என்றீர்கள்; அதற்குச் சிந்தித்து தீர்மானம் எடு என்றீர்கள். பிறகு இதென்ன மனோபாவம்?” என்று உங்களுக்குள் கேள்வி எழும்.
“மகிழ்ச்சியாய் இருப்பதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயார். ஆனால் என்னை மட்டும் நான் மாற்றிக் கொள்ள முடியாது.” இப்படி ஒருவர் சொன்னால் எப்படி இருக்கும்? அதுதான் அவருடைய மனோபாவம். அவருடைய இம்மனோபாவம் எப்படி மன மகிழ்ச்சிக்கு உதவும்?
அதைத்தான் , மனோபாவத்தை மாற்றிக் கொண்டால் போதும். “பூட்ட கேஸு“ என்று நினைப்பவரும் மாறிவிட முடியும் என்கிறார்கள். சற்று ஒழுக்கமுடன் முறையாய் முயற்சி மேற்கொண்டால் போதும். இதுவும் மிக எளிது.
மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். இங்கு வார்த்தைகள் என்ற தலைப்பில் பார்த்துக் கொண்டிருப்பது நாம் நம்மைப் பற்றிப் பிரயோகிக்கும் வார்த்தைகள்.
நமது வார்த்தைகள் நமது சக்தியைப் பாதிக்கும் ஆற்றல் கொண்டவை. நாம் உதிர்க்கும் வார்த்தைகள் நமது ஆழ்மனதிற்குள் புகுந்து படர்ந்து அவையே நமது நடத்தையையும் குணாதிசயத்தையும் உருவாக்குகின்றன. “நாம் எந்த லட்சணத்தில் உள்ள மனிதர்” என்பதை நமது வார்த்தைகள் பிறருக்குப் படம் பிடித்துக் காண்பிக்கின்றன.
நம்முடைய சில வார்த்தைகள் நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டவை. ஒவ்வொருமுறையும் “பார்ப்போம்”, “முயல்கிறேன்” என்று நீங்கள் கூறிக் கொண்டே இருந்தால் உங்களது செயல்பாடுகள் உங்களது கட்டுப்பாட்டில் இல்லை என்று அர்த்தமாகிறது.
“அந்த வேலையை நல்லவிதமாக முடிக்கப் பார்க்கிறேன்”...
“நாளைமுதல் நேரத்தோடு வர முயல்கிறேன்”...
“மகிழ்வாய் இருக்க முயல்வேன்”...
என்பனவெல்லாம் நீங்கள் உங்களது கட்டுப்பாட்டில் இல்லை என்று அறிவிக்கின்றன.
அதையே சற்று மாற்றி,
“அந்த வேலையை நல்லவிதமாக முடிக்கப் போகிறேன்”...
“நாளைமுதல் நேரத்தோடு வரப் போகிறேன்”...
“மகிழ்வாய் இருக்கப் போகிறேன்”...
என்று சொல்லிப் பாருங்கள். சிறு மாற்றம்தான். ஆனால் உங்கள் ஆழ்மனது தானாகவே அந்த வார்த்தைகளின் வலிமையை உணரும்.
இவையெல்லாம் தவிர, வார்த்தைகளுக்கும் நமது நினைவாற்றலுக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் அறிவிக்கிறார்கள். மோசமான நினைவாற்றல் என்று எதுவும் இல்லையாம்!
ஆராய்ச்சியாளர்கள் அதை இப்படி விளக்குகிறார்கள் -
“நீங்கள் உண்மையிலேயே எதையும் மறப்பதில்லை. தகவல்கள் உங்கள் மண்டையில் பத்திரமாய்ப் புதைந்திருக்கின்றன. பிரச்சனை அந்தத் தகவலை வெளியில் எடுப்பதில் மட்டுமே.”
ஒருவரை நீண்ட நாள் கழித்துச் சந்திக்கிறீர்கள். அவரது பெயர் சட்டென்று உங்களது நினைவிற்கு வரவில்லை; மறந்து போய்விட்டது! மறுநாள் குளித்துக் கொண்டிருக்கும்போது சோப்பு நீர் கண்ணில்பட்டு எரிச்சல் ஏற்பட, திடீரென்று நினைவிற்கு வந்துவிடுகிறது அவரது பெயர்.
