பணத்தைப் பற்றி மிகவும் பொருட்படுத்தாதே
வாழ பணம் தேவை தான்
ஆனால்
பணத்திற்காக உனது முழு வாழ்வையே அடமானம் வைப்பது
விலை உயர்ந்த ரத்தினக் கற்களை கொடுத்து விட்டு
தகரத்தை விலைக்கு வாங்குவது போல தான்
பணம் வாழ்வின் 1 சதவீதம் தான்
பணத்தைப் பற்றி மிகவும் பொருட்படுத்தாதே
ஏனெனில்
சந்தோஷத்திற்கு மிகவும் தொந்தரவு கொடுக்கும் விஷயம்
அது துக்கத்திலேயே அதிக துக்கம் என்னவென்றால்
பணம் இருந்தால் சந்தோஷமாக இருக்க முடியும்
என்று மக்கள் நினைப்பதுதான்
பணத்திற்கும், சந்தோஷத்திற்கும் சம்பந்தம் இல்லை
உற்று நோக்குங்கள்
மிகப் பெரிய பணக்காரர்கள் பலருக்கும்
உள்ள கவலைகளும் பயமுறுத்தல்களும்
உங்களைவிட அதிகம்
ஓஷோ