🌻புத்துணர்ச்சி பெற. ...கவலைகள் நீங்க 🌻
💥1.உங்களுக்கு நீங்களே இவ்வாறு கூறிக் கொள்ளுங்கள்.💥
🌿, ‘கவலை என்பது வெறும் மனப்பழக்கம்தான்.
🌿பிரபஞ்சத்தின் உதவியுடன் எந்தப் பழக்கத்தையும் என்னால் மாற்ற முடியும்’.
💥2.கவலையைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீங்கள் கவலையாளர் ஆகிவிடுகிறீர்கள்💥
. 🌿கவலைக்கு நேரெதிரான, வலிமையான, நம்பிக்கை என்னும் பழக்கத்தைக் கடைப் பிடிப்பதன் மூலம் உங்களால் கவலையில் இருந்து விடுபட முடியும்.
💥3.உங்களால் திரட்டக் கூடிய விசுவாசத்தைக் கடைப்பிடிக்கத் துவங்குங்கள்.💥
🌿விசுவாசம் என்னும் பழக்கத்தை எவ்வாறு உருவாக்குவது?
🌿தினமும் படுக்கையைவிட்டு எழுவதற்கு முன் முதல் வேலையாக
🌿‘நான் நம்புகிறேன்’ என்று உரக்க மூன்று முறை கூறுங்கள்.
💥4. இந்தச் சூத்திரத்தைக் கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள். 💥
🌿நான் இன்றைய தினத்தையும், என் வாழ்க்கையையும், என் அன்பிற்கு உரியவர்களையும், என் வேலையையும் பிரபஞ்சத்தின் கைகளில் ஒப்படைக்கிறேன்.
🌿பிரபஞ்சத்தின் கைகளில் எந்தத் தீங்கும் இல்லை.
🌿நல்லது மட்டுமே உள்ளது.
🌿எது நிகழ்ந்தாலும் சரி,
🌿எந்த கைகளில் இருந்தால்,
🌿அது இயற்கையின் விருப்பம்.
🌿அது நல்லதாகவே இருக்கும்.
💥5.நேர் மறையாகப் பேசுவதற்குப் பயிற்சி செய்யுங்கள்.💥
🌿 ’இன்று மிக மோசமான நாளாக இருக்கப் போகிறது’ என்று கூறாதீர்கள்
. 🌿மாறாக ‘இன்று ஓர் அற்புதமான நாளாக அமையப் போகிறது’ என்று சுய பிரகடனம் செய்யுங்கள்,’
🌿என்னால் ஒருபோதும் அதைச் செய்ய முடியாது’ என்று கூறாதீர்கள்.
🌿மாறாக’இயற்கை சக்தியின் உதவியுடன் நான் அதைச் செய்வேன்’என்று சுயபிரகடனம் செய்யுங்கள்.
💥6.’கவலை பற்றிய உரையாடலில் ஒருபோதும் கலந்து கொள்ளாதீர்கள்💥.
🌿 அனைத்து உரையாடல்களிலும் நம்பிக்கையைப் புகுத்துங்கள்.
🌿மோசமான விஷயங்களுக்கு மாறாக உற்சாகமூட்டும் விஷயங்களைப் பற்றி பேசுவதன் மூலம் மனச்சோர்வூட்டும் சூழலை விரட்டி விட்டு, அனைவரும் நம்பிக்கை யையும் மகிழ்ச்சியையும் உணர உங்களால் உதவ முடியும்.
💥7. கவலையாளராக இருப்பதற்கு ஒரு காரணம்,
மனம் பய எண்ணங்களாலும், தோல்வி எண்ணங் களாலும், சோர்வூட்டும் எண்ணங்களாலும் நிரம்பி வழிவதுதான். 💥
🌿அதை முறிப்பதற்கு, நம்பிக்கை, மகிழ்ச்சி, புகழ், பொலிவு ஆகியவற்றைப் பற்றிய பகுதிகளைக் குறித்துக் கொள்ளுங்கள்.
🌿 ஒவ்வொன்றையும் மனப்பாடம் செய்து மனத்தில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
🌿அவற்றை மீண்டும் மீண்டும் கூறி வாருங்கள். அப்போது, நீங்கள் உங்கள் ஆழ் மனத்திற்குக் கொடுத்துள்ள தன்னம்பிக்கையை உங்கள் ஆழ்மனம் உங்களுக்குத் திருப்பிக் கொடுக்கும்.
💥8.நம்பிக்கையான மக்களிடம் நட்புறவை வளர்த்துக் கொள்ளுங்கள்💥.
🌿நேர்மறையான, விசுவாசத்தை உருவாக்கும் எண்ணங்களைச் சிந்திக்கும் படைப்புச் சூழல் உருவாவதற்குப் பங்களிக்கும் நண்பர்களை உங்களைச் சுற்றி வைத்துக் கொள்ளுங்கள்
🌿இது நம்பிக்கை மனப்போக்கை மீண்டும் தூண்டும்.
💥9. தங்கள் சொந்தக் கவலைப் பழக்கத்தை விட்டொழிக்க 💥
🌿உங்களால் எத்தனை பேருக்கு உதவ முடியும் என்று பாருங்கள்.
🌿மற்றவர்கள் தங்கள் கவலைகளில் இருந்து மீள்வதற்கு நீங்கள் அதிக சக்தியைப் பெறுவீர்கள்.
💥10.உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும் கடவுளின் கூட்டாளியாகவும், நண்பனாகவும் வாழ்வதாகக் கற்பனை செய்யுங்கள். 💥
🌿கடவுள் உண்மையிலேயே உங்களோடு நடந்து வந்தால், நீங்கள் கவலைப்படுவீர்களா? பயப்படுவீர்களா?
🌿‘கடவுள் என்னோடு இருக்கிறார்’ என்று கூறுங்கள்.
🌿‘நான் எப்போதும் உன்னோடு இருக்கிறேன்’ என்று சத்தமாக சுயபிரகடனம் செய்யுங்கள்.
🌿பிறகு அதை மாற்றி ‘நீ இப்போது என்னோடு இருக்கிறாய்’ என்று கூறுங்கள். தினமும் அந்த சுய பிரகடனத்தை மூன்று முறை கூறுங்கள்.
உடலும் மனமும்
புத்துணர்ச்சி பெறும்