Friday, 27 August 2021

கத்திரிக்கோல்

*''கத்திரிக்கோல் வேண்டாமே...!*
......................................................... 

ஆயக்கலைகள் அறுபத்து நான்கு பற்றி கேள்வி பட்டு இருக்கிறோம். கற்றிருந்தாலும் கைவிடப்பட வேண்டிய கலை ஒன்று இருக்கிறது தெரியுமா...?
அதுதான் ''கத்தரிக்கோல் கலை.'' 

இயல்பாகவே சிலருக்கு இது கைவந்த கலையாக இருக்கும். இக்கலை வல்லுனர்களை எளிதில் இனம் காணலாம். 

அவர்கள் வேலை ஆகும்வரை வளைந்து நெளிந்து குழைந்து பேசுதல்;, அடிக்கடி தொலைப்பேசியில் அழைத்து நலம் விசாரித்தல், நம்மைப் பாராட்டி நம்மிடமே அளப்பு அரிப்பார்கள்... 

அவர்கள் வேலை முடிந்ததும் காணாமல் போய் விடுவார்கள்... 

நாம் வலியப்போய் பேசினாலும், 
"எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருக்கிறது, நாளைக்கு பேசலாமா..?"என்று நழுவி சென்று விடுவார்கள்.... 

இப்படிபட்ட கத்திரிக்கோல் கலைஞர்களை நாம்தான் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்... 

"ஏதோ!, ஒரு உதவி செய்து விட்டார் என்று, திரும்பத் திரும்ப நாமே அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எப்படி இவர் எதிர்பார்க்கலாம்.?" 

அதற்காக இப்போது என்னுடைய மரியாதைக்கு இவரிடம் இப்போது நான் தொடர்பு வைத்து கொள்ள முடியுமா.? 

இப்படி எண்ணி எண்ணி அத்தகைய நட்பும், உறவும் இனி தேவையில்லை என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள்... 

நீங்களும் இந்த வகை கலைஞரில் ஒருவரா...? அப்படி என்றால் உங்களுக்கு சில வார்த்தைகள்: 

எவரையும் குறைத்து மதிப்பு இடாதீர்கள். இவரால் நமக்கு இனி ஆக வேண்டியது ஒன்றுமில்லை என யாரையும் எடை போட வேண்டாம்...
யார் உதவி!, எப்போது தேவைப்படும் என்பது இப்போது தெரியாது... 

சிறு உதவி செய்ததற்கே நீங்கள் நன்றி உள்ளவராக இருக்கும்போது மேலும் பெரிய உதவிகளை அவராக முன்வந்து செய்யக்கூடும்தானே...! 

அவருக்கு பெரிய மனம் இருந்ததால்தானே உங்கள் வேலையை வெற்றிகரமாக அவர் மூலம் சாதித்து இருக்கிறீர்கள்...! 

நீங்கள் கத்தரிக்க நினைப்பதை புரிந்து கொண்டால், அவர் முந்திக் கொள்வதுடன் நன்றி கெட்டவர் என்கிற பட்டத்தையும் உங்களுக்குத் தருவார்... 

பிறகு, நீங்கள் வலியப் போனாலும் அவர் மனதில் நீங்கள் செல்லாக்காசு ஆகிவிடுவீர்கள்தானே...! 

சின்னஞ்சிறு உதவி செய்தவரைக்கூட மறக்காதீர்கள். எதையும் சிறிது என மதிப்பு இடாதீர்கள். சில  நேரங்களில் சின்னச் சின்ன உதவிகள்தான் நமக்கு தேவையாக இருக்கும்... 

பணக்காரர் இல்லையே என ஏளனமாக நினைக்க வேண்டாம். ஆபத்து காலத்தில் உதவி செய்யாத செல்வந்தர்களைக் காட்டிலும் கையில் இருந்ததை அப்படியே கொடுத்து உதவிய ஏழை நண்பனே மேல்... 

