ஓஷோ எனப் பரவலாக அறியப்படும் ரஜ்னீஷ் (Rajneesh Chandra Mohan Jain, டிசம்பர் 11, 1931 - ஜனவரி 19, 1990) இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களுள் ஒருவர். மிகச் சிறந்த பேச்சாளரான இவர் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பெருமளவு உரையாற்றினார். இவரது பேச்சுக்கள் பெருமளவு நூல்களாக வெளிவந்துள்ளன. இவற்றில் பல தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. புத்தர், கிருஷ்ணர், குரு நானக், இயேசு, சாக்கிரட்டீஸ், ஜென் குருக்கள் போன்ற பல்வேறு சமய ஞானிகளின் பங்களிப்புத் தொடர்பாகவும் இவர் கருத்துக்களைக் கூறியுள்ளார். இவரது பேச்சுக்களின் போது கூறிய குட்டிக்கதைகள் பிரபலமானவையாகும்.
ரஜனிஷ் சந்திர மோகன் ஜெயின் டிசம்பர் மாதம் 11 முதல் 1931 -ஜனவரி 19, 1990 வரை வாழ்ந்தார். 1960 முதல் என்ற ஆச்சர்ய ராஜனீஷ் என அறியப்பட்டார். 1970 மற்றும் 1980 களில் பகவான் ஸ்ரீ ரஜனிஷ் என தன்னைத் தானே அழைத்துக் கொண்டார்.1989 ல் ஓஷோ எனவும் இந்திய ஆன்மிக குருவாகவும் அறியப்பட்டார்.
ஒரு தத்துவ விரிவுரையாளராக 1960 களில் இந்திய முழவதும் சென்று சொற்பொழிவுகள் நடத்தினார்.பொதுவுடைமை,மஹாத்மா காந்தி , மற்றும் நிலையான ஒழுங்கமைப்பு முறையுள்ள மதங்களைப் பற்றிய அவரின் மாறுபட்ட கருத்துக்களினால் எதிர்ப்புகள் தோன்றின.பாலுணர்வு குறித்த அவரின் வெளிப்படையான வாதங்களினால் அவர் செக்ஸ் குரு என உலக பத்திரிக்கைகள் அவரை மேற்க்கோள் காட்டின.[1]1970-ல் சிறிது காலம் மும்பையில் தங்கி இருந்தார்.
நான் எந்தவிதமான ஓழுங்கங்களையும்
கட்டுப்பாடுகளையும் கற்பிப்பதில்லை.
பிரக்ஞை மட்டுமே நான் கற்பிக்கும் விடயம்.
பிரக்ஞையுடன் நீங்கள் ஏது செய்தாலும்
அது சரியாக இருக்க வேண்டும்.
ஏனனில் பிரக்ஞையில்
நீங்கள் ஏதுவும் தவறாக செய்ய முடியாது.
இக் கணத்தை எவ்வாறு அழகுபடுத்துவது என்பது தான்
எனது முழு முயற்சியும்.
மனிதர்கள் மேலும் ஆனந்தமாகவும்
கொண்டாட்டமாகவும் வாழ்வதற்கு என்ன செய்வது?
எவ்வாறு அவர்களை தயார் படுத்துவது?
இதன் சிறு அளவையாவது சுவைக்க எவ்வாறு வழங்குவது?
உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு சிரிப்பை வரவழைப்பது?
என்பதே என் முழு முயற்சியும்.
நான் ஒரு இறுக்கமான மனிதனல்ல
விளையாட்டுத்தனத்திலிருந்தே
உங்களுக்கு சொல்லவேண்டியதை சொல்கின்றேன்.
என்னுடைய செய்தி மிகவும் சாதாரணமானது.
கடவுள் எனக்குள் இருக்கின்றார் என்பதைக் கண்டுபிடித்தேன்.
என்னுடைய முழு முயற்சியும்
உங்களையும் உங்கள் உள்ளே பார்க்கச் செய்வதே.
இது சாத்தியமானது.
இதற்காக உங்களுக்கு உதவி செய்வதற்கோ
அல்லது பாதுகாப்பளிப்பதற்கோ
நான் இங்கு இருக்கவில்லை.
உங்களுக்கு உதவி செய்தால்
பழையதே தொடரும்.
