Thursday 31 December 2020

கவலைப்படாதே

இதை படிக்கும் முன் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்திய பின்னர் படியுங்கள். அப்போது தான் ஒரு தெளிவு உங்களுக்குள் பிறக்கலாம்...
(இது  ஆத்மார்ந்த மூத்தோரின் அறிவுரை)

.     பயனுள்ள பதிவு தவறாமல் படிக்கவும்...
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.

நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.

உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.

ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....

*ஒவ்வொரு மனிதனும்*
*தனித்தனி ஜென்மங்கள்.*
தனித்தனி பிறவிகள்
தனித்தனி ஆன்மாக்கள்

அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும்.அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும். அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் .

அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை அவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.

இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.

அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.

அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும், எந்தஉறவுகளாக இருந்தாலும், அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது. 

எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி.  இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...?

ஒதுங்கி நின்று வேடிக்கை பார்!....பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.

*அவர்களுக்கு அனுபவம் தான் குரு.*

அந்த அனுபவம் ஏற்பட்ட பிறகு தன்னை மாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு விதி இருந்தால் தன்னை திருத்திக் கொள்வார்கள். அதுவரை நீ பொறுமையாக இரு.

செயற்கையாக ஒரு குணத்தை  உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார்?, தன் குணம் என்ன?, என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.

நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தவிர நாம் வேறு எதையும் செய்து காட்ட முடியாது. 

எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் கடவுள்.
அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்க்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.

நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும் , உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் . அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.

இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக்கொள்.அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.

*உன் இன்ப துன்பத்தில் பங்கு பெறுவதற்கு இந்த பிரபஞ்சத்தில் ஒருவர் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் உன்னை கைவிடாமல் உன்னோடு சேர்ந்தே பயணிப்பார். அது உன் பிறவி பிராப்தத்தை பொறுத்து இருக்கிறது. அப்படி அது நடந்து விட்டால், எந்த சூழ்நிலையிலும் உன்னோடு இணைந்தே இருப்பார்*

நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள் ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.

*மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.*

உன் கண்ணீரும். உன் கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும்...அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.

தைரியமும் தன்னம்பிக்கையும் தான் 
ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள். இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.

உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பொறுமையாக மீண்டும் ஒருமுறை படிக்கவும்... நன்றி.

Monday 28 December 2020

நீயா நானா



ஒருவர் தன் வீட்டு சுவரில் மாட்டுவதற்காக ஒரு சுவர் கடிகாரம் வாங்கினார். சுவரில் மாட்ட ஆணி அடிக்க சுத்தியலைத் தேடினார் கிடைக்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரரிடம் இரவல் வாங்கலாம்னு நினைத்தார். ஆனால் ராத்திரி நேரமாச்சே சரி காலையில் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..

காலைல பக்கத்து வீட்டுக்கு கிளம்பும் போது "ச்சே காலங்கார்த்தால இரவல் கேக்க வந்துட்டானே" னு நெனச்சுட்டா என்ன செய்வது. சரி அப்புறம் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..

இப்படியே ஒவ்வொரு நாளும் "விளக்கு வைக்குற நேரத்துல சுத்தியல் கேட்டு வந்துட்டான் பார்"

"வெள்ளிக் கிழமை அதுவுமா இரவல் கேக்கறானே"

பக்கத்து வீட்டுக்காரன் இப்படி எதையாவது சொல்லி விட்டால் அவமானமாகி விடுமே என்ற தயக்கத்திலேயே பல நாட்கள் சுத்தியலைக் கேக்காமல் விட்டு விட்டார் அந்த நபர்.

மாட்டப்படாத கடிகாரம் அவர் கண்ணில் பட்டுக்கொண்டே அவரை வெறுப்பேத்தியது..

ஒரு நாள் விருட்டுனு பக்கத்து வீட்டுக்கு போய் "யோவ் போய்யா உன் சுத்தியும் வேணாம் ஒண்ணும் வேணாம் நீயே வெச்சுக்கோ"னு சத்தம் போட ஆரம்பித்து விட்டார்... பக்கத்து வீட்டுக்காரருக்கோ ஒண்ணுமே புரியல..

இந்த கதை மாதிரி தான் அடுத்தவரிடம் தங்கள் மனதில் என்ன இருக்கிறது என்று பேசாமல் நாமாகவே அவர் இப்படி சொல்லுவாரோ அப்படி சொல்லுவாரோ என்று மாட்டப்படாத கடிகாரத்தை போல் நாமும் நன்கு பழகியவர்களிடம் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் பகைமையை வளர்த்துக் கொண்டு அந்நியமாக்கி கொள்கிறோம்.

நெருக்கமான இருவருக்குள் பிரச்சனைகள் வருவதற்கு மூன்றே காரணங்கள் தான் இருக்கின்றன.

ஒன்று ஒருவர் சொல்லும் காரணம்

இன்னொன்று இன்னொருவர் சொல்லும் காரணம்

மூன்று உண்மையான காரணம்

இந்த உண்மையான காரணம் என்ன என்று இருவரும் உட்கார்ந்து பேசினால் தான் தீர்வு கிடைக்கும். தங்களுக்குள் சண்டையும் சச்சரவும் வர என்ன காரணம் என்று தெரிந்து கொண்டால் அதற்கு என்ன தீர்வு என்று எளிதில் கண்டு பிடிக்க முடியும்.. இல்லையென்றால் நமக்குள் இருக்கும் Ego வை போகச் சொன்னாலே போதும்... 