*ஆம் நண்பர்களே...!* 

🟡 *கத்தரிக்கோல் கைவசம் வைத்திருப்பவர்களுக்கு அன்பான நண்பர்களோ!, உறவினர்களோ!, இருக்க மாட்டார்கள்...!* 

🔴 *"இவரைத் தெரியாதா...? இவர் தன் வேலையாகும்வரை காலைச் சுத்தி வருவார். வேலை ஆனதும் காலை வாருவார்" என்று நிச்சயம் உங்களைப் பற்றி அவர்கள் மத்தியில் ஒரு பேச்சிருக்கும்...!!* 

⚫ *உங்களால் கத்தரிக்கப்பட்டவர்கள் உங்களைப் பற்றி அவதூறாக தமக்குள் மட்டுமல்ல, உறவினர், நண்பர்களிடமும் பரப்புரை செய்வார்கள். மொத்தத்தில் அதனால் உங்கள் குடும்பத்தினரும் மரியாதை இழக்க நேரிடும்...!!!* 

🔘 _*எனவே!, எரையும் எந்த காலத்திலும், எக்காரணம் கொண்டும் கத்தரித்து விடாதீர்கள்.*_ 

*- வாழ்க வளமுடன்.*✒️

Monday, 14 June 2021

எஜமானர்

 
உங்கள் வாழ்க்கையின் எஜமானர் யார்❓❓

இந்த வாழ்கை எவ்வளவு வித்தியாசமானது. ஒவ்வொரு நாளும் எதாவது ஒரு விசயத்தை நமக்குச் சொல்லிக் கொடுத்துக்கிட்டே தான் இருக்கு. வாழ்க்கை என்பது எப்போதும் சந்தோசம் நெறஞ்சது இல்லை, இன்பமும், துன்பமும் கலந்து இருப்பது தான் வாழ்க்கை. 

ஒரு விசயத்தை நாம தெளிவா புரிஞ்சுக்கணும், நம்ம வாழ்க்கையில் நடக்கிறது எல்லாமே ஒரு நிகழ்வுகள் தான், அது சந்தோசமா இல்லை கஷ்டமானதா என்பது நம்மளும் நம்மளைச் சுற்றி இருக்கிறவங்களும் ஏற்படுத்துற ஒரு தோற்றம்.

உங்க வீட்டிலேயோ இல்லை பக்கத்து வீட்டிலேயோ சின்ன பையனோ பொண்ணோ இருந்தா ஒரு அரை மணி நேரம் அமைதியாக உட்கார்ந்து அந்த பையன் என்ன என்ன பண்ணிட்டு இருக்கான்னு பாருங்க. விளையாடுவான், கீழ விழுவான் அப்புறம் அவனே எழுந்திருச்சிடுவான், அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவான்.

எதாவது ஒரு நிகழ்ச்சியை நினைத்து அவனே சிரிச்சுக்குவான், எத்தனை முறை விழுந்தாலும் சாதாரணமா எழுந்து போயிடுவான். எந்த நேரமும் துறு துறுன்னு எதாவது ஒரு வேலையைப் பார்த்துக்கிட்டே இருப்பாங்க, ரொம்ப ஆச்சரியமான விசயமாக இருக்கும் . #மகரயாழ் எப்படி இந்த சின்ன பசங்களாலே ஏதாவது ஒரு வேலையை பண்ணிக்கிட்டே இருக்க முடியுது.

கீழே விழுவதும் பின்னர் எழுவதும் ஒரு சாதாரண நிகழ்வுதான், நீங்களும் நானும் ஒவ்வொரு மனிதரும் கீழே விழுந்து பின்னர் எழுந்திரிக்கிறோம் . ஆனால் , பெரியவர்கள் ஆன பின்பு பின்னர் ஒரு சின்ன தோல்வியை நம்மால் தாங்க முடியவில்லை .சின்ன தோல்வியிலே இருந்து எழுந்திருக்க முடியாம அழுது புலம்பிக்கிட்டு இருக்கோம்.

குழந்தைகளுக்குத் தோல்வியைப்பற்றி சொல்லி கொடுங்க, வாழ்க்கையிலே ஜெயிக்கிறது எப்படியோ, அப்படித்தான் தோல்வியை சந்திக்கிறதும். வெற்றியோ தோல்வியோ அது ஒரு சாதாரண நிகழ்வுகள் என்று சொல்லிக் கொடுங்க.

