☄☄☄☄☄☄☄☄
மந்திரம்
என்பதற்கு
நினைப்பவரைக் காப்பது
என்பது பொருள்.
நினைப்பவரைக் காப்பது
இறைவனது திருவருளேயன்றி வேறொன்று அன்று.
ஆதலால் உண்மையில் மந்திரமாய் இருப்பது திருவருளே.
ஆயினும்
அது சொற்களையும் சொற்றொடர்களையும் தனக்கு
இடமாகக் கொண்டு
அவற்றின் வாயிலாகவே
புத்தி,
முத்தி - ஆகிய பயன்களைத் தருகின்ற காரணத்தால்,
அச்சொற்களும் சொற்றொடர்களும் உபசார முறையில் மந்திரங்கள் எனப்படுகின்றன.
மந்திரங்களுள் தலையாயது திருவைந்தெழுத்து ஆகும்.
அது ஞானத்தைத் தரும் மறைமொழியாகும்.
வடமொழியில்
அது
பஞ்சாக்கரம் எனப்படும்.
🕊🕊🕊🕊🕊🕊🕊🕊🕊