❤ முற்பிறவி கர்மா விழிப்புணர்வு ஞானம்
" மக்கள் என்னிடம் வந்து,
நீங்கள் திடுமென வந்துவிடக்கூடிய ஞானவிழிப்பூட்டம் பற்றி போதிக்கிறீர்கள்
அப்படியானால் எங்கள் முன்னாளைய கர்மாக்கள் என்ன ஆவது.....???
பழைய ஜென்மங்களில் நடந்ததெல்லாம் என்ன ஆவது....???" என்று கேட்கிறார்கள்.
ஒன்றும் ஆகாது - அவை இருளின் இயல்புடையவை.
நீங்கள் முற்பிறவியில் கொலை செய்திருக்கலாம்,
திருடனாக இருந்திருக்கலாம்,
ஹிட்லராக இருந்திருக்கலாம்.
அதனால் ஒன்றும் வித்தியாசம் ஏற்ப்பட்டுவிடாது.
உங்களையே நீங்கள் நினைவுபடுத்திக் கொண்டதும்
அங்கு ஒளி வந்துவிடுகிறது.
கடந்த காலம் முழுதுமாக மறைந்துவிடுகிறது.
ஒரு வீடு நூறு ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்தாலும்
இன்று அதில் ஓர் விளக்கை ஏற்றியவுடன் அத்தனை காலமாய் அங்கு குடியிருந்த இருள் மறைந்துவிடுகிறது.
இருள் எவ்வளவுதான் முதியதானாலும்
ஒளி எவ்வளவுதான் இளமையாதானாலும்
இருள் ஒளி வந்ததும் மறைந்துவிடுகிறது.
அது ஒளி வருவதற்காக காத்திருக்கிறது.
இருளுக்கு இருப்பு இல்லை.
அது ஒளியை எதிர்பார்க்க முடியாது.
கர்மாக்கள் தீரும்வரை காத்திருந்தால் முடிவிலாக் காலம்வரை காத்திருக்க நேரிடும்.
காத்திருக்கும் நேரத்தில் இன்னும் புதிய கர்மாக்கள் ஏற்ப்பட்டுக்கொண்டே இருக்கும்.
இதற்கு முடிவிருக்காது.
இது சரியில்லை.
உடனடியாக விழிப்புணர்வு பெறுங்கள்.
கர்மங்கள் அப்போதே மறைந்துவிடும்
ஒரே கணப்பொழுதில் கடந்த காலமும் மறைந்தொழியும் ❤
❣ *_ஓஷோ_* ❣