Tuesday 30 August 2016

புரிதல்களும், வாழ்க்கையும்

தவளைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஒருவன்.

"தாவு"என்று சொன்னால் தாவும்படி பழக்கியிருந்தான் அவன் தவளையை.

ஆராய்ச்சியில்,

ஓர் காலை வெட்டி விட்டு "தாவு"என்றான்,
தாவியது.

இரண்டாம் காலை வெட்டி விட்டு"தாவு"என்றான்,
வலியோடு தாவியது.

மூன்றாம் காலை எடுத்தும் " தாவு" என்றான்,
மிகுந்த வலியோடு ஒற்றைக் காலால் தாவியது.

நான்காம் காலையும் வெட்டி விட்டு "தாவு"என்றான்,
நகர முடியாமல் பரிதாபமாய் படுத்துவிட்டது.

மறுபடி தாவச் சொல்லி கத்திக் கொண்டேயிருந்தான்,
அதனிடமிருந்து அசைவேயில்லை!

தன் ஆராய்ச்சி முடிவை இப்படி எழுதினான்,
"நான்கு கால்களையும் வெட்டி எடுத்து விட்டால்,
தவளைக்கு காது கேட்காது" என்று.

நிகழ்கால சமூகத்தில்
இப்படித் தான் சிலரின் புரிதல்களும், வாழ்க்கையும் உள்ளது.