அந்தப் பெயர் உங்கள் தலையிலிருந்து விலகிப்போய் பிறகு இன்று காலை சூரியன் உதயமாகும்போது வந்து புகுந்து கொண்டதா என்ன? எல்லாம் மண்டைக்குள்தான் இருந்தது. உங்களால் அதை உடனே வெளியில் எடுக்க முடியவில்லை.
“என் நினைவாற்றல் மோசம்” என்று நீங்கள் சொல்லிக் கொண்டு இருந்ததாலேயே இப்படி நிகழ்கிறதாம்.
வார்த்தைகள் நமது செயல் திறனை உருவாக்கும் ஆற்றல் கொண்டவை. வார்த்தைகள் நமது ஆழ்மனதைத் தாக்க வல்லவை. ஆழ்மனதும் நினைவாற்றலும் என்றாலே அவை பக்கா தோஸ்த்துகள் தாம்.
எனவே தொடர்ந்து நீங்கள் உங்களது ஆழ்மனதிடம் “நான் நினைவாற்றலில் சிறந்தவன்” என்று சொல்லிக் கொண்டேயிருந்தால் போதும். உங்களது ஆழ்மனது நீங்கள் பெயர், போன் நம்பர் போன்ற தகவல்களை நினைவில் நிறுத்தப் போகிறீர்கள் என்று நம்ப ஆரம்பித்துவிடும். அது உங்கள் நினைவிலிருந்து தகவல்களை கம்ப்யூட்டர் போல் வெளியில் எடுத்துப் போட்டுவிடும்.

Wednesday 20 January 2016

மூச்சு

முதலில் பிரதான அடுக்கான உடல் பார்த்தோம். அடுக்கான பிராணன் பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
உடலில் உயிர் நிலைக்க பிராண அவசியம். நல்லவன்,கெட்டவன், உயர்ந்தவன்,தாழ்ந்தவன் என வேறுபாடின்றி யாவரும் உயிர் வாழ்வது பிராணனின் உதவியால் தானே.
இறைவழிபாடு,தியானம் செய்வதன் மூலம் அதிக சக்தி பெறுகிறோம்.ஆனால் அந்த சக்தி நம்மிடம் பொருளாக வரவில்லை.சக்தி அலைகளாக வருகிறது.எனவே கண்ணால் காண முடியவில்லை.அந்த சக்தி உடலில் எங்கேனும்,அல்லது வேறு எங்காவது வைத்துக்கொள்ளலாம்.அது அப்படி வராமல் சக்தி அலைகளாக பிராண சரீரத்தில் சேர்கிறது.எனவே பிராண சரீரம் வலுவாக இருந்தால் மட்டுமே வரும் சக்தியைச் சேமிக்கவும், தேவைக்கு அங்கிருந்து உபயோகப்படுத்தவும் செய்யலாம்.
உதாரணமாக ஒரு டம்ளரில் பெரிய பாத்திரத்தில் உள்ள  நீரை மேலிருந்து ஊற்றினால் அதில் மிக குறைவான நீர் மட்டுமே தங்கும்.வந்த தண்ணீர் அதிகம் ,நீர் ஊற்றப்பட்ட கிளாஸ்  மிக சிறியது .அது போல் உணவு,உணர்வு இவற்றில் முறையின்றி வாழும் நம்முடைய பிராண சரீரம் போதிய வலுவின்றியே இருக்கும்.
புதிதாக ஒரு வீட்டிற்கு குடிபோகும் முன் எப்படி அந்த வீட்டை ,தூசி தட்டி வெள்ளை அடித்து வாழ தகுந்ததாக்கி அதன் பின் குடிஎருவோமோ அது போல் முதலில் நாடி ம்சுத்தி என்ற பயிற்சி செய்ய வேண்டும்.நமது உடலில் 72000 நாடி நரம்புகள் இருப்பதாக யோகசாஸ்திரம் கூறுகிறது.நாடி சுத்தி பயிற்சியின் மூலம் நாடிகள் தூய்மை அடைவதோடு ரத்தமும் சுத்தமாகும்.ஞாபக சக்தி கூடும்.முகத்தில் ஒளி உண்டாகும். நாடிகள் சுத்தமாகாமல் குண்டலினி யோகப் பயிற்சியில் இறங்கக்கூடாது என யோகநூல்கள் சொல்கின்றன.
