Friday 2 March 2018

மகிழ்ச்சி

நார்மன் வின்சென்ட் பீலே என்ற உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் *“The power of positive thinking”* என்ற புத்தகத்தில் அவர் வாழ்வில் நிகழ்ந்த  நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி குறிப்பிடுகிறார் !

தோல்வி மேல் தோல்வி அடைந்து விரக்தியின் விளிம்பில் இருந்த ஒருவர் பீலேவை சந்திக்க வருகிறார் !

_தனது வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் தான் சிரத்தையுடன் சிரமப்பட்டு செய்யும் செயல்கள் கூட துன்பமயமாக இருக்கிறது என்றும் பீலேவிடம் புலம்பினார் !_

பீலே அவரிடம் ஒரு துண்டு காகிதத்தை எடுத்து அதன் நடுவே கோடு ஒன்றைப் போட்டுக் கொடுத்தார்.

*கோட்டுக்கு வலது பக்கம் அவருடைய வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளையும் கோட்டுக்கு இடது பக்கம் துன்பமயமான நிகழ்வுகளையும் எழுதச்சொன்னார்.*

வந்தவரோ “என் வாழ்க்கையை பொறுத்த வரையில் *வலது பக்கம் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. வலது பக்கம் காலியாகவே இருக்கப் போகிறது”* என்று புலம்பிக் கொண்டு அந்த துண்டு காகிதத்தை வாங்கினார்.

சிறிது நேரம் கழித்து காகிதத்தை வாங்கிப் பார்த்த போது *வலது பக்கம் காலியாகவே இருந்தது.*

இப்போது பீலே சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். “உங்களுடைய மகன் எப்போது ஜெயிலில் இருந்து வந்தான்?” என்று பீலே கேட்டார்.
அதற்கு அவர் *'எனது மகன் ஜெயிலுக்கே போகவில்லையே'* என்று கூறினார். “இது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே. இதை வலது பக்கம் எழுதலாமே” என்றார்.

தொடர்ந்து “உங்களுடைய மனைவி உங்களை எப்போது விவாகரத்து செய்தார்?” என கேட்ட கேள்விக்கு *என் மனைவி என்னுடன் தான் இருக்கிறாள் என்றார்.*

“எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தீர்கள்?” என்ற கேள்விக்கு *'சாப்பிடாமல் நான் ஒருநாள் கூட இருந்ததில்லை'* என்று பதிலளித்தார்.

“உங்கள் வீடு தண்ணீரில் மூழ்கியபோது என்ன செய்தீர்கள்?” என்ற கேள்விக்கு *'என் வீடு பத்திரமாகத்தான் இருக்கிறது'* என்று பதில் கூறினார்.

இப்படி ஒவ்வொரு கேள்வியாக கேட்க கேட்க கோட்டின் *வலப்புறம் நிரம்பியிருந்தது.*

*இடது பக்கத்தில் எழுத இன்னும் இடமிருந்தது.*

கடந்த காலத்தில் *முழுக்க முழுக்க மகிழ்ச்சியான* நிகழ்வுகளைக் கொண்ட மனிதர் என்று இந்த உலகில் யாரும் இல்லை.

அதுபோல *முழுக்க முழுக்க துன்பமயமான* நிகழ்ச்சிகளை மட்டும் கொண்ட மனிதர் என்று யாரும் இல்லை.
*_இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை !_*

ஆனால் சிலர் ~துன்பமான நிகழ்வுகளை மட்டுமே கணக்கிலெடுத்து தங்களுடைய வாழ்க்கையை தாழ்த்திக் கொள்கிறார்கள்.

*~கடந்த காலம் நம் தலையை உடைக்கும் சுத்தியலாக இருக்கக்கூடாது.

~அது நம்மை முன்னோக்கி உந்தித் தள்ளும் தள்ளுபலகையாக இருக்க வேண்டும்.

*என்ன நடந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வேன் என்று முடிவெடுங்கள்.* மகிழ்ச்சியே நமது வாழ்க்கையின் வழியாக இருக்கட்டும்.