.சிரிப்பு
ஆழமான சிரிப்பில் மனம் கரைந்துவிடுகிறது.
சிரிப்பு மனதின் பாகமோ, இதயத்தின் பாகமோ அல்ல.
உண்மையான சிரிப்பு உனது அடிவயிற்றின் ஆழத்திலிருந்து வரும்போது அது உனது மையத்திலிருந்து வருகிறது. அலைகள் மையத்திலிருந்து கிளம்பி வெளிவட்டத்துக்கு வருவது போல உண்மையான சிரிப்பு உனது மையத்திலிருந்து கிளம்பி அலையலையாய் வெளிப்புறத்துக்கு வரும்.
சிரிப்பு உன்னுள் ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கும்.
நீ உன்னைப் பார்த்து சிரிப்பதுதான் உண்மையான சிரிப்பு.
எப்போதும் உனது அடி வயிற்றிலிருந்து வருவதுதான் உண்மையான சிரிப்பு.
நீ சிரிக்கும்போது எதிர்காலத்திலோ, இறந்த காலத்திலோ இருக்க முடியாது.
சிரிப்பு முடிவானதின் வாயிலை திறக்கக் கூடும்.
ஓஷோ..✨✨