உண்மையாக உள்ள நிலையினை அறியாமல்... தடுமாறும் கற்பனைகளில் மூழ்காமல்... வெளிப்படையான மன பரிமாற்றங்களால் நமது வாழ்வை மேலும் மேலும் இனிமையாக முடியும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். 

எந்த சூழலிலும் 
நீயா-நானா என்பது "விஷம்" 
நாம் என்பதே "நலம்" 
என்பதை முழுமையாக உணருங்கள். 

வாழ்க🙌வளமுடன்

*அன்பே🔥சிவம்*

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

Sunday 29 November 2020

நேரம் நமக்கு



*அழகான நேரங்கள்..!!*

உங்கள் வாழ்க்கை வளமாக உங்களுக்காக சில நிமிடங்களை நீங்கள் செலவிட்டே ஆகவேண்டும்.

எனக்கு நேரமில்லை. என்னால் நேரத்தை ஒதுக்க முடியாது என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை.

ஒரு நாளின் இருபத்தி நான்கு மணிநேரங்களில் நமக்கான நேரம் இல்லை என்றால் வெட்கப்பட வேண்டும். 

நம்மை நாம் செதுக்கி கொள்ளவும் நம்மை நாம் யாரென்று உணரவும் நமது எண்ணங்களை செயல்பாடுகளாக மாற்றவும்.

அந்த செயல்பாடுகளில் வெற்றி பெறவும் நமக்கான கால நேரம் மிகமிக அவசியம்.

ஒரு நாளின் துவக்கத்தை மிக  அழகாக மாற்றும் சக்தி உங்கள் ஒருவருக்கே உண்டு என்பதனை மறந்து விடாதீர்கள்.

அதிகாலையில் எழுந்து கொள்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

இந்த வழக்கம் உங்களை மிக  உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். இது வெற்றியாளர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை.

அதிகாலை துயில்  எழுந்து விட்டால் மட்டும் போதாது.

உங்களையும் உங்கள் சிந்தனைகளையும் லட்சியங்களையும் உங்களுக்காக  உங்கள் வாழ்க்கை வளமானதாக மாற மாற்றிக்கொள்ளுங்கள்.

யாருக்காகவும் நீங்கள் மாறவேண்டாம்.

அது உங்கள் சுயத்தினை தொலைத்து விடும். உங்கள் கொள்கைகளை மாற்றுங்கள். உங்கள் நடவடிக்கைகளை மாற்றுங்கள். உங்கள் சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்யுங்கள்.

உங்கள் பழக்கவழக்கங்களை மாற்றுங்கள். உங்கள் பேச்சை குறைத்து செயலில் வேகத்தையும் உறுதியையும் கூட்டுங்கள்.

உங்களுக்காக நீங்கள்  ஒதுக்கிய நேரத்தில் உங்கள் வாழ்கையை மாற்றி அமைக்கும் காரணிகளை பற்றி ஒரு புத்தகத்தில் எழுதுங்கள். 

இன்னும் சில  வருடங்களில் நீங்கள்  என்னவாக வேண்டும் என்பதனை எழுதுங்கள். 

நீங்கள் அடைய வேண்டிய குறிக்கோள்களையும் சந்திக்க வேண்டிய நபர்கள் பார்க்க வேண்டிய இடங்கள் அடைய வேண்டிய  இலக்குகளையும் தினம்தோறும் எழுதுங்கள்.

இப்படி செய்து கொண்டு வாருங்கள் மிகமிக விரைவில் நீங்கள் அடைய வேண்டிய அனைத்தையும் அடைவீர்கள்.

*இது முற்றிலும் உண்மை...!*

*ஆனந்தமான வாழ்வுக்கு ஆழ்மனதின் அற்புத சக்தி பற்றிய விழிப்புணர்வு அவசியம் என்பதை அனைவருக்கும் புரியவைத்து அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்....*

வாழ்க🙌வளமுடன்

*அன்பே🔥சிவம்*

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

Monday 2 November 2020

பாடம்

● ஒரு குட்டி நீதிக்கதை.....

ஒரு ஊர்ல ஒரு அறிவாளி ஆள் இருந்தார். அவருக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் .

அடிக்கடி கோவிலுக்கு போவார்.

கடவுளை வேண்டிக்குவார் .அதுக்கப்புறம் காட்டுக்கு போவார. விறகு வெட்டுவார். அதை கொண்டு போய் விற்பனை செய்வார். ஓரளவுக்கு வருமானம் வந்தது.

அதை வச்சிக்கிட்டு நிம்மதியா வாழ்க்கை நடத்திகிட்டு இருந்தார்.

ஒரு நாள் அது மாதிரி அவர் காட்டுக்கு போகும் போது அங்கே ஒரு நரியை பார்த்தார். அந்த நரிக்கு முன்னங்கால் ரெண்டுமே இல்லை. எதோ விபத்துல இழந்துட்டது போல இருக்கு.. 

அது பாட்டுக்கு ஒரு மரத்தடியில உட்கார்ந்திருக்கு.. அதை இவர் பார்த்தார் ..

அப்போ இவர் மனசுல ஒரு சந்தேகம்...

