🌷 ஜென் தனி மனித விழிப்புணர்வையே வலியுறுத்துகிறது
நாம் ஒரே பயிற்சியை திரும்பத் திரும்ப செய்யும்போது அது
பழக்கமாகி இயந்திரத் தன்மையாகி விடுகிறது
அதில் பிறகு எந்த விழிப்புணர்வும் இருக்காது
பிரபஞ்ச மனம் எப்பொழதும் நிகழ் காலத்திலேயே இயங்கக் கூடியது
உங்கள் மனதை ஒன்றுமற்றதாக ஆக்குங்கள்
பிரபஞ்ச மனம் ஆகுங்கள் ஞானம் பெறுங்கள்
பிரபஞ்ச மனத்தில் காலம் இடம் மறைந்து விடுகின்றன
பக்தி என்பது அன்பின் வெளிப்பாடு பயத்தின் வெளிப்பாடு அல்ல
நமது முகம் அன்பால் மகிழ்ச்சியாக மலர்ந்து இருக்கட்டும்
கருணையோடு காதலோடு இருக்கட்டும்
எந்த வித பயமோ குற்ற உணர்வோ இருக்க வேண்டாம்
கடவுளைப் பற்றிய பலவகை எண்ணங்களே கடவுளை அடைய தடையாய் உள்ளன
பிரபஞ்ச மனம் தன்னறிவாய் தன்னுணர்வாய் செயல் படுகிறது
சூன்யம்தான் உருவமாகி வந்துள்ளது
உருவம் திரும்பவும் சூன்யம் ஆகும்
உடல் எப்பொழதும் நிகழ் காலத்திலேயே இருக்கும்
மனம்தான் இறந்த காலத்திலேயோ அல்லது எதிர் காலத்திலேயோ இருக்கும்
மனத்தை நிகழ் காலத்தில் வைக்கும் பயிற்சிதான் ஜென் 🌷
🌷ஓஷோ
ஜென்🌷