Sunday 1 October 2017

மனம்

மனம்...
ஆசை...
கற்பனை...
ஓஷோ...

🌸அந்த ஏழை விவசாயி தன் வீட்டில் கயிற்று கட்டிலில் படுத்துக் கொண்டு...

மேலே தொங்கி கொண்டிருக்கும்...

தன் கஞ்சி கலையத்தை பார்த்துக் கொண்டே....

🌸ஒரு நாள்...
இந்த ஊரில் கடுமையான பஞ்சம் வரும்...

அப்போது, இந்த கஞ்சியை நல்ல விலைக்கு விற்பேன்...

🌸கஞ்சி விற்ற காசில்...
கோழிகள் வாங்கி வளர்ப்பேன்...

சில மாதங்களில்...
கோழிகள் நிறைய பெருகியவுடன்...

🌸கோழிகளை விற்று ஆடுகள் வாங்குவேன்...

ஆடுகள் பெருகியவுடன்...

ஆடுகளை விற்று மாடுகள் வாங்குவேன்...

🌸மாடுகளை பெருகியவுடன்...
மாடுகளை விற்று குதிரைகள் வாங்குவேன்...

🌸பிறகு, பெரிய அழகிய வீடு ஒன்றை கட்டி...

அதிலுள்ள குதிரை லாயத்தில்...

குதிரைகளை கட்டி வைப்பேன்...

🌸ஊரில் உள்ள...
மிகபெரிய செல்வந்தர்...

தன் மகளை எனக்கு மணமுடித்து வைப்பார்...

🌸எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கும்...

அவனுக்கு ராஜா என்று பெயர் வைப்பேன்...

🌸மாடியிலிருந்து...
என் மனைவியும்...
என் குழந்தையும்...

விளையாடுவதை பார்த்து ரசிப்பேன்...

அப்போது அவன் சேட்டை செய்வான்...

🌸பிறகு கீழே சென்று...
அவளை பார்த்து...

"ஏய்! ராஜாவை கூட்டிட்டு வீட்டுகுள்ள போ...
என்று...
கம்பால் ஓங்கி அடிப்பேன்...
என்று அடித்தான்...

அடித்தவுடன்...
கஞ்சிகலயம் உடைந்து...
அவன் முகத்தில் கொட்டியது...

🌿ஓஷோ🌿
🌸வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பாருங்கள்...

🌸மனதின் மாறுபாடுகளில் "கற்பனை" யும் ஒன்று.

🌸முழுமையான விரக்தி...
நிராசை...
யோகத்தின் ஆரம்பம்.

🍀பதஞ்சலியோக சூத்திரம்.