Wednesday 5 August 2015

எட்டு இடங்களில் ஜீவசமாதி கொண்ட கோரக்கர்

எட்டு இடங்களில் ஜீவசமாதி கொண்ட கோரக்கர் !!!
ஒரு கிராமத்தில் ஆலமரத்தடியில் தனிமையில் நின்று அழுதுகொண்டிருந்தாள் இளம்பெண்ணொருத்தி. அந்த வழியே வந்த சித்தர் மச்சேந்திரர் தனியே நின்றழும் பெண்ணைக் கண்டதும், ""ஏனம்மா அழுகிறாய்?'' என்று பரிவுடன் வினவினார். அதற்கு அவள், ""அய்யா, எனக்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகி விட்டன. குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. ஊரில் உள்ளவர்கள் என்னை மலடி என்று கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். என்னால் அதைத் தாளமுடியவில்லை. அதனால்தான் இப்படி தனியாக அழுதுகொண்டிருக்கிறேன்'' என்றாள்.
""அம்மா, அழாதே. இதோ, நான் தரும் திருநீறைச் சாப்பிடு. நீ கர்ப்பம் தரிப்பாய். மலடி எனும் அவச் சொல் உன்னைவிட்டு நீங்கும்'' என்று சொல்லி திருநீறைக் கொடுத்துவிட்டு தன் வழி போனார் மச்சேந்திரர்.
திருநீறைப் பெற்றுக்கொண்ட பெண், தன் தோழியொருத்தியிடம் அதைக் காட்டி, சித்தர் சொன்னதையும் கூறினாள். அதற்கு அந்தத் தோழி, ""அடி பைத்தியமே, யார் எது சொன்னாலும் நம்பிவிடுவதா? யாரிடம் வேண்டுமானாலும் திருநீறு வாங்கிச் சாப்பிட்டுவிடுவாயா? அந்தப் பெரியவர் சக்தியுடைய வரா, வேஷதாரியா என்று யாருக்குத் தெரியும். இந்தத் திருநீறை எங்காவது வீசியெறி'' எனச் சொல்லிச் சென்றாள். தன் தோழி கூறியதை நம்பி அவள் திருநீறை யாருக்கும் தெரியாமல் எரியும் அடுப்பில் போட்டுவிட்டாள்.
ஆண்டுகள் சில கடந்தன. மச்சேந்திரர் அந்த வழியே திரும்பி வந்தார். அப்பொழு தும் அந்தப் பெண், குழந்தை பாக்கியம் இல்லாமல் அழுது புலம்பிக் கொண்டி ருந்தாள். இதைக் கண்ட மச்சேந்திரர் அவளிடம், ""ஏனம்மா இன்னும் அழுகிறாய்? குழந்தை என்னஆயிற்று?'' என்று கேட்டார். தன் தோழியின் பேச்சைக் கேட்டு திருநீறை அடுப்பில் போட்டுவிட்டதாகவும்; இதுவரை தனக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை என்றும் கூறி கண்ணீர் சிந்தினாள்.
சித்தர் அவளிடம் கோபம் கொள்ளவில்லை.
மாறாக, ""உன் வீட்டு அடுப்புச் சாம்பலை எங்கே கொட்டினாய்?'' என்று கேட்டார். அந்தப் பெண்மணி சாம்பலைக் கொட்டிய எருக்குழியைக் காட்டினாள். அந்த எருக்குழி அருகே சென்ற மச்சேந்திரர், ""கோரக்கா'' என்று குரல் கொடுத்தார். எருக்குழிக்குள் இருந்து ""என்ன சித்தரே'' என்ற பதில் குரல் கேட்டது. ""எழுந்து வா வெளியே'' என்றார் மச்சேந்திரர்.
அந்த எருக் குழிக்குள்ளிருந்து தெய்வ அம்சம் பொருந் திய முகத்துடன் பத்து வயது பாலகன் எழுந்து வந்தான். மச்சேந்திரர் திருநீறு கொடுத்து பத்தாண்டுகள் ஆகியிருந்ததால் அவன் பத்து வயது பாலகனாக ஆகி யிருந்தான். இதையெல்லாம் பார்த்த அந்தப் பெண்மணி அதிசயித்துப் போனாள்.
""தங்கள் மகிமையை அறியாமல், நீங்கள் தந்த திருநீறை வீசியெறிந்த தால் இந்தக் குழந்தையை என் வயிற்றில் சுமக்கும் பாக்கியத்தை இழந்தேன்'' என்று அழுதபடி அந்தச் சிறுவனைக் கட்டி
அணைத்துக்கொண் டாள். ஆனால் அந்தச் சிறுவனோ, ""என்னைத் தூக்கியெறிந்த உங்க ளுடன் இருப்பதைவிட இந்த சித்தருடன் சென்று தவ வாழ்வில் ஈடுபடப் போகிறேன். ஆனாலும் நான் பூமிக்கு வரக் காரணமாயிருந்த அன் னையே, உங்களை நான் வணங்குகிறேன். என்னை வழியனுப்பி வையுங்கள்'' என்று வேண்டினான்.
அந்தச் சிறுவனின் உறுதியான பேச்சால் மகிழ்ந்த தாய், கோரக்கருக்கு விடை கொடுத்து அனுப்பினாள்.
கானகத்தில் தவ வாழ்வு மேற் கொண்ட கோரக்கர் பல சித்திகளைப் பெற்றார். ஒரு சமயம் அவருக்கு பிரம்ம னின் படைப்புத் தொழிலை தானும் செய்ய வேண்டு மென்ற ஆவல் உண்டானது. தனது நண்பர் பிரம்மமுனியுடன் இணைந்து மிகப் பெரிய யாகத்தை மேற் கொள்ளத் தொடங்கினார். படைக்கும் தொழிலில் தனக்குப் போட்டியாக சித்தர்கள் முயற்சிப்பதைக் கண்டு, தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பிரம்மன் அஞ் சினான். உடனே வருணனையும் அக்னியையும் அனுப்பி யாகத்தை அழிக்கச் சொன்னான்.
அவர்கள் பலவிதமாக தொல்லை தந்தும் பலனில்லாமல் போனது.
அடுத்ததாக யாக குண்டத்தில் சித்தர்கள் போட்ட பொருட்கள் இரண்டு பெண்களாக உருவெடுத்தனர். அவர்கள் சித்தர்களின் மனதைக் கலைக்க முயற்சிக்க, ஆத்திரமுற்ற சித்தர்கள் அவர்களை இரு செடிகளாக மாற்றிவிட்டனர். அப்போது சிவன்
அவர்கள்முன் தோன்றி, ""சித்தர்களே, நீங்கள் தவ வலிமை மிக்கவர்களாக இருந்தாலும் யாகத்திற்கு இடையூறு ஏற்பட்டால் அதனை என்னிடம்தான் முறையிட வேண்டும். நீங்களே சாபம் கொடுத்தது தவறு. சித்தர்கள் கோபம் கொள்ளக்கூடாது. நீங்கள் கோபம் கொண்டதால் உங்கள் தவ வலிமையை இழந்துவிட்டீர்கள்'' என்று கூறினார். எனினும் அவர்கள் தவத்திற்கு மகிழ்ந்து, காயகல்பத்தை அவர்களுக்கு அருளி, அதனைக் கொண்டு உலக உயிர்கள் நலமுடன் வாழ அரிய மருந்துகளை உருவாக்கும்படி அருளினார்.
சித்தர்கள் இருவரும் இறைவன் சொன்னபடியே மகத்தான பல மருந்து களை உருவாக்கி மக்களின் பிணி போக்கினர்.
சித்தன் என்பதன் பொருள் சிந்தை தெளிந்தவர் என்பதாகும். சித் என்றால் பேரொளி, ஞான ஒளி, பர ஒளி, சிவ ஒளி என்பதாகும். இத்தகைய ஒளியைப் பெற்றவர்களுக்கு சித்தர்கள் என்று பெயர்.
அப்படிப்பட்ட சித்தர்கள் ஆயிரக்கணக்கில் தோன்றியிருக்கின்றனர். அவர்களில் மக்களின் நடுவே நன்கு அறியப்பட்டவர்கள் பதினெட்டு சித்தர்கள். இப்பதினெட்டு சித்தர்களுள் கோரக்கருக்கு முக்கிய இடம் உண்டு. இவர் இறவா வரம் பெற்றவர். காயகல்பம் செய்வதில் வல்லவர். செம்பைப் பொன்னாக்கும் ரசவாத வித்தை அறிந்தவர்.
சித்தர் கோரக்கர் தனித்துவம் மிக்கவர், பணிவுமிக்கவர், அச்சமற்ற தன்மையுடை யவர், வெளிப்படையானவர், மக்களின் உயிர்காக்க வேண்டுமென்ற உயரிய நோக்குடன் செயல்பட்டவர்.
கோரக்கரைப் பற்றி பல்வேறு கதைகள் நிலவுகின்றன. கோரக்கரும் போகரும் உயிர்த் தோழர்கள். போகரைப்போலவே கோரக்கரும் சீனம் சென்று அங்கு 500 ஆண்டுகள் செலவிட்டதாக செவிவழிச் செய்திகள் உண்டு. கொல்லிமலையில் 200 ஆண்டுகள் கோரக்கர் தவத்தில் மூழ்கியிருந் தார் என்று சொல்வோரும் உண்டு. பழனி மலைக் கோவிலிலுள்ள நவபாஷாணத் தாலான முருகன் சிலையை போகருடன் இணைந்து கோரக்கர் வடிவமைத்தார்.
அதை நிறுவிவிட்டு வட பொய்கைநல்லூர் வந்து,
அங்கே நந்தாதேஸ்வர், சௌந்தர நாயகி ஆகியோ ருக்கு ஆலயம் எழுப்பி வழி பாடு செய்தார். அங்கே ஆகாயப் பிரவேசம் தந்த போகர், கோரக்கரை ஜீவசமாதியில் அடக்கம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.
""சித்தர்களின் ஜீவசமாதி என்பது மனிதன் இறந்ததும்
அடக்கம் செய்வது போன்ற தில்லை. ஜீவசமாதியாகிய சித்தர்கள் என்றும் அழியாமல் இருந்து பிற தேசத்துக்கோ, ஊர்களுக்கோ சென்று தம் பணியைத் தொடர்வர். இப்படியாக கோரக்கர் பொதிகைமலை, ஆனைமலை, கோரக்கநாத் திடல், வடக்குப் பொய்கைநல்லூர், பத்மாசுரன் மலை, கொல்லிமலை, கோரக்பூர், பரூர்பட்டி என்ற எட்டு இடங்களில் ஜீவசமாதி அடைந்தார்'' என்கிறார் விருத்தாசலத்தைச் சேர்ந்த ஜோதிடர் இராமமூர்த்தி.
பல்வேறு யோக முறைகளையும் ஞான முறைகளையும் வருங்காலத்திற்கு விட்டுச் சென்ற கோரக்கர், சித்தர் பிரம்ம கர்ப்பம் மற்றும் 8,450 பாடல் கள் அடங்கிய நூல்களை இயற்றியுள்ளதாகக் கூறுவர்.
""சதுரகிரி மலைக்குச் சென்று கோரக்கரின் சீடர்களும் அவரது உண்மையான பக்தர்களும் கோரக்கரின் மந்திரமொன்றைக் கூறினால் கற்பாறை நகர்ந்து வழிவிடும். அங்கே காவல் காத்துக்கொண்டிருக்கும் சித்தர் தோன்று வார். அவரிடம் ஒரு முகூர்த்தம் அதாவது ஒன்றரை மணி நேரம் பூரண பொக்கி ஷத்தைப் பார்த்து விட்டுத் தருவதாக விண்ணப்பம் செய்தால் காணக் கிடைக்கும். நாம் அதனைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது பிளந்த பாறை மூடிக் கொள்ளும்'' என்று கூறுகின்றனர் செல்வராசு, பொன் பாலதண்டாயுதம் உள்ளிட்ட பக்தர்கள்.
கோரக்கர் ஜீவசமாதி அடைந்த இடங்களில் எம். பரூரும் ஒன்று. இங்கு கோரக்க சித்தர் தோன்றி பல காலம் வாழ்ந்துள்ளார். அவர் உருவாக்கியதுதான் அவ்வூரில் உள்ள அன்னபூரணி உடனுறை விஸ்வநாதர் ஆலயம். இவ்வாலயத்தையும் கோரக்க சித்தரின் ஜீவசமாதி யையும் புதுப்பித்து 8-2-2012-ல் ஊர் மக்கள் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர்.
விருத்தாசலத்திலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் எம். பரூர் அமைந்துள்ளது. விருத்தாசலத்திலிருந்து எம். பரூர் செல்ல பஸ், கார் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் உள்ளன.
அங்கு வருபவர்களுக்கு அருள்புரிய கோரக்க சித்தரும், அவர் எழுப்பிய கோவிலில் அருள்மிகு அன்னபூரணியும், அவருடன் உடனுறைந்த விஸ்வநாதரும் காத்திருக்கின்றனர். ஒருமுறை தரிசிக்கலாமே!