எல்லாவகையான உதவிகளும்
பழையனவற்றுக்கு உதவுவதற்கே.
பழைய வாழ்விற்கே.
நான் எந்தவகையிலும் இதற்கு உதவப் போவதில்லை.
மாறாக உங்களை அழிப்பதற்கே வந்திருக்கின்றேன்.
ஏனனில் அதிலிருந்துதான் புதியது பிறக்கும்.
புதிய மனிதர். புதிய பிரக்ஞை.
எனக்கு என்னுடைய கருத்தியலுக்கு
மற்றவர்களை மாற்றவேண்டும் என்பதில்
எந்தவிதமான ஆர்வமும் இல்லை.
அப்படி ஒரு கருத்தியலும் என்னிடம் இல்லை.
ஒருவரை இன்னுமொரு கருத்தியலுக்கு
மாற்ற முயற்சிப்பது அடிப்படையில்
ஒரு வன்முறையான செய்பாடு என்பதே என் நம்பிக்கை.
இது ஒருவரின் தனித்துவத்தில் தலையீடுவதாகும்.
தனிநபர் சுதந்திரத்தில் தலையீடுவதாகும்.
நீங்கள் நினைப்பது போல்
நான் ஒரு ஆன்மிகவாதியல்ல.
நான் எந்தக் கோயில்களுக்கும் சென்றதில்லை.
எந்த சமய புத்தகங்களும் கற்றதில்லை.
எதையும் பின்பற்றியதுமில்;லை.
கடவுளை வணங்கியதுமில்லை பிராத்தித்ததுமில்லை.
அது என் வழியல்ல.
நீங்கள் நினைக்கும் ஆன்மிக செயற்பாடுகள் ஒன்றும்
நான் செய்ததில்லை.
எனது ஆன்மீகம் வேறுவகையானது.
இதற்கு நேர்மையான மனிதர் தேவை.
இது யாரிலும் தங்கியிருப்பதற்கு விடாது.
எந்த விலை கொடுத்தும் சுதந்திரமாக இருக்கும்.
கூட்டத்தலிருந்து தனித்து இருக்கும்.
ஏனனில் கூட்டம் உண்மையை கண்டுபிடிப்பதற்கல்ல.
உண்மையை ஒவ்வொருவரும் தனித்தனியாகவே அறியலாம்.
என் முழு முயற்சியும் ஒரு புதிய ஆரம்பத்திற்கே.
இதனால் உலகம் முழுவதிலிருந்தும்
எனக்கு எதிரான கருத்துக்கள்
கண்டனங்கள் வருவதும் தவிர்க்கமுடியாதது.
அதைப்பற்றி பரவாயில்லை.
அதை யார் கணக்கில் எடுப்பது.
நீங்கள் என்னைப் புரிந்துகொள்வதற்காக
நான் இங்கு இல்லை.
உங்களை நீங்கள் புரிந்து கொள்வதற்காகவே
நான் இங்கு இருக்கின்றேன்.
நீங்கள் ஒரு திறக்கப்படாத புத்தகம்.
அது திறக்கப்படவேண்டும்.
அதை எவ்வாறு திறப்பது என்பதையும்
அதற்கான சாவியையும்
உங்களுக்கு அறிமுகப்படுத்தவே
இங்கு நான் இருக்கின்றேன்.
சாவியைக் கொண்டு புத்தகத்தை திறந்து விட்டீர்கள் என்றால்
உங்கள் பயணம் தொடரும்…
உங்களுக்கான பாதையில்…
என் வேலை அதனுடன் முடிந்துவிடும்.
இதன் பின் நான் தேவையில்லை.
ஓசோ தொடர்பாக மேலும் அறிவதற்கு அவரது புத்தகங்களே வாசிப்;பதே ஒரு வழி. மிகச் சரியான வழி அவர் வழிகாட்டும் பாதையில் தியானம் செய்வதன் மூலம் பயணிப்பது, அனுபவத்தில் அறிவது.
தியானம்! நான் யார்? என்பதை அறிவதற்கு…
தியானம் என்பது என்ன?
இருக்கும் இடத்தில் இருப்பது.
நாம் நாமாக இருப்பது.
முழுமையாக இருப்பது.
மனவோட்டங்களை எண்ணங்களைக் கவனிப்பது.
உணர்வுகளை உணர்ச்சிகளை கவனிப்பது.