"இந்த நரிக்கு ரெண்டு காலும் இல்லை ... அப்படி இருக்கறப்போ இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியை போக்கி கொள்ள முடியும் ..?" அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சார்....

இப்படி யோசிச்சுகிட்டு இருக்கும் போதே அந்த பக்கமா ஒரு புலி வந்தது..

அதை பார்த்த உடனே ஓடி போய் ஒரு மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிகிட்டார், ஒளிஞ்சிகிட்டு என்ன நடக்குதுன்னு கவனிக்க ஆரம்பிச்சார். அந்த புலி என்ன பண்ணிச்சுன்னா ... ஒரு பெரிய மானை அடிச்சி இழுத்துகிட்டு வந்தது ...

அதை சாப்பிட்டது ...

சாப்பிட்டது போக மீதியை அப்படியே அங்கேயே போட்டுட்டு போய்ட்டது...

புலி போனப்பின் கால் இல்லாத அந்த நரி மெதுவா நகர்ந்து கிட்ட வந்தது ...
மிச்சமிருந்ததை சாப்பிட்டது ..
திருப்தியா போய்ட்டது...

இவ்வளவையும் மரத்துக்கு பின்னாடி நின்னு நம்ம ஆள் கவனிச்சி பார்த்து கிட்டு இருக்கார்.

இப்ப அவர் யோசிக்க ஆரம்பிச்சார்...

ரெண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடறான் . அப்படி இருக்கறப்போ...
தினமும் கோவிலுக்கு போய் சாமி கும்பிடற நமக்கு சாப்பாடு போடாம விட்ருவானா?, நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம்..

நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும், மழைலயும் கஷ்டபடனும் ..?...
எதுக்காக வேர்வை சிந்தி விறகு வெட்டனும் ...?

இப்படி யோசிச்சார்..... அதுக்கப்பறம் அவர் காட்டுக்கே போறதில்லை...

கோடலியை தூக்கி எறிஞ்சிட்டாரு........
பேசாம ஒரு மூலையிலே உக்கர்ந்துட்டார்.

அப்பபோ கோவிலுக்கு மட்டும் போயிட்டு வருவார்..

" கடவுள் நம்மை காப்பாத்துவார் ... அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார் "- அப்படின்னு நம்பினார்..,
கண்ணை முடிகிட்டு. கோயில் மண்டபத்துலேயே ஒரு தூண்ல சாஞ்சி உக்காந்துகிட்டார்.

ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கு..

சாப்பாடு வந்த பாடில்லே.. !
இவர் பசியால வாடி போனார் . உடம்பு துரும்பா இளைச்சு போய்டுச்சு எலும்பும், தோலுமா ஆயிட்டார் .

ஒரு நாள் ராத்திரி நேரம், கோயில்ல யாருமே இல்லை. இவர் மெதுவா கண்ணை திறந்து கடவுளை பார்த்தார் ...

"ஆண்டவா ... என்னுடைய பக்தியிலே உனக்கு நம்பிக்கை இல்லையா .....?" நான் இப்படியே பட்டினி கிடந்தது சாக வேண்டியது தானா ? காட்டுல அந்த நரிக்கு புலி மூலமா சாப்பாடு போட்டியே..! அதை பார்த்துட்டு தானே இங்கே வந்தேன் ... என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே ... இது நியாயமா ?" ன்னாரு

🙏இப்போ கடவுள் மெதுவா கண்ணை திறந்து சொன்னாராம்.....

முட்டாளே!... நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே.. ! புலி கிட்ட இருந்து ....அப்படின்னாராம்..... . புலி போல் உழைத்து சாப்பிட்டு மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுன்னாராம்....

🙏நாம் யாரிடம் இருந்து நல்ல பாடம் கற்றுக் கொள்ள போகிறோம் என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும்..

🙏விடா முயற்சியுடன் கூடிய உழைப்பின் பலனிலும், உயர்விலும் கடவுளின் வழிகாட்டுதல் உள்ளது.

Sunday 18 October 2020

ஞானம்

🍁ஓஷோ ஞானக் கதைகள்🍁 

🌸 நான் உனக்கு ஒரு கதையைச் சொல்கிறேன்... 

புத்தர் இந்தக் கதையை அநேக தடவை கூறியுள்ளார்.

🌸 புத்தர் ஒரு காட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தார்...

அப்போது ஒரு மனிதன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான்...

யாரோ வேட்டையாடுபவர்களின் அம்பானது அவனது உடலில் பாய்ந்திருந்தது.

அவன் உயிருக்குப் போராடுகிறான். 

அவன் ஒரு தத்துவவாதி. 

🌸 புத்தர் அவனிடம்,

"இந்த அம்பை உனது உடலில் இருந்து எடுத்துவிட முடியும்.

அதை எடுப்பதற்கு என்னை அனுமதி" என்று கேட்டார்...

அந்த மனிதன்,

"கூடாது, தயவுசெய்து இதற்குக் காரணம் யார் என்று முதலில் எனக்கு தயவு செய்து கூறுங்கள்? 

🌸 எனது விரோதி யார்? 
இந்த அம்பு ஏன் எனது உடலைத் துளைத்தது? 
என்ன கர்மத்தின் பலன் இது? 

இந்த அம்பில் விஷம் தடவப்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்று கூறுங்கள்"என்று கேட்டான்.