Thursday 11 June 2015

எண்ணங்கள்

ஒரு மனிதனின் மனதில் பல்லாயிர எண்ணங்கள் உருவாகும்.அதில் தாழ்வு எண்ணங்கள்,எதிர்மறை எண்ணங்கள்,பலவீனமான எண்ணங்கள்,முரட்டு எண்ணங்கள்,அன்பு,தெய்வீகம் என பல உயர்ந்தும்,அதே வேலையில் தாழ்வான எண்ணங்களும் அதே மனதில்தான் உருவாகின்றன.
மனோதத்துவ ஆராய்ச்சியின்படி ஒரு மனிதன் எதை நினைக்கிறானோ,அதுவகவேதான் உருவாகிறான் என்பதை கண்டறியப்பட்டிருக்கிறது. இதைத்தான் நம் முன்னோர்கள் "விதைப்பதே விளையும்" என்றார்கள்.நாம் நம் வாழ்க்கையில் உயர்ந்து ஒளி வீச நம் மனம்தான் ஆணிவேர்.உயர்ந்த எண்ணங்களை விதைத்து வாழ்வில் உயர வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் உழைத்தல் நிச்சியம் வெற்றி கோட்டையை அடையலாம்.தவறான எண்ணங்களை மனம் யோசித்தால் தவறான வழிகளைத்தான் அறிவு தரும்.

நம் எண்ணங்கள் எப்பொழுதும் சுத்திகரிக்கப்பட்டு புனிதமாக இருக்க வேண்டும்.எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது.எண்ணம் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் வாழ்விற்கு நல்லது.நீங்கள் ஒவ்வொருவரும் இரவும் பகலும் ஓடி ஓடி வேலை செய்து சொத்து,மட மாளிகை,புது மாடலான வண்டி வாகனங்கள்,பொன் பொருள் என வாழ்கையில்சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.நிலம் உள்ளவர்கள் நிலத்தை சுத்தம் செய்து உறமிட்டு நீர்பாய்ச்சி,பயிரிடுகிறார்கள்.எத்தனை பேர் மனதை உழுது நல்லெண்ணங்களை விதைத்து ,போட்டி,பொறாமை,புறம் பேசுதல்,பிறருக்கு கேடு விலைவித்தல் என்ற எண்ணங்களை களையெடுத்து உள்ளன்போடு பழகுதல்,உண்மையாக உழைத்தல்,எதையும் எதிர்பாராமல் உதவி புரிதல் என்ற பண்புகளுடன் வாழ்கிறார்கள். இப்படி வாழக்கூடியவர்கள் வாழ்க்கையில் எப்போதும் சந்தோசமாகவும்,உற்சாகத்துடனும் வாழ கற்றுக் கொள்கிறார்கள்.
எண்ணம் அணுகுண்டை விட ஆற்றலுள்ளது என்று கூறினால் எத்தனை பேர் நம்புவீர்கள்?ஏனென்றால் அணுகுண்டை செய்யக்கூடிய ஆற்றல் உருவானதே எண்ணத்திலிருந்துதானே!மனம் எண்ணியதினால்தான் அறிவு செயல்பட்டு அணுகுண்டு உருவானது.

ஒரு எண்ணத்தை நம்பிகயுடேன் பலமுறை மனதில் நினைத்தால்,அது நல்லதோ,கேட்டதோ அது நடந்தே தீரும். ஆகையால் நல்லதும் கேட்டதும் நடப்பது நாம் எண்ணும் எண்ணங்களினால்தான்,"நீ எதை நினைக்கிறயோ அதுவாகவே மாறி விடுகிறாய்"என்பதை நீங்கள் கேள்விப்பத்டிருப்பீர்கள். உங்கள் எண்ணம் உறுதியாக இருந்தால் இயற்கையே உங்களுக்கு உதவி கரம் நீட்டி உதவி புரியும் என்பது உறுதி.

Wednesday 10 June 2015

“எல்லாம் செய்துவிட்டேன்

“எல்லாம் செய்துவிட்டேன், ஆனாலும் வெற்றி கழுவும் மீனில் நழுவும் மீனாக இருக்கிறது” என்பவர்கள் இங்கே வாருங்கள். இந்த 5 வழிமுறைகளில் ஒன்றைப் பற்றிக்கொண்டால் உங்கள் வாழ்க்கையில் இனி வெற்றி வெற்றி வெற்றி மட்டும்தான். வெற்றியைத் தேடுபவர்களுக்குப் புதிய பொன்மொழிகள் இதோ.
வெற்றி வேண்டுமா? இதோ 5 டிப்ஸ்
1 கைகளை நம்புவோம்! கைரேகையை அல்ல…
சில சமயங்களில் எதேச்சையாக, அதிர்ஷ்டவசமாக, சில விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாக நிகழ்ந்துவிடலாம். அப்படிக் காற்று உங்கள் பக்கம் வீசும் சமயத்திற்காக நீங்கள் காத்திருந்தால், நல்ல விஷயங்கள் உங்கள் கல்லறையில்தான் நடக்கும், ஏனென்றால் அச்சமயம் வராமல் கூட போய்விடலாம்.
உங்களுக்கு தெரியுமா? கோடான கோடி தடவை ஒரு திடமான சுவரின் ஊடே நடந்து அதைக் கடக்க முயன்றால், அதில் ஒரு முறை நீங்கள் கடந்துவிட முடியுமென்று குவான்டம் கோட்பாடு (Quantum Theory) கூட சொல்கிறது. அதில் சிறிய சிக்கல் அந்த கோடான கோடி தடவையைத் தொடும்முன் உங்கள் மண்டையோடு உடைந்திருக்கும்.
நீங்கள் அதிர்ஷ்டத்தை நம்பி வாழும்போது, நீங்கள் பயத்திலும் பதற்றத்திலும் வாழ்கிறீர்கள். நீங்கள் தெளிவான நோக்கத்துடனும் திறமையுடனும் வாழும்போது உங்களுக்கு எது நடந்தாலும் நடக்காவிட்டாலும், உங்களுக்கு நடப்பவை மேல் உங்களுக்கு ஆளுமை இருக்கும். அதுதான் ஸ்திரமான வாழ்க்கை.
2 தோல்வியில் தொலைவதை நிறுத்துங்கள்
உறுதியோடு இருக்கும் ஒரு மனிதனுக்குத் தோல்வி என்பதே கிடையாது. ஒரு நாளுக்கு 100 முறை நீங்கள் கீழே விழுந்தால், அவை நீங்கள் கற்கும் 100 பாடங்களாகிவிடும். நீங்கள் விரும்புவதை உருவாக்குவதில் உறுதியுடன் இருந்தால், உங்கள் மனம் ஒரே திசையில் நிலைத்துவிடும். உங்கள் மனம் இருக்கும் திசையில் உங்கள் உணர்ச்சிகளும் ஒன்றிவிடும். ஏனென்றால் நீங்கள் சிந்திக்கும் விதமாகத்தான் நீங்கள் வாழ்க்கையை உணரும் விதமும் இருக்கும். உங்கள் எண்ணமும் உணர்வுகளும் ஒன்று சேர்ந்தால், உங்கள் சக்திகளும் உங்கள் உடலும்கூட அத்திசையில் ஒருங்கிணைந்துவிடும். இவை அனைத்தும் ஒருமுகமாகின்ற போது, நீங்கள் விரும்புவதை உருவாக்கி உங்கள் கனவை நிஜமாக்கும் திறமை அபாரமாகிவிடும். பல விதங்களில் நீங்கள் படைப்பாளராகி விடுவீர்கள்.
3 தேவை தெளிவு – குருட்டு நம்பிக்கை அல்ல
ஒரு மனிதனுக்குத் தேவை தெளிவு, குருட்டு நம்பிக்கை அல்ல. ஒரு கூட்டத்தின் நடுவே நீங்கள் நடக்கும்போது, உங்கள் பார்வை தெளிவாக இருந்தால், ஒவ்வொருவரும் எங்கு இருக்கிறார் என்று உங்களால் பார்க்க முடிந்தால், கூட்டத்தில் ஒருவரைக் கூடத் தொடாமல் நீங்கள் மிகச் சுலபமாக நடந்து சென்றுவிடுவீர்கள்.
உங்கள் பார்வைத் தெளிவாக இல்லை, ஆனால் நீங்கள் அதீத நம்பிக்கை உடையவர் என்கிறபோது, எல்லோர் மீதும் நடந்து செல்வீர்கள். தெளிவில்லாத காரணத்தால், தன்னம்பிக்கை நல்ல மாற்றுப்பொருள் என்று கருதுகிறீர்கள். அது ஒருக்காலமும் அப்படி ஆக முடியாது.
உதாரணமாக, நீங்கள் உங்கள் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளையெல்லாம் இப்படி எடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுங்கள். “சரி, தலை விழுந்தால் முதல் திட்டப்படி செயல்படுவோம், ஒருவேளை பூ விழுந்துவிட்டால் இரண்டாம் திட்டப்படி செயல்படுவோம்,” என்று நீங்கள் முடிவெடுத்து செயல்பட்டால், உங்கள் திட்டம் வேலை செய்ய 50 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறதா இல்லையா?
வாழ்க்கையில் 50 சதவிகிதம்தான் நீங்கள் சரியாக இருக்கிறீர்கள் என்கிறபோது, நீங்கள் இரண்டு தொழில்கள்தான் செய்ய முடியும். ஒன்று நீங்கள் வானிலை அறிக்கையாளராகவோ அல்லது ஜோசியக்காரராகவோ இருக்க முடியும். இந்த பூமியில் நீங்கள் வேறெந்த வேலையும் செய்ய முடியாது.
4 கொஞ்சம் வளைந்து கொடுங்கள்
நம் வாழ்க்கையில் பலவிதமான சூழ்நிலைகளைக் கையாள்வதற்கு, நமக்கு வெவ்வேறு விதமான ஆளுமை குணங்கள் தேவை. அதில் நீங்கள் நீரோடைபோல் வளைந்துகொடுக்கும் தன்மையுடன் இருந்தால், நீங்கள் எடுத்திருக்கும் பாத்திரத்தில் உங்களால் முழு திறனுடன் செயல்பட முடியும். அதில் சிறிதும் சிக்கலிருக்காது. ஆனால் பலருக்கோ சூழ்நிலைக்கேற்றவாறு வளைந்து கொடுக்க முடியாமல் கட்டுண்டு கிடக்கிறார்கள். அவர்களுக்கு பிடிக்காதவற்றையும் புரியாதவற்றையும் எதிர்கொள்ளும்போது, அவர்கள் சொல்ல முடியாத பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.
நீங்கள் அதை உடைக்க வேண்டுமென்றால், நீங்கள் அதை முற்றிலும் வேறுவிதமாக அணுக வேண்டும். நீங்கள் செய்யக்கூடிய மிக எளிமையான செயல் இது: உங்களுக்குப் பிடிக்காத ஒருவருடன் சேருங்கள். அவர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள், மிக அன்பாக, ஆனந்தமாக! உங்களுக்குப் பிடிக்காதவற்றைச் செய்யுங்கள், உங்களுக்குப் பிடிக்காதவர்களுடன் இருங்கள். அந்த சூழ்நிலையிலும் நீங்கள் புத்தியுடன், அன்புடன், ஆனந்தத்துடன் வாழக் கற்றுக் கொண்டால் அதுவே உங்களுக்கு வெற்றி.
5 எனக்கு என்ன கிடைக்கும்?
உயர்ந்த மனிதனாக ஆக வேண்டும் என்கிற பேராவல் உங்களுக்கு இருக்கத் தேவையில்லை. நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதன்மேல் உள்ள கவனத்தைத் தாண்டி உங்கள் குறிக்கோளையும், நீங்கள் இயங்கும் வளையத்தையும் விரிவுபடுத்திவிட்டால், எப்படியும் நீங்கள் உயர்ந்த மனிதராகத்தான் இருப்பீர்கள்.
உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று சில மனிதர்கள் ஏங்கியதில்லை. அவர்கள் பார்வை “எனக்கு என்ன கிடைக்கும்?” என்பதைத் தாண்டி இருந்தது. “எனக்கு என்ன கிடைக்கும்?” என்ற இந்த ஒரு கணக்கை மட்டும் நீங்கள் கைவிட்டுவிட்டு, உங்கள் திறமையின் உச்சத்தில் செயல்பட்டால், ஏதோ ஒருவிதத்தில் நீங்கள் உயர்ந்தவராகத்தான் இருப்பீர்கள்
.
அப்போது இயல்பாகவே “என்னைச் சுற்றியிருக்கும் உயிர்களுக்கு நான் என்ன செய்ய முடியும்?” என்று பார்க்கத் துவங்கிவிடுவீர்கள். உங்கள் திறமைகளையும் இயல்பாகவே அதிகரித்துக் கொள்வீர்கள், ஏனென்றால் செய்வதற்கு அவ்வளவு செயல்கள் இருக்கும்!

