Saturday, 9 February 2019

பிராத்தனை

*காலை எழுந்தவுடன் மனதில் இந்த வரிகளை சொல்லுங்கள். நீங்கள் விரும்பியது கிடைக்கும்....!*

*எனது தேவைகளை நிறைவேற்ற கூடிய பணம் என்னிடம் நிறைய இருக்கிறது.*

*நான் தினமும் தியானம் செய்கிறேன்.*

*எனது எண்ணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.*

*என் நோய் எதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.*

*நான் எப்பொழுதும் சரியான இடத்தில் சரியான நேரத்தில் சரியான காரியத்தில் ஈடுபட்டிருக்கிறேன்.*

*பிரபஞ்சம் என் மீது அளவற்ற வளங்களை பொழிகிறது.*

*என் வாழ்க்கை மிக அழகானது*.

*எனது சக்தியின் அளவு எப்பொழுதும் மிக சிறப்பாக இருக்கிறது.*

*எனது எண்ணம்,வாக்கு & செயல் எப்பொழுதும் ஒருங்கிணைந்து இருக்கின்றன.*

*நான் எப்பொழுதும் புன்னகையுடன் இருக்கிறேன்.*

*என்னால் வாழ்வில் எதையும் சுலபமாக எதிர்கொள்ள முடியும்.*

*நான் எப்பொழுதும் நல்ல விஷயங்களையே நாடுகிறேன்.*

*என் இலட்சியங்கள் நிறைவேறியதற்கு பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்கிறேன்.*

*நல்லவர்களை மட்டுமே என் வாழ்வில் ஈர்க்கிறேன்.*

*நான் வளமையான உணர்வுடன் வாழ்கிறேன்.*

*என்னைப் பற்றி சிறப்பாக உணர்கிறேன்.*

*என்னை நான் மதிக்கிறேன்.*

*எனக்குள் அமைதியை உணர்கிறேன்.*

*என் சமயோஜிதம் பிரமாதமாக உள்ளது*.

*பணம் ஒரு சக்தி நான் அதை ஈர்க்கிறேன்.*

*வாழ்வில் எனது பங்கை புரிந்து செயல்படுகிறேன்*.

*நான் மிகவும் சக்தி வாய்ந்த மனிதன்.*

*என் எண்ணங்கள் எப்பொழுதும் நான் விரும்பிய பாதையிலேயே செல்கின்றன.*

*அழகிய நிறங்களும் நல்ல சக்தியும் என் ஆராவை நிறைக்கின்றன.*

*என் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் ரசித்து அனுபவிக்கிறேன்.*

*என் இலட்சியங்கள் சுலபமாக நிறைவேறுகின்றன.*

*நான் நிகழ்காலத்தில் வாழ்கிறேன்.*

*வாழ்வில் எனக்கு கிடைத்த விஷயங்களுக்காக நான் நன்றி சொல்கிறேன்.*

*என் மனதில் தன்னம்பிக்கை நிறைந்திருக்கிறது.*

*நான் முழுமையான ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்.*

*நான் பணத்தை ஒரு காந்தம் போல வசீகரிக்கிறேன்.*

*நான் நேரத்தை மிகவும் திறமையாக பயன்படுத்துகிறேன்.*

*நான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன்.*

*எனது எண்ணங்களில் சுதந்திரத்தை உணர்கிறேன்.*

*என்னை நான் நேசிக்கிறேன்.*

*எல்லோருக்கும் என்னை பிடிக்கிறது.*

*எனக்குள் ஆனந்தமும் நிம்மதியும் உணர்கிறேன்.*

*நான் சாதிக்கப் பிறந்தவன்.*

*என் மனம் தெளிவாக இருக்கிறது.*

*என் வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் ரசித்து அனுபவிக்கிறேன்.*

*வாழ்வில் நான் தாண்டி வரும் இடர்பாடுகள் எனக்கு மேலும் சக்தி அளிக்கின்றன.*

*அன்பை பெறவும் தரவும் நான் தயாராக இருக்கிறேன்.*

*எனது வாழ்வை சிறப்பாக்க இந்த பிரபஞ்சமே செயல்படுகிறது.*

*என் உடலும் மனமும் ஒன்றை ஒன்று வலுப்படுத்துகின்றன.*

*என் மனம் அமைதியாக இருக்கும் பொழுது இலட்சியங்களை நிறைவேற்றுவது சுலபமாக இருக்கிறது.*

*தெய்வீக சக்தி எப்பொழுதும் என்னை சூழ்ந்து பாதுகாப்பு அளிக்கிறது.*

*என் ஆராவில் உள்ள நல்ல சக்தி அனைவரையும் சாந்தப்படுத்தி நிம்மதி அளிக்கிறது.*

*இந்த நொடி என்னுடையது. அதை நான் மதிப்புள்ளதாக மாற்றுகிறேன்*.

*என் உடல் கச்சிதமாகவும் மனம் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கின்றன.*

*என் ஆழ்மனதின் சக்தியால் வாழ்வில் அற்புதங்களை உருவாக்குகிறேன்.*

*நான் எங்கு சென்றாலும் நல்ல சக்தியை பரவச்செய்கிறேன்.*

*எனக்கு எது நல்லதோ அதையே பிரபஞ்சம் தருகிறது.*

*என்னைச் சுற்றியுள்ள ஒவ்வொரு உயிருக்காகவும் பிரபஞ்சத்திற்கு நன்றி செலுத்துகிறேன்.*

*என் உடலில் பஞ்ச பூதங்களும் சம நிலையில் இருக்கின்றன.*

*என் வாழ்வில் சௌபாக்கியங்கள் நிறைந்திருக்கின்றன.*