மனதைச் சுத்தப்படுத்துவது.
இதன்மூலம் மனதிற்கு அப்பால் செல்வது.
ஓவ்வnhரு கணமும் பிரக்ஞையாக இருப்பது.
இவ்வாறு இருக்க முடியுமானால் மேற்குறிப்பிட்டவை தாமாகவே நடைபெறும்.
ஆனால் யதார்த்தத்தில்
நாம் முழுநேரமும் பிரக்ஞையாக இல்;லை.
இதுவே நாம் அறியாதது.
தியானம் என்பது ஒன்றைக் குறித்து கவனிப்பதோ (concentration)
சிந்திப்பதோ (thinking) ஒன்றைப்பற்றி ஆராய்வதோ (contemplation) அல்ல.
ஏனனில் இவற்றில் எல்லாம் மனம் தொடர்பு கொள்கிறது.
தியானம் என்பது மனம் கடந்து செல்லவது.
மனதுக்கு அப்பால் செல்வது ஆகும்.
தியானம்!
நம்மை அமைதியான நிலைக்கு அழைத்துச்செல்லாது.
அமைதி நம்மில் நிலவுவதற்கான
ஒரு சூழலை நிலைமையை நம்மிடம் உருவாக்கும்.
எப்பொழுதெல்லாம் அமைதி நிலவுகின்றதோ
அப்பொழுதெல்லாம் நம் வாழ்க்கையில் சிரிப்பு நிகழ்கின்றது.
கவலை கொள்ளமாட்டோம். மன அழுத்தம் வராது.
உலகத்திலிருந்து தப்பித்து ஒடமாட்டோம்.
இந்த உலகத்திலையே இருப்போம்.
ஆனால் நடைபெறும் அனைத்தையும்
ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்வோம்.
ஒரு அழாகான விளையாட்டாக ...
மிகப்பெரிய ஒரு நாடகமாக எடுத்துக்கொண்டு
ஆடிப்பாடி மகிழ்வோம்.
விளையாட்டுத்தன்மை உள்ளவர்களாக வாழ்வோம்.
நம்முள்ளே அமைதி நிலைமையை உருவாக்குவதற்கான தியான வழிமுறைகள் பல உள்ளன. குறிப்பாக 118 அடிப்படை வழிமுறைகள் உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு இக் கால மனிதர்களுக்கு ஏற்றவகையில் ஓசோ பல தியான முறைகளை உருவாக்கி உள்ளார். இதில் மிகவும் பிரபல்யமானது. டைனமிக் (dynamic meditation) தியானமுறை. இது இதுவரை காலமும் பின்பற்றப்பட்ட மரபு நிலை தியான முறைகளிலிருந்து வித்தியாசமானது. நமக்குள் இருக்கும் சக்தியை வெளிக் கொண்டுவரச் செய்வது.
டைனமைட், கற்களை வெடித்து சிதறடிப்பதுபோல்,
டைனமிக் தியானம் ,
நம் கடந்த காலத்தை
நாம் அடக்கிய உணர்ச்சிகளை
நாம் அடக்கிய உணர்வுகளை
வெடிக்கச் செய்து
படைப்புச் சக்தியாக மாற்றுகின்றது.
நமது வாழ்க்கை எந்தநேரமும் அவசரம் பயம் சந்தேகம் என பல அமைதியற்ற தன்மைகளைக் கொண்டது. இவற்றை எவ்வாறு அமைதியாக்குவது? கடந்த காலத்தில் நாம் விரும்பியது ஆனால் பண்பாடு கலாசாரம் நாகரிகம் கருதி நாம் தவிர்த்தது அடக்கியது நம்மை விட்டுச் சென்று இருக்காது நமக்கே தெரியாமல் நமக்குள் இன்றும் வாழ்கின்றது. எந்த நேரமும் வெளியில் எட்டிப்பார்த்து நம்மை அலைக்கழிக்கும்.
இதை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது
முதலில் நம் உடலில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.
உடலை அமைதியாக இயல்பாக வைத்திருக்கப் பழகுவது.
இதன் பின் மனதை அமைதியாக்குவது.
நம் மிகப்பெரிய சவால் நம்முடன் இருந்துகொண்டே
நம்மைக் கொல்லும் மனத்தை அமைதியாக்குவது தான்.