எந்த ஒரு தோல்வியிலே இருந்தும் உங்களால் மீண்டு வர முடியும், உங்க மனசுக்குச் சொல்லுங்க இது ஒரு சாதாரண நிகழ்வுதான் , என்னாலே மீண்டும் மீண்டும் எழுந்து வெற்றியை அடைய முடியும். நீங்க மனசு வச்சா உங்களாலே முடியும், 

ஏன்னா இது உங்க வாழ்க்கை, "நீங்க தான் உங்க வாழ்க்கையுடைய எஜமான்".*


 

Thursday, 10 June 2021

தூக்கம்

தூங்குவதும் ஒரு வகை தியானமே:

வீட்டில் மின் விசிறி ஓடுகிறது.
தொலைகாட்சி சத்தம் போடுகிறது.
ரேடியோ கத்துகிறது.

இந்த சத்தங்களை தவிர்த்து, வேறு பல வகையான சத்தங்களும் வெளியிலிருந்து கேட்கிறது.

இந்த சத்தங்களில், நாம் மிகவும் முக்கியமான ஒன்றை தொலைத்து விடுகிறோம்.

ஆம். நாம், நம்மை தொலைத்து விடுகிறோம்.

நாம் சத்தமான சூழலிலேயே வாழ்கிறோம் என்பதையே கவனிக்க தவறி விடுகிறோம்.

திடீரென, மின்சாரம் 'கட்' ஆகிவிடுகிறது.

மின்விசிறி ஓடவில்லை.
தொலைகாட்சி, ரேடியோ கத்தி உயிரை வாங்கவில்லை.

எல்லா வகை சத்தமும் நின்றுவிட்ட மாதிரி ஒரு சூழல்.

நன்கு கவனியுங்கள். இவ்வளவு நாள் நாம் கவானிக்காத ஒரு சத்தம், ஒரு புது வகை சத்தம் மெல்லிதாக கேட்கும்.

அந்த சத்தம் வெளிப் பொருளிலிருந்து வரவில்லை.

மாறாக, அது 'வெளியின்' சத்தம்.

நம் காதுக்கு ஒரு இரைச்சல் போல் கேட்கும்.

அந்த இறைச்சலையே கவனித்தால், அது பெருகும். 

அதில் ஒரு லயம் தோன்ற ஆரம்பிக்கும்.

மிகவும் இனிமையான இரைச்சல் அது.

இப்போதைக்கு அதை இரைச்சல் என்றே குறிப்பிடுகிறேன்.

இந்த இரைச்சலை பிடித்துக் கொள்ளுங்கள்.

தியானத்துக்கு இதுதான், பாதை.

தூக்கத்துக்கு இதுதான் தூக்க மருந்து.

ஒரு தடவை இந்த இரைச்சலை நன்கு அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

இரவில் தூங்கும் போது, மின் விசிறி ஓடினாலும் பரவாயில்லை. வேறு சின்ன - சின்ன சத்தங்கள் கேட்டாலும் பரவாயில்லை.

நன்கு கவனியுங்கள் இந்த இரைச்சலும் அங்கு இருக்கும்.

தெளிவாக கேட்கவில்லைஎன்றால், ஒரு பக்க காதை தலையணை மேல் மூடும்படி வையுங்கள். 

இரைச்சல் கேட்கும்.

இன்னும் தெளிவாக கேட்க வேண்டுமென்றால், இரண்டு காதுகளையும் மூடுங்கள்.

படுக்கையில் படுத்தபடி, அந்த இரைச்சலையே கவனியுங்கள்.

நன்கு தூங்கி விடுவீர்கள். 

எப்பொழுது தூக்கம் வந்தது என்றே தெரியாது.

நல்ல ஆழ்ந்த தூக்கம் வந்து விடும்.

சரி, இங்கு என்னத்தான் நடக்கிறது?

