Wednesday, 19 February 2020

வாழ்வின் இரகசியம்

முதன் முதலாக வியன்னா நகருக்கு மின்சாரம் அறிமுகமான புதிதில் 

சிக்மன் பிராய்டு கிராமிய நண்பர் ஒருவர் அவரைக்காண வந்து இருந்தார் .

 பிராய்டு இரவு அவரை ஒரு அறையில் தங்க வைத்தார் 

மின்சார விளக்கு கிராமத்தவருக்கு புதிது .

அவருக்கு அது பற்றி பயம் .

ஆகவே அவர் அறையில் உள்ள மின் விளக்கை உடனடியாக அணைக்க விரும்பினார். 

படுக்கையில் ஏறி நின்று வாயால் ஊதி பார்த்தார் .

விளக்கு அணையவில்லை .

விளக்கை அணைப்பதற்கு பிராய்டை எழுப்பி கேட்கலாம். 

ஆனால் அவர் இது கூட தெரியலயே என மிகவும் மட்டமாக கருதிவிடலாம். 😏😏😏

ஆகவே மின்விளக்கு பளிச்சென்று எரிய பயந்துக்கொண்டே தூங்கினார்.

 காலையில் பிராய்டு வந்ததும்

“என்ன இரவு நல்ல உறக்கமா? ” என்று கேட்டார் .

“எல்லாம் சரிதான் ஆனால் எவ்வாறு இந்த விளக்கை அணைப்பது ?” என்று கேட்டார் .

பிராய்டுக்கு அப்போதுதான் புரிந்தது இவருக்கு மின்சார பயன்பாடு பற்றி ஏதும் தெரியாது என்பது 

”இங்கே வா சுவரில் உள்ளது சுவிட்ச், இதை இப்படி அழுத்தினால் போதும் விளக்கு அணைந்துவிடும் என்றார்.

“பட்டனை தட்டினால் போதுமா, இப்போது புரியுது கரண்ட் என்றால் என்னவென்று ” என்றாராம் .

மின்சாரம் என்பதைப்பற்றி உண்மையில் உங்களுக்கு என்ன தெரியும் ? 

பட்டனை தட்டுவது தான் தெரியும் .

அன்பை, காதலை பற்றி என்ன தெரியும் ?

உள்நோக்கிசென்று அதன் உணர்வுத்தளத்தில் இவற்றை எல்லாம் சந்தித்து. அதன் இயக்கப்போக்கை அறிந்து கொண்டீர்களா? 

யோசித்து பாருங்கள் 

.எதுவும் தெரியாது. 

உங்களுக்கு உங்களைப் பற்றி எதுவும் தெரியாது 

.உங்களின் மனதைப் பற்றி எதுவும் தெரியாது .

வாழ்வின் உள்ளடக்கம் பற்றி எதுவும் தெரியாது 

.அனாதிகாலமாக இந்த பிரபஞ்சத்திலு தான் நீங்கள் வாழ்ந்து கொண்டு உள்ளீர்கள் ..

தொடர்ந்து பல ஜென்மங்களாக நீங்கள் வாழ்ந்தபோதும் 

உங்களை நீங்களே உணர்ந்து கொள்ளாத நிலையில் ,

மிக சொற்ப காலத்தில் உங்கள் மனைவியாகட்டும் ,மக்களாகட்டும் அவர்களை எவ்வாறு உங்களால் புரிந்துக்கொள்ள முடியும் . 

மகிழ்ச்சி எங்கிருந்து வருகிறது ?

கோபம் எங்கிருந்துவருகிறது ? 

அதன் உற்பத்தி களம் எங்கே ? 

எதுவும் தெரியாது .

ஒரு முறை மகிழ்ச்சியாக இருக்கின்றவர் அடுத்த கணத்தில் சோகமாக மாறிவிடுகின்றார் .

ஏன்?

என்னதான் நடைபெறுகிறது ?

அதன் ஆரம்ப புள்ளி எங்கே ?

அதன் ஆதாரசுருதி எங்கே ? 

உங்களுக்கு தெரியாது .

உங்களிடம் எழும் இது போன்ற உணர்வுகளின் 

இயக்கபோக்கை உணர்த்து கொள்ளாத நிலையில் 

நீங்கள் எவ்வாறு மற்றவர்களின் கோபதாபங்களை

அறிந்துகொள்ள முடியும் ?

உங்களின் மனதை உங்களின் இருப்புணர்வை சரியாக அறிந்துகொண்டுவிட்டால் 

அப்போது இந்த வாழ்வின் அத்தனை இரகசியத்தையும் நீங்கள் உணர முடியும் .

*ஓஷோ*