Monday 27 August 2018

மன்னிப்பு - ஜென் கதை

மன்னிப்பு''..(ஜென் கதை..)
.............................................

பான்கெய் என்ற ஜென் மாஸ்டர். தன்னுடைய சிஷ்யர்களுக்குப் போதனை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கே ஒரு பூசாரி வந்தார். உள்ளூர்க் கோவிலில் வழிபாடு நடத்துகிறவர் அவர். புத்தர்மீதோ ஜென்மீதோ அவருக்கு நம்பிக்கை இல்லை.

ஆகவே, அவர் புத்தரை இழிவுபடுத்திப் பேசினார். ‘ஜென் என்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம்’ என்றார்.

பான்கெய் அவரைக் கண்டிக்கவோ மறுக்கவோ இல்லை. ஐயா, உங்களுக்கு என்ன பிரச்னை?’ என்றார் அமைதியாக.

எங்களுடைய சாமி என்னென்ன அதிசயங்கள் செய்திருக்கிறது, தெரியுமா?’

‘தெரியவில்லை, சொல்லுங்கள்!’என்றார் ஜென்..

’அவர் நீர்மேல் நடப்பார், தீயை அள்ளி விழுங்குவார், அவர் ஒரு சொடக்குப் போட்டால் தங்கம் கொட்டும், நடனம் ஆடினால் பூமியே நடுங்கும்!’ என்றார் பூசாரி

இதுபோல் எந்த அதிசயமும் செய்யாத உங்கள் புத்தரையோ மற்ற ஜென் துறவிகளையோ கடவுள் என்று எப்படி என்னால் ஏற்றுக்கொள்ளமுடியும்?’

நீங்கள் நினைப்பது சரிதான் ஐயா’ என்றார் பான்கெய்.

ஆனால்,

எங்களால் வேறொரு பெரிய அதிசயத்தைச் செய்யமுடியும்.’

‘அதென்ன?’என்றார் அந்த பூசாரி..

அமைதியாகச் சொன்னார் பான்கெய்.

‘யாராவது தப்புச் செய்தால், எங்களுக்குத் துரோகம் இழைத்தால், அவமானப்படுத்தினால், அவர்கள்மீது எந்த வன்மமும் மனத்தில் வைத்துக்கொள்ளாமல் முழுமையாக மன்னித்து விடுவோம்!’

ஆம்.,நண்பர்க்ளே.,

மன்னிப்பு கேட்பது சமரசமாவதற்கு திறவுகோல்
மன்னிப்பு கேட்பது வலிமைமிக்கது. வன்முறையின்றி சச்சரவுகளை தீர்க்கிறது💐🙏🏻🌸