அந்த இரைச்சல் சத்தத்தை கேட்கும்பொழுது, கவனிக்கும்பொழுது மனத்திற்கு வேலை குறைகிறது.

வேலை குறைவதை மனம் ஏற்காது. 

மனத்திற்கு எந்நேரமும் வேலை செய்தாக வேண்டும். 

இல்லாவிட்டால் அது செத்துவிடும்; நீங்கள் ஞானியாகி விடுவீர்கள்.

மனம் விடாது. நாம் இரைச்சலை கவனிக்கும்போது , தியானம் செய்கிறோம்.

விழித்திருந்தால்தானே நாம் தியானம் செய்ய முடியும்!

நாம் விழிப்பை முடிவுக்கு கொண்டுவர மனம் நம்மை தூங்க விடுகிறது. 

நாம் தூங்கிவிட்டால், கனவில் அது ஆட்டம் போடலாமே!

எல்லாமே நாம் மனத்தின் தந்திரம்.

இப்போதைக்கு மனத்தின் இந்த இயல்பை நாம், நாம் தூக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதில் ஒரு சிக்கல் உண்டு.

நாம் தூங்கும்போது, இந்த இரைச்சலையே கேட்டபடி தூங்கினால், நாம் நம்மை அறியாமல் தியானம் செய்கிறோம்.

தியான நிலையிலேயே தூங்குகிறோம்.

இவ்வாறு தூங்குவதால், உடலுக்கு போதிய ஓய்வு கிடைத்தவுடன் நாம் விழித்துக் கொள்வோம்.

இந்த வகை தூக்கத்தில் வரும் கனவுகள் மிகவும் ஆழத்திலிருந்து வருகின்றன. 

ஆரம்பத்தில் சற்று பயமாக இருந்தாலும், போகப் போகப் பழகி விடலாம். 

அவை வெறும் கனவுகள்தான்.

ஆனால், நாம் தியானத்திற்குள் நுழைய உதவும் கனவுகள் அவை. நம்மை பற்றி நாமே அறியாத பல விசயங்கள் இப்படி ஆழ்ந்த கனவு மூலம் வெளிப்படுகின்றன.

தியானம் செய்வது பிறகு இருக்கட்டும்.

முதலில் நன்றாக தூங்குவோம்.

புற சத்தங்கள் குறைந்தபின், நம் காதில் கேட்கும் அந்த இரைச்சலையே கேட்போம்.

ஆழ்ந்து தூங்குவோம்...

நிம்மதியாக தூங்குவோம்...

தூங்குவதும் ஒரு வகை தியானமே!

Sunday, 25 April 2021

பயம்


............................................................
*"பயம்...! பயம்...! பயம்...!"*
..............................................
நம்மை கோழையாக்குவதும் பயம்தான். நம்மை குற்றச் செயல்களில் இருந்து தற்காப்பதும் பயம்தான்...!

இரண்டு விதத்தில் பயம் ஏற்படும். ஒன்று ஆழ்மனதில் பதிந்துவிட்ட நிரந்தர பயம். மற்றொன்று, அவ்வப்போது ஏற்படும் மறைந்து விடும் தற்காலிக பயம்...

எதற்கெடுத்தாலும் பயப்படுபவராக இருப்பவர்கள். அதுவே அவரை மனநலம் குன்றியவராக ஆக்கிவிடும்...

சிறுவயதில், நம்மை அடக்க அல்லது கீழ்ப்படிய வைக்க “பூச்சாண்டி’ காட்டுவது நடைமுறை வழக்கம் என்றாலும், அதுவும் ஒருவகையில் மனதளவில் நம்மை பாதிக்க வைக்கும் செயல்தான்...

பெரியவர்களான பிறகு சிலர் எதற்கெடுத்தாலும் பயப்படுவதற்கும் அச்சப்படுவதற்கும் அடிப்படைக் காரணமே அதுதான். இது வளர வளர பின்னாளில் மனோவியாதியாக மாறுவதற்கும் வாய்ப்புண்டு...

