Tuesday, 2 May 2017

வெகுதூரம் இல்லை

🌼ஒரு சமயம்,

🌼ஒரு யானையும், ஒரு நாயும் ஒரே நேரத்தில் கர்பமானது.

🌼மூன்று மாதத்தில் நாய் தன் குட்டிகளை ஈன்றது. ஆறு மாதங்கள் கழித்து மறுபடியும் நாய் கர்பமானது.

🌼அடுத்த மூன்று மாதத்தில் மறுபடியும் நாய் தன் குட்டிகளை ஈன்றது. இது வழக்கமாக தொடர்ந்தது.

🌼தன் பதினெட்டாவது மாதத்தில், நாய் யானையிடம் சென்று கேட்டது.

🌼"யானையே, நீ உண்மையிலே கர்ப்பம் தரித்தாயா? நீயும் நானும் ஒரே சமயத்தில் தான் கர்பமானோம், நான் இதோடு மூன்று முறை கருத்தரித்து குட்டிகளை ஈன்றுவிட்டேன். இப்பொழுது அவைகள் வளர்ந்து விட்டன,

🌼ஆனால் நீ இன்றுவரையில் கார்பமாகவே இருக்கிறாயே, என்னதான் நடக்கிறது சொல்! என்றது.

🌼அதற்கு சற்றும் பதட்டப்படாமல் யானை பதிலளித்தது "தோழியே நீ ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்,

🌼நான் சுமந்துகொண்டிருப்பது நாய்க்குட்டி அல்ல, யானை குட்டியை.
நான் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறைதான் ஈன்றெடுக்க முடியும்.

🌼 என் குழந்தை விழுவதை உணரும் இந்த பூமி. என் குழந்தை நடந்தால், அதை மனிதர்கள் நின்று பிரமித்து பார்ப்பார்கள்.

🌼நான் பிரம்மாண்டத்தை சுமக்கிறேன், அதுவே பெருமை எனக்கு " என்றது.

🌼நீதி:-
உங்களது உழைப்புக்கும், தேடலுக்கும் அங்கீகாரமும், புகழும் கிடைக்கவில்லை என்று காணாமல் போய்விடாதீர்கள்.

🌼வாழ்க்கையை வாழ்வதை விட, சாதிப்பதுதான் பெருமை.

🌼அதனால்....... நீங்களே உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள், " எனக்கென்று ஒரு நேரம் வரும், வானம் வசப்படும். என் சாதனைகள் மக்கள் பிரமிப்பாக பார்ப்பார்கள்.

🌼 நான் சாதிக்கும் நேரம் வெகுதூரம் இல்லை. " 🌼
🙏