முன்னேற்றத்தின் மூலமந்திரம்

”நான் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் யாரும் எனக்கு எதையும் கற்றுத் தருவதில்லை” என்று சிலர் புலம்புகிறார்கள்.
அவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.
உங்களுக்கு யாரும் எதையும் கற்றுத் தரமாட்டார்கள். நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.
யாரும் உங்களுக்கு எதையும் ஊட்டமாட்டார்கள். ஆனால், நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் சாப்பிடலாம். யாரும் தடுக்க முடியாது.
தலைவராவது எப்படி என்று காந்திஜிக்கு யாராவது வகுப்பு நடத்தினார்களா? இராணுவம் அமைப்பது எப்படி என்று நேதாஜிக்கு யாராவது சொல்லிக் கொடுத்தார்களா?
கற்றுத் தரமாட்டார்கள்… நீங்களாகக் கற்றுக் கொள்ளுங்கள். இதுதான் முன்னேற்றத்தின் மூலமந்திரம்

வெற்றிக்கு நேரம்

வெற்றிக்கு நேரம் காலம் எல்லாம் கிடையாது. எப்போது கிடைக்கும் அல்லதுஎப்போது தவறவிடுகிறோம் என்பதும் தெரியாது. ஆனால் குறித்த நேரத்தில் வெற்றிகிடைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். அப்படி நேரம் குறித்து வெற்றிபெறுகிற ஒரு நிறுவனத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தேன்.
பத்தே நிமிடத்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கிடைக்கும் என்கிற போர்டைபார்க்கும் போதெல்லாம், ‘வெற்றிகூட பத்தே நிமிடத்தில் கிடைத்தால் எவ்வளவுநன்றாக இருக்கும்’ என்று தோன்றும்.
பல நேரங்களில் மிகப்பெரிய வெற்றிகூட ஒரு நொடியில் தோன்றிய மிகச்சிறந்த சிந்தனையால் நிகழ்ந்திருக்கிறது.
சமீபத்தில் ஈரோட்டில் எம்.ஆர் கலர் லேப் என்ற நிறுவனத்திற்கு சென்றிருந்தேன். அங்கு சென்றபோது நான் பார்த்த விஷயம் எனக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது.
பத்தே நிமிடத்தில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ என்பதிலில்லை ஆச்சரியம். ஒரு நிமிடம் தாமதம் ஆனால்கூட பணம் வாபஸ் என்பதுதான் ஆச்சரியம்.
பத்தே நிமிடத்தில் பாஸ்போர்ட் போட்டோ பிரிண்ட் செய்து தரப்படும் என்றஅறிவிப்பை பார்த்ததும், எல்லோரும் அப்படித் தான் சொல்வார்கள். ஆனால் அரைமணி நேரமாவது ஆகும் என்று தோன்றும்.
நிறுவனங்களின் வாக்குறுதிகளையும் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளைப் போல,இப்பொழுதெல்லாம் யாரும் நம்புவதில்லை.
அதனால் அந்த நிறுவனம் அறிவிப்பில் ஒரு வரியை கூடுதலாக சேர்த்திருந்தது. பத்து நிமிடத்திற்கு ஒரு நொடி தாமதமானாலும் பிரிண்ட் இலவசம் . பணம்கட்டத்தேவையில்லை.
தொழிலில் ‘வெற்றி பெறச் செய்வோம்’ என்ற வாக்குறுதியைப் போலவே நிச்சயம் அதை நிறைவேற்றிக் காட்டுவோம் என்ற உறுதியும் இருக்க வேண்டும்.
அப்படிப்பட்டவர்கள் பத்தே நிமிடத்தில் வாடிக்கையாளர்கள் மனங்களை வென்று விடுகிறார்கள்.

