Friday, 16 September 2016

ஓஷோவின் துளிகள்

ஓஷோவின் துளிகள்

1. தொடுதல்

தியானம் ஒவ்வொரு புலன்களையும் கூர்மையாக்கும்,
உனது தொடுதலைக் கூட. ஒரு தியானிப்பவனின் தொடுதலில் கதகதப்பும் அன்பும் முழுமையாக
இருப்பதை நீ உணரலாம். அவர் மூலமாக ஏதோ ஒன்று பாய்வதை நீ உணரலாம். அவரிடம் சந்தோஷம்
அபிரிதமாக இருப்பதை நீ காணலாம், திருப்தியை நீ பார்க்கலாம், அவரால் அதை
கட்டுப்படுத்த முடியாது. அது அவரைச் சுற்றி பாய்ந்தோடிக் கொண்டிருக்கும்.

தாமரை தண்ணீரில்தான் இருக்கிறது, ஆனால்
தண்ணீரால் அதை தொட முடியாது.

ஆழமான அன்புடன் யாராவது உனது கைகளை தொடும்போது
உனது கைகளும் உயிர் பெறுகின்றன.

ஒரு மலரைத் தொடும்போது இயற்கை எப்படி உள்ளதோ
அப்படியே உன்னால் அனுபவப்பட முடியும்.

நம்பிக்கைகள் உனது வாழ்வைத் தொட முடியாது,
ஏனெனில் நம்பிக்கைகள் வெறும் கருவிகளே.

பாதத்தின் கீழே உள்ள தொடு உணர்ச்சியின் மூலமாக
பாதையை உணர்ந்து பார்.

2. காத்திருத்தல்

காத்திருத்தல் தூய்மையானதாக இருக்க வேண்டும்.
காத்திருத்தலை அதற்காகவே அதன் அனுபவத்திற்காகவே கொண்டாடு. எதற்காக என்று கேள்வி எழ
வேண்டிய அவசியமே இல்லாமல் அதன் தூய்மைக்காக, அதன் வெகுளித்தனத்திற்காக, அதன்
வாழ்த்துக்காக வெறுமனே காத்திரு. காத்திரு -

காத்திருத்தலின் அழகை உன்னால் பார்க்க முடியும்.
என்ன நிகழப் போகிறதென்று அறியாமல் காத்திருத்தல் மட்டுமே செய்யும்போது அதை
பார்ப்பாய்.

காத்திருத்தல் உன்னை உருக வைக்கும், மையம் தன்னை
வெளிப்படுத்த, உனது காத்திருத்தல் உதவி செய்யும்.

காத்திருத்தலுக்கு எந்த பொருளும் கிடையாது,
அதனால் தான் அது தியானமாகிறது.

காத்திருந்து காத்திருந்து காத்திருந்து நீ
காலியாவதுதான் பிரார்த்தனை.

காத்திருத்தல், முழுமை உன்னை முழுமையாக
ஆட்படுத்திக் கொள்ள அனுமதிக்கும்.

ஒரு உண்மையாகவே காத்திருப்பவனால் அவன் எதற்காக

காத்திருக்கிறான் என்ற கேள்விக்கு பதில் சொல்லவே முடியாது.

3. தேடுதல்

யாத்திரை கேள்வி கேட்டு, தேடி, துழாவுவதில்தான்
ஆரம்பமாகிறது. ஆரம்பிக்க வேறு எந்த வழியும் இல்லை. வாழ்வின்
பொருள் என்ன என்று கேள்வி கேட்காத வரை, இந்த பிரபஞ்சத்தின் அடி ஆழ
மையத்தை தேடாத வரை, நீ துளி கூட நகர்வதேயில்லை. ஒரு அடி கூட
எடுத்து வைப்பதேயில்லை. அப்போதுதான் அந்த தேடுதல் துவங்குகிறது.

நீ பணத்தை தேடுகிறாய் என்றாலே பதவியை,
அதிகாரத்தை, கௌரவத்தை தேடுகிறாய் என்றுதான் பொருள்.

