இரண்டு நன்பர்களில் ஒருவனுக்கு பணம் சேர்க்கும் வித்தை தெரிந்திருந்தது.வேறு ஒன்றுமில்லை.ஒவ்வொரு நாளும் சம்பாதித்த பணத்தை சேர்த்துவைத்து மொத்தமாக செலவழிப்பது.
இப்படி ஒவ்வொரு நாளும் எதையும் அனுபவிக்காமல் செல்வந்தன் ஆகிவிட்டான்.எவ்வளவு பணம் சேர்ந்ததோ அவ்வளவு துன்பத்தையும் சேர்த்துவைத்திருந்தான்.
பின்பும் ஒரு நாள் அவன் நன்பனை சந்தித்தான்.அவன் கேட்டான் அதுதான் பணக்காரன் ஆகிவிட்டாயே இப்பொழுதாவது வாழ்வை அனுபவிக்கலாமே என்று.
அதற்கு பணக்காரன் சொன்னான் முடியாது ஏனென்றால் அனுபவிக்கும் மனம் வந்துவிட்டால் மீண்டும் நான் ஏழையாகிவிடுவேன்.
இதனால்தான் ஏசு யூதர்களால் கொல்லப்பட்டார்.அவர்கள் என்றாவது ஒருநாள் கடவுளின் தூதர் வருவார் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள்.ஏசு வந்துவிட்டார்.
அவர் உண்மையை சொன்னார்.அதை ஏற்றுக்கொண்டுவிட்டால் எப்படி வழக்கமான வாழ்வு வாழமுடியும்.எனவே அவரை கொன்றுவிட்டார்கள்.
ஒரு சர்சிலோ,கோவிலிலோ கடவுள் நிஜமாக வந்துவிட்டால் கொன்றுவிடுவார்கள்.பிறகு எப்படி வழக்கம்போல் ஆராதனைசெய்வது,பூஜை செய்வது.இதுதான் ஏசுவுக்கு நடந்தது.
இப்படிதான் நாளை நிம்மதியாக இருக்க இன்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.ஓர்நாள் நிம்மதி வந்தால் அதையும் கொன்றுவிடுவாரகள்.
உங்கள் தன்முனைப்பு என்றுமே நிம்மதியாக இருக்கவிடாது.
ஏன் நாளை? அது வராமல் போய்விட்டால்?ஏன் இன்றைய,இப்பொழுதைய சந்தோசத்தை இழக்கிறீர்கள்?தள்ளிபோடாதீர்கள் இப்பொழுது இல்லையென்றால் எப்பொழுதும் இல்லை.__ஓஷோ.