Friday 5 August 2016

உங்க குழந்தைகளோட ஞாபக சக்தி

🔵🌍🌹🔵🌍🔵🌹🔵🌹
உங்க குழந்தைகளோட ஞாபக சக்தியை சோதித்து பாருங்கள்.
இதை பொருத்துதான் அவர்களின் மார்க்  அமையும்.
பெற்றோர்களாகிய நீங்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
முதலில் கிழ் கண்ட 40 வார்த்தைகளை உங்கள் குழந்தையால் மனப்பாடம் செய்ய முடிகிறதா என கவனியுங்கள்.
PENCIL  ............................ BELL
DUCK    .............................BAG                       
BOW      ............................CARROT
CHAIR   .............................T.V.
LADY  ...............................PEN DRIVE
ELEPHANT .......................FACEBOOK
BOOMERANG  .................EARTH
CLOCK   ...........................TEACHER
TENNIS  ............................MOON
BALL     ............................ RIVER
HELMET   ..........................TREE
REMOTE  .........................HAIR
TEA CUP  .........................BIRD
KEY      .............................CLOCK
TOMATO  ........................STAR
TIGER     .........................SUN
MOTHER   .......................FIRE
CAT    ..............................DOG
BULB    ............................ CALENDAR
BOARD  ..........................BROTHER.
.
சரி. இனி பயிற்சிக்கு செல்வோம்.
1.மேற்கண்ட வார்த்தைகளை உங்கள் குழந்தைகள் 15 நிமிடங்களுக்குள் மனப்பாடம் செய்ய வேண்டும்.
2. மேற்கண்ட 40 வார்த்தைகளையும் வரிசையாக சொல்ல வேண்டும்
3. மேற்கண்ட 40 வார்த்தைகளையும் தலைகீழாக சொல்ல வேண்டும்
4.இடையில் ஒரு வார்த்தையை கேட்டு அதற்கு முன்னும் பின்னும் உள்ள வார்த்தைகளையும் கூற வேண்டும்.
இதற்கு உங்கள் குழந்தைகள் சரியாக பதில் கூறிவிட்டால் நிச்சியமாக எதிர்காலத்தில்  எப்போதும் எதிலும் NO :1 ஆக இருப்பார்கள்.
.
ஒரு வேளை உங்கள் குழந்தையால் இதனை செய்ய முடியவில்லை எனில் அவர்களின் ஞாபக சக்தி குறைவாக உள்ளது என கண்டு கொள்க.
உண்மையில் உங்கள் குழந்தைகளிடம் மிக அதிகமான சக்திகள் உள்ளன. அதனை சரியான நேரத்தில் சரியான வகையில் வெளியில் கொண்டு வர வேண்டும். ஏனெனில் நமது மூளைக்கு அபார சக்தி உள்ளது. இதனை பெரும்பாலான மக்கள் பயன்படுத்த முடியாமல் இருக்கின்றனர்.மேலும் இதனை முறையாக பயன்படுத்தும் இரகசியங்களையும் அறியாமல் உள்ளனர். இந்த இரகசியங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட மக்களிடையே மட்டும் எப்போதும் இருந்து வருகிறது.
.
இதெல்லாம் சாத்தியமே இல்லை என நீங்கள் கூறினாலும் சரி
இதற்கு எல்லாம் பிறப்பிலேயே அதீத ஞானம் இருக்க வேண்டும் என கருதினாலும் அதுவும் உண்மையே.
.
ஏனெனில் நீங்கள் இடது மூளையை மட்டுமே பயன்படுத்துபவராக இருக்க வேண்டும். உங்களை போலவே உங்கள் குழந்தையும் இடது மூளையையே பயன்படுத்தி இதெல்லாம் முடியாது என கூறிவிடும். இடது மூளையை மட்டுமே அதிகம் பயன்படுத்துபவர்கள் அனைவருமே எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் முடியாது சாத்தியமில்லை நடக்காது வாய்ப்பேயில்லை என்று கூறி நடையை கட்டிவிடுவார்கள்.( உலகில் 90 இப்படித்தான்)
.
வலது மூளையை பயன்படுத்துபவர்கள் இந்த உலகையே மாற்றியமைக்கிறார்கள் மேலும் தங்கள் வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றியை பெருகின்றனர். இன்று நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு விஷயமும் வலது மூளைக்காரர்களாள் கண்டுபிடிக்கப்பட்டதே.அது ஆன்மீகமாகட்டும் அறிவியலாகட்டும் மற்றும் நாம் பயன்படுத்தும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் சரி அது வலது மூளைக்கரார்களின் முயற்சியே.