🌸 அதைக்கேட்ட புத்தர்,

"விசாரணையை, 
நீ பின்னர் வைத்துக் கொள்ளலாம். ஆனால் முதலில் இந்த அம்பை வெளியே எடுக்க விடு.

ஏனெனில், நீ இப்போது சாவின் விளிம்பில் இருக்கிறாய். 

🌸 முதலில் 
இந்த விசாரணைகள் எல்லாம் செய்யப்பட்ட பிறகுதான் 

இந்த அம்பு வெளியே எடுக்கப்பட வேண்டும் என்றால்,

நீ உயிர்பிழைக்கப் போவதில்லை." என்று 
பதில் கூறினார்.

🌸 இந்தக் கதையை புத்தர் நிறைய தடவை கூறியுள்ளார். 

இதன் மூலம் அவர் கூறுவது என்ன?

"நாம் அனைவரும் சாவின் விளிம்பில்தான் இருக்கிறோம் என்று அர்த்தம்." 

மரணத்தின் அம்பு உன்னை ஏற்கனவே துளைத்து விட்டது.

 நீ அதை அறிந்திருக்கலாம். அல்லது அறியாமல் இருக்கலாம். 

🌸 மரணத்தின் அம்பு ஏற்கனவே உன்னுள் 
ஊடுருவி விட்டது.

அம்பு கண்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

ஆனால் கஷ்டம் இருக்கும். 
நீ படும் துன்பம்,

"மரணத்தின் அம்பு 
உனக்குள் ஊடுருவிச் சென்று விட்டதாகக் காட்டுகிறது."

🌸 எனவே, 

"இந்த உலகைப் படைத்தது யார்? 

ஏன் படைத்தான்? 

நான் ஏன் படைக்கப்பட்டேன்? 

எனக்குப் பல பிறவிகள் உண்டா? அல்லது 
ஒரு பிறவிதானா?

நான் இறந்த பிறகு உயிரோடு இருப்பேனா அல்லது இல்லையா?" 

என்று கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்காதே.

🌸 அதனால்தான் புத்தர், 

"பிறகு விசாரணை செய்து கொள். 

முதலில் துன்பம் என்னும் இந்த அம்பு வெளியே எடுக்கப்படட்டும்"
என்று கூறுகிறார்.

🌸 மேலும் புத்தர் சிரித்துக் கொண்டே, 

" துன்பம் என்னும்,
இந்த அம்பு வெளியே எடுக்கப்பட்ட பிறகு,

இதைப் போன்று விசாரணை செய்கின்ற யாரையும்,

நான் ஒருபோதும் கண்டதில்லை." 
என்று கூறினார்.

🌿ஓஷோ🌿

Sunday 9 August 2020

தவறுகள்



*💗இன்றைய சிந்தனை...*

*தவறுகளை பூதக்கண்ணாடி வைத்து பார்க்காதீர்கள்..!!*

மன்னிப்பு வழங்குதல் ஓர் ஆன்மிகச் சுத்திகரிப்பு என்று தான் துறவிகள் நம்பினார்கள். தங்கள் மத நம்பிக்கைக்கு ஏற்ப, இதை அவர்கள் கையாண்டார்கள். பிறகு, அதன் சுகமளிக்கும் பலனைக் கண்டு உளவியல் சிகிச்சையில் இதைப் பெரிய அளவுக்குப் பயன் படுத்த தொடங்கினார்கள். தற்போது மருத்துவ சிகிச்சையில் மன்னிப்பு வழங்குதலின் பலன்கள் ஆராயப்படுகின்றன. மன்னிப்பு வழங்கும் போது, உடல் நோய் எதிர்ப்பாற்றலைப் பெறுகிறது. புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது; புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்களில் மன்னிக்கும் குணம் கொண்டவர்கள் விரைவில் குணமடைகிறார்கள்.

*மன்னிக்கும் டயரி..*

மன்னிப்பு வழங்கவே ஒரு டயரி வைத்துக் கொள்ளும் பழக்கத்தை உளவியல் சிகிச்சையாளர்கள் வலியுறுத்துவார்கள். தினசரி மன்னிப்பு கேட்டு, அதை முழுமையாக எழுதி வெளியேற்றுவது மிகச் சக்தி வாய்ந்த சிகிச்சை முறை. ஒரு நாளில் யார் யார் மீது கோபமும் பகையும் வெறுப்பும் அதிருப்தியும் கொண்டீர்களோ, அவர்கள் ஒவ்வொருவரையும் மனதார அழைத்து மன்னிப்புக் கோரி அவர்களை விடுவியுங்கள். நடந்தவற்றை தர்க்கரீதியாகப் பார்த்தால், உங்கள் பக்கம் நியாயம் இருக்கலாம். மன்னிப்பு கேட்பதே தவறு என்று கூடத் தோன்றலாம். ஆனால், மன்னிப்பு வழங்குதல் மட்டுமே உங்கள் மனதுக்கும் உடலுக்கும் நல்லது என்று உணரும் போது, அதை இயல்பாகச் செய்வீர்கள்.

