Friday 2 November 2018

அதிகபடுத்துங்கள் நம்பிக்கையை

*உங்களை நம்புங்கள்*
...........................................

தன்னம்பிக்கை என்பது தன்னை நம்புதலாகும், கடின உழைப்பு, விடா முயற்சி, திட்டமிடல் என்றெல்லாம் சொல்லுகிறோம் இவைகளையெல்லாம் சும்மா வெறுமனே பின்பற்ற முடியாது,

தன்னம்பிக்கை இருந்தால்தான் அவைகளெல்லாம் கைகூடும். எனவே எல்லாவற்றிர்க்கும் அடிப்படை தன்னை நம்புதலாகும்.

ஒரு வாகனத்தை, ஒரு இரயில் வண்டியை ஏதோ ஒரு இயந்திர சக்தி உந்தி தள்ளி விடுகிறதல்லவா, அது போல தன்னம்பிக்கை என்னும் மனித சக்தி நம்மில் நிறைந்து இருந்தால்தான் அது முன்னேற்ற பாதையை நோக்கி நம்மை உந்திச் செல்லும்

சிறிதளவேனும் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் யாருமே இருக்க முடியாது,

பிச்சைக்காரன் கூட நான் பிச்சை எடுத்தால் இவ்வளவு சம்பாதிப்பேன் என்ற தன்மீதுள்ள நம்பிக்கையில்தான் களத்தில் இறங்குகிறான்,

இயற்கையிலே நாம் நம்மீது நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறோம், ஆனால் அது போதுமான அளவு இருப்பதில்லை

அதை வளர்த்துக் கொள்வதே நம் வளச்சிக்கான சரியான வழியாகும்.

சிறிதளவே நம்பிக்கையை வைத்துக்கொண்டு செயலில் இறங்கினால் இறுதியில் சோர்ந்து, துவண்டு போய் விடுவோம்,

முழுவதுமாக நிரம்பப்பெற்ற நம்பிக்கையே வெற்றியின் உச்சியில் நம்மை கொண்டு செல்லும்.

உங்கள் பலகீனங்களை விட பலத்தை அதிகப் படுத்துங்கள்,

சோம்பல்களை விட உற்சாகத்தை அதிகப்படுத்துங்கள், அறியாமையை விட அறிவை அதிகப்படுத்துங்கள்,

எதிர்மறை சிந்தனைகளை விட நேர்மறை சிந்தனைகளை அதிகப்படுத்துங்கள்

இப்படி உங்களிடமுள்ள அழிவு சக்திகளை விட ஆக்க சக்திகளை அதிகரிக்கச் செய்யும் போது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

அப்படி ஏற்படும் நம்பிக்கையை குறைக்கவிடாமல் தினந்தோறும் அவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும்.

நேற்றைவிட இன்று வளர்சியடைந்து உள்ளேன்இன்றை விட நாளை வளர்ச்சி அடைவேன் என்பதில் உறுதியாக இருங்கள்

தன்னம்பிக்கை என்னும் உந்து சக்தியை உயர்ந்த குறிக்கோளை நோக்கி வையுங்கள்.

நீங்கள் யாராகவும் இருக்கலாம், படிக்காதவர்களாக இருக்கலாம்.. பரவாயில்லை.. தன்னம்பிக்கை கொள்ளுங்கள்,

உங்கள் ஆர்வத்தை, திறமையை சற்று கண்ணோட்டம் இடுங்கள் அடுத்த கணமே களத்தில் இறங்குங்கள்

ஆம்.,நண்பர்களே.,

எதையாவது சாதியுங்கள், உங்கள் கண்முன்னே தெரிவதெல்லாம் வெற்றி படிக்கட்டுகளாக இருக்கட்டும்,

வெற்றி படிகளில் பயணியுங்கள் மற்றவர்களுக்கு சிறந்த முன்னுதாரணி ஆகுங்கள்..