Friday 13 March 2015

யாராலும்,உங்களுக்கு வழங்க முடியாது.

உலகை துறக்க வேண்டிய அவசியமே இல்லை.கோழைகளே அதை துறப்பார்கள்.உலகில் வாழ வேண்டும்.அனுபவம் பெற வேண்டும்.இது ஒரு பள்ளி.நீங்கள் இமயமலையில் வளர முடியாது.உலகில்தான் வளர முடியும்.
ஒவ்வொரு காலடி வைப்பும் ஒரு தேர்வு.நீங்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு சோதனை.வாழ்வு ஒரு வாய்ப்பு.
உண்மை,உயிருள்ள உண்மை,ஒவ்வொரு தனி மனிதராலும் கண்டுபிடிக்கப்பட வேண்டிய ஒன்று.யாராலும்,அதை உங்களுக்கு வழங்க முடியாது.