உங்கள் மனதில் நிறைந்துள்ளவை எல்லாம் உங்களுடையவை அல்ல.
நீங்கள் அவற்றையெல்லாம் தாண்டியவர்கள்.
நீங்கள் அவற்றுடன் உங்களை அடையாளப் படுத்தி கொள்கிறீர்கள்.
அதுமட்டும்தான் பாவம்,
குற்றம்.
உதாரணமாக,
யாராவது உங்களை அவமதித்து விடுகிறார்கள்
நீங்கள் கோபமடைகிறீர்கள்
.நீங்கள் கோபம் அடைவதாக எண்ணுகிறீர்கள்.
ஆனால் அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது
அவரது அவமதிப்பு ஒரு ரிமோட் கண்ட்ரோல்.
உங்களை அவமதித்த மனிதன் உங்களுடைய நடவடிக்கையைக் கட்டுப் படுத்துகிறான்.
உங்களது சுதந்திரத்தை பறிக்கிறான் .
உங்களது கோபம் அவன் கையில் உள்ளது.
நீங்கள் ஒரு கைப்பாவையாகச் செயல் படுகிறீர்கள்.
இதில் இருந்து நீங்கள் விடுபட வேண்டும் .
நீங்கள் எதிர் செயல் செய்யாமல்
உங்கள் செயல்கள் உங்கள் விருப்பத்தில் இருந்து பிறக்க
வேண்டும் .
--- ஓஷோ ---