பயம் என்பது 'சுவற்றில் ஒட்டிய சுண்ணாம்பு போல', பலமாக தட்டினால் பட்டென்று விழுந்துவிடும் .அது போல துணிச்சலுடன் எதிர்கொண்டால் பயத்தையும் வெல்லலாம்...

மனதில் தோன்றும் பயத்தை தடுமாற்றமின்றி, தன்னம்பிக்கை துணை கொண்டு, மன உறுதியுடன் செயல்பட்டால் பயத்தை வெல்வது உறுதி...

பய உணர்வு ஏற்படும் நேரங்களில், பயம் நீங்கி தைரியம் பெறும் வகையில் மனத்தில் ஓடும் எண்ணத்தையும், சுற்றுப் புற சூழ்நிலைகளையும் சமயத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ள வேண்டும்...

*ஆம் நண்பர்களே...!*

*பயத்தை எப்படி வெற்றி கொள்வது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். வீணான அச்சத்திற்கு ஒருபோதும் இடம் தராதீர்கள்...!*

*கவலையும், அச்சமும்தான் ஒரு மனிதனை முன்னேறவிடாமல் கீழே பிடித்துத் தள்ளுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்...!!*

*மொத்தத்தில் எப்படியாவது பயம் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன் பயத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். முடிவில் பயம் அர்த்தமற்றது என்பதை நீங்கள் கண்டிப்பாக உணர்வீர்கள்...!!!*

Thursday, 8 April 2021

பதவி

*பெற்றோர்களை நம்பியிருக்கும் வரை அவர்கள் மேல் அன்பாக இருக்கும் பிள்ளைகள் வளர்ந்தபின் அவர்களை கண்டுகொள்வது இல்லை.*

*பதவியில் இருந்து ஓய்வு பெற்ற கலெக்டர் தன் பழைய அலுவலகத்துக்கு வந்தால் அவருக்கு பழைய மதிப்பு, மரியாதை கிடைக்காது.*

*இளவரசர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு கனடா போனார் இளவரசர் ஹாரி...அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை. அமெரிக்காவுக்கு போனார். "பாதுகாப்பு எல்லாம் கொடுக்கமுடியாது. காசு கொடுத்தால் கொடுக்கலாம்" என கைவிரித்தது அமெரிக்க அரசு. க்ரீன்கார்டுக்கு மனைவியின் குடியுரிமையை நம்பி இருக்கும் நிலை...*

*ஒரு பழமொழி உன்டு..'கலெக்டர் வீட்டு நாய் செத்தால் பெரும்கூட்டம் கூடும். எல்லாரும் வந்து துக்கம் விசாரிப்பார்கள். ஆனால் கலெக்டரே செத்துவிட்டால் அங்கே யாரும் வரமாட்டார்கள்" என. அவரே போயாச்சு. இனி அங்கே போய் யாருக்கு என்ன நன்மை?* 

*நாம் ஒரு பதவி அல்லது பொறுப்பில் இருக்கும்வரை நமக்கு வரும் மரியாதைகளை ரொம்ப பர்சனலாக எடுத்து மகிழ்ச்சி அடையக்கூடாது. அவை நமக்கானவை அல்ல என்பது தெரிந்தால் அவை நம்மை விட்டு போனபின்னர் வருத்தப்படமாட்டோம்.*

*#செவன்_சாமுராய்....அகிரா குரொசாவாவின் வரலாற்று காவியமான திரைப்படம்.*

*ஒரு விவசாய கிராமம்...அதை கொள்ளையர்கள் தாக்கி கொள்ளை அடிக்கிரார்கள். கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற ஏழு சாமுராய் வீரர்களை நாடுகிறார்கள் கிராம மக்கள். அவர்களும் வந்து அத்தனை கொள்ளையரையும் கொன்று மக்களை காப்பாற்றுகிறார்கள். அந்த போரில் நாலு சாமுராய்கள் உயிரிழக்கிறார்கள். மூவர் மட்டுமே மிஞ்சுகிறார்கள்.*

