விளக்கின் சுடரை அனைத்துவிட ஆசைப்படுகிறீர்கள்.ஆனால் அதற்குப் பதில் விளக்குக்கு மேலும் எண்ணெய் வார்க்கிறீர்கள். அதுதான் பிரச்சினை.
ஒரு கையால் விளக்கின் சுடரை அனைக்க முயன்று கொண்டே மறுகையால் விளக்கிற்கு எண்ணெய் ஊற்றவும் செய்கிறீர்கள்.
முதலில் எண்ணெய் ஊற்றுவதை நிறுத்துங்கள். விளக்கில் மீதமிருக்கும் எண்ணெய் விரைவில் தீர்ந்து விடும். பிறகு விளக்கு தானே அணைந்து போய்விடும்.
விளக்கிற்கு எது எண்ணெயாக இருக்கிறது?
ஏதாவது ஒரு எண்ணம் உங்களை ஆக்கிரமிக்கும் போது நீங்கள் அதனுடன் கலந்து விடுகிறீர்கள்.
--ஓஷோ--
உண்மையை உங்களுக்கு என்னால் வழங்க முடியாது.ஆனால் நான் உங்களுக்கு நிலவை சுட்டி காட்டலாம்.தயவு செய்து நிலவை சுட்டி காட்டும் விரலை பற்றி கொள்ளாதீர்கள்.விரல் காணாமற் போய்விடும்.நிலவு அப்படியே இருக்கும்.