#மூன்று_குரங்குகள்_போலவே_மூன்று_ஆமைகள்...!
மூன்று குரங்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும். தேவையின்றி பார்ப்பது, கேட்பது, பேசுவது தவறு என்பதை உணர்த்தும். அதைப்போலவே மூன்று ஆமைகள் பற்றியும் அவை உணர்த்தும் தத்துவங்கள் பற்றியும் தெரியுமா?
மூன்று குரங்குகளின் தத்துவத்தைப் போலவே மிகவும் வலிமையான மற்றும் மனித வாழ்வை மாற்றப்போகும் மூன்று ஆமைகளின் தத்துவத்தைப் பற்றி இன்று தெரியுமா?
இன்று தெரிந்துகொள்வோமா?
இத்தனை வருடங்களாக மனித வாழ்வில் நடந்துள்ள எந்தவொரு நன்மையோ? தீமையோ? அதற்கான காரணம் இந்த மூன்று ஆமைகள்தான்.
தற்போது நடந்துவரும் அனைத்து நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் காரணமாக இருப்பது இந்த மூன்று ஆமைகள்தான்.
அது என்ன மூன்று ஆமைகள்...?
அது எந்த மாதிரியான மாற்றத்தை
நம் வாழ்வில் கொடுத்துள்ளது?
தெரிந்துகொள்வோம் வாருங்கள்...!
பல ஆண்டுகளாக மனித இனம் சந்தித்துவரும் வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் காரணமே இந்ந மூன்று ஆமைகள்தான்.
ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் நாம் செய்யும் தவறுகள் அல்லது சரிகளைத் தீர்மாணிப்பது இந்த மூன்று ஆமைகள்தான்.
இதில் என்ன சிறப்பு என்றால்?
ஒவ்வொரு நாளும் இந்த மூன்று ஆமைகளையும் நாம் சந்தித்து வருகிறோம் அதுவும் நம் வாழ்நாள் முழுவதும் என்பதுதான்.
என்னதான் அந்த மூன்று ஆமைகள்?
1. அறியாமை
2. கல்லாமை
3. முயலாமை
#அறியாமை ஏன்? எதற்கு? எப்படி? என்ன? என்பது புரியாமல் பிறர் கூறுவதை, பிறர் பின்பற்றுவதை அப்படியெ பின்பற்றி வாழ்தலே அறியாமை.
#கல்லாமை என்றால் ஏட்டுக் கல்வியை மட்டும் கூறவில்லை. எதையும், எதிலிருந்தும் கற்றுக்கொள்ளாமல் தயக்கத்துடன் வெறுமென வாழ்தலே கல்லாமை.
#முயலாமை வாழ்நாள் முழுவதும் வேறு எந்த முயற்சியும் செய்யாமல் ஒரு வட்டத்திற்குள் மட்டும் முயற்சி செய்துகொண்டு அதற்குள்ளேயே வாழ்வது முயலாமை.
நம்மை நாமே கவனிக்கும் திறன் இருந்தால் இந்த மூன்று ஆமைகளையும் சரியாக வளர்க்கலாம்.