படித்ததில் பிடித்தது!!!
||| ஒரு ஊரில் ஒரு குயவனும்
ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள்.
~ இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள்.
~அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர்.
~குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது? என்று கேட்டான்.
~குயவன் அட போப்பா...!
~எனக்குக் களிமண்ணில் வேலை..
~நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக் கொண்டு கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது.
~உன்னைப் போல வெள்ளையும் சள்ளையுமாகவா இருக்க முடிகிறது..? அலுப்புத் தட்டுகிறது போ..! என்று கொட்டாவி விட்டான்.
~அதற்கு வைர வியாபாரி சொன்னான் உனக்கு என்ன தெரியும் என் வேலையைப் பற்றி நாளெல்லாம் வைரத்தைத் தீட்டுகிறேன் என்று எத்தனை முறை நான் என் கையை அறுத்து ரத்த காயப் படுத்திக் கொள்கிறேன் தெரியுமா உனக்கு...?
~உன் வேலையில் இந்த ஆபத்தெல்லாம் கிடையாதே. ~வேலை செய்து கையெல்லாம் புண்ணாகிப் போனதுதான் மிச்சம்.
~இன்றும் நாள் முழுவதும் இந்த வேலையைத்தான் ஆபத்து என்று தெரிந்தே செய்ய வேண்டும் என்று அலுத்துக் கொண்டே புண்ணாகிப் போன தன் கைகளைக் காட்டினான்.
~எல்லோருக்கும் அவரவர் வேலையில் மகிழ்ச்சி இல்லையா..?
~மகிழ்ச்சியான வேலைதான் எது..? என்று இருவரும் சிந்தித்தார்கள்.
~அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை.
^ ஊரில் எல்லோரும் மதித்து நடக்கும் சிந்தனையில் சிறந்த பெரியவர் ஒருவர் இருந்தார்.
^ இருவரும் அவரிடம் சென்று ஐயா எங்கள் வேலையில் அலுப்பும் ஆபத்தும்தான் தெரிகிறது..?
^ எப்போதும் மகிழ்ச்சியாகச் செய்யக் கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டார்கள்.
^ பெரியவர் புன்னகைத்துக் கொண்டே உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்வதைத் தவிர வேறு வேலை ஏதாவது தெரியுமா...? என்று கேட்டார்.
^ அவர்கள் தத்தம் வேலைகளை மட்டுமே தமக்குச் செய்யத் தெரியும் என்று பதில் கூறினார்கள்.
^ உலகிலே மண்பாண்டங்களும், தீட்டிய வைரங்களும் இயற்கையாகவே கிடைத்தால் என்ன நடக்கும்..?
என்று அவர்களிடம் கேட்டார்.
^ எங்கள் வேலைக்கே மதிப்பில்லாமல் போய்விடும்...! பயத்துடன் பதில் சொன்னார்கள்.
^ அப்படியானால் உங்கள் வேலைக்கு என்ன மதிப்பு? பெரியவர் கேட்டார்.
^ களிமண்ணை பாண்டமாக உருவாக்குவதும், இயற்கையில் கிடைக்கும் வைரத்தை மின்னல் போல் பளபளக்கச் செய்வதும்தான் என்று இருவரும் சொன்னார்கள்.
^ உலகில் குறைகள் இருப்பதால்தான் உங்கள் இருவருக்கும் வேலை இருக்கிறது.
^ அந்தக் குறைகளை நிறை செய்யும் திறமை உங்களுக்கு இருப்பதால் உங்களை மக்கள் மதிக்கிறார்கள்.
^ அந்தத் திறமை மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக இருப்பதால்தான் உங்களைத் தேடி வருகிறார்கள்.
^ நீங்கள் அதைப் பெரிதாக நினைக்காமல், குறைகளால் ஏற்படும் வருத்தங்களைப் பெரிதாக நினைக்கிறீர்கள்.
^ மகிழ்ச்சியும் மகிழ்ச்சியின்மையும் உங்கள் நோக்கிலேயே இருக்கிறது.
^ செய்யும் வேலையில் இல்லை. குறைகளை அவற்றை நிறை செய்யும் வாய்ப்பாகப் பார்ப்பவன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான்.
^ குறையை அதில் உள்ள சிரமங்களாகப் பார்ப்பவன் வருத்தத்துடன் இருக்கிறான் என்று முடித்தார்.
+ கோணலானதை நேராக்கக் கூடாது, குறைவானதை எண்ணிமுடியாது.
+ நிறைவானது வரும்போதுகுறைவானது ஒழிந்துபோம்.