Sunday 22 July 2018

5

.............................................

'' ஐந்து வில்லன்கள்''..
.......................................

நாம் முன்னேறிவிட முடியாதபடி தடுக்கக்கூடிய ஐந்து வில்லன்கள் இருக்கிறார்கள்

யார் ஐந்து வில்லன்கள்..?

அந்த 5 வில்லன்கள்:

ஊக்கமின்மை, மாற்றம், பிரச்னைகள், பயம் மற்றும் தோல்வி..

இப்போது, சினிமாவில் வருவதுபோல் இந்த வில்லன்களை ஒவ்வொருவராக எதிர்த்து நிற்போம்,

அவர்களை வெல்லக் கூடிய ஆயுதங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

*.ஊக்கமின்மை:
................................

*நீங்கள் செய்கிற எதையும் மேலோட்டமாகப் பார்க்காதீர்கள்.ஆழ்ந்து யோசித்து அதன் உண்மை யான நோக்கத்தை உள்ளே பதிய வைத்துக் கொள்ளுங்கள்.எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்த்து விடுங்கள்..,

*மாற்றம்:
....................

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும் அதைப் புரிந்து கொள்ளுங்கள், முரண்டு பிடிக்காதீர்கள்.மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை. இதை மனதில் வையுங்கள்.

*பிரச்னைகள்:
............................

*பிரச்னைகள் நிகழ்ந்தே தீரும். தயாராக இருங்கள், அவற்றை எப்படி எதிர் கொள்ளலாம் என்று முன்கூட்டியே யோசித்துக் கொள்ளுங்கள்,

ஒன்று அல்ல, மூன்று தீர்வுகளைச் சிந்தித்து வையுங்கள்.அத்தனைப் பிரச்னைகளுக்குள்ளும் ஒரு புதிய வாய்ப்பு ஒளிந்திருக்கும், தேடிப் பிடித்து பயன் படுத்துங்கள்.

* பயம்:
................

பயம் இல்லாததுபோல் நடிக்காதீர்கள். எனக்கு இதை நினைத்து அச்சமாக உள்ளது என்று ஒப்புக் கொள்கிறவன் கோழை அல்ல.. பயத்தை ஏற்றுக் கொள்கிறவனால்தான் அந்தப் பயத்தை வெல்ல முடியும்..உங்கள் பயத்தின் தொடக்கப் புள்ளி எது என்று யோசியுங்கள், அங்கே அடியுங்கள்.

* தோல்வி:
......................

சறுக்கல்கள் வரும்போது, மாத்தி யோசியுங்கள். இந்தத் தோல்வியும் ஒரு வெற்றியாக இருக்கலாம்.

சில செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும், மற்ற பல செயல்கள் நம் கையில் இல்லை. நம்மால் முடிந்ததை மட்டும் தொடுங்கள், சரி செய்யுங்கள்.

ஆம்.,நண்பர்களே.,

மேலேகண்ட 5 வில்லன்களான,ஊக்கமின்மை, மாற்றம், பிரச்னைகள், பயம் மற்றும் தோல்வி..
இவற்றை சாதுரியமாக கையாண்டால் வாழ்க்கை பயணம் இனிதே நடைபெறும்.வாழ்க்கையில் வெற்றி அடையலாம்.🌸🙏🏻💐