*அன்பும் - கோபமும்..*

யாரிடமெல்லாம் உங்களுக்குத் தினசரி கோபம் வருகிறது என்று பட்டியல் இட்டுப் பார்த்தால், உங்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருக்கும். நீங்கள் அதிகம் அன்பு செலுத்துவோர் மீது தான் நிராசைகளும், ஏமாற்றங்களும், கோபங்களும் அதிகம் இருக்கும். குறிப்பாகச் சொன்னால், நீங்கள் யாரிடம் அதிக நன்மை பெறுகிறீர்களோ, அவர்கள் மேல் தான் அதிக ஏமாற்றங்கள் இருக்கும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், மேலதிகாரிகள், வாழ்க்கைத் துணை, பிள்ளைகள், நமக்கு உதவும் உறவுகள் என்று யாரெல்லாம் நமக்கு அதிகம் செய்கிறார்களோ, அவர்கள் மேல் தான் எல்லா வருத்தங்களும் இருக்கும். அதிகம் பெறாத உறவுகளில் எதிர்பார்ப்புகளும் குறைவு; ஏமாற்றங்களும் குறைவு.

உதாரணத்துக்கு ஒரு குடும்பத்தில் தந்தை சரியில்லை; எதுவும் செய்யவில்லை என்றால் அது பெரும் துயராக இருந்தாலும், அதை விரைவில் மனம் ஏற்றுக் கொள்ளும். நாளடைவில் பெரிதாக எதையும் எதிர்பார்க்காது. ஆனால் தந்தைக்கும் சேர்த்துப் பங்களிக்கும் தாயின் மேல் அன்பும் எதிர்பார்ப்புகளும் மிக அதிகமாக இருக்கும். அம்மா செய்யும் தவறுகள் பெரிதாகத் தெரியும். இது ஒவ்வோர் உறவுக்கும் பொருந்தும். உங்கள் மீது அன்பு செலுத்தும் காதலர் அல்லது வாழ்க்கைத் துணையின் சிறு குறைகள் பூதாகரமாகத் தெரியும். உங்களை மதிக்காத, அன்பு செலுத்தாத பலரை மிக இயல்பாக நடத்துவீர்கள். அடிப்படை இது தான், செய்யச் செய்ய எதிர்பார்ப்புகள் ஏறும். ஏமாற்றங்கள் எகிறும். செய்ததைப் பார்க்காத மனம், செய்யாததைப் பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும்.

ஒரு படத்தில் நடிகர் சூரி சொல்லும் வசனம் இதை அழகாக உணர்த்தும்: “செய்யாதவனை விட்டுருவீங்க. செஞ்சவனைத்தான் வச்சு செய்வீங்க!” மனதின் இயல்பு இது. இல்லாததைத் தேடி ஓடுவது. ஏமாற்றம் கொள்வது; அஞ்சுவது; சீறுவது. இதை சற்று உற்று நோக்கினால் நம் மனம் நம் வாழ்க்கைக்கு எதிராகச் செய்யும் உள்ளடி வேலைகள் புரியும்.

*பலிகடா உறவுகள்..*

இரு தோழிகள் பேசிக்கொள்கிறார்கள்.

“பிறந்த நாளுக்கு ஒண்ணும் தரலை. வெறுங்கையை வீசிட்டு வந்து நின்னார். அதுலேர்ந்து தான் பேசறதை நிறுத்திட்டேன். அவ்வளவு சாதாரணமாப் போயிட்டோமா என்ன?”

“அடியே... உம் புருஷன் பரவாயில்லை. எங்காளு நான் சம்பாதிச்ச காசு நூறு ரூபா இருந்தாலும் எடுத்துட்டு குடிக்க கிளம்பிடுவாரு. உனக்கு இன்சூரன்ஸ் இருக்கு. எனக்கு ஏதாவது வந்தா எந்த நாதியும் கிடையாது.”

“அவரு முதல்லேர்ந்து அப்படிடீ. இவருக்கென்ன கேடு? போன வருஷம் அவங்க அக்கா பொண்ணுக்கு மட்டும் போயி கரெக்டா சீர் பண்ண தெரியுதுல்ல? அப்ப நான்னா என்ன வேணா பண்ணலாம்... கேக்க மாட்டான்னுதானே எண்ணம்?”

இதற்கு முன்னும் பின்னும் என்ன நடந்திருக்கும் என நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். வரங்களை மறக்கும்; சாபங்களைத் தினம் தேடித்தேடி கற்பனை செய்துகொள்ளும். இந்த மன விளையாட்டின் பலிகடாக்கள் நம் நெருங்கிய உறவுகள். ஏமாற்றமும் கோபமும் நெருங்கிய உறவுகளில் இருந்தால், அது ஒரு மனப்பழக்கமாகி வருவோர் போவோரிடமெல்லாம் வருத்தம் கொள்ள வைக்கும்.

முகம் தெரியாத ஆட்கள் முதல் குடும்பத்திலுள்ள நெருங்கிய உறவுகள் வரை யார் மீது வருத்தமும் கோபமும் கொண்டாலும், அவை தங்கிப் போகும் பாத்திரம் உங்கள் உடல் தான். அத்தனை உஷ்ணத்தையும் அழுக்கையும் காலகாலமாக சேர்த்து வைத்தால் அந்தப் பாத்திரம் என்னாகும்? அதைத் தினசரி துலக்குதல் நன்று. தவறு யார் மீது இருந்தாலும் வந்த கோபத்தை வெளியேற்றி, எதிராளியிடம் மானசீகமாக மன்னிப்புக் கோரி, அமைதி கொள்ளுவதே புத்திசாலித்தனம்.

