சந்தோஷம்
வாழ்வை முழுமையாக மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடி ஆடி பாடி வாழு.அப்போது இந்த கணமே,இந்த முழு பிரபஞ்சமும் தெய்வீகமானதாகிவிடும்.
உன் ஆடலில், பாடலில், சந்தோஷத்தில், பரவசத்தில் அது தெய்வீகமானதாகி விடும்.
உன் ஆனந்தத்தில் நீ தெய்வீகத்தின் எல்லையை சென்றடைவாய்.
நீ ஒரு பாடலை பாடும்போது,நீ அந்த சந்தோஷத்தை வெளிப்படுத்தலில் உயிர்ப்புடன் இருக்கிறாய்.
நினைவில் கொள்.
நீ மகிழ்ச்சியடைந்தால் தவிர உன்னால் அன்பு செய்ய முடியாது.நான் சத்தியமாக சொல்கிறேன்.உன்னுள் சந்தோஷமும் கொண்டாட்டமும் நிரம்பி இருக்க முடியும்.
ஆழ்ந்த மௌனத்தில் சந்தோஷத்தில் நிறைவில் லயம் தானாகவே வரும்
நீ என்ன செய்தாலும் அதை சந்தோஷமாக செய்யும்போது,மகிழ்ச்சி தானாகவே நிகழும், மலரும்.
சந்தோஷம் முதலில் வரும்.பின் கொண்டாட்டம் அதை தொடர்ந்து வரும்.
ஓஷோ