.
முடியும் என்று நினைத்ததால் இந்த செய்தியை உங்களால் படிக்க முடிகிறது.
முடியும் என்று நினைத்ததால் மனிதனுக்கு மிருகங்கள் வசப்பட்டன.
முடியும் என்று நினைத்ததால் மனிதன் சக்கரத்தை கண்டுபிடித்தான்.
முடியும் என்று நினைத்ததால் மனிதன் மின்சாரத்தை கண்டுபடித்தான்.
முடியும் என்று நினைத்ததால் மனிதன் பல்பை கண்டுபிடித்தான்.
முடியும் என்று நினைத்ததால் மனிதன் பறக்கத் தொடங்கினான்.
முடியும் என்று நினைத்ததால் மனிதன் தொலைபேசியை கண்டுபிடித்தான்.
முடியும் என்று யாரோ சிலர் நினைத்ததால் இநத செய்தியை உங்களால் கம்பியுட்டரிலும் கைபேசியிலும் படிக்க முடிகிறது.
.
உண்மையில் நமது குழந்தைகள் அனைவரும் வளமான மற்றும் வலுவான வலது மூளை இயக்கத்தை பெற்றவர்களே. தங்கள் பிள்ளைகள் மிகப்பெரிய சாதனையாளராக வரவேண்டும் என்பதே அனைத்து பெற்றோர்களின் ஆழ்மன விருப்பம். தங்களால் செய்ய முடியாததை தங்கள் குழந்தைகள் செய்துவிட வேண்டும். தங்கள் வாழ்ந்த கஷ்ட வாழ்க்கையை தங்கள் பிள்ளைகள் வாழ்ந்து விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கின்றனார்.நமது கஷ்டம் நம்மோடு செல்லட்டும்  நம்ம பிள்ளைகளுக்கு வேண்டாம் என நினைத்து உள்ளம் கலங்கும் பெற்றோர்கள் பல கோடி.
.
உங்கள் அனைவருக்கும் வலது மூளையை பயன்படுத்தி படிக்கத்தொடங்கினால் நாம் பள்ளிகளில் கற்று வரும் அனைத்து பாடங்களும் ஒரே மாதத்தில் தலைகீழாக நினைவுபடுத்தி சொல்ல முடியும் என்ற உண்மை தெரிந்துவிட்டால் நீங்கள் சும்மாயிருப்பீர்களா? அந்த கல்வியை உங்கள் குழந்தைகளுக்கு நிச்சயம் கொடுத்துவிடுவீர்கள் அல்லவா?
.
பள்ளிகளில் இது போன்ற கல்வியை கற்றுத்தரவே மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இந்த முறை தெரியாது. தெரிந்திருந்தால் உங்கள் குழந்தைகள் அனைவரும் அனைத்து பாடங்களிலும் குறைந்தபட்சம் 80 எடுத்திருப்பார்கள். பள்ளிகளில் இடது மூளையை பயன்படுத்தியே கற்கும்படியே செய்கின்றனர். அதனாலேயே பெரும்பான்மையான குழந்தைகளால் அதிக மதிப்பெண்கள் பெற முடிவதில்லை.
.
பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும் என்பதற்க்காகவே அதிக செலவு செய்து நல்ல பள்ளிகளில் சேர்க்கின்றோம். அங்கு அவர்கள் படிக்கவில்லையென்றால் மீண்டும் நம்மிடமே உங்கள் பிள்ளை நன்றாக படிக்கவில்லை என கூறுகின்றனர்.இது எந்த வகையில் நியாயம்.
.
உண்மையில் நமது குழந்தையின் மூளைக்கு முன் இன்றை பாடங்கள் அனைத்தும் சர்வ சாதாரணம். இந்த பாடங்கள் அனைத்தும் அவர்களின் அறிவுக்கு யானை பசிக்கு சோளப்பொறி போன்றதே.
.
இந்த மூளையை நன்கு இயக்க 5 விதமான சக்திகள் தேவைபடுகின்றன. இந்த 5 சக்திகளையும் 5 வயது முதல் கொடுத்துவிட  வேண்டும். இதனை முறையாக தினமும் கொடுப்பதால் அவர்கள் எப்போதும் வெற்றிகரமான வாழ்க்கையை மட்டுமே அனுபவிப்பார்கள்.💦
☘☘☘☘☘☘☘☘☘