ஆரம்பம் மட்டுமே

நமது அன்றாட வாழ்க்கையில் பல துறைகளில் பல திறமையாளர்களைப் பார்க்கிறோம். நாளடைவில் அவர்களில் மிகச் சிலரே அந்தந்த துறைகளில் வெற்றி அடைகிறார்கள் என்பதையும் பெரும்பாலோனோர் நாம் எதிர்பார்த்த அளவு சாதனைகள் புரியாமல், இருந்த சுவடே தெரியாதபடி காணாமல் போவதையும் பார்க்கிறோம்.
அப்போதெல்லாம் நம்மால் வியப்படையாமல் இருக்க முடிவதில்லை. அதுவும் வெற்றியடைந்தவர்களை விட அதிகத் திறமை கொண்டவர்கள் என்று நாம் கணித்தவர்கள் சாதிக்காமல் போய் விடும் போது அது ஏன் என்ற ஒரு மிகப் பெரிய கேள்வி நமக்குள் எழாமல் இருப்பதில்லை. அதற்கு ‘விதி’ என்ற மிக வசதியான பதிலை நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம். ஆனால் அபூர்வமாய் ஒருசில விதிவிலக்குகள் தவிர அந்த விதி அவரவர்களால் எழுதப்படுவது அல்லது ஏற்படுத்திக் கொள்வது என்பதே நிதர்சனமான உண்மை.ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் தோல்வி அடையும் அனைவருக்கும் பொதுவாக மூன்று குணாதிசயங்கள் இருப்பதை நம்மால் காண முடியும். அதில் முதலாவது,அவர்களுக்குள்ளே சாதனை புரிந்தே ஆக வேண்டும் என்ற அக்னி இருப்பதில்லை. இது இல்லாத வரை எத்தனை திறமை இருந்தாலும் அது பிரகாசிப்பதில்லை.
இரண்டாவது, அவர்கள் ஈடுபாடுகள் சீராகவும், தொடர்ச்சியாகவும் ஒரே விஷயத்தில்இருப்பதில்லை. இன்று ஒன்றில் ஈடுபாடு, நாளை வேறு ஒன்றில் தீவிர ஈடுபாடு, சில நாட்களில் புதிதாக ஒன்றில் பேராவல் என்று மாறிக் கொண்டே போகிறார்கள்.அவர்கள் வாழ்க்கையில் பல நல்ல ஆரம்பங்கள் இருக்கின்றன, திறமைக்கும்குறைவில்லை என்றாலும் எதிலும் முழுமை இருப்பதில்லை.
மூன்றாவது, அவர்கள் வெற்றி வரும் வரை பொறுமையாக தாக்குப் பிடித்து நிற்பதில்லை. தற்காலிகத் தோல்விகளிலேயே பின்வாங்கி விடுகிறார்கள். தற்காலிக தடங்கல்களும், நிராகரிப்புகளும், தோல்விகளும் முயற்சிகளைக் கைவிடப் போதுமானவையாக இருக்கின்றன. இந்த மூன்று தவறுகளையும் வெற்றியாளர்கள் செய்வதில்லை. இதை தங்கள் துறையில் சிகரத்தை எட்டிய இருவர் வாழ்க்கை அனுபவங்களைப் படித்தால் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.பாஸ்கல் (Pascal) என்கிற கணித மேதையை அறியாதவர் இருக்க முடியாது. அவர்பிற்காலத்தில் தத்துவஞானியாகவும் விளங்கினார். அவர் வாழ்ந்த காலகட்டத்தில்சட்டம் மட்டுமே மேல்நிலை மக்களின் கௌரவமான தொழிலாகக் கருதப்பட்டது.எனவே அவர் தந்தை மகன் சட்டப் பேரறிஞனாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டார். பாஸ்கலோ கணிதத்தில் தான் மிகுந்த ஈடுபாடுடன் இருந்தார்.எத்தனை அறிவுரை கூறியும் மகன் மாறாததைக் கண்ட தந்தை கடைசியில் மகனை சட்ட புத்தகங்கள் மட்டுமே நிறைந்த அறையில் வைத்துப் பூட்டி வைக்கத் துவங்கினார். உள்ளே கணிதக் கோட்பாடுகளை மகன் எழுதிக் கொண்டு இருப்பதை பின்னர் கண்டு பிடித்து அங்கிருந்து எழுத்துக் கருவிகள், தாள்கள் அனைத்தையும் அப்புறப்படுத்திப் பார்த்தார்.
ஆனால் பாஸ்கலோ கரித்துண்டில் தரையில் எழுதிப் பார்க்கத் துவங்கினார்.கடைசியில் தந்தை விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று. அவர் ஆவலுடன் தன் கணித ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் பிற கணித மேதைகள் இவருடையவித்தியாசமான, புதிய கோட்பாடுகளை அங்கீகரிக்கவில்லை. ஆனால் அவர்பொருட்படுத்தாமல் தொடர்ந்தார். தடங்கல்களைக் கண்டு தளராமல் தொடர்ந்தஇத்தகைய ஈடுபாட்டிற்குப் பின் வராத வெற்றியும் உண்டா? வெற்றியும், புகழும்கடைசியில் அவருக்கு உலக அளவில் கிடைத்தன.பெர்னார்டு ஷா (Bernard Shaw) எழுதுவதில் காட்டிய ஈடுபாடு மகத்தானது. இளம் வயதில் வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு வேலை செய்து கொண்டிருந்தாலும், தினமும்குறைந்தது ஐந்து பக்கங்களாவது எழுதுவது என்று உறுதியுடன் ஓய்வு நேரங்களில்தொடர்ந்து எழுதி வந்தார். அதைத் தொடர்ந்து பத்திரிக்கைகளுக்கும், பிரசுரங்களுக்கும் அனுப்பியும் வந்தார். எழுதி அனுப்பிய முதல் ஒன்பதாண்டுகளில் அவருக்குத் தாள்,பேனா மை, தபால் செலவுகளுக்கான பணம் கூடக் கிடைக்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை. ஓரிரு தோல்விகளைக் குறுகிய காலத்தில் சந்தித்தாலே மனம் ஒடிந்து போகும் மனிதர்கள் மத்தியில் ஒன்பதாண்டு காலம் தொடர்ந்து சந்தித்த தோல்விகளையும் பொருட்படுத்தாமல், தொடர்ந்து எழுதி பிற்காலத்தில் பிரபலமாகி மிகப்பெரிய செல்வந்தரானார். அவர் எழுத்து இன்றளவும் பேசப்பட்டும், மேற்கோள் காட்டப்பட்டும் வருகிறது என்பது வரலாறு.
இவர்கள் எல்லாம் துவக்கத்தில் சந்தித்த எதிர்ப்புகளும் தோல்விகளும் கொஞ்சநஞ்சமல்ல. வெற்றி சுலபமாக வந்து விடவில்லை. இடைக்காலத்தில் விதி என்றுதீர்மானித்துக் கொண்டு தங்கள் பாதைகளில் இவர்கள் திரும்பிப் போய் விடவில்லை. தங்கள் பார்வைகளையும், ஈடுபாடுகளையும் வேறிடத்திற்குத் திருப்பிக் கொள்ளவில்லை. உலகம் தோல்வி என்ற சான்றிதழைத் திருப்பித் திருப்பித் தந்தாலும் அவர்கள் அதை ஏற்கத் தயாராக இருக்கவில்லை. அவர்களுக்கு உள்ளே இருந்த அக்னி வெளியே இருந்த இருண்ட சூழ்நிலைகளிலும் ஒளி கொடுத்து வழி காட்டியது. வெற்றி வரும் வரை காத்திருந்தார்கள். தங்கள் விதியைத் தீர்மானிக்க மற்றவர்களுக்கு அவர்கள் அனுமதி தரவில்லை.
எனவே திறமை இருப்பவர்களே, ஒன்றை மட்டும் உணர்ந்து கொள்ளுங்கள். திறமைமட்டுமே போதுமானதல்ல, அது வெறும் ஆரம்பம் மட்டுமே என்பதை மனதில் வையுங்கள். உடனடி லாட்டரி போல வெற்றி வந்து மடியில் விழும் என்று எண்ணாதீர்கள்.
தடங்கல்கள் சகஜம் என்று எதிர்பார்த்துத் தயாராக இருங்கள். உங்கள் சக்திகளைஎதிர்மாறான பல துறைகளில் அடிக்கடித் தாவி சிதறடிக்காதீர்கள். தொடர்ந்து ஈடுபாடு குறையாமல் செயல்படுங்கள். தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். துவண்டு விடாதீர்கள். நீங்களாக ஏற்றுக் கொள்ளாத வரை தோல்வி சாசுவதமல்ல. அது வெற்றிக்கு முந்தைய இடைநிலையே. பொய்யான விதியை ஏற்றுக் கொண்டு முயற்சியைக் கை விட்டு விடாதீர்கள். விதியின் நாயகனான இறைவன் திறமையை உங்களுக்குத் தந்திருக்கிறார் என்றால் அது நீங்கள் வெற்றி பெறவே என்பதை என்றும் மறந்து விடாதீர்கள்.

Sunday 17 May 2015

கற்பனை செய்

கற்பனைகளை நம் செயல்பாடுகளின் முன்னேற்றத்திற்கு எப்படி உபயோகிப்பது?
ரீடர்ஸ் டைஜஸ்டை (Reader’s Digest) அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆங்கிலப் பத்திரிகை. பத்திரிகை நடத்துபவர்களுக்கென்று அசாத்திய கற்பனைத் திறன் இருக்க வேண்டும். புதுசு புதுசாய் யோசிக்க வேண்டும். அப்பொழுதுதான் வாசகரைக் கவர, தக்க வைத்துக் கொள்ள முடியும்; இல்லையா? எனவே யோசித்தார்கள். பத்திரிகையின் சார்பில் ஆய்வொன்று செய்வது என்று முடிவு செய்தார்கள். எதைப் பற்றி? மன ஒத்திகையைப் பற்றி!
ஒரு பள்ளிக்கூடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் குறிப்பிட்ட சில மாணவர்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அந்த மாணவர்களை மூன்று அணிகளாகப் பிரித்துக் கொண்டு முதல் அணி ஒரு மாத காலத்திற்கு ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் கூடைப்பந்தைக் கூடையினுள் வீசும் பயிற்சியை மேற்கொள்ளச் செய்தார்கள். அடுத்த அணிக்கு எந்தப் பயிற்சியும் கிடையாது. சும்மா இருக்க வேண்டும். மூன்றாவது அணி பந்து வீசும் பயிற்சியைத் தினமும் ஒரு மணி நேரம் மனதில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
ஆய்வின் முடிவில் தினமும் பந்து வீசிப் பயிற்சி பெற்ற அணியின் திறமை சராசரியாக இரண்டு சதவிகிதம் உயர்ந்திருந்தது. வெறுமே இருந்த அணியின் திறமை இரண்டு சதவிகிதம் மட்டுப்பட்டிருந்தது. மனதளவில் தினமும் பயிற்சி பெற்றதே மூன்றாவது அணி, அவர்களின் திறமை மூன்றரை சதவிகிதம் அதிகரித்திருந்தது. ஆச்சரியமாயில்லை? செய்முறைப் பயிற்சியைவிட மனப் பயிற்சிக்கு அதிக மகத்துவம் உள்ளது என்று முடிவுரை வாசித்தது அந்த ஆய்வு!
யதார்த்தம் என்னவென்றால் நாம் இதெல்லாம் அறியாமலேயே நமது வாழ்க்கையில் தன்னிச்சையாக மனப் பயிற்சி மேற்கொள்ளத்தான் செய்கிறோம். அலுவலகத்திற்குச் செல்ல மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்யும் முன்னமேயே எந்தச் சாலை வழியே போகப் போகிறோம், மீட்டிங்கிற்குத் தாமதமாகி விட்டதே அதனால் எவ்வளவு விரைவாக ஓட்டப் போகிறோம், என்பதைப் போன்ற சிறிய ஒத்திகைகள் மனதளவில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதை நம் மனம் உணர்வதில்லை.
ஆனால் சில சமயங்களில் மட்டும் நீங்கள் உணரக்கூடும். எப்பொழுது? மனைவியிடம் பொய் சொல்லும்போது!
லேட்டாக வீட்டிற்குத் திரும்ப நேர்ந்தாலோ, மனைவிக்குத் தெரியாமல் நண்பருடன் சினிமா அது இது என்று சுற்றிவிட்டு வந்தாலோ, நுழைந்ததுமே “ஏன் லேட்டு?” என்று ஆரம்பித்து, போலீஸ் விசாரணையாய் வந்து விழப் போகும் கேள்விகளை என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று மனதில் ஓர் ஒத்திகை ஓடுமே, கவனித்ததில்லை?
நாம் அனைவரும் அறிந்த கிரிக்கெட் விளையாட்டு உதாரணமொன்றைப் பார்ப்போம். சுழன்று வரும் பந்தை எப்படி அடிக்க வேண்டும் என்று உங்கள் மூளையிலுள்ள செல்கள் கட்டளையிடுகின்றன. கம்ப்யூட்டர் ப்ரோகிராம் போல் வருகிறது கட்டளை. உங்கள் உடல் அதற்கேற்ப அந்தக் கட்டளைகளை நிறைவேற்றுகிறது. உங்கள் மனதிலுள்ளது நல்ல ப்ரோகிராம் என்றால் நீங்கள் நல்ல ஆட்டக்காரர். பந்து பவுண்டரி கோட்டைத் தொட்டிருக்கும். “என்னால் இந்த ஸ்பின்னையெல்லாம் தாங்க முடியாது”, என்று மனதில் கற்பனையிருந்தால் ஒன்றிரண்டு ஸ்டம்புகள் காலி! தினசரி இந்த விளையாட்டிற்கானப் பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளும்போது, சந்தேகமேயின்றி உங்களின் திறமை மேம்படும். நிச்சயம் மேம்படும். ஆனால், உடல்ரீதியான பயிற்சி மட்டுமே போதும், என்று நீங்கள் நினைத்தால், “போதாது” என்கிறார்கள் மன ஆய்வாளர்கள்.
நாள்தோறும் உடல்ரீதியான பயிற்சியை மேற்கொள்வதுடன் சேர்த்து மனப் பயிற்சியையும் சரியான முறையில் செய்தால் விரைவாகம் சிறப்பாகவும் திறமையை மேம்படுத்த முடியும் என்பதை அழுத்தமாய்ச் சொல்கிறார்கள். ஒரு காரியத்தைச் செய்வதுபோல் நீங்கள் கற்பனை செய்யும்போது அதை உண்மையிலேயே நிகழ்த்துவதைப் போல் உங்கள் மனதிலுள்ள ப்ரோகிராம்களை நீங்கள் வடிவமைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் மூளையிலுள்ள செல்களில் ரசாயண மின்மாற்றம் நிகழ்கிறது. அவை உங்கள் மனதில் புதிய மாற்றத்தைத் தோற்றுவிக்கிறது. மனம் உங்களுக்கு ஆற்றும் மாபெரும் உதவி அது என்பது அவர்களது வாதம்.
நேர்முகத் தேர்விற்குத் தயாராகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கூகுளிலில் ஆரம்பித்துப் பல புத்தகங்கள் வரை பிரித்து மேய்ந்தாச்சு! அந்த ஹோம்வொர்க் மட்டும் போதுமென்றா இண்டர்வியூவிற்குச் செல்வீர்கள்? அவர்கள் கேட்கப் போகும் கேள்விகளுக்கு எப்படியெல்லாம் பதில் அளிக்க வேண்டும், அல்லது எப்படி பதில் அளிக்கக் கூடாது, எவ்விதம் அமர வேண்டும், என்ன சட்டை அணிந்து கொள்ள வேண்டும் என்று உள்ளாடை முதற்கொண்டு ஒரு மன ஒத்திகை நிகழ்ந்திருக்குமில்லையா? இவ்விதம் நாம் தன்னிச்சையாய் மேற்கொள்ளும் இந்த மன ஒத்திகையை முறைப்படுத்தி, வளப்படுத்தி செய்முறைப் பயிற்சியுடன் சரியானபடி ஜோடி சேர்த்தால் நம் ஆற்றலை எளிதாய், முழுமையாய் வெளிக்கொணரலாம்.
மன ஒத்திகைகளின் மூலம் நிறைவான செயற்பாட்டிற்கு உண்டான வகையில் நாம் நமது மனதை வடிவமைக்க முடியும். மனதில் நிகழும் அத்தகு ஒத்திகைக் கற்பனைகளில நாம் தவறிழைக்கப் போவதில்லை. எனவே மனம் சரியான செயற்பாட்டிற்குத் தயாராகிறது.
அதேபோல் மனதில் தப்புத் தப்பாய்க் கற்பனை செய்து ஒத்திகை பார்த்தால் நிகழ்வும் அப்படியே அமையும். இதைத்தான் பயந்தது போலவே நடந்துவிட்டது என்கிறோம். எனவே தப்புக் கற்பனை தப்பு. அதைத்தவிர்க்க வேண்டும்.
ஆக, இதனலாலெல்லாம் நாம் அறிய வேண்டியது யாதெனில்,
மனதில் கற்பனை ஒத்திகைகள் நிகழ்த்தி அதன்மூலம் நமது திறமைகளைத் தூய்மையாக்கும் முயற்சியை நாம் ஆரம்பிக்க வேண்டும். பரிட்சைக்குத் தயாராவது, இண்டர்வியூ, புதிதாய் மேடையில் பேசவிருப்பது, திருமணமாகி முதன் முதலாய் மனைவியிடம் பேசப் போவது என்று எதுவாக இருந்தாலும் முற்கூட்டியே நேரம் செலவழித்து மனதில் ஒத்தகை நிகழ்த்திவிடுங்கள். நடப்பவை நலமே நிகழும்.