உடலைப் போல மனதை அவ்வளவு இலகுவாக அமைதியாக்க முடியாது.
ஆனால் உடலை அமைதியாகக்கப் பழக்கினோம் என்றால்
மனதையும் வழிநடத்தலாம்.
மனம் அமைதி ஆக இருக்குமாயின்
அப்பொழுது இதயத்திற்குச் செல்லலாம்.
நம் உணர்வுகள் உணர்ச்சிகள் மனதை விட மேலும் சிக்கலானவை.
ஆனால் நம்பிக்கையுடன் இதயத்தை அனுகினால்
இதையும் அமைதியாக்குவது சாத்தியம்.
இதன்பின் நம் மையத்திற்கு
அதாவது உடல் மனம் இதயம் என்பவற்றுக்கு அப்பால்
நம் இருத்தலின் மையத்திற்கு செல்லலாம்.
இங்கு அமைதியாக இருக்கலாம்.
இந்நிலையில் நம்மில் ஆனந்தம் பிறக்கும்
பேரின்பம் கொள்வோம். என்கின்றனர் அனுபவித்த பலர்.
முழு இயற்கையும் நடனமாடுகின்றது மனிதரைத் தவிர.
மனிதர்; இயற்கையை புரிந்துகொண்டால் கடவுளுக்கு மேலேயும் உயரலாம். புரிந்துகொள்ளவில்லை ஏனில் மிருக நிலைக்கு கீழேயும் விழலாம்.
மனிதருக்கு மட்டுமே சாத்தியமான சிறந்த ஆற்றல் இது.
ஓவ்வொரு நாளும் ஒரு நேரத்தை ஓதுக்குங்கள்.
மிகவும் வசதியாக கஸ்டம் எதும் இல்லாமல் இருக்குமாறு உடலை சரிசெய்யுங்கள். கண்ணை மூடியவாறே மூக்கின் நூனியைக் கவனியுங்கள்.
மூச்சு உள்ளே வருவதையும் வெளியே செல்வதையும் கவனியுங்கள்.
இத் தியான முறை நம்மிடம் அமைதியை உருவாக்கின்றது.
இம்முறை மூலமே கௌதம சித்தாத்தர் என்ற இளவரசர் புத்தர் நிலையை அடைந்தார்.
புத்தர் நிலை என்பது தன்னை கண்ட நிலை.
உண்மையை உணர்ந்த நிலை அதாவது ஞானம் அடைந்த நிலை!
அனைத்தும் அறிந்த நிலை.
எதையும் துறக்காமல்
உலகத்தை விட்டு காட்டுக்கு ஓடாமல்
நாளாந்த வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே
நாம் ஒவ்வொருவரும் புத்தர் என்பதை அறிய
தினந்தோறும் தியானம் செய்வோம்;.
ஒருவரின் மனம் அமைதியாக இல்லை எனில்
இமய மலைக்குச் சென்றாலும் அமைதியாக இருக்காது.
ஒருவரின் மனம் சந்தையிலும் அமைதியாக இருக்குமாயின்,
பிரக்ஞையாக இருப்பாராயின் அவர் தியான நிலையில் இருக்கின்றார்.
இவருக்கு ஞானம், பேரின்பம் சந்தையிலும் கிடைக்கும்.
சந்தையிலும் அதாவது நம் சாதராரண நாளாந்த வாழ்க்கையிலும் அமைதியாகவும் பிரக்ஞையாகவும் ஆனந்தமாகவும் வாழ்வதற்கே ஓசோ நமக்கு வழிகாட்டுகின்றார். ஓவ்வொரு தியான முறைகளும் இந் நிலையை நோக்கி நம்மை வழிநடத்துகின்றன.
தியான முறைகள்
படகுகள் போல
ஆற்றைக் கடப்பதற்கு மட்டுமே
தியான நிலையை அடைவதற்கான
பேரின்பத்தை அனுபவிப்பதற்கான
ஒரு ஊடகம்.
ஒரு பாதை.
மானுட விடுதலைக்கும் உலக அமைதிக்கும் ஆனந்தமான வாழ்க்கைக்கும்
இவர் வழிகாட்டும் பாதை இது.
தேடுங்கள்! உங்கள் உள்ளே! தியானப்பயிற்சியே ஒசோவின் வழிமுறை.