*போர் முடிகிறது. அடுத்த நாள் காலை மிச்சமிருக்கும் மூன்று சாமுராய்களும் காலையில் எழுந்து வெளியே வருகிறார்கள்...விவசாயிகள் மகிழ்ச்சியுடன் காலையில் உணவை கட்டிக்கொன்டு வயலுக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஒருவரும் ஒரு நன்றி கூட சொல்லவில்லை. சிரிக்கவில்லை. அவர்கள் பாட்டுக்கு தம் இயல்புவாழ்க்கைக்கு மீண்டும் சென்றுவிடுகிறார்கள்.*

*தம் தேவை அவர்களுக்கு முடிந்தது என தெரிந்துகொண்ட சாமுராய்கள் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு பயணிக்கிறார்கள்....*

*#இதுதான்_உலகம்.*

*நாம் ஒரு பதவி அல்லது பொறுப்பில் இருக்கும்வரை நமக்கு வரும் மரியாதைகளை ரொம்ப பர்சனலாக எடுத்து மகிழ்ச்சி அடையக்கூடாது. அவை நமக்கானவை அல்ல என்பது தெரிந்தால் அவை நம்மை விட்டு போனபின்னர் வருத்தப்படமாட்டோம்.*

*இதனை உணந்தால் நமக்கு பின்னாளில் அதிர்ச்சிகள் என்பது இருக்காது.*

*#வாழ்த்துக்கள்.*

*#வாழ்க_வளமுடன்.*

Tuesday, 30 March 2021

ஒநாய்

நன்றி 🙏(  பகிரப்பட்டது)

🐺ஒரு பிரியாணி விருந்தில்கலந்து கொள்கின்றோம்.

🐺முதலில் அனைவருக்கும் சிக்கன் ப்ரை இரண்டு இரண்டு துண்டுகளை இலையில் வைக்கிறார்கள். 

🥺உங்கள் இலைக்கு வரும் போது வைப்பவர் ஏதோ நினைவில் வேகமாக மிகச்சிறிய துண்டுகளை வைத்து போகிறார். 

😦”நீங்கள் தம்பி இன்னொன்னு வை” என்று சொல்லும் போதே அவர் அவசரத்தில் அந்த இடத்தை விட்டு விலகி வேறு வேலைக்கு போகிறார். 

அதன் பிறகு வரும் பிரியாணியை நீங்கள். 

1. சுவைத்து சாப்பிடுவீர்களா ?
2. சுவைக்காமல் சாப்பிடுவீர்களா ? 

சுவைத்து சாப்பிட்டால் நீங்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கையை அர்த்தமாக வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். 

உங்களுக்குள் இருக்கும் சிகப்பு ஒநாயை புறக்கணித்து நீல ஒநாய்க்கு தீனி போட்டு வளர்க்கிறீர்கள் என்று அர்த்தம்.

சுவைக்காமல் ஏதோ அவமானம் நடந்து விட்டது மாதிரி சாப்பிட்டால் நீங்கள் வாழ்க்கையை வீணடித்து மற்றவர்களையும் கஷ்டப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்குள் இருக்கும் சிகப்பு ஒநாய்க்கு தீனி போட்டு எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஒருவருடைய மிக மோசமான செயலால் இன்னொருவர் பாதிக்கப்பட்டிருப்பார். 

பாதிக்கப்பட்டவர் என்னிடம் பேசும் போது “அவன் புத்திக்கெல்லாம் நல்லா நாசமா போவான் பாரு” என்று சாபமிடுவது மாதிரி பேசினால் ஒருமாதிரி ஆகிவிடுவேன்.

“ச்சே ஏன் அப்படி சொல்றீங்க. விடுங்க. அப்படி சொல்லாதீங்க” என்பேன். இப்படி சொல்லாமல் என்னால் இருக்கவே முடியாது. 

இது அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்டது என்று நினைப்பேன். 

அப்பா யாரையும் வெறுத்து பார்த்ததே கிடையாது. 

ஒருமுறை அவசரமான பணத்தேவைக்கு அப்பா அம்மாவின் 12 சவரன் நகையை ஒருவரிடம் அடமானம் வைத்தார். 