Friday 13 March 2015

மனதிற்கு இடம் கொடுபவர்களே

ஓஷோ கூறிய கதை:
அந்த ஊரில் கடுமையான உழைப்பாளி ஒருவன் வசித்துவந்தான் அவன் அந்த ஆண்டு முழுவதும் தான் சம்பாரித்த பணத்தை குதிரை பந்தயத்தில் கட்டுவான் ஆனால் ஏமாந்து போவான். இப்படி 10 ஆண்டுகளாக ஒரு தடவை கூட அவன் ஜெயக்கவில்லை. இந்த ஆண்டும் அவன் ஏதோ ஒரு நம்பிக்கையில் பணம் கட்டினான் இந்த முறையும் பட்டை நாம்மம் தான், இதுவரை அவன் சேர்த்த எல்லா பொருளும் போய்விட்டது அவன் பிச்சைகாரன் ஆகிவிட்டான் இதை நினைத்து அழுது புரண்டான். தற்கொலை செய்து கொள்ள புறபட்டான். மலை உச்சியில் நின்று கொண்டு கிழே பயத்துடன் பார்த்தான் "ஆபத்து நேரத்தில் மனம் அவனுக்கு நின்றுவிட்டது". "ஆம் மனதை தண்டி ஒரு விஷயம் நடக்கும் போது மனதிற்கு என்ன வேலை" மனம் நின்ற போது அவன் உள் இருக்கும் ஒரு மெல்லிய குரல் அவனை தடுத்தது, அந்த குரல் எப்போதும் ஒலித்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் கேட்க மனம் விடுவதில்லை. அந்த மெல்லிய குரல் அவனிடம் இன்னும் ஒரு முறை பந்தயத்தில் விளையாடுவோம் இந்த முறை கண்டிப்பாக ஜெயிப்போம் என்றது. அவனும் அதை ஏற்று கடன் வாங்கி குதிரை பந்தயத்திற்கு சென்றான். மறுபடியும் அந்த மெல்லிய குரல் "No.12" ஆம் எண் குதிரை மீது கட்டசொன்னது அவனும் கட்டினான் அது ஜெயித்தது அவன் பலமடங்கு லாபம் பார்த்தான் கோடீஸ்வரன் ஆகிவிட்டான். இப்பொழுது ஆசை உள்ளே புகுந்து விட்டது அந்த மெல்லிய குரல் நாம் வென்றுவிட்டோம் வா செல்வோம் என்றது. மறுபடியும் மனம் உள்ளே புகுந்து அவனிடம் நமக்கு நல்ல நேரம் வந்துவிட்டது உலகத்திலே பெரிய கோடீஸ்வரன் ஆகபோறோம் என்று மற்ற குதிரைகள் மீது கட்டசொன்னது. இந்த நேரத்தில் மெல்லிய குரல் எப்படி கேட்கும்? அவன் மனம் சொன்னார் போல் கட்டினான். கட்டியதெல்லாம் தோற்க ஆரம்பித்தது. அவன் மறுபடியும் பிச்சைக்காரன் ஆகிவிட்டான். இப்பொழுது என்ன செய்வது என்று கேட்டான் "மனம், வேறு என்ன மலை உச்சியை நோக்கி கிளம்பு தற்கொலைக்கு நேரமாகி விட்டது".
மனதிற்கு இடம் கொடுபவர்களே சற்று நேரம் இதை பார்த்து இளைபாருங்கள்

பிரார்த்தனை

பிரார்த்தனை என்பது கடவுளிடம் ஏதோ சொல்வது அல்ல,
மாறாக அது கடவுள் சொல்வதை கேட்பது.
கருணைக்குப் பின் நன்றியுணர்வு பொங்கி வந்தால்
அப்போது இந்த பிரபஞ்சம் முழுமையுமே ஒரு கோவிலாகி விடும்.
இணைப்புணர்வு என்பது உன்னுள் வளர்வது. அது உன்மேல்
திணிக்கப்படுவது அல்ல. அது ஒரு பிளாஸ்டிக் பூவல்ல. இணைப்புணர்வு என்பது
வாழ்வின் மிகவும் அரிதான கலையுணர்வு அனுபவம்.
உனக்கு வழி காட்டும் புனிதநூல் உன்னால் மட்டுமே
எழுதப்பட முடியும், அது உன்னுடைய அனுபவங்களைக் கொண்டுதான் எழுதப்பட வேண்டும்.
சுயஉணர்வின்றி இருக்கும்போது நீ ஒரு மிருகம். சுயஉணர்வுடன் இருக்கும்போது நீ மிருகமாக இருப்பதில்லை. தன்னுணர்வு கொள்ளும்போதுதான் நீ மனிதன்.
தியானம் உன்னை தயார் படுத்தும், கருணை உன்னை
சீர்படுத்தும். ஆகவே இந்த இரண்டு மந்திரங்களையும் உன்னுடன் எப்போதும் எடுத்து செல்.
தியானம் மற்றும் கருணை.
நன்றி- ஓஷோ தமிழ்-

மரணம்;

மரணம்;
இறப்பு ஏற்கனவே நடந்து கொண்டு இருகிறது ,
நீங்கள் அதை எதிர் கொள்கிறீர்களோ இல்லையோ,
நீங்கள் அதை பார்க்கிறீர்களோ இல்லையோ.
இது ஏற்கனவே இருக்கிறது.
இது சுவாசிப்பது போன்றதுதான்;
ஒவ்வொரு உட்கொள்ளுதலிலும் நீங்கள் பிறப்பு எடுக்கிறீர்கள்,
ஒவ்வொரு வெளி ஏற்றுதலிலும் நீங்கள் இறக்கிறீர்கள்.
யாரொருவன் உண்மயில் வாழ்கிறானோ....
அவன் ......
எந்த விததிலும் இறப்பை கண்டு அஞ்சுவதில்லை.
வாழ்க்கையை வாழுங்கள்.
வாழ்க்கையை வாழுவதில் ....
மரணம் தவிர்க்கப்படுகிறது.
வாழ்க்கையை வாழுவதில் ....
நீங்கள் மிகவும் நிறைவடைந்து இருகிறீர்கள்,
இந்த கணத்தில் மரணம் வந்தால் கூட ....
எதிர்காலம் நின்று விட்டால்,
நீங்கள் தயாராக இருப்பீர்கள்.
ஆனந்தமாய் தயாராக இருப்பீர்கள்.

யாராலும்,உங்களுக்கு வழங்க முடியாது.

உலகை துறக்க வேண்டிய அவசியமே இல்லை.கோழைகளே அதை துறப்பார்கள்.உலகில் வாழ வேண்டும்.அனுபவம் பெற வேண்டும்.இது ஒரு பள்ளி.நீங்கள் இமயமலையில் வளர முடியாது.உலகில்தான் வளர முடியும்.
ஒவ்வொரு காலடி வைப்பும் ஒரு தேர்வு.நீங்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு சோதனை.வாழ்வு ஒரு வாய்ப்பு.
உண்மை,உயிருள்ள உண்மை,ஒவ்வொரு தனி மனிதராலும் கண்டுபிடிக்கப்பட வேண்டிய ஒன்று.யாராலும்,அதை உங்களுக்கு வழங்க முடியாது.

விழிப்புணர்வு பற்றி பல கேள்விகள்.

