'' ஆழ்மனம்''..
இந்த உலகில் எதை நீங்கள் அடைய விரும்புகிறீர்களோ அல்லது எதை நிறைவேற்ற விரும்புகிறீர்களோ அதன் மீது மட்டுமே தங்களின் அதிகப்படியான கவனத்தைச் செலுத்துங்கள்.
தேவையற்ற எதிர்மறை எண்ணங்களை விதைத்து கொள்ளாதீர்கள்.
நீங்கள் பார்க்கின்ற, கேட்கின்ற, செய்கின்ற எல்லா செயல்களுக்கும் பின்னும் உங்களின் எண்ணம் ஒளிந்திருக்கிறது.
இதை நீங்கள் தினந்தோறும் பரிசோதனை செய்து கூடப் பார்க்கலாம். எடுத்துக்காட்டாக ஒரு கடிகாரத்தை வாங்க நினைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
உங்கள் ஆழ்மனதில் இதை நீங்கள் நினைத்தவுடன் நினைத்த நிமிடத்திலிருந்து அது உங்களைச் சேரும் வரை.,
உங்கள் ஆழ்மனது உங்களையும் கேட்காமலே, எங்கேயெல்லாம் கடிகாரத்தையோ, விளம்பரப் படத்தையோ அல்லது இணையதளத்திலோ உங்கள் ஆழ்மனம் அதை நோக்கிக் கவர்ந்து இழுத்துக் கொண்டே இருக்கும்.
ஒரு கட்டத்தில் நீங்கள் கண்ட அக்காட்சியும் எண்ணமும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் போது எந்தப் புள்ளியில் இவை இரண்டும் சந்தித்துக் கொள்கின்றனவோ அங்கே, அத்தருணத்தில் நீங்கள் அதை வாங்கி விடுவீர்கள்.
ஆனால் உண்மையில் நீங்கள் நாள் முழுவதும் கடிகாரத்தை மட்டும் பார்க்கவில்லை, மற்ற பொருட்களையும் சேர்த்தே தான் பார்த்திருப்பீர்கள்.
இதே போல தான் உங்கள் வெற்றியும்..எந்த இலக்கை நோக்கி எதை வேண்டுகிறீர்களோ அதை எந்த அளவிற்கு அதை உங்கள் ஆழ்மனதிற்கு புரிய வைக்கிறீர்களோ அதைப் பொறுத்துத் தான் உங்களது வெற்றி தீர்மானிக்கப்படுகிறது.
ஆம்.,நண்பர்களே..,
தெளிவான சிந்தனையோடு, தீர்க்கமான முடிவுகளோடு ஆழ்மனதின் அனுமதியோடு, வெற்றியை நோக்கி நல்ல எண்ணங்களுடன் நீங்கள் பயணித்துக் கொண்டே இருக்கலாம்.
வெற்றி உங்களை வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.