நாம் அனேக தடவைகள் சில உறுதிமொழிகளை, குறிப்பாக ஒவ்வொரு புத்தாண்டின் போதும் அநேக முடிவுகளை எடுக்கிறோம்  ஆனால் மறு நாள் தூங்கி எழுந்ததும் அவற்றை மறந்து விடுவோம்.அல்லது அவற்றை தொடர்ந்து செய்ய மாட்டோம்.இதற்க்கு காரணம் வைராக்கிய குறைவு நல்ல பிராணசக்தி உள்ளவர்கள் மிகுந்த வைராக்கியம் உள்ளவர்களாகவும் எந்த செயலையும் சிறப்பாக செய்யக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
இன்று அநேகர் பிராணசக்தியைக்  கொண்டு பல அற்புதங்கள் செய்கிறார்கள்.பிராண சக்தியினால் வியாதிகளைக் குணமாக்குகிறார்கள்.
நாம் இயல்பாகவே உள்ளே இழுக்கும் மூச்சை விட அதிக மூச்சை வெளியே விடுகிறோம்.சுவாசம் எப்போதும் மூக்கின் இரண்டில் ஒரு துவாரத்தின் வழியாகவே நடைபெறும்.அது இரண்டு மணி நேரத்திற்கொருமுறை மாறும்.
வலதுபக்கம் சூரிய கலை ,இடது புறம் சந்திரகலை எனப்படும்.
இடம் வலமாக,வலம் இடமாக மாறும்போது சில நொடி,நிமிடம் இரண்டு மூக்கு துவாரத்தின் வழியாகவும் சுவாசம் நடக்கும் அதற்கு சுழுமுனை எனப் பெயர்.
திங்கள்,புதன்,வெள்ளி,வளர்பிறை வியாழன்  நாட்களில் அதிகாலை 4 முதல் 6 மணிவரை இடது புறம் சுவாசம் நடக்கும்.
செவ்வாய்,சனிக்கிழமை,ஞாயிறு,தேய்பிறை வியாழன் நாட்களில் அதிகாலை 4 முதல் 6 மணிவரை வலது புறம் சுவாசம் நடக்கும்.
பின் இரண்டு மணி நேரத்திற்கொருமுறை மாறும்.
சூரியகலை (வலது) நடக்கும் போது செய்ய வேண்டிய காரியங்கள் :-
கடினமான வேலைகள் செய்யலாம்,உணவு உண்ண ,மலம் கழிக்க ,உடலுறவில் ஈடுபட,கடல் யாத்திரை போக,சண்டையிட,கஷ்டமான கலைகள் கற்க,குதிரை,மாடு முதலிய நாளுகள் விலங்குகள் வாங்க,மலை ஏற ,பளு தூக்க,நீந்த,பணம் கொடுக்கல் வாங்கல் செய்ய, அரசன், பெரியமனிதர்களைக் காண,மருந்து சாப்பிட,செரிக்க கடினமான ஆகாரம் உண்ண,வைத்தியம் பார்க்க நன்று.
சந்திர கலை (இடது) நடக்கும் போது செய்ய வேண்டிய காரியங்கள் :-
எல்லா சுப காரியமும் செய்ய நன்று.நீர் அருந்த,தீர்மானம் செய்ய,நகை செய்ய நகை அணிய,புத்தாடை அணிய,திருமணம் பேச,பெண்பார்க்க, வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள,வீடு கோயில் கட்ட,தர்மம் செய்ய,குளம்,கிணறு வெட்ட,வைத்திய சாஸ்திரம் கற்க, மருந்து செய்ய,சாமான்கள் வாங்க,புதுவீடு குடிபுக,விதை விதைக்க,பாஷைகள் கற்க,நடனம்,பாடல் கற்க,நண்பர்கள் உறவினரை காண நன்று.
