* மனம் தான் மனிதவாழ்வின் விளைநிலம்.
அதை செம்மையாக வைத்துக் கொண்டால் வாழ்வு வளம் பெறும்.
* மனதை அடக்க நினைத்தால் அலையும்.
அதை அறிய நினைத்தால் அடங்கும்.
தவறு செய்வதும் மனம் தான்.
இனி தவறு செய்யக்கூடாது என்று தீர்மானிப்பதும் மனம்தான்.
* அன்றாடம் மனம் பலவிதமான விஷயங்களில் அலையவிட்டு தடுமாற்றம் பெறுகிறது.
குறிப்பிட்ட நேரம் தியானம் செய்து மனதை தூய்மைப்படுத்தினால் மனநலம் மேம்பாடு அடையும்.
* வாழ்வில் இடையிடையே சிக்கல்கள் ஏற்படுவது இயற்கையே.
அதைக் கண்டு மிரள்வது அறிவுடைமை ஆகாது.
அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்து தீர்வு காண்பதே சிறந்தது.
* கவலைப்படுவதால் மட்டுமே சிக்கலில் இருந்து மீளமுடியாது.
இன்னும் சொல்லப்போனால் கவலையின்போது பிரச்னை மேலும் பெரிதாகிவிடும்.
* தீர்க்க முடியாத துன்பம் என்ற ஒன்று வாழ்வில் கிடையவே கிடையாது.
தீர்க்கும் வழிவகைகளை அறியாமல் தான் நாம் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறோம்.
திறக்க முடியாத பூட்டு எதுவுமில்லை அதற்கான சரியான சாவியைத் தேடிப்பிடித்தால் போதும்