*#கேள்வி*
மனிதர்கள் ஏன் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள்?
*#ஓஷோபதில்*
அது ஒரு அடிப்படைச் சிக்கல்.
அதன் அடிப்படையைக் காண மாபெரும் உளவியல் அறிஞர்களாலும் முடியவில்லை.
கொடுக்க யாரும் விரும்புவதில்லை.
எல்லோரும் பெற்றுக் கொள்ளவே விரும்புகிறார்கள்.
அதன் மனோதத்துவம் எளிமையானது.
நீங்கள் காலியாக இருக்கிறீர்கள்..
உங்கள் உள்ளே அன்பு இல்லாமல் மொத்த இடமும் காலியாக இருக்கிறது.
அதில் எதையாவது போட்டு நிரப்ப பார்க்கிறீர்கள்.
யாராவது ஏதாவது கொடுக்க மாட்டார்களா என எப்போதும் எதிர் பார்த்து இருக்கிறீர்கள்.
உங்கள் உள்ளே உள்ள காலி இடமோ மிகப் பெரியது.
பணம்,அதிகாரம்,பெருமை,மரியாதை இவை எவற்றாலும் உங்கள் காலியிடத்தை நிரப்ப முடியாது.
இவை எல்லாம் கிடைத்து விட்டாலும் வெறுமையைத் தான் உணர்வீர்கள்.
அப்புறம்,என் வாழ்வே வீண் என்று கவலைப் படுவீர்கள்.
வெறுமையே கருமித்தனத்தை உருவாக்குகிறது.
பொங்கும் அன்பு வெள்ளமே அதனை அடித்துச் செல்லக்கூடியது.
நீங்கள் அன்பினால் நிறைந்து வழியும்போது கருமித்தனம் நில்லாது.
*#ஓஷோ*