மேற்சொன்னவாறு காரியங்களை அந்தந்தக்  கலையில் சுவாசம் நக்கும் போது செய்ய வெற்றியுண்டாகும்.
சுழுமுனை நடக்கும் செய்யும் காரியம் தோல்வியடையும்.ஆனால் இறைவழிபாடு,தியானம் செய்ய மிகச்சிறப்பு.
சூரியகலையில் தம்பதியர் இணைந்தால் ஆண் குழந்தையும்,சந்திர கலையில்
இணைந்தால் பெண் குழந்தையும் பிறக்கும்.சுழிமுனையில் இணைந்தால் அலியாய்ப் பிறக்கும்.
ஏதேனும் வியாதி (உதாரணமாக :தலைவலி) ஏற்பட்டால் அது ஆரம்பித்த நிமிடம் எந்த பக்கமாக சுவாசம் ஓடுகிறது என பார்க்கவும் அதற்கு அடுத்த பக்கத்தில் சுவாசத்தை மாற்றினால் அந்த குறிப்பிட்ட வியாதி நீங்கிவிடும்.
மேலே சூரிய கலை,சந்திர கலையில் செய்ய காரியங்களை பற்றி கூறினேன்.உதாரணமாக நமக்கு சூரிய கலை நடந்து கொண்டிருக்கிறது ஆ னால் நாம் செய்ய வேண்டிய காரியம் சந்திர கலையில் செய்ய வேண்டியது .இதுபோன்ற தருணங்களில் என்ன செய்யலாம். அடுத்த பக்கம் மாறும் வரை எல்லா நேரங்களிலும் காத்திருக்க முடியாது
சுவாசத்தை மாற்றும் முறைகள்:-
1.மூச்சு ஓடும் பக்க அக்குளில்(வலது பக்கம் எனில் வலது கை அக்குள்) ஒரு துண்டை சுருட்டி மடித்து வைத்துக்கொண்டு  கையை பின்புறம் மடக்க கொள்ள சில நொடிகளில் அடுத்த பக்கத்திற்கு மாறும்.
2.காலை மடக்காமல் மூச்சு ஓடும் பக்கம் சாய்ந்து படுத்து அந்த பக்கத்து கையை தலைக்கு வைத்து படுத்திருந்தால் சில நொடிகளில் அடுத்த பக்கத்திற்கு மாறும்.
3.ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி,ஸ்ரீ புவனேஸ்வரி,ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மந்திரத்தில் சித்தி பெற்றிருந்தால் அந்த சக்தியிடம் வேண்டினால் மூச்சு உடனே மாறும்.நான் இந்த முறையில் மூச்சை மாற்றுகிறேன்.
மேலே சொன்னவாறு ஒவ்வொரு பக்கம் மூச்சு ஓடும் போதும் இழுக்கும் மூச்சை விட வெளிவிடும் மூச்சின் அளவு நமக்கு அதிகம்.அதுவும் சூரியகலையை விட சந்திர கலையில் அதிகமாக பிராணன் வீணாகிறது.எனவே யோகியர் சுழுமுனை அல்லது சூரிய கலையில் சுவாசம் வருமாறு வைத்துக்கொள்கிறார்கள்.இயல்பாக நஷ்டமாகும் பிராணன் போக பேசும் போது,கடின உழைப்பின் போது ,உடல் உறவு கொள்ளும் போது, தூங்கும் போதும் அதிக பிராணன் வீணானாலும் உறங்கும் நேரம் அதிகம் ஆகையால் உறக்கத்தின் போது பெருமளவில் பிராணன் நஷ்டமடைகிறது. எனவே சூரியகலையில் உறங்கினால் பிராண நஷ்டத்தை குறைத்துக் கொள்ளலாம். அதற்கு இடது கையைத் தலைக்கு வைத்து இடது புறமாகச் சாய்ந்து படுக்க வேண்டும்.மதிய உணவிற்குப்பின் பெரும்பாலோர் உறங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள் அவர்களும் இவ்வாறு உறங்கினால் சீக்கிரம் உண்ட உணவு ஜீரணமாகும்.
