Tuesday 17 July 2018

ஈகோ

🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊

*"Ego Killing - ஈகோ கில்லிங் - அகம்பாவ அழிப்பு முயற்சி "*

என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளலாமா..? . அதென்ன சார்.. ஈகோ கில்லிங்.. என்கிறீர்களா..?

ஒரு பெரிய்ய ஸ்டேடஸ் , அது பணத்தினாலோ, பதவியினாலோ,  புகழினாலோ  எப்படியோ நமக்கு வந்துவிட்டது ... என்ன ஆகும்..? தலைக்கனம் பிடிக்க ஆரம்பிக்கும்... பார்க்கும் பார்வையில் , பேசும் பேச்சில் எதிராளியை லேசாக மட்டம் தட்டுவது மாதிரியாக ஒரு போதை , மனதை ஆட்டும் போதை வந்து உட்கார்ந்து கொள்ள ஆரம்பிக்கும்.... ஜம்பமாக.

இதை சரியான நேரத்தில் , கணத்தில் கண்டுபிடித்து ஒரு தட்டு தட்டாமல் விட்டால் என்ன ஆகும் தெரியுமா..? கிடு, கிடுவென்று அசுர வேகத்தில் வளர்ந்து அகில உலகத்தையே ஆட்டிப் படைக்கும் அந்த ரட்சகனாக கூட நம்மை நினைத்துக் கொள்ள வைக்கும் பிசாசாகவே மாறிவிடும்...

இராமகிருஷ்ண பரமஹம்சர் எல்லாவற்றையும்  தவிர்த்து மனதை வென்ற ஒரு மகானுபாவர்.. மஹான்... எளிமைக்கு இலக்கணமாய் வாழ்ந்த இந்த மாமனிதரே ஒரு செயலைச் செய்வாராம்... சமயங்களில் தனது கழிவறையை தாமே சுத்தம் செய்வது மட்டுமின்றி தலைமயிராலே கூட சுத்தம் செய்வாராம்... படிப்பதற்கே எவ்வளவு அருவருப்பாக இருக்கிறது... அல்லவா..? ஆனால் நிஜம் அது..

சரி , எதற்காக இப்படிச் செய்கிறார் ...? என்று பார்த்தால் காரணம் வேறொன்றுமில்லை ... இந்த ஈகோ கில்லிங் தான்... எந்த நிலையிலும் நீ சாமான்யனே, சாதாரண மனிதனே, அண்ட சராசரங்களை படைத்து , இத்தனை ஆண்டு காலம் இயக்கிக்கொண்டிருக்கும் அந்த இயற்கை பேராற்றலோடு உன்னை ஒப்புமைப்படுத்துகையில் நீ ஒன்றுமில்லாதவன் ... ஏன் ஆடுகிறாய் மனிதா...? அடங்கு ... என்று நமது தலையில் அடித்து ஞாபகமூட்டும் அற்புத சித்து தான் இந்த ஈகோ கில்லிங் செயல்பாடு..

இலட்சத்தில் ஒருவர் கூட இதை தொடர்ந்து செய்வதில்லை. ஒரு ஸ்டேடஸ் வந்த பிறகு எந்த வகையிலும் அதற்கு பங்கம் வந்து விடாமல் கவனமாக காபந்து பண்ணுவதிலேயே குறியாய் இருந்து விட , *ஈகோ கில்லிங் ...* எங்கே...?  *ஈகோ செல்லிங்*  தான் பரிபூர்ணமாக இங்கே..

ஆக , ஈகோவை கட்டுப்படுத்த இது போன்ற கீழ் நிலைச் செயல்பாடுகள் ( கீழ்த்தரமானது என்று அர்த்தமல்ல... அடித்தட்டு நிலைச் செயல்பாடு என்று அர்த்தப்படுத்தலாம் ..) பெரிதும் துணை செய்வதை அதிகாரப்பூர்வமாக சில பெரியவர்களிடம் பார்த்தாயிற்று; அனுபவ பூர்வமாக பல முறை நாமே செய்து உணர்ந்துமாயிற்று...

ஒரு சம்பவம்...எப்போதும் மொட, மொட கதர்ச்சட்டையில் மெர்சிடிஸ் பென்ஸில் பயணிக்கும் தெரிந்தவர் அவர். பெரும் முதலாளி. ஆனால்  சமயங்களில்  அவரது தோட்டத்தில் மண்குழி எடுத்து , நாற்று நட்டு , சாணியை அள்ளி  ஒதுக்கி , பலமுறை அருகிலுள்ள கோவிலில் கிழிந்த ஒரு பனியனோ , சட்டையோ அணிந்து கொண்டு புழுதி கண்களிலும் கைகளிலும் அப்ப உழவாரப்பணி உட்பட சுத்தம் செய்து, தருணங்களில்  பொதுமக்களோடு சகஜமாய் தரையில் அமர்ந்து பழைய சோறோ, கஞ்சியோ உண்பதையும் கண்டு வியந்திருக்கிறேன்... பெருமைக்கு இல்லாமல் இயல்பாய் , யார் இருந்தாலும் , இல்லாவிட்டாலும் அப்படி இயங்குவதையும் உறுதி செய்திருக்கிறேன்...

*நான்...* என்கிற நண்டை , மண்டைக்குள் புகவிட்டு விட்டால் அது என்ன பாடு படுத்தும் என்பதை திடீர் பணக்காரர்களிடம் சாதாரணமாய் பார்க்கலாம்... வாங்கிய வைர அட்டிகையை வார்த்தையாலயே விளக்கி பள, பளப்பாக்கிவிடும் பலே சாமர்த்தியசாலிகள்..

ஆக, ஆடும் மனதை ஆடாமல், அடங்கிக் கிடக்க,  நிலைத்திருக்கச் செய்ய பெரிதும் உதவி செய்யும் "ஈகோ கில்லிங் " ஐ "ஆயில் புல்லிங் " போல அவ்வப்பொழுது செய்து வருவது கூட கலியுகத்தில் ஆயுள் வளர்த்தும் ஒரு ஷேம கைங்கர்யம் தான்..

நான் இதுபோல அவ்வப்பொழுது செய்து கொள்வேன்.. குடியிருப்பு பகுதியில் உள்ள கோவிலில் எறிந்து கிடக்கும் எச்சில் தட்டுக்களை பொறுக்கி ஓரமாய் குவிப்பது, பிளாஸ்டிக் கவர்களை , டம்ளர்களை ஒன்று விடாமல் சேகரிப்பது,  அரதப்பழைய செருப்பைக் போட்டுக்கொண்டு நடப்பது .. இப்படிச் சில.

விஷயம் சிம்பிள்... எதாவது ஒரு வழியில், எதையாவது செய்து  *நானை* அடக்குவது...

*நானின்றி  வெல்வது ஞானிகளின் வேலை.. நானாக இருப்பதே நான் செய்யும் வேலை..*

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*படித்தேன்.... பகிர்ந்தேன்*
📣📣📣📣📣📣📣📣📣📣📣