*பிரபஞ்சம் உங்களிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறது.*
பிரபஞ்சமானது , மக்கள், சம்பவங்கள் , சின்னங்கள் , சகுனங்கள் , கனவுகள் , இவைகள் மூலமாக உங்களிடம்
பேசிக் கொண்டேதான் இருக்கிறது.
சிலர் மட்டுமே அதன் குரலை கேட்கிறார்கள்.
நாம் எல்லோருமே அவ்வப் போது நடக்கும்
பிரச்சனைகள் அல்லது பகல் கனவு காணுதல்
அல்லது நமக்கு பிரபஞ்ச செய்தி
சொன்னவரிடமே வாக்கு வாதம் செய்தல்
இப்படி செய்து பிரபஞ்ச செய்திகிடைப்பதை
தடுத்துக்கொள்கிறோம்!
பிரபஞ்ச ஆற்றல் என்பது காஸ்மிக் கதிர்கள்தான்.
இந்த காஸ்மிக் கதிர்கள் உலகில் மேலும்
கீழும் பரந்து வியாபித்து சஞ்சரித்துக்
கொண்டு இருக்கிறது.
நமது எண்ண அலைகள் இந்த காஸ்மிக் அலைகளின் பிரபாவத்தில் சேர்ந்து ஆற்றல்களை அதிகப்படுத்துகிறது ,
நம் எண்ண அலைகள் நல்லவையாக இருப்பின்
நன்மையும, தீயவையாக இருப்பின் தீமையும்
நமக்கு நடக்க செய்கிறது !
*நம் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி, சுக துக்கங்களுக்கு நம் எண்ணங்களே காரணம் !*