விழிப்புணர்வு பற்றி பல கேள்விகள்.
ஓஷோ பதில்கள்……………….
விழிப்புணர்வும் மையமும் ............ தொடர்ச்சி……………
எனவே நிறைமனதுடன் செயலாற்றுங்கள். இது ஒரு நீண்ட கடினமான பயணம். மேலும், ஒரு சிறு நொடிப் பொழுதுகூட விழிப்புணர்வுடன் இருப்பது கடினம். இந்த மனம் இடைவிடாது கண் சிமிட்டிக் கொண்டே இருக்கும். ஆனால் இது சாத்தியமில்லாத ஒன்று அல்ல. இது கடினமானது, இது சிரமமானது. ஆனால் இது சாத்தியமில்லாதது அல்ல. இது சாத்தியமானது. நம் ஒவ்வொருவருக்கும் இது சாத்தியப்படும். முயற்சி மட்டுமே தேவை; உள்ளம் நிறைந்த முயற்சி மட்டுமே தேவை. எதையும் விட்டு வைக்கக் கூடாது; உங்களுக்குள் எதுவும் தொடப்படாமல் விட்டு வைக்கப்படக் கூடாது. விழிப்புணர்வுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டும். அதன்பிறகு மட்டுமே, அந்த உள் ஒளிச் சுடர் கண்டுபிடிக்கப் படும். அது அங்கேதான் உள்ளது.
இப்போது இருக்கின்ற மதங்களிலோ அல்லது இனிமேல் இருக்கப் போகின்ற மதங்களிலோ உள்ள முக்கியமான ஒற்றுமையை ஒருவன் தேடிச் சென்றால், அங்கே இந்த விழிப்புணர்வு என்கிற ஒரு சிறு வார்த்தைதான் கண்டு கொள்ளப் படும்.
இயேசு ஒரு கதை சொல்கிறார். ஒரு பெரிய வீட்டின் எஜமான் வெளியில் சென்றார். அப்போது அவர் தனது வேலைக்காரர்களிடம், தான் எந்த நேரத்திலும் திரும்பி வந்துவிடுவதாகவும், அவர்கள் இடைவிடாது எப்போதும் உஷாராக விழித்திருக்கும்படியும் கூறி விட்டுச் சென்றார். ஆகவே, ஒரு நாளின் இருபத்தி நான்கு மணிநேரமும் அவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதாயிற்று. எஜமான் எந்த வேளையிலும் வரலாம்! ஒரு குறிப்பிட்ட நேரமோ, குறிப்பிட்ட தேதியோ, குறிப்பிட்ட வேளையோ கிடையாது. ஒரு குறிப்பிட்ட தேதி இருந்தால் அப்போது நீங்கள் அதுவரை தூங்கலாம். நீங்கள் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் செய்துவிட்டு, எஜமான் வருகின்ற அந்த குறிப்பிட்ட நாளில் மட்டும் உஷாராக இருந்தால் போதும். ஆனால் எஜமானனோ, “நான் எந்த நேரத்திலும் வருவேன். இரவும் பகலும் என்னை வரவேற்பதற்கு நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்”. என்று கூறிவிட்டு போய் விட்டார்.
வாழ்க்கையின் கதையும் இதுதான். நீங்கள் எதையும் ஒத்திப் போட முடியாது, எந்த நேரத்திலும் எஜமான் வரலாம். ஒருவர், இடைவிடாது விழிப்புடன் இருக்கவேண்டும். எந்த குறிப்பிட்ட தேதியும் இல்லை. அந்த திடீர் நிகழ்வு எப்போது நடக்கும் என்றும் ஒன்றுமே தெரியாது. எனவே, ஒருவர் ஒரே ஒரு காரியம் மட்டுமே செய்ய முடியும். அதுதான் விழித்துக் கொண்டு காத்திருப்பது.
 

இது, நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியது. மேலும், விழிப்புணர்வு என்பதற்கு இப்படி உங்களுக்குள் உள்ள அந்த நடுப்பகுதியை கண்டுபிடிப்பதற்கான வழிமுறை என்று அர்த்தம். நீங்கள் எந்த அளவுக்கு தன்னுணர்வு இல்லாமல் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் உங்களிடமிருந்து மிகவும் அதிக தூரம் விலகி இருக்கிறீர்கள். அதே போன்று, நீங்கள் எந்த அளவுக்கு அதிக தன்னுணர்வுடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் உங்களுக்கு மிகவும் நெருக்கமாக வருவீர்கள். உங்களது தன்னுணர்வு முழுமையாக ஆகிவிடும்போது, நீங்கள் உங்களது மையத்தில் இருப்பீர்கள். உங்களது தன்னுணர்வு குறைவாக இருந்தால், நீங்கள் வெளிவட்டப் பரப்பில் இருப்பீர்கள். நீங்கள் தன்னுணர்வு இல்லாமல் இருந்தால், நீங்கள் வெளிவட்டப் பரப்பில் இருப்பதால், அங்கே உங்களது மையம் முற்றிலுமாக மறக்கப் பட்டு விடுகிறது. எனவே இந்த இரண்டு வழிகளில் தான் நீங்கள் நகர்ந்து செல்வது சாத்தியமாகும்..
நீங்கள் வட்டத்துக்குள் வெளிப்பரப்பிற்கு நகர்ந்து செல்லலாம். – அதன்பிறகு, நீங்கள் தன்னுணர்வற்ற நிலைக்கு நகர்ந்து செல்வதாகிவிடும். உட்கார்ந்துகொண்டு ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போதும், எங்கோ உட்கார்ந்துகொண்டு இசையை கேட்டுக் கொண்டிருக்கும்போதும், நீங்கள் உங்களை மறந்து போக முடியும், – அப்போது நீங்கள் வட்டத்தின் வெளிப்பரப்பில் இருக்கிறீர்கள். அதே போன்று, பகவத்கீதையை படிக்கும்போதும் அல்லது பைபிள் அல்லது குரானை படிக்கும்போதும் நீங்கள் உங்களை மறந்து போக முடியும் – இப்போது நீங்கள் வட்டத்தின் வெளிப்பரப்பில் இருக்கிறீர்கள்.
நீங்கள் என்ன செய்தாலும், உங்களால் உங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியுமெனில், அதன்பிறகு நீங்கள் மையத்தை நெருங்கி வருவீர்கள். அதன்பின்னர், ஒருநாள் திடீரென்று நீங்கள் அந்த மையத்தில் இருப்பீர்கள். அதன்பிறகு உங்களுக்கு சக்தி வந்துவிடும். அந்த சக்திதான் நெருப்பு. இந்த பிரபஞ்சம் முழுவதும், இந்த உயிர்கள் அனைத்தும் அந்த சக்தியுடன்தான், அந்த நெருப்புடன்தான் உள்ளது. நெருப்பு என்பது பழைய பெயர். இப்போது அவர்கள் அதை மின்சாரம் என்று அழைக்கின்றனர். மனிதன் அதை அநேக அநேக பெயர்களால் அடையாளமிட்டு வந்திருக்கிறான். ஆனால் நெருப்பு என்பது சிறந்தது. மின்சாரம் என்றால் கொஞ்சம் உயிரற்றது போலத் தெரிகிறது. ஆனால் நெருப்பு என்னும்போது, அது உயிர்த்துடிப்புள்ளதாகத் தெரிகிறது.


கண்ணடிக்கலாம் வாங்க!

