மனம், தான்... காரணகர்த்தா,,,*
புத்தர் பெரிய அரச வம்சமத்தை சேர்ந்தவர். ஆனால் எல்லாவற்றையும் துறந்து சன்னியாசி ஆகிறார்.*
*ஒரு ஊருக்குள் சென்றபோது கோவணமும், கையோட்டையும் பார்த்த மக்கள் பரிகாசிக்கிறார்கள். அவர் மீது கல் வீசுகிறார்கள்.*
*‘அரச போகத்தை விட்டு விட்டு இப்படி பிச்சைக் காரனைப்போல திரிகிறாயே’ என்றெல்லாம் கேலி செய்கிறார்கள்.*
*புத்தரிடம் எந்த சலனும் இல்லை. கேலி செய்த மக்களுக்கோ குற்ற உணர்வு உண்டாயிற்று.*
*புத்தர் அமைதியாகவே இருந்தார். மக்களோ தங்கள் செய்கைகளால் தாங்களே மனம் நொந்து,*
*“சன்னியாசியே ! நாங்க இவ்வளவு அவமானப் படுத்தியும் நீங்கள் அமைதியாக அல்லவா இருக்கிறீர் !” அமைதியாக மட்டுமா ! ஆனந்தமாக அதெப்படி ?*
*அதற்கு புத்தர் சொன்னார்.,*
*“நான் இங்கு வருவதற்கு முன்னர் வேறொரு ஊருக்குச் சென்றேன். அங்கிருந்த மக்கள் ஆளுக்கு ஒரு இனிப்பு பொட்டலத்தை எனக்கு கொடுத்தனர்.*
*நான் இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தி பல காலங்கள் ஆகிவிட்டன.*
*அதனால் அவற்றை ஏற்கவில்லை.அப்படியென்றால் அவை யாருக்கு சொந்தம் ?” என்று வினவினார்.*
*"யார் யார் கொண்டு வந்தார்களோ அவர்களுக்குத்தான் சொந்தம்” என்றனர் மக்கள்.*
*“இப்போது நீங்கள் செய்த அவமானங்களையும் நான் ஏற்கவில்லை. அப்படியென்றால் அவை யாருக்கு சொந்தம் ?” என்றார் புத்தர்.*
*“எங்களுக்குத்தான்” என்றார்கள் மக்கள்.*
*“சரி, நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்றார் புத்தர்.*
*உங்களின் உடந்தையில்லாமல் உங்களை யாரும் தாழ்த்திவிட முடியாது.*
*நீங்கள் தாழ்வாக இருப்பதாக உணர்ந்தால் அதை செய்தவர் நீங்களே.*
*ஆக இது போன்ற சூழ்நிலையிலே உங்களை உயர்த்திப் பிடிக்கிற ஒரே ஆள் உங்க மனம்தான்.*
*மற்றவர்கள் அவமானப்படுத்தும் போதும், கோபப்படுத்தும் போதும்,*
*அவசரப்படாதீர்கள்.*
*ஆத்திரப்படாதீர்கள்.*
*கொஞ்சம் நிதானத்தை கையிலெடுங்கள்.*
*உங்கள் மனதை தயார் படுத்துவதில்தான்.*
*உங்கள் வெற்றியே அமையும்.*
*🙏வாழ்க வளமுடன் !* 🙏