*வெப்பத்தைத் தணியுங்கள்..*

இப்படி அழுக்கும் உஷ்ணமும் நாளும் சேராமல் இருந்தால், நாள் தோறும் மன்னிப்பு கேட்டு கழுவி வைக்க வேண்டிய அவசியமே இருக்காதே என்று தோன்றுகிறதா? அதுவும் சாத்தியம் தான். மனம் கோபம் கொள்ளும் போதே, அதை உணர்ந்து மன்னிப்பு கோரி வெளியேற்றிவிடுவது.

“நீ சொல்வதைக் கேட்டால் எனக்குக் கோபம் வருகிறது. ஆனால், கோபம் கொள்ளுதல் என் உடலுக்கும் நம் உறவுக்கும் நல்லதல்ல. எதை முடியுமோ அதை மட்டும் செய்யலாம். வீண் வார்த்தைகள் வேண்டாம். நான் கோபம் கொண்டதற்கும் மன்னிப்பு கேட்கிறேன். நீயும் இந்தக் கோபத்திலிருந்து வெளியேறி விடுதலை கொள்!” என்று அந்த நொடியிலேயே விழிப்புணர்வுடன் பிரார்த்திக்கலாம்.

எப்படி அந்த விழிப்புணர்வை அடைவது? தியானம் தான் அதற்குச் சிறந்த வழி. அந்த அளவு விழிப்புணர்வு வரும் வரை தினசரி மன்னிப்புக் கோருதல் அவசியமாகிறது..!!

*💗வாழ்க வளமுடன்💗*

*பகிர்வு*

Thursday 6 August 2020

பிரேக்

*“ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?”* 
ஒருமுறை இயற்பியல் ஆசிரியர்  ஒருவர் தனது மாணவர்களிடம் 

 “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?” 

பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன. 

"நிறுத்துவதற்கு"

“வேகத்தைக் குறைப்பதற்கு"

“மோதலைத் தவிர்ப்பதற்கு "

"மெதுவாக செல்வதற்கு"

"சராசரி வேகத்தில் செல்வதற்கு"

என பல்வேறு பதில்கள் மாணவர்களிடம் வந்தது.

“வேகமாக ஓட்டுவதற்கு"  என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர். 

அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது. 

ஆம் பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன. 

உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்? நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது. 

பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது.

இதுபோலத் தான்  தடைகள். தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மனதை சுருக்கிக் கொள்கிறோம். தடைகள் எரிச்சலூட்டுவது போலவும் நமது நம்பிக்கைகளை சிதைப்பது போலவும் நினைத்துக் கொள்கிறோம். 

உங்கள் வாழ்க்கையில் வரும் “பிரேக்குகள்” உங்கள் வேகத்தை குறைப்பதற்கு அல்ல. வேகமாகச் செல்வதற்கு தான்.

இந்த கொரானா சூழ்நிலையும் ஒரு வேகத்தடைதான், இதை நிதானமாக பிரேக் பிடித்து தாண்டி விட்டால் , பிறகு நாம் விரும்பிய இலக்கை இனிதே அடையலாம்.

*வெற்றி நிச்சயம்*

Tuesday 4 August 2020

கற்பித்தல்

நீங்கள் யார்?

ஒரு முறை பயணிக்கும் போது புலவர் காளிதாசனுக்கு மிகவும் தாகமாக இருந்தது. 

அப்போது ஒரு பெண் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதைப் பார்த்தார்.

கிணற்றடிக்குச் சென்று அந்தப் பெண்ணிடம் தண்ணீர் கேட்டார்.

பெண்: "தருகிறேன். ஆனால் நீங்கள் யார்? உங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளுங்கள்" என்றாள்.

காளிதாசர்: தான் யார் என்று இந்த கிராமப்புற பெண் அறிய அருகதை அற்றவள் என்று எண்ணினார். 

எனவே, "நான் ஒரு பயணி" என்றார்.

பெண்: "இந்த உலகில் இரண்டே பயணிகள் தானே உண்டு. 

அது சூரியனும் சந்திரனும் ஆகும். தினமும் உதித்து பிறகு அஸ்தமித்து சதா பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்".

காளிதாசர்: "சரி. அப்படியானால் நான் ஒரு விருந்தினர்" என்றார்.

உடனே அந்த பெண்: இந்த உலகில் இரண்டே விருந்தினர்தானே உண்டு - இளமையும் செல்வமும்... 

இரண்டும் தற்காலிக மானவை. எனவே அவற்றைதான் விருந்தினர் என்று ஏற்க முடியும்" என்றாள்.

ஆச்சரியப்பட்ட காளிதாசர்: "சரி, நான் ஒரு பொறுமைசாலி என்று வைத்துக்கொள்" என்றார்.

அதற்கு அந்த பெண்: இந்த உலகில் இரண்டே பொறுமைசாலிகள்தான் உண்டு. 

அவை, பூமியும் மரமும் ஆகும். 

யார் பூமியை எத்தனை மிதித்தாலும், பழத்திற்காக மரத்தின் மேல் எத்தனை கல் எறிந்தாலும், அவை பொறுமையாக இருக்கின்றன" என்றாள்.

பொறுமை இழந்த காளிதாசர்: "மிகவும் சரி. நான் ஒரு பிடிவாதக்காரன்" என்றார். 

அதற்கு அந்த பெண்: புன்னகையோடு இந்த உலகில் பிடிவாத குணம் கொண்டவை இரண்டுதான் - நம் நகமும் தலைமுடியும் ஆகும். 