கண்ணடிக்கலாம் வாங்க!
தலைப்பை படித்தவுடன் உங்கள் அனைவருக்கும் சின்னதாக ""ஷாக்'' அடித்தது போன்ற உணர்வு ஏற்படலாம். இது ஏதோ இளைஞர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்காக இந்தக் கட்டுரையில் எதுவோ சொல்லப் போகிறோம் என யாரும் எண்ணிக் கொள்ளவேண்டாம்.
இது எல்லா தரப்பினருக்கும், எல்லா வயதினருக்கும் உரிய ஒரு பொதுவானது. அந்த விசயத்தைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம்.
கண்ணடிப்பது என்பது மிகச்சிறந்த ஒரு தியானம். கண்ணடிப்பதால் நமது உடலுக்கு, மனதிற்கு, புத்திக்கு, கண்களுக்கு என அனைத்திற்கும் பலவிதத்தில் நன்மைகள் உண்டாகிறது.
ஒரு நிமிடம் தொடர்ந்து கண்ணடிப்பது என்பது ஒரு மணிநேரம் தொடர்ந்து தூங்குவதற்கு சமமாகிறது. கண்ணடிப்பது என்பது கம்ப்யூட்டரில் ரீஃப்ரஷ் என்ற ஒன்றைப் பயன்படுத்துவது போலாகும்.
அதாவது (Refresh) என்ற பட்டனை அழுத்தி கம்ப்யூட்டரை ரீஃப்ரஷ் செய்து கொள்வது போல நமக்கு இந்த கண்ணடித்தல் பயன்படுகிறது.
தினசரி யாரெல்லாம் இந்தக் கண்ணடித்தலை அதிக நேரம் செய்கிறார்களோ அவர்கள் மனதிற்குப் பிடித்தது போல வாழ்பவர்கள் என்று கொள்ளலாம்.
தினசரி யாரெல்லாம் குறைவான நேரம் கண்களை இமைத்து வாழ்கிறார்களோ அவர்களெல்லாம் புத்திக்குப் பிடித்தது மாதிரி வாழ்பவர்கள் எனக் கொள்ளலாம்.
பெண்களின் கண்களை வேடிக்கைப் பார்த்திருந்தால் உங்களுக்கு ஒரு விசயம் புரிந்திருக்கும். அதிகமுறைகள் ஒரு நாளில் கண்சிமிட்டுபவர்களாக அவர்கள் இருப்பதைப் பார்க்கமுடியும்.
ஆண்கள் எப்பொழுதுமே குறைவாகத்தான் கண்களை சிமிட்டுவார்கள். சில நுட்பமான வேலைகளில் ஈடுபடும்பொழுது இயல்பாகவே கண்களை சிமிட்டுவது குறைந்து போய்விடும் அது என்னென்ன வேலைகள் தெரியுமா ?
கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள். சாப்ஃட்வேர் இன்ஜினியர்கள். பெரிய நிறுவனங்களின் முதலாளிகள் புத்திக்கு அதிக வேலை கொடுக்கக்கூடிய துறையில் வேலை செய்பவர்கள் தொழில் நுட்பக்கலைஞர்கள், கம்ப்யூட்டர் முன் அமர்ந்து நீண்டநேரம் வேலை செய்பவர்கள் போன்றோரை உதாரணமாக சொல்லலாம்.
சுருக்கமாக புத்திக்கு அதிகம் வேலைதரக்கூடியவற்றைச் செய்பவர்களுக்கு கண் சிமிட்டுதல் என்பது குறைவாக இருக்கும்.
இவ்வாறு கண்சிமிட்டுதல் குறையும் பொழுது டென்சன், கோபம், பயம், தூக்கமின்மை குழப்பம் ஆகியவை வருவதற்கு வாய்ப்புள்ளது.
எனவே நாம் இப்பொழுது கண்சிமிட்டும் பயிற்சியை அறிமுகப்படுத்த போகிறோம்.
ஒரு நிமிடம் தொடர்ந்து கண்சிமிட்டுவது ஒரு மணிநேரம் தூங்குவதற்கு சமமாக இருக்கிறது.
தூக்கம் தான் நமது உடல், மனம், புத்தி ஆகிய மூன்றிற்கும் புத்துணர்வு ஊட்டக் கூடியதாக இருக்கிறது. அதனால் நமது கண்களைப் பாதுகாப்பதற்கு தூங்காமல் தூங்குவதற்கு ஒரு பயிற்சியைச் செய்ய இருக்கிறோம்.
ஒரு நிமிடம் கண்களைச் சிமிட்டும் பயிற்சி தான் இது.
ஒரு நிமிடம் தொடர்ந்து கண்களைச் சிமிட்ட வேண்டும். கண்களைச் சிமிட்டும் பொழுது வேகமாக சிமிட்டக் கூடாது. அதே சமயத்தில் மிக மெதுவாகவும் சிமிட்டக் கூடாது.
ஒரே சீரான அளவில் கண்களைச் சிமிட்ட வேண்டும். குறைந்தது ஒரு நிமிடம் கண்களைச் சிமிட்டும் பயிற்சியைச் செய்யலாம். அதிகபட்சமாக மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை செய்யலாம். ஆனால் ஒரு நிமிடம் கண்களைச் சிமிட்டினால் போதுமானது.
கண்களைச் சிமிட்டும் பொழுது முழுக் கவனத்தையும் கண்களின் மீது வைக்கவேண்டும். கண்களுக்கு முன்னால் தெரியும் காட்சி மறைந்து மறைந்து தெரிவதை பார்க்கவேண்டும்.
ஒரு கண் சிமிட்டலுக்கும், அடுத்த கண்சிமிட்டலுக்கும் இடையே போதுமான கால அவகாசம் இருக்கவேண்டும். அவசர அவசரமாக செய்வதால் எந்த பலனும் கிடைக்காது.
இவ்வாறு ஒருநாளில் ஒரு முறை முதல் ஐந்து அல்லது பத்து முறை வரை கண்களை சிமிட்டலாம்.
இதனால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்ன?
தூக்கமின்மை என்ற வியாதி குணமாகிறது. தூங்கும் நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது என எண்ணுபவர்களுக்கு இந்தப்பயிற்சி உதவி செய்கிறது. தூக்க மாத்திரை பயன்படுத்தி தூங்குவோர் இனிமேல் இந்த கண்சிமிட்டலைச் செய்து வருவதால் ஒவ்வொரு மாதமும் தூக்க மாத்திரைகளின் அளவைக் குறைத்துக் கொண்டே வந்து பின்னர் ஆறுமாதங்களில் முற்றிலும் நிறுத்திவிடலாம்.
டென்சன், பயம், கோபம், கவலை போன்றவைகள் குறைகிறது. கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள், சாப்ஃட்வேர் இன்ஜினியர்கள் மூளைக்கு அதிகமாக வேலை கொடுப்பவர்கள் என அனைவரும் இதன் மூலம் தங்கள் வேலைகளை சிறப்பாக இப்பயிற்சி மூலம் செய்யமுடியும்.
இதனால் கண்களுக்கு கீழள்ள கருவளையங்கள் மறைகிறது. நாம் மனதிற்கு பிடித்தது போல வாழ்வதற்கு ஆரம்பித்து விடுவோம்.
எனவே கண்சிமிட்டுதல் என்பது ஒரு நல்லபயிற்சி என்பதைப் புரிந்து கொண்டு ஒருநாளில் இரண்டு மூன்று முறைகளாவது ஒரு நிமிட அளவிற்கு கண்களைச் சிமிட்டுவதை இனிமேல் வழக்கமாகச் செய்வோம்.
நாம் ஆரோக்கியமாக நிம்மதியாக வாழ்வோம்.
குறிப்பு : கண்களைச் சிமிட்டும் பொழுது தயவுசெய்து மற்றவர்களைப் பார்த்து சிமிட்டிவிடாதீர்கள். இதனால் வரும் பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.
எனவே யாரும் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடுத்து கண்களைச் சிமிட்டுங்கள்.

கண்களைச் சிமிட்டுவோம். !
ஆரோக்கியமாக வாழ்வோம்.!
கண்ணடிக்கலாம் வாங்க!
ஆரோக்கியமாக வாழலாம் வாங்க!
வாழ்க வையகம்!

Sunday 22 February 2015

எண்ணங்கள் ஏற்படுத்தும் ஏற்றங்கள்

ம் எதிர்பார்ப்புகளே மனதில் எண்ணங்களாக தோன்றுகின்றன. அவற்றின் தாக்கம் வாழ்விலும் எதிரொலிக்கும். வாழ்க்கையில் எண்ணங்கள் ஏற்படுத்தும் ஏற்றங்கள்மாற்றங்களை காண்போம்.

வாழ்வில் வெறும் எண்ணங்கள் மட்டும் வெற்றியை தந்துவிடாது. ஆனால் அடிப்படை ஏணிப்படிகளாக இருப்பது எண்ணங்கள்தான். முன்னேற்றத்துக்கு எண்ணங்கள் எப்படி கைகொடுக்கிறதுஇதுபற்றிய ஆய்வுகள் எப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இங்கே நாம் காணப்போகும் சில ஆய்வு முடிவுகள் உங்களை உற்சாகப்படுத்தும். ஒவ்வொன்றும் வித்தியாசமான ஆய்வு. அதன் முடிவுகளும் ஆச்சரியமானவை. இனி உங்கள் எண்ணங்களையும்,பலன்களையும் வலம் வரலாம் வாங்க...

இது சாதாரண மாணவர்களை சாதனை சிகரங்களாக உயர்த்திய ஆய்வு. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக வல்லுனர் ராபர்ட் ரோசன்தல் இந்த ஆய்வை மேற்கொண்டார். ஒரு மாணவன் எப்படி இருந்தாலும் "நீ ஜெயித்துவிடுவாய்உன்னால் முடியாதா?'' என்று உற்சாகப்படுத்தினால் பலன் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றியதுதான் இந்த ஆய்வு.

திட்டப்படி ஆசிரியர்சில மாணவர்களை தேர்வு செய்து இவர்கள் திறமைசாலிகள் என்று மற்றவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். இதேபோல் பல நேரங்களிலும்பலர் முன்னிலையிலும் ஊக்கப்படுத்தப்பட்டனர். இந்தப் பாராட்டை அடிக்கடி கேட்ட மாணவமாணவிகள் இடையே புத்துணர்வு பொங்கியது. அவர்கள் ஆசிரியரின் நம்பிக்கையையும்பாராட்டையும் உண்மையாக்கும் வகையில் பலவழிகளிலும் சிறப்பாக செயல்படத் தொடங்கினார்கள். அதிக மதிப்பெண்கள் பெறுவது மட்டுமின்றி சாதனையாளர்களாக உயரும் அளவிற்கு தங்களை மேம்படுத்திக் கொண்டனர்.

இந்த ஆய்வு முடிவு ஆசிரியர்களுக்கும் சரிஉளவியல் வல்லுனர்களுக்கும் சரி ஆச்சரியத்தையே உண்டாக்கியது. ஒருவரைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களை கொண்டிருந்தால் அவர்களும் எதிர்மறையாகவே செயல்பட ஆரம்பிப்பார்கள். நாம் அவரிடம் கொண்டுள்ள எதிர்மறை எண்ணம்தான் இதற்கு காரணம் என்பதை உணரத் தவறி விடுகின்றோம்.

ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மை என்னவென்றால் நாம் பிறரிடம் எதை எதிர்பார்க்கின்றோமோ அதையே அவர்களது மனதில் விதைப்பதால் அதையே அறுவடை செய்கின்றோம். நல்லதையே நினைத்து எதிர்பார்த்தால் நம்மைச் சுற்றி உள்ளவர்களும் நல்லதையே வெளிப்படுத்துவார்கள்.

இதுவும் ஒரு சுவையான ஆய்வு. ஆசிரியரைப் பற்றிய மாணவர்களின் எண்ணங்கள் எவ்வாறு அவர்களில் மாற்றங்களைத் தருகிறது என்பது குறித்த ஆய்வாகும்.

இதற்காக ஒரு வகுப்பு மாணவமாணவிகளில் ஒரு பிரிவினரிடம் உங்கள் ஆசிரியர் திறமைமிக்கவர் என்று கூறப்பட்டது. மற்றொரு பிரிவினரிடம் உங்கள் ஆசிரியர் சற்று திறமைக் குறைவுடையவர் என்று கூறப்பட்டது.

ஆசிரியரிடம் எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் பாடங்களை புரியும்படி நடத்தமாட்டார் என்று கருதியதால் மதிப்பெண் சதவீதம் குறைந்தது. ஆசிரியர் திறமையானவர் என்று கருதியவர்கள் ஆர்வத்துடன் கற்றதை காண முடிந்தது. இது அவரவர்களின் எதிர்பார்ப்பின் விளைவே என்பது வெளிப்படையானது.

எதிர்மறை எதிர்பார்ப்பும் இல்லாமல்ஆக்கப்பூர்வமான எதிர்பார்ப்பும் அதிகளவில் இல்லாமல் அவரவர் எந்த அளவிற்கு அவர்களது ஆற்றலை வெளிப்படுத்த முடியுமோ அதற்கு உறுதுணையாக இருத்தலே சிறப்பாகும். இயல்பு நிலையில் செயல்படுவதே தங்களின் முழுமையான ஆற்றலை வெளிப்படுத்த உதவும்.

1940-ம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களில் மிகவும் திறமையானவர்களாக விளங்கிய 95 பேர் உளவியல் ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களது வளர்ச்சியை 30 ஆண்டுகள் கண்காணித்து குறிப்பெடுக்க ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அவர்களும் இதற்கு அனுமதித்து பலதகவல்களை அவ்வப்போது கூறிவந்தனர்.

1970-ம் ஆண்டு ஆய்வு முடிவுக்கு வந்தது. இறுதி நேர்முகத் தேர்வை 30 வயதைக் கடந்த ஜார்ஜ் வேலியண்ட் என்பவர் நடத்தினார். அப்போது நேர்முகத் தேர்வில் பங்கெடுத்தவர்கள் நடுத்தர வயதை தாண்டி இருந்தனர். செனட் உறுப்பினராகவும்பத்திரிக்கை ஆசிரியராகவும்தொழில் முனைவோராகவும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினர்.

ஆய்வின் அடிப்படையில் பலவிவாதங்களும் நடந்தன. அதன் பின்னர் ஜார்ஜ் வேலியண்ட் தனது நேர்முகத் தேர்வு அனுபவத்தின் கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். அதில் சிலரை பேட்டி காணும்போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்ததாகவும்இன்னும் சிலரை பேட்டி காணும்போது தனக்குள் தன் திறமையின் மேலேயே சந்தேகம் ஏற்படும் உணர்வு மேலோங்கியதாகவும் குறிப்பிட்டார்.

