😅 ஓஷோ ஜோக்ஸ் 😅
🐤 ஒரு பெண் ஒரு கிளியை விலைக்கு வாங்கினாள்.
ஆனால் பிறகு மிகவும் கவலைப்பட்டாள்
அதற்க்காக அவள் அதிக விலை கொடுத்திருந்தாள்.
கிளி அழகாக இருந்தது.
ஆனால் அது பேசும் ஒரு விஷயம் ஆபத்தாக இருந்தது.
அடிக்கடி அந்த கிளி உரக்க,
“ நீ ஒரு கெட்ட பெண்மணி” என்று கூறியது.
இதில் ஏதோ விஷயம் இருக்கிறது .
அந்தப் பெண் தனியாக வாழ்பவள்.
மிகவும் மதப்பற்றுள்ளவள்.
இல்லை யென்றால் ஏன் தனியாக வாழவேண்டும்.....???
அவள் மிகவும் கடுகடுப்பான பெண்.
இந்த கிளி மீண்டும் , மீண்டும் ,”நீ மிகவும் கொடுமைக்காரப் பெண்” என்று கூறியது.
அவள் பூசாரியிடம் சென்று
“ இந்த கிளி மிகவும் திட்டுகிறது .. நான் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறேன்.
கிளி மிகவும் அழகாக இருக்கிறது . எல்லா விஷயங்களும் நன்றாக இருக்கின்றன,
இதன் பேச்சை தவிர ” என்று கூறினாள்.
பூசாரி சொன்னார் :
“ கவலைப்படாதே. என்னிடம் இரண்டு பக்தியுள்ள கிளைகள் இருக்கின்றன.
ஒன்று வழிபாடு செய்யும் ;
மற்றொன்று மணியடிக்கும்
நீ உன் கிளியைக் கொண்டு வா,
இந்த கிளிகளுடன் கொஞ்ச நாள் உன் கிளியை விட்டுச் செல்.
நல்ல நட்பு எப்போதும் உதவி செய்யும்.
பின்னர் உன் கிளியை எடுத்துச் செல்லாம் ! “
அந்த பெண்ணுக்கு இந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது.
அவள் ஒப்புக் கொண்டு கிளியை எடுத்து வந்தாள் .
பூசாரி தன் கிளிகளுக்கு அந்த கிளியை அறிமுகப் படுத்தி வைத்தார்.
ஆனால் அவர்கள் எதுவும் பேசும்முன் அந்தக் கிளி கூறியது . “ நீ மிகவும் கொடுமைக்காரப் பெண் .”
பூசாரியும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார்.
அப்போது வழிபாடு செய்து கொண்டிருந்த கிளி
வழிபாட்டை நிறுத்திவிட்டு அடுத்த கிளியிடம்
” முட்டாளே ! இன்னும் ஏன் மணியாட்டிக்கொண்டிருக்கிறாய் ?
நம் பிராத்தனைகள் நறைவேறி விட்டன “
என்று கூறியது .
அவை தங்களுக்கு ஒரு ஜோடி பெண் கிளி கிடைக்க வேண்டும் பிராத்தனை செய்து வந்திருந்தன
ஓஷோ கூறுகிறார் :
"யாராவது பிரார்த்தனை செய்வதைப் பார்த்தால்
ஏதோ தவறு நடக்கிறது என்று உண்மையில் சந்தேகப்படு.
அவர்கள் பண்த்துக்காக,
பெண்ணுக்காக,
மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.
உண்மையில் மகிழ்ச்சியான மனிதன் பிரார்த்தனை செய்வதில்லை.
மகிழ்ச்சிதான் அவன் வழிபாடு ,
அதைவிட உயர்ந்த சிறந்த வழிபாடு இருக்க முடியாது" 🐤
🐥 ஓஷோ 🐥