நாம் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருக்கும்" என்றாள்.

பொறுமை இழந்த காளிதாசர், கோபமாக, "சரி, நான் ஒரு முட்டாள்" என்றார்.

அந்த பெண் சிரித்துக்கொண்டே,

"இந்த உலகில் அறிவும் ஆற்றலும் இன்றி ஆளும் அரசனும், அவனைப் புகழ்ந்து துதி பாடும் அமைச்சருமே இரு வகை முட்டாள்கள் ஆவர்" என்றாள்.

தான் தோல்வி அடைந்ததை உணர்ந்த காளிதாசர் அந்த பெண்ணின் கால்களில் விழுந்து அவள் பாதங்களைப் பற்றி பின் எழுந்த போது, தான் கண்ட காட்சியில் உறைந்து விட்டார். 

கற்பித்தல் மற்றும் அறிவுக்கும் கடவுள் ஆன அன்னை சரஸ்வதியை அங்கே காட்சி தந்து, "காளிதாசா, நீ புத்தி உள்ளவன். ஆனால் நீ உன்னையே உணர்ந்தால்தான் நீ மனுஷ்யா. எவன் ஒருவன் தன்னை அறிவதில்லையோ அவன் மனுஷ்ய உச்சத்தை அடைவதில்லை" என்று ஆசீர்வதித்தார்.

இந்த கதையை சொன்ன உபன்யாசகர், "குழந்தைகள் வளர்ந்து மனுஷ்ய உணர்வு பெற்று தங்களையே அறிய வேண்டும். 

குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர், அவர்களுக்கு பணம் மற்ற வசதிகள் சம்பாதிக்க கற்றுத் தருவதைத் தவிர்த்து, குழந்தைகள் தங்களையே உணர்ந்து சிறந்த மனிதர்களாக வாழ கற்றுத்தர வேண்டும் என்றார்.

Sunday 2 August 2020

சந்தோஷம்

*சந்தோஷமா இருக்க ஆசையா*
*இதோ மகிழ்ச்சியான*
*வாழ்க்கைக்கு 5 டிப்ஸ்..!!*

*1. உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள்.. அடுத்தவர் வாழ்க்கையை அல்ல..*
*༺🌷༻*
எதிலும் நிறைவின்றி வாழ்ந்து கொண்டிருக்க
வேண்டாம். கடந்த ஒன்றை மாற்ற இயலாது. எனவே இப்போதுள்ள வாழ்க்கையை புகார்கள் இன்றி ஏற்றுக் கொள்ளுங்கள் பழைய
வலிகளிலிருந்து கற்றுக் கொள்ள பாடங்கள்
உள்ளது. அதன் பின்னான உங்கள் வாழ்க்கை
பிரத்யேகமானது, மகிழ்ச்சியின் அலைகள்
உங்கள் மீது விழ முதலில் உங்களை
அனுமதியுங்கள். அதற்கு முதலில் உங்களை
நேசிக்கத் தொடங்குங்கள். வாழ்க்கையை
முழுமையாக வாழுங்கள். சந்தோஷம் நிம்மதி
எல்லாம் தானாகவே வரும், போகும் மீண்டும்
வரும், புரிந்ததா?

*2. வேலை, வாழ்க்கை இரண்டையும் சமமாகப் பாருங்கள்*
*༺🌷༻*
சிலர் எப்போதும் வேலை வேலை என்று
வாழ்நாள் முழுக்க தங்கள் அலுவலக
வேலைக்கு தங்களை அப்படியே ஒப்புக்
கொடுத்துவிடுவார்கள். வேலை முக்கியம் தான். ஆனால் அதைவிட எதற்காக
வேலை முக்கியம் என்னும் சிந்தனை
முக்கியம். #மகரயாழ் உங்களை நம்பி வந்தவர்களை
நீங்கள் உருவாக்கிய உங்கள் குடும்பத்தை
அரவணைக்க வேண்டும் நேசிப்பதும்
நேசிக்கப்படுவதும் தான் உங்களை மன
மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் முக்கியமான விஷயம்.

*3. உண்மையாக இருங்கள்*
*༺🌷༻*
உங்கள் உணர்வுகளை நேரடியாக
வெளிப்படுத்துபவராக இருங்கள். மனத்தில் ஒன்று நினைத்தும் வெளியில் ஒன்றைச் சொல்லியும் முகமூடியுடன்
வாழாதீர்கள். எப்போதும் மூளைக்கு
மட்டும் இடம் கொடுக்காமல் மனத்தாலும்
வாழப் பழகுங்கள். உங்களுடைய உணர்வுகளை உண்மையாக இருங்கள். அதுவே மகிழ்ச்சியை விதைத்து நல்ல அறுவடையையும் தரும்.

*4. நல்ல நண்பர்களுடன் எப்போதும் தொடர்பில் இருங்கள்.*
*༺🌷༻*
ஆங்கிலத்தில் அழகான ஒரு பழமொழி
உள்ளது. உங்கள் தோட்டத்தின் அழகு அதில் எத்தனை பூக்கள் இருக்கிறது என்பதில்
தான் உள்ளது. உங்கள் நாட்கள் அருமையாக அமைய, மகரயாழ் அதில் எத்தனை
பொன்னான தருணங்கள் இருந்தன என்பது
அர்த்தமுள்ளதாக இருக்க அதில் எத்தனை
சந்தோஷமான புன்னகையுடன் இருந்தீர்கள்
என்பது தான் சிறப்பு. மேலும் உங்கள் வயது
நண்பர்கள் உங்களை சுற்றி இருக்கிறது
முக்கியம் உங்கள் வாழ்க்கை
ஏறாமல் அப்படியே இருக்க, எத்தனை
என்பது தான் விஷயம்.