அவர் அவசரத்தை பயன்படுத்திக் கொண்டு கொஞ்சம் பணமே கொடுத்தார். பின்னர் அப்பா நகையை மீட்க போன போதெல்லாம் பார்ப்பதை தவிர்த்தார். 

ஆறுமாதங்கள் பிறகு அவருடைய அவசரத்தேவைக்கு இன்னொருவரிடம் அடமானம் வைத்து விட்டதாக சொன்னார். 

பல வருடங்கள் அலைந்தாலும் அப்பாவுக்கு அவர் நகையை கொடுக்கவே இல்லை. 

நினைத்திருந்தால் நாலு ஆட்களை திரட்டி சென்று கேட்டிருக்கலாம். ஆனால் அப்பா அதை நினைத்துக் கூட பார்க்கவில்லை. 

வீட்டில் அம்மா அழுத்தம் கொடுக்கும் போதும் ”பார்ப்போம் பார்ப்போம் தந்திருவாரு” என்றுதான் சொல்லி பார்த்திருக்கிறேனே தவிர அவன் நாசமாய் போவான். நல்லாயிருக்க மாட்டான். பாம்பு கொத்தும் ரீதியில் பேசி பார்த்ததே கிடையாது. 

நாங்கள் மித மிஞ்சிய பணக்கஷ்டத்தில் இருக்கும் போது கூட அப்பா தூங்குவதை கவனிப்பேன். 

மிக நிம்மதியாக தூங்கி எழுவார்.

அவ்வப்போது உடனுக்குடன் பிறரை மன்னிப்பவர்களால் மட்டுமே அப்படி தூங்கமுடியும்.

இது அமெரிக்க பழங்குடியின கதையின்படி

ஒவ்வொரு மனதிலும் இரண்டு ஒநாய்கள் இருக்கிறதாம். இரண்டுக்கும் சண்டை நடக்கும். எப்போதும் ஒரு மோதல் இருந்து கொண்டே இருக்குமாம். 

சிகப்பு ஒநாய் பொறாமை, கோபம். வெறுப்பு, ஆதிக்கம் என்று இருக்கிறது. 

நீல ஒநாயோ அன்பு, அருள், சகோதரத்துவம், மன்னித்தல் என்று இருக்கிறது. இந்த இரண்டு ஒநாய்களும் ஒன்றுக்கொன்று நம் மனதில் மோதிக் கொண்டே இருக்கின்றன.

இவை இரண்டில் எந்த ஒநாய் வெல்லும் ? நாம் எந்த ஒநாய்க்கு தீனி போடுகிறோமோ அதுவே வெல்லும். 

தப்பு சரி, நியாயம் அநியாயம் தாண்டி ஏதோ ஒருவிதத்தில் அதிக வெறுப்பு, பொறாமை, எரிச்சல் கொண்டிருக்கும் போது நாமும் அந்த சிகப்பு ஒநாயாகவே மாறிவிடுவோம். 

அப்படி மாறும் போது வாழ்க்கையில் நிம்மதியே இல்லாமல் போய்விடும். 

ஒன்றுமில்லை ஒரு விழாவுக்கு போகும் போது உங்கள் மனநிலையை கவனித்துப் பாருங்கள். 

நீங்கள் சிகப்பு ஒநாய்க்கு தீனி போடுகிறீர்களா? 
அல்லது நீல ஒநாய்க்கு தீனி போடுகிறீர்களா? என்பதை கண்டுகொள்ள முடியும்.

- என்னை கண்டுகொள்ளவில்லை

- சாப்பாடு நல்லாயில்லை

- ரொம்பத்தான் ஒவரா ஸீன் போடுறாங்க

- நான் விழா எடுக்கும் போது இத விட நல்லா செய்து காட்டுறேன் பாரு.

- நீயா வந்து பேசினா நா பேசுவேன். இல்லன்னா பேச மாட்டேன்.

இப்படி எல்லாம் சிகப்பு ஒநாய்க்கு தீனி போடுபவர்களும் உண்டு.