ஏன் தனக்கு இருவிதமான அனுபவம் ஏற்பட்டது என்று ஆராய்ந்தபோது ஒரு உண்மையை உணர்ந்தார். அதாவது பேட்டி எடுக்கும்போது யாரிடம் எல்லாம் அவர் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தாரோ அவர்களின் சுபாவமே அப்படித்தான். அவர்களை யார் பேட்டி எடுத்தாலும் அவ்வாறுதான் தோன்றும் என்று அறிந்தார். அவர்கள் சமூகத்துடன் சுமுகமாக ஒத்துப்போகத் தெரியாதவர்கள் என்றும் உணர்ந்தார்.

யாரிடம் பேட்டி எடுத்த அனுபவம் இனிமையாக அமைந்ததோ அவர்கள் சமூக ரீதியாகவும் ஆரோக்கியமான உறவுகளை வளர்த்துக் கொண்டவர்களாகவே இருந்ததை கண்டார். அவர்கள் யதார்த்தத்துடன் செயல்பட தெரிந்தவர்கள் என்பதையும் அவரால் அறிய முடிந்தது.

மேற்கண்ட ஆய்வு முடிவுகள் ஒவ்வொன்றும் உணர்த்தும்பாடங்கள் உன்னதமானவை. இவற்றில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் இவைதான்.

உங்களை யாராவது அலட்சியமாக நினைத்தாலும்இழிவுபடுத்தினாலும் உங்களை நீங்களே குறைத்து மதிப்பீடு செய்யாதீர்கள்.

மற்றவரின் குறைக்கு நீங்கள் பொறுப்பேற்க முடியாது. ஆனால் நீங்களும் யார் மனதையும் காயப்படுத்தாமல் செயல்பட பழகிக் கொள்ள வேண்டும்.

நமது செயல்களையும் ஆராய்ந்து வரவேண்டும். எண்ணங்கள் அடிப்படை என்றாலும் செயல்களே முன்னேற்றம் தரும். எனவே எந்த செயலும் வாழ்க்கையில் பின்னடைவை ஏற்படுத்தாமல் உள்ளதாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

இக்கட்டுரையில் கூறியுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் நீங்கள் அறிந்து கொண்ட உண்மைகளை மனதில் அசைபோட்டு அன்னப் பறவை போல சரியானவற்றை சரியான வகையில் உள்வாங்கிக் கொண்டு வாழ்வில் உயர வாழ்த்துக்கள். வாழ்க்கையின் உண்மைகள் அப்படியே பறித்து சாப்பிடும் பழங்கள் போன்று இருக்கும். சில நேரங்களில் பலாப்பழத்திலிருந்து எடுத்து சாப்பிடக்கூடிய பலாச்சுளை போல இருக்கும். வாழ்க்கை என்பது விபத்தல்லவிஞ்ஞானம். ஆராய்ந்து அறிந்தால் உயர்ந்துவிடலாம்.

எனவே ஆரோக்கியமான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்தி பலவித அனுபவங்களால் நேர்மறை எண்ணங்களை கொண்டு வாருங்கள். உங்கள் குழந்தையும் சாதனையாளராக வளரும் என்பதில் சந்தேகம் இல்லை

யாரும் வீணாகக் கூடாது

உலகில் எத்தனையோ படைப்புகள் உள்ளன. ஒவ்வொரு படைப்பும் உயிர்த் துடிப்பானவை. அதனதன் பிறப்பில் உன்னதமானவை. ஒவ்வொரு படைப்பும் தன் தேடலைத் தேடியே ஜீவிக்கின்றன. ஜீவன் என்றால் உயிர். இந்த உயிர் பயன்படாமல் அழிந்துவிடக் கூடாது என்பதில் ஒவ்வொரு படைப்பும் கவனமாக இருக்கின்றது. அதனால் அது தன் தேடலைத் தொடங்குகின்றது. ஜீவிப்பதற்காக. ஆம், இந்த உலகில் நல்லவண்ணம் வாழ்வதற்காக.

வாழ்க்கை எப்போதும், எல்லோருக்கும் சொல்வதைப் போல இருப்பதில்லை. இங்கு சோகம்தான் நிரம்பியிருக்கின்றது. போராட்டங்களும், பிரச்சினைகளும்தான் சோகம் நிறைந்த வாழ்வைச் சுகமாக மாற்றுகின்றன. இயல்பாக இருக்கவும் வைக்கிறது.

வாழ்வைப் பற்றிய ஒரு கருத்துப் பரிமாற்றம்...

ஒரு கடற்கரைக் கிராமம். அங்குள்ள ஒரு மீனவ இளைஞனைப் பார்த்து வேறு ஒருவர் கேட்கிறார், "கடல் ஆபத்தான இடமாயிற்றே... எப்படி நீ துணிச்சலுடன் மீன் பிடிக்கப் போகிறாய்?''

இளைஞன் சொல்கிறான், "என்ன செய்வது... நான் மீன் பிடித்தால்தான் உணவு உண்ண முடியும்.''

கேட்டவர், சட்டென்று கேள்வியின் திசைகளை மாற்றுகின்றார்-

"அது சரி... உன் தந்தை எப்படி இறந்தார்?''

"அவர் மீன் பிடிக்கச் செல்லும்போது புயலில் சிக்கி இறந்தார்.''

"உன் தாத்தா?''

"என் தாத்தா ஒருமுறை அலையில் மாட்டிக் கொண்டு கடலலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு அவரும் கடலுக்கு இரையானார்.''

"இவ்வளவு நடந்து முடிந்தபிறகும் எப்படி உன்னால் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல முடிகிறது?''

இப்போது அந்த இளைஞன் கேட்டவரைப் பார்த்து, "உங்கள் தந்தை எப்படி இறந்தார்?'' என்று கேட்டான்.

"நோய்வாய்ப்பட்டு இறந்தார்.''

"உங்க தாத்தா..?''

"அவரும் படுக்கையில் நோயில் கிடந்து பாடையாகிப் போனார்.''

"இப்படி உங்கள் பரம்பரையே படுக்கையில் கிடந்து இறந்து போயிருக்கிறார்கள். அப்புறம் எப்படித் தினமும் நீங்கள் தைரியமாகப் படுக்கப் போகிறீர்கள்?'' என்று பதிலுக்குக் கேட்டான்.

பதிலின்றி மவுனமானார் அவர். வாழ்க்கை, ஆபத்துகளும், துக்கங்களும், துயரங்களும் நிறைந்ததுதான். அதை நினைத்துக் கொண்டிருந்தால் வாழ முடியுமா? புறநானூற்றுப் புலவன் சொல்வானே, `நீர் வழிப்படும் புனைபோல' என்று. அதாவது ஆற்றின் ஓட்டத்தில் செல்லும் படகானது அதன் ஓட்டத்தோடு செல்வதைப் போல வாழ்க்கையும் சென்று கொண்டே இருக்க வேண்டும். அந்தப் படகை வழிநடத்திச் செல்கிற ஆற்றைப் போல பிறருக்குப் பயன்படுகிற விதத்தில் இருக்க வேண்டும். யாரும் இங்கே வீணாகி விடக் கூடாது.

டிசம்பர் 25.
இயேசு கிறிஸ்து மனிதகுமாரனாக மாட்டுத் தொழுவத்தில் தோன்றிய நாள். மாடுகள் அடைக்கப்படுகிற தொழுவம், அவர் பிறந்ததால் உயர்த்தப்பட்டிருக்கிறது. தொழுவத்தில் பிறந்த அவரைத்தான் கிறிஸ்தவர்கள் தொழுது கொண்டிருக்கிறார்கள்.

அவர் மனிதகுலம் உயர்வதற்காக எடுத்துரைத்த சிந்தனைகள்தான் பைபிள் என்கிற வேதப்புத்தகம். வாழ்க்கைக்கான, குறிப்பாக இளைஞர்களுக்கான முத்தான மூன்று சிந்தனைகளை உரத்துச் சொன்னவர் இயேசு.

தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் தரப்படும், தேடுங்கள் கண்டடைவீர்கள், இந்த மூன்றும் வெற்றிக்கான விதைகள். சில விதைகள் பயனில்லாமல் சோடையாகிப் போகும். ஆனால் இது நம்பிக்கைச் செடியை வளர்க்கிற நல்ல விதை. கருத்து நிறைந்த விதை.

அழுகின்றவர்கள் பாக்கியவான்கள் என்கிறார் இயேசு. இது என்ன முரண்பாடு? அழுகிறவர்கள் எப்படி பாக்கியவான்கள் ஆவார்கள் என்று மனது கேட்கலாம். அழுபவன் எப்பொழுதுமே அழுது கொண்டிருக்க மாட்டான். பிறர் அழுவதையும் மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள். சிந்துகின்ற கண்ணீரைத் துடைப்பதற்கு ஏதேனும் இரண்டு ஆதரவுக் கரங்கள் நிச்சயமாக நீளும். அவர்கள் ஆதரவு பெறுவார்கள். எவரும் இங்கே வீணாகி விடுவதில்லை. அதனால்தான், `என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்குச் சற்றே இளைப்பாறுதல் தருவேன்' என்கிறார்.
  
இனிய இளையோரே! இதில் ஒன்றை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள். சற்றே இளைப்பாறுதல் தருவேன். சற்று நேரம்தான். அதாவது, சிறிதுநேரம்தான். அதற்குப் பிறகு அவரவரின் தேடலைத் தேடியாக வேண்டும். தேடுங்கள், கண்டடைவீர்கள் என்று தெளிந்து சொன்னது இதன் வெளிப்பாடுதான். இதில் நீங்கள் எதை நோக்கித் தேடுகிறீர்களோ அதைக் கண்டடைய முடியும்.

பிறந்தவுடன் குழந்தை அழுகிறது. ஆம், அது ஒரு தேடல். குழந்தைக்கான உணவு கிடைத்ததும் அதன் அழுகை நின்று விடுகிறது.

விளக்கைத் தேடி அந்த விளக்கை ஏற்றியவர்கள் வெளிச்சத்தை அனுபவிக்கின்றார்கள்.

27 ஆண்டுகள் தனிமைச் சிறையில் இருந்து கொண்டே வெள்ளையரின் அரசாங்கக் கதவுகளைத் தட்டினார் நெல்சன் மண்டேலா. தென் ஆப்பிரிக்கா சுதந்திரம் அடைந்தது.

சிந்தனைச் சிறகுகளை விரித்து, வைக்கத்தில் பெரியார் போராட்டத்தைத் துவக்கினார். வைக்கம் ஆலயக் கதவு திறந்தது. சமூகநீதி பிறந்தது.

தேடல்களைத் தொடங்கிய எவரும் வாழ்க்கைப் பயணத்தில் வீணாகிவிடவில்லை. அவர்கள் எல்லோரும் வரலாற்று ஏடுகளில் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நல்ல தேடல் வெற்றியைத் தரும்.