Friday 28 January 2022

இரசவாதம்

ரசவாதம் என்பது ஓர்விஞ்ஞானம் அல்ல,
 அப்புறம் மாயாஜாலம்மா இல்ல, 
 தத்துவமா இல்ல.  

இது தெளிவற்றது ஆனால் முறையானது

அப்புறம் இது என்னதான் இரசவாதம்
இது எல்லாவற்றின் கலவையாகும்

இது குறியீடுகள் மற்றும் உருவகங்களால் நிறைந்துள்ளது, மேலும் அதன் குறியீடு சிக்கலானது ஆனா மிகப்பெரிய இரகசியத்தை உள்ளடக்கியது இந்த இரசவாதம்.

*பண்டைய ரசவாதிகளின் சின்னம் கடவுள் ஆண் மற்றும் பெண் சக்திகளின் கலவை மற்றும் சமநிலை, ஒளி மற்றும் இருள், ஈரப்பதம் மற்றும் வறட்சி*

இயற்கையானது சூரியனின் வெப்பத்தால் மனிதனை உருவாக்குகிறது என்று கூறுகிறது இரசவாதம்,

ரசவாதக் குறியீடானது மிகவும் குழப்பமானது  ஆனால் சரியான முறையில்  கையாண்ட முதல் இரசவாதிக்கு தான் தெரியும் அதன் உண்மை தன்மை

சரி தத்துவம் பேசுறவங்க என்ன சொல்லுறாங்க இந்த இரசவாதம் பத்தி
புத்தகத்தில் என்ன தான் சொல்லி இருக்காங்க

இந்த உலகத்தின் முடிவில், வானமும் பூமியும் சந்தித்து கொள்ள வேண்டும் இது உண்மையில் அவசியம் என கூறுவார்கள் - ஹெர்ம்ஸ் டிரிஸ்மெஜிஸ்டஸ்


சூரியனும் மனிதனும் ஒரு மனிதனை உருவாக்குகிறார்கள், ஏனென்றால் சூரியனின் சக்தியும் ஆவியும் உயிர் கொடுக்கின்றன சூரியனின் வெப்பத்தின் மூலம் இந்த செயல்முறை ஏழு முறை கடந்து செல்ல வேண்டும்.  - அரிஸ்டாட்டில்

வெப்பம் அவசியம், ஏனென்றால் அதன் சக்தியின் மூலம் பூமி இருளில் இருந்து விடுபட்டு அதற்கு பதிலாக ஒளியால் ஆசீர்வதிக்கப்படுகிறது.
 - டிரிஸ்மோசின்

 பூமியிலிருந்து எழுகிறது  வானத்திலிருந்து இறங்குகிறது;  அது மேலே உள்ளவற்றின் வலிமையையும் கீழே உள்ளவற்றின் வலிமையையும் தன்னகத்தே சேகரிக்கிறது.  - எமரால்டு டேபலட்

பூமியில் இவ்வாறு வெப்பத்துடன் கலந்துள்ள அனைத்தும் நிலவின் குளிர்ச்சியால் மாற்றியமைக்கப்படும்.  - டிரிஸ்மோசின்

 சரி இந்த  ரசவாதம் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது இந்த வெப்பத்துடன் நம் உலகில் 

இந்த வெப்பம் பூமியில் இருக்குற அனைத்து உயிர்களுடன் ஒட்டி உறவாடும் எப்போதும் ஒர் உயிர் முதல் பல்லுயிர் வரை

ஆனால இந்த வெப்பத்தை சரியா கையாளத் தெரியத உயிர்களுக்கு இந்த வெப்பம் எதிரியா தெரியும் கடைசில கருப்பாகி அழுகி தன்னை விடுவித்து வேறு பரிணாமத்தை நோக்கி நகர்திடும்
ஆனால்

இரசவாதிகள் மத்தியில் இந்த வெப்பத்தின் கலவை வேறுபட்டது

இந்த அளவு வெப்பம் இதுக்கு போதும் உதரணமா தங்கத்தை உருக்கிறது , சமையல் பண்ணுறது. காய்ச்சுறது. போன்றவற்றில் வெப்பத்தின் தன்மை மாறும்

ரசவாத செயல்முறையின் முடிவில் இரசவாதி என்ன பண்ணுவார்னா தான் கண்டுபிடித்த வெப்பத்தின் அளவை தத்துவமா கல்லில் குறியீடாக வரைவார் 

இப்படி தான் குறியிடுகள் கல்லில் சொல்லப்பட்டது இரசவாதிகள் மூலம் நமக்கு

சரி நம்ம உடம்ப பத்தி இரசவாதிகள் என்ன தான் சொல்லி வைச்சாங்க அந்த காலம் முதல் இந்த காலம் வரை

மனிச உடம்புல முக்கியமானது கண்ணும் காதும்

இது மனிதனின் உணர்வு உறுப்புகளாகும்

இந்த ரெண்டும் சரியா கையாளப்பட்டால் தனக்குள் மேன்படுவான்

 இதன் மூலம் மனிதனின் ஆன்மா மற்றும் ஆன்மீக உலகங்கள் அவனுக்கு திறக்கப்படுகின்றனவாம்

சரி இந்த கன்னும் காதும் இல்லாத  உடல் உயிர்களுக்கு உலகம் எப்போதும் இருண்டு மௌனமாக இருக்குமாம்

 இவ்வுலகங்கள் அவைகளுக்கு இருளாகவும் மௌனமாகவும்தான் எப்போதும் காட்சி அளித்து கொண்டு இருக்கின்றன இன்றளவும்

நாம் வாழும் உலகங்கள்  சாதாரண சூழ்நிலையில் நமக்கு எதுவும் தெரியாது
பார்த்து கொள்ளும்

நமக்கு அப்பாற்பட்ட உலகங்களை, நாம் அணுக முடியாத உலகங்களை நமக்கு அறிமுகப்படுத்த அவைகள்  விரும்பவில்லை

ஆனா இரசவாதி இந்த உலகத்தில் எப்படி தன்னை மேம்படுத்த என்னுனார்கள்னா மனித இயக்கத்தின் பணியானது, ஒவ்வொரு நாளும் மற்றும் ஒவ்வொரு மணிநேரமும் நம்மைச் சுற்றியுள்ள உலகங்களை நமக்குத் தெரியப்படுத்துவதாகும் அதை தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுனாங்க

சாதரண மனிதன் தன் உலகத்தில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தும் உலகங்களை அறிய விரும்பினான்.

ஆனா இரசவாதி இந்த உயர்ந்த உலகங்களை உணரும் உறுப்புகளைத் திறக்கும்செயல்களில் பங்கேற்க முயன்றான்

அதனால தான் உயர்ந்த உலகங்களை அவர்களே பார்த்து இரசிக்கும் திறனை  பெற முடிந்தது அவர்களால்.