தேடுதலும் ஒரு வகையான மெலிதான ஆசைதான்.

உன்னிடம் எல்லாமும் உள்ளது, ஆனாலும் நீ எல்லா
இடத்திலும் தேடுகிறாய் என்பது வேடிக்கையான ஒன்றுதான்.

நீ எதையாவது செய்ய முயற்சிக்கும்போது, நீ உனது

அகம்பாவத்திற்கு தீனி தேடுகிறாய் என்று அர்த்தம்.

உன்னால் எங்கு உருவாக்க முடிகிறதோ அந்த திசையில்
தேட துவங்கு.
*******************************************************************************

1. தானாய் வாழ்தல்

மக்கள் வாழ்வைக் கண்டு பயப்படுகிறார்கள். நீ
நீயாய் இருக்க முடியும்போது தான் வாழ்க்கையை வாழ்வது சாத்தியமாகும். அப்படி தானாய்
இருக்க முடியாததால்தான் வாழ்வைக் கண்டு பயப்படுகிறார்கள். ஆடுவதில், பாடுவதில்,
நேசத்தில் நீ நீயாய் இருக்க வேண்டும். எதற்காக பயப்பட வேண்டும் நீ எதையும் இழக்கப்
முடியாது. நீ பெற வேண்டியதுதான் உள்ளது.

உன்னுடைய தானாயிருத்தல் யாருக்கும் கெடுதலை உண்டுபண்ணவில்லையென்றால்
அது மிகவும் ஆன்மீகமானது.

மிகவும் நாகரீகமானவனாக இருப்பது ஆபத்தாகக் கூட
அமையலாம். ஒரு சிறிதளவாவது தானாய் இருப்பது நல்லது.

உன்னுடைய தானாயிருத்தல் உன்னுடைய
சுதந்திரத்தன்மையின் வெளிப்பாடே.

நீ நீயாய் இருப்பதற்கு பயப்படுமாறு
வளர்க்கப்படுவது எல்லோருக்கும் நிகழும் ஒன்றே.

தன்னியல்புப்படி இருப்பதில் எந்த தவறையும் நான்
காணவில்லை.

2. பிரதிபலிப்பு

அறியாமைக்கு அதற்கே உரிய ஒரு அழகு, ஒரு தூய்மை
இருக்கிறது. அது ஒரு சுத்தமான கண்ணாடியைப் போன்றது. அது, தளும்பாமல் அமைதியாக
இருக்கும் குளம் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களையும் கரையில் உள்ள மரங்களையும்
பிரதிபலிப்பதைப் போல பிரதிபலிக்கும். தெரியாது என்ற அந்த நிலைதான் மனிதனின்
பரிணாமவளர்ச்சியில் மிக உயர்ந்த நிலையாகும்.

ஒரு கண்ணாடியைப்போல மிகவும் தூய்மையாக இரு. எதுவாக
இருந்தாலும் அதை வெறுமனே பிரதிபலிக்கும் கண்ணாடி போல.

நான் வெறும் விழிப்புணர்வு மட்டுமே, எதையும்
பிரதிபலித்துக் காட்டும் வெறும் ஒரு கண்ணாடி, என்றார் புத்தர்.

நீ ஒரு கண்ணாடி, எதையும் பிரதிபலிப்பவன் என்பதை
நினைவில் கொள்வது மட்டுமல்ல, அதை அனுபவி.

அறிவது தன்னை அறிவதுதான், அது கண்ணாடி தன்னைத்
தானே பிரதிபலிப்பதைப் போல.

பிரதிபலிக்க கண்ணாடி போல எப்போதும் தெளிவாக
இருக்க வேண்டும், அதுதான் கற்றலுக்கான நிலை.

3. உள்ளே போவது

ஒரு எளிமையான கூற்று, உள்ளே போவது. நீங்கள் என்ன
சொல்கிறீர்கள் என்று நீ என்னை கேட்கிறாய்.