#நீங்கள்_இறந்த_பிறகும்_வாழ_வேண்டுமா...?
நீங்கள் இறந்த பிறகும் வாழ நினைத்தால் தானம் செய்யுங்கள ஆனால் தானம் என்பதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்ட பின் தானம் செய்யுங்கள்.
தானம் என்றாலே இரத்த தானம், உடல் உறுப்பு தானம், அன்னதானம் அவற்றை மட்டுமே நினைக்கிறோம். இவைகள் மட்டும்தான் தானமா என்றால் இல்லை என்பதுவே உண்மை.
அப்படியெனில் உண்மையில் தானம் என்பது என்ன?
"உங்களிடம் இருக்கும் ஒன்றை பிறருக்கு கொடுக்கும் ஒவ்வொன்றும் தானம் தான்".
உதாரணமாக,
ஒரு குழந்தை பிறந்து பெற்றோருக்கு மகிழ்ச்சியைத் தானம் செய்கிறது. குழந்தை வளரும் பொழுது படிப்பதன் மூலமாகவும், விளையாடுவதன் மூலமாகவும் அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையில் பெற்றோருக்கும், ஆசிரியருக்கும் பெருமையை தானம் செய்கிறது.
ஒருவருக்குத் தேவைப்படும் நேரத்தில் எதையும் எதிர்பார்க்காமல் நீங்கள் செய்யும் சிறிய உதவியும் ஒருவகை தானம். நண்பர்கள் உறவினர்கள் குடும்பத்தினர் என அவர்களிடம் நீங்கள் செலவு செய்யும் உங்களுடைய அன்பான நேரமும் ஒரு வகை தானம்.
தேவைப்படும் நபருக்கு நீங்கள் கொடுக்கும் உங்களுடைய அறிவும் ஒருவகையில் தானம்.
காற்றைப் நீங்கள் மாசுபடுத்தாமல் இருந்தால் அது நம் பூமியில் வாழும் ஓவ்வொரு மனிதனுக்கும் நீங்கள் செய்யும் தூய காற்று தானம்.
நீங்கள் தண்ணீரை வீணாக்காமல் தேவைக்கு மட்டும் சரியாக பயன்படுத்தினால் அது உங்கள் அடுத்த தலைமுறைக்கு நீங்கள் செய்யும் தண்ணீர் தானம்.
உங்கள் உணவை நீங்கள் வீணாக்காமல் இருந்தாலே அது இன்னொருவரின் பசியைப் போக்கிய தானம் தான். மேலும் அது அன்னதானத்திற்கு இணையான தானம்.
இறந்த பிறகும் வாழ நினைத்தால் தானம் செய்யுங்கள் என்பதன் பொருள் நீங்கள் வாழும் பொழுது எப்படி வாழ்கிறீர்கள் எதையெல்லாம் பிறருக்காக கொடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உள்ளது.
"ஒருநாள் செய்வதல்ல தானம். ஒவ்வொரு நாளும் எதேனும் ஒரு நல்லதைச் செய்வதுதான் தானம்".
இந்த நொடியிலிருந்தே தானம் செய்யலாம்.
தானம் செய்ய யாரெல்லாம் தயார்...?