*5. எப்போதும் சந்தோஷமாக இருப்பேன் என்று உறுதியாக முடிவெடுங்கள்.*
*༺🌷༻*
சந்தோஷம் என்பது உங்கள் தேர்வு. ஆம்.
அதைத் தேர்ந்தெடுத்து நமதாக்கிக் கொள்ள வேண்டும். இனிமேல் நான் சந்தோஷமாகவே
இருப்பேன் என்று ஒரு தீர்மானம் உறுதியாக எடுத்து, அதைக் கடைப்பிடித்து பாருங்கள்.  நம்மால் மாற்ற முடிந்த விஷயங்களை
துணிவுடன் போராடி மாற்றும் திறனும், மாற்ற முடியாத விஷயங்களை உள்ளவாறு
அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்
பக்குவமும், எதை மாற்ற முடியும், எதை
அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் எனும் ஞானமும் இருந்தால் *வாழ்தல் இனிது.*

*வாழ்க வளமுடன்*

Saturday 25 July 2020

கற்று கொடுத்தல்

நீங்கள் தாமதமாக கற்று கொண்டதை உங்கள் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் கற்றுக்கொடுங்கள். "அவர்கள் உண்மையை அறிந்து கொள்ள அவர்களின் மூளையைத் திறந்து விடவும்".

உண்மையில், மனிதர்கள் உயிர்வாழ ஒருபோதும் உணவை உண்ண வேண்டியதில்லை.

ஒரு காலத்தில் நாம் மனிதகுலம் தூய்மையான ஆற்றலில் மட்டுமே தப்பிப்பிழைத்தோம், அதன் மூலம் மனித டி.என்.ஏ கையாளப்பட்டது  ஆழ்ந்த மனநிலையுடன். 

தொடர்பு துண்டிக்கப்பட்டது, நமக்குள்  பாயும் ஆற்றலுக்கான  தொடர்பு தடுக்கப்பட்டது. 

இதன் மூலம்   உணவு மற்றும் மருந்து போன்ற ஆற்றல் ஆகியவற்றின் மூலம் நம்மிடையே இதனை  சார்ந்து வாழும் நிலையை உருவாக்கியது,  இது ஒரு உயிர்வாழும் முறையை உருவாக்கியது, இது ஏராளமான உடலின் எல்லையற்ற ஆற்றலை மாற்றியது, உயிர்வாழ்வதற்கு உணவளிக்க வேண்டிய இயந்திரமாக மாறியது.  இவை தெய்வீக உணர்விலிருந்து விலகியதன் அடையாளமாகும், 

இதைச் சொல்வதற்கு காரணம், இது மிகப்பெரிய பிரபஞ்சத் திட்டத்தின் ஒரு பகுதியாகும் மற்றும் ஒரு தெய்வீக நோக்கத்திற்கு உதவுகிறது, தெய்வீகத்திலிருந்து விலகி, துண்டிக்கப்படுவதை அனுபவிக்கவும், அதன் உணர்வுக்கு திரும்பவும்  ஆழமான மற்றும் தூய்மையானதை நாம் மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் .

Tuesday 21 July 2020

நம்பிக்கை

*மிகவும் இதயத்தைத் தொடும் செய்தி*😊

ஒரு நபர் இரண்டு உயரமான கோபுரங்களுக்கு இடையில் கட்டப்பட்ட கயிற்றில் நடக்க ஆரம்பித்தார்.🚶‍♂️

அவர் கைகளில் ஒரு நீண்ட குச்சியை சமன் செய்துகொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தார்.🚶‍♂️

அவர் தனது மகனை தோள்களில் அமர்த்தியிருந்தார்👨‍👦

தரையில் உள்ள ஒவ்வொருவரும் அவரை  மூச்சுமுட்ட பார்த்துக்கொண்டிருந்தார்கள், மிகவும் பதட்டமாக இருந்தார்கள்.🙄😱

அவர் மெதுவாக இரண்டாவது கோபுரத்தை அடைந்ததும், ஒவ்வொருவரும் கைதட்டி, விசில் அடித்து பாராட்டினர்🥳🤩👏🏻👏🏻

அவர்கள் அவருடன் கைகுலுக்கி செல்ஃபி எடுத்தார்கள்🤝🏻🤳

அவர் கூட்டத்தினரிடம் கேட்டார், *"இந்த பக்கத்திலிருந்து அந்த பக்கத்திற்கு இப்போது அதே கயிற்றில் நான் திரும்பி நடக்க முடியும் என்று நீங்கள் அனைவரும் நினைக்கிறீர்களா?"* என்று...


அனைவரும் ஒரே குரலில் *“ஆம், ஆம், உங்களால் முடியும் ..”* என்று கத்தினார்கள்  .👏🏻👏🏻

*"நீங்கள் என்னை நம்புகிறீர்களா"*, என்று அவர் கேட்டார். அவர்கள் *ஆம், ஆம், நாங்கள் உங்களை வைத்து பந்தயம் கட்ட தயாராக இருக்கிறோம்