- எல்லாரும் எவ்ளோ மகிழ்ச்சியா இருக்கங்க ( ரசனை)

- சாப்பாடு அருமை

- விழா கொண்டாட்டம் அருமை

- நாம விழா எடுக்கும் போதும் இப்படி எல்லாரையும் ஹேப்பியா வைச்சிக்கனும்

- அவுங்க தெரியாம இருக்காங்க போல இருக்கு. நாம போய் பேசுவோம்.

இப்படி எல்லாம் நீல நிற ஒநாய்க்கு தீனி போடுபவர்களும் உண்டு.

சிகப்பு ஒநாய்க்கு தீனி போடுபவர்களுக்கு எவ்வளவு புகழ், பணம், பதவி வந்தாலும் வாழ்க்கை துன்பமாகவே இருக்கும்.

நீல நிற ஒநாய்க்கு தீனி போடுபவர்கள் எந்த சூழலிலும் மகிழ்ச்சியாக மன நிம்மதியாக இருப்பார்கள்.

வீட்டில் வளரும் சிறார்களிடம் இந்த இரண்டு ஒநாய்கள் பற்றியும் அடிக்கடி பேசிக் கொண்டிருங்கள்.

ஒருவேளை மாற்றங்கள் நிகழலாம். அவர்கள் மன ஆரோக்கியத்தோடு வளர வாய்ப்பு அதிகமுண்டு.

உங்களுக்குள் இருக்கும் சிகப்பு ஒநாயையும் நீல ஒநாயையும் கண்காணித்து கொண்டே இருங்கள்.

Sunday, 14 February 2021

இந்த நொடி

 ஜென் கதை 

நான் நல்லா வாழ்ந்தேன்னு ஒருத்தன் சொல்றான்னா 

அவனோட வயசு என்ன?’ என்று கேட்டார் புத்தர்

அவரது சீடர்கள் யோசித்தார்கள்

‘என்ன கேட்கறீங்க...??? 

சரியாப் புரியலையே'

‘ஒரு நல்ல வாழ்க்கையோட ஆயுள் காலம் என்ன...???

நூறு வயசு..???’ என்றார் ஒரு சிஷ்யர்

ம்ஹூம். இல்லை!’ என்று உடனே மறுத்துவிட்டார் புத்தர்

அப்படீன்னா...??? 90 வயசு...???

அதுவும் இல்லை

80..??? 70..??? 60..??? இப்படிச் சீடர்கள் வரிசையாகப் பல விடைகளைச் சொல்ல

புத்தர் எதையும் ஏற்கவில்லை 

கடைசியாகப் பொறுமையிழந்த அவர்கள் ‘நீங்களே சொல்லுங்க’ என்று அவரிடம் வேண்டிக்கொண்டார்கள்

"ஒரு நல்ல வாழ்க்கை-ங்கறது ஒரு விநாடிப் பொழுதுதான்" என்றார் புத்தர்

‘என்ன சொல்றீங்க குருவே..??? 

ஒரு விநாடியில என்ன பெரிசாச் செஞ்சுடமுடியும்...??? 

குறைந்தபட்சம் முப்பது, நாற்பது வருஷமாவது வாழ்ந்தால்தானே மனுஷ வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருக்கும்..???’

அப்படியில்லை

ஒவ்வொரு விநாடியையும், அதுதான் உங்களுடைய வாழ்க்கையின் தொடக்கம் என்று நினைத்து அனுபவிக்கவேண்டும்

பழையதை நினைத்துக் கவலைப்படக்கூடாது 

கடந்தகாலத்தில் வாழக்கூடாது

அதேநேரம், அந்த ஒரே விநாடியை உங்களுடைய வாழ்க்கையின் முடிவு என்றும் நினைத்துக்கொள்ளவேண்டும்

எதிர்காலக் கற்பனைகளில், 
எதிர்பார்ப்புகளில் அந்த விநாடியை வீணடிக்கக்கூடாது

சுருக்கமாகச் சொன்னால்

நாம் ஒவ்வொரு விநாடியும் புதுசாகப் பிறக்கிறோம்

அதை முழுமையாக அனுபவிக்கிறோம்

அதுதான் நல்ல வாழ்க்கை.