மேலும் சூரிய,சந்திர ,சுழுமுனை இவற்றை பயன்படித்தி ஆரூடம் சொல்லலாம்,பிறக்கப் போகும் குழந்தை ஆனா பெண்ணா என்று அறியலாம்,காணாமல் போன பொருள்,நபர் வருமா வராதா மற்றும் அநேக காரியங்கள் செய்யலாம். விவரித்தால் அதிகம் போகும் எனவே இத்துடன் முடிக்கிறேன்.
நாம் இயல்பாகவே உள்ளே இழுக்கும் மூச்சை விட அதிக  மூச்சை வெளியே விடுகிறோம்.புது இரண்டு சக்கர வாகனம் எடுத்தவுடன் குறிப்பிட்ட கிலோமீட்டர் வரை 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் அப்போதுதான் அதற்கு  அதிக மைலேஜ் கிடைக்கும்.அதுபோல் நாடிசுத்தி மற்றும் பிராணாயாமம் செய்து வர வர அதிக சுவாசம் உள்ளே சென்று குறைந்த சுவாசம் வெளிச் செல்லும்.நமக்கு நிறைய பிராண சக்தி கிடைக்கும்.
பிராண சரீரத்தை வலுப்படுத்தும் பயிற்சிகள்  :-
நாடிசுத்தி :-
உபயோகப்படுத்த வேண்டியது வலது கையின் ஆட்காட்டி மற்றும் பெருவிரல்கள்.மூச்சை மென்மையாக,ஆழமாக இழுக்கவேண்டும் வலிந்து செய்யக்கூடாது.விடும் போதும் அப்படியே செய்க.
1.வலதுகையின் பெருவிரல் கொண்டு வலது மூக்கு துவாரத்தை அடைத்து இடது மூக்கு துவாரம் வழியாக உள்ளிருக்கும் பிராணனை வெளியிடவேண்டும்.பின் அதே (இடது) மூக்கு துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.
2.பின் ஆட்காட்டிவிரல் கொண்டு இடது மூக்கு துவாரத்தை அடைத்து வலது மூக்கு வழியே மூச்சை வெளியிட வேண்டும்.பின் அதே (வலது) மூக்கு துவாரம் வழியாக மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்.
இப்படி செய்தால் ஒரு தடவை(சுற்று).இவ்வாறு குறைந்தது 5 முதல் அதிகபட்சம் 15 வரை செய்யலாம்.இதை காலை,மதியம் உணவுக்கு முன்,மாலை ,நள்ளிரவு என 4 வேளையும் செய்து வர பிராண சரீரம் மிக வலிமையுடன் திகழும்.
நாடி சுத்தியை குறைந்தது ஒரு மாதமாவது செய்து பின் மற்ற பிராணயாம பயிற்சிகளை செய்தல் நலம்.
பிராணயாமம்:-
இரண்டு மூக்குத் துவாரத்தின் வழியாகவும் மெதுவாக,ஆழமாக மூச்சை உள்ளிழுத்து பின்னர் இரண்டு மூக்கு துவாரத்தின் வழியாகவும் மெதுவாக மூச்சை வெளியிடவும். இதைக் குறைந்தது 10 முறைகள் செய்யலாம்.
இதுவும் இரத்த சுத்தி செய்வதுடன்,சுவாசப்பைகளை பெரிதாக்கி சுவாசம் நன்றாக நடைபெற உதவுகிறது.மூளைக்கு நிறைவான ஆக்சிஜன் செல்வதால் ஞாபக சக்தி கூடும்.ஏதேனும் பாடங்கள் படிக்கும் முன் இதை சில தடவைகள் செய்து பின் படிக்க நன்கு மனதில் பதியும்.நேர்முகத்தேர்வுக்குக் காத்திருக்கும் போது சில தடவைகள் செய்ய பதற்றம் தணியும்.ஏதாவது ஒரு விஷயம் குறித்து முடிவெடுக்கும் முன் சில தடவைகள் செய்ய மனம் நிதானத்தில் இருக்கும் நல்ல முடிவாக எடுக்க உதவும்.
கபாலபாதி:-
இரு மூக்கு துவாரத்தின் வழியாகவும் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக மூச்சை இழுத்தும்,வெளியிடவும் செய்யவேண்டும்.இதன் மூலம் கபாலம் எனும் தலையில் தங்கிய சளி வெளியேறும்.
ஒவ்வொரு வியாதி வரும் போதும் அது நமக்கு முன்கூட்டியே
எச்சரிக்கை செய்துவிட்டுதான் வருகிறது.உதாரணமாக சளி பிடிக்கும் முன் தும்மல் வரும்,தொண்டையில் ஒரு மாதிரியான அரிப்பு வரும் அதை உணர்ந்து இந்த கபாலபதி பயிற்சியை 20 தடவை முதல் 30 தடவை வரை செய்ய சளி பிடிக்காது.இதை தொடர்ந்து செய்து வர சைனஸ் நீங்கும்.
சீத்காரி :-
சீதளம் என்றால் குளிர்ச்சி எனப்பொருள்.
பற்களைச் சேர்த்து நாக்கை மேலே சிறிது மடித்து பல்லிடுக்கு வழியாக மூச்சை உள்ளிழுக்கவும்.பின்  வாயை மூடி மூக்கு வழியாக காற்றை வெளியிடவும்.இதை 10,15 தடவைகள் செய்யலாம்.
சீத்தளி:-
நாக்கை குழல் போல் மடித்து மூச்சை உள்ளிழுக்கவும்.பின்  வாயை மூடி மூக்கு வழியாக காற்றை வெளியிடவும்.இதை 10,15 தடவைகள் செய்யலாம்.
வெயிலில் எங்காவது அலைந்து நன்கு வேர்த்து விட்டால் வீடு அல்லது அலுவலகம் வந்து சேர்ந்ததும் இதைச் செய்ய உடனே வியர்வை நிற்கும்.
உஷ்ணமான உடல் அமைப்பு கொண்டவர்கள் இந்த ப்ராணாயாமங்களை தினமும் செய்து வர உடலில் அதிக உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.உஷ்ண தேகமானால் அதிக காமம் உண்டாகும்,சிறுநீரோடு விந்து,நாதம் வெளியேறும்,பெண்களுக்கு வெள்ளைப்படுதல் உண்டாகும் அவை யாவும் இந்த ப்ரானாயாமத்தினால் தீரும்.ரொம்ப சோர்வாக உணரும் வேளைகளில் இதனை செய்ய உடனே சக்தி கிடைக்கும்.இரவில் விளித்து படிக்கும் மாணவர்கள் இதை சில தடவைகள் செய்ய உறக்கம் உடனே வராமல் சக்தியும் கிடைக்கும்.
சீத்தளி,சீத்காரி இரண்டு ப்ராணாயாமங்களையும் மழை மற்றும் பனிக்காலங்களில் செய்ய வேண்டாம்.
பிரபஞ்ச ஆற்றல் ,பிராண சக்தி அதிகம் பெற பயிற்சி:-
நாக்கை ''ழ'' சொல்வது போல் மடித்து மேல் அன்னத்தில் படுமாறு வைத்துக்கொண்டு உச்சந்தலையில் உள்ள துரியத்தில் மனம் வைத்து தியானிக்க வேண்டும்.இதை அதிகபட்சமாக 20 நிமிடங்கள் செய்யலாம் அதற்கு மேல் செய்யவேண்டாம்.
இந்த பயிற்சி அநேக யோகிகளால் பயிலப்பட்டது.இதனை செய்ய உடனடியாக பிரபஞ்ச சக்தி நம் தலை வழியே நமக்குள் இறங்குவதை உணரலாம்.இது கர்ம வினை சார்ந்த நம் சிந்தனையில் ஏற்படும் குழப்பங்களை நேக்கும்.நம் செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும்.சித்தர் தரிசனம் உண்டாகும்.அநேக ஆன்மீக அனுபவங்கள் உண்டாகும்.