Wednesday 29 March 2017

மகிழ்ச்சி

😅 ஓஷோ ஜோக்ஸ் 😅

🐤 ஒரு பெண் ஒரு கிளியை விலைக்கு வாங்கினாள்.

ஆனால் பிறகு மிகவும் கவலைப்பட்டாள்

அதற்க்காக அவள் அதிக விலை கொடுத்திருந்தாள்.

கிளி அழகாக இருந்தது.

ஆனால் அது பேசும் ஒரு விஷயம் ஆபத்தாக இருந்தது.

அடிக்கடி அந்த கிளி உரக்க,

“ நீ ஒரு கெட்ட பெண்மணி” என்று கூறியது.

இதில் ஏதோ விஷயம் இருக்கிறது .

அந்தப் பெண் தனியாக வாழ்பவள்.

மிகவும் மதப்பற்றுள்ளவள்.

இல்லை யென்றால் ஏன் தனியாக வாழவேண்டும்.....???

அவள் மிகவும் கடுகடுப்பான பெண்.

இந்த கிளி மீண்டும் , மீண்டும் ,”நீ மிகவும் கொடுமைக்காரப் பெண்” என்று கூறியது.

அவள் பூசாரியிடம் சென்று

“ இந்த கிளி மிகவும் திட்டுகிறது .. நான் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறேன்.

கிளி மிகவும் அழகாக இருக்கிறது . எல்லா விஷயங்களும் நன்றாக இருக்கின்றன,

இதன் பேச்சை தவிர ” என்று கூறினாள்.

பூசாரி சொன்னார் :

“ கவலைப்படாதே. என்னிடம் இரண்டு பக்தியுள்ள கிளைகள் இருக்கின்றன.

ஒன்று வழிபாடு செய்யும் ;

மற்றொன்று மணியடிக்கும்

நீ உன் கிளியைக் கொண்டு வா,

இந்த கிளிகளுடன் கொஞ்ச நாள் உன் கிளியை விட்டுச் செல்.

நல்ல நட்பு எப்போதும் உதவி செய்யும்.

பின்னர் உன் கிளியை எடுத்துச் செல்லாம் ! “

அந்த பெண்ணுக்கு இந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது.

அவள் ஒப்புக் கொண்டு கிளியை எடுத்து வந்தாள் .

பூசாரி தன் கிளிகளுக்கு அந்த கிளியை அறிமுகப் படுத்தி வைத்தார்.

ஆனால் அவர்கள் எதுவும் பேசும்முன் அந்தக் கிளி கூறியது . “ நீ மிகவும் கொடுமைக்காரப் பெண் .”

பூசாரியும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார்.

அப்போது வழிபாடு செய்து கொண்டிருந்த கிளி

வழிபாட்டை நிறுத்திவிட்டு அடுத்த கிளியிடம்

” முட்டாளே ! இன்னும் ஏன் மணியாட்டிக்கொண்டிருக்கிறாய் ?

நம் பிராத்தனைகள் நறைவேறி விட்டன “

என்று கூறியது .

அவை தங்களுக்கு ஒரு ஜோடி பெண் கிளி கிடைக்க வேண்டும் பிராத்தனை செய்து வந்திருந்தன

ஓஷோ கூறுகிறார் :

"யாராவது பிரார்த்தனை செய்வதைப் பார்த்தால்

ஏதோ தவறு நடக்கிறது என்று உண்மையில் சந்தேகப்படு.

அவர்கள் பண்த்துக்காக,

பெண்ணுக்காக,

மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.

உண்மையில் மகிழ்ச்சியான மனிதன் பிரார்த்தனை செய்வதில்லை.

மகிழ்ச்சிதான் அவன் வழிபாடு ,

அதைவிட உயர்ந்த சிறந்த வழிபாடு இருக்க முடியாது" 🐤

🐥 ஓஷோ 🐥