நமது திறமையின்மை பெரிய விஷயமல்ல. எல்லா மனிதர்களும் அவர்களுடைய
இயற்கைப் பாகத்தில் திறமையில்லாதவர்களே. ஆனால், தெய்வ சக்தியின் மீது
முழுமையான நம்பிக்கை வைத்து ஒருவன் செயல்படும்போது, அவனது திறமையின்மைகூட
திறமையாக மாற்றப்பட்டுவிடும்.
- ஸ்ரீஅரவிந்தர்
தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும், மாசற்றதுமான சமயவாழ்வு
எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால்
கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்.
- யாக்கோபு 1:27
நிச்சயமாக அல்லாஹ் (இறைவன்) மனிதர்களுக்கு எந்தவித அநியாயமும்
செய்யமாட்டான். எனினும், மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து
கொள்கின்றார்கள்.
- திருக்குர்ஆன் 10:44