Friday 15 September 2017

நிறைவானது வரும்போதுகுறைவானது ஒழிந்துபோம்.

படித்ததில் பிடித்தது!!!

||| ஒரு ஊரில் ஒரு குயவனும்
ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள்.

~ இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள்.

~அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர்.

~குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது? என்று கேட்டான்.

~குயவன் அட போப்பா...!
~எனக்குக் களிமண்ணில் வேலை..
~நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக் கொண்டு  கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

~உன்னைப் போல வெள்ளையும் சள்ளையுமாகவா இருக்க முடிகிறது..? அலுப்புத் தட்டுகிறது போ..! என்று கொட்டாவி விட்டான்.

~அதற்கு வைர வியாபாரி சொன்னான் உனக்கு என்ன தெரியும் என் வேலையைப் பற்றி நாளெல்லாம் வைரத்தைத் தீட்டுகிறேன் என்று எத்தனை முறை நான் என் கையை அறுத்து ரத்த காயப் படுத்திக் கொள்கிறேன் தெரியுமா உனக்கு...?

~உன் வேலையில் இந்த ஆபத்தெல்லாம் கிடையாதே. ~வேலை செய்து கையெல்லாம் புண்ணாகிப் போனதுதான் மிச்சம்.

~இன்றும் நாள் முழுவதும் இந்த வேலையைத்தான் ஆபத்து என்று தெரிந்தே செய்ய வேண்டும் என்று அலுத்துக் கொண்டே புண்ணாகிப் போன தன் கைகளைக் காட்டினான்.

~எல்லோருக்கும் அவரவர் வேலையில் மகிழ்ச்சி இல்லையா..?

~மகிழ்ச்சியான வேலைதான் எது..? என்று இருவரும் சிந்தித்தார்கள்.

~அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை.

^ ஊரில் எல்லோரும் மதித்து நடக்கும் சிந்தனையில் சிறந்த பெரியவர் ஒருவர் இருந்தார்.

^ இருவரும் அவரிடம் சென்று ஐயா எங்கள் வேலையில் அலுப்பும் ஆபத்தும்தான் தெரிகிறது..?

^ எப்போதும் மகிழ்ச்சியாகச் செய்யக் கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டார்கள்.

^ பெரியவர் புன்னகைத்துக் கொண்டே உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்வதைத் தவிர வேறு வேலை ஏதாவது தெரியுமா...? என்று கேட்டார்.

^ அவர்கள் தத்தம் வேலைகளை மட்டுமே தமக்குச் செய்யத் தெரியும் என்று பதில் கூறினார்கள்.

^ உலகிலே மண்பாண்டங்களும், தீட்டிய வைரங்களும் இயற்கையாகவே கிடைத்தால் என்ன நடக்கும்..?
என்று அவர்களிடம் கேட்டார்.

^ எங்கள் வேலைக்கே மதிப்பில்லாமல் போய்விடும்...! பயத்துடன் பதில் சொன்னார்கள்.

^ அப்படியானால் உங்கள் வேலைக்கு என்ன மதிப்பு? பெரியவர் கேட்டார்.

^ களிமண்ணை பாண்டமாக உருவாக்குவதும், இயற்கையில் கிடைக்கும் வைரத்தை மின்னல் போல் பளபளக்கச் செய்வதும்தான் என்று இருவரும் சொன்னார்கள்.

^ உலகில் குறைகள் இருப்பதால்தான் உங்கள் இருவருக்கும் வேலை இருக்கிறது.

^ அந்தக் குறைகளை நிறை செய்யும் திறமை உங்களுக்கு இருப்பதால் உங்களை மக்கள் மதிக்கிறார்கள்.

^ அந்தத் திறமை மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக இருப்பதால்தான் உங்களைத் தேடி வருகிறார்கள்.

^ நீங்கள் அதைப் பெரிதாக நினைக்காமல், குறைகளால் ஏற்படும் வருத்தங்களைப் பெரிதாக நினைக்கிறீர்கள்.

^ மகிழ்ச்சியும் மகிழ்ச்சியின்மையும் உங்கள் நோக்கிலேயே இருக்கிறது.

^ செய்யும் வேலையில் இல்லை. குறைகளை அவற்றை நிறை செய்யும் வாய்ப்பாகப் பார்ப்பவன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான்.

^ குறையை அதில் உள்ள சிரமங்களாகப் பார்ப்பவன் வருத்தத்துடன் இருக்கிறான் என்று முடித்தார்.

+ கோணலானதை நேராக்கக் கூடாது, குறைவானதை எண்ணிமுடியாது.

+ நிறைவானது வரும்போதுகுறைவானது ஒழிந்துபோம்.