Tuesday 28 August 2018

நவ கிரக தியானம்

நம் பிரச்னையை நாமே தீர்த்து கொண்டு நம் வாழ்வில் சந்தோஷத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழ் வாங்கு வாழ எளிய நவ கிரக தியான பயற்சி.

என்னடா நம்ம சாப்பாட்டுக்கே கஷ்டபடுறோம்.

இவன் என்ன தியானம் செய்ய சொல்றனேனு நினைக்காதிங்க!

தற்போது நீங்கள் எப்படிபட்ட பிரச்சனைகள் கஷ்டங்கல இருந்தாலும் சரி இந்த வழி முறை மூலம் நிச்சயம் தீர்வு கிடைக்கும்.

நீங்கள் யாரிடமும் போக வேண்டாம்.

பணம் செலவு செய்ய வேண்டாம்.

தினமும் எப்போது நேரம் கிடைக்குமோ அப்பொழுது செய்யலாம்.

மிகவும் சுலபமான வழிமுறை
கை மேல் பலன்.

முதலில் கிழக்கு பக்கம் தரையில் மேட் அல்லது துணி போட்டு உங்கள் வசதிக்கு ஏற்றார் போல் அமருங்கள் சேர்,சோபாவில்லும், அமரலாம்.
பிறகு கண்களை மூடுங்கள்.

மூச்சு காற்றை ஆழ்ந்து பதினோரு முறை சுவாசியுங்கள்.

அடுத்ததாக உங்களுக்கு தற்போது நியாமாக
என்ன வேண்டுமோ அதை கோரிக்கை வையுங்கள். அதை மூன்று முறை கூறுங்கள்.

பிறகு ஒவ்வெரு கிரக நாயகர்களுக்கும் நாம் தனி தனியாக ஆத்மார்த்தமாக நன்றி கூறவேண்டும்.

1)சூரிய பகவானுக்கு நன்றி நன்றி நன்றி
2)சந்திர பகவானுக்கு நன்றி நன்றி நன்றி
3)அங்காரக பகவானுக்கு நன்றி நன்றி நன்றி
4)புதன் பகவானுக்கு நன்றி நன்றி நன்றி
5) குரு பிரகஸ்பதி பகவானுக்கு நன்றி நன்றி நன்றி
6)சுக்கிர பகவானுக்கு நன்றி நன்றி நன்றி
7)சனிஈஸ்வர பகவானுக்கு நன்றி நன்றி நன்றி
8)ராகு பகவானுக்கு நன்றி நன்றி நன்றி
9)கேது பகவானுக்கு நன்றி நன்றி நன்றி.

மெதுவாக கண்களை திறக்கவும்.

இப்படி நாம் கூறிய உடனேயே நம் மூளையில் இருந்து வெளிப்படும் மின் காந்த அலைகள் அந்த அந்த கிரக ஒளி கதிர்களுடன் இணைத்து.நம் ஜாதகத்தில்
கிரக நிலைகளுக்கு ஏற்றார் போல நன்மை களை வாரி வழங்குவார்கள்.

எப்படி என்று கேட்கிறீங்களா?
நமக்கு ஒருவர் பரிசு கொடுத்தா நன்றி சொல்லுவோம். இங்கே கொடுப்பதற்கு முன்பே நன்றி சொல்லிட்டோம்.

அதனால் அவர்கள் கண்டிப்பாக கொடுப்பார்கள் நம்பிகையுடன் முயற்சி செய்து பலன் அடைவோம்.

இதற்க்கு தட்சணை எது தெரியுமா இதை பின் பற்றி பலன் அடைந்தால் அதுவே நீங்கள் இந்த ப்ரபஞ்சத்திற்கு கொடுக்கும் தட்சணை.

உங்களுக்கு பிடித்து இருந்தால் அனைவருக்கும் பகிருங்கள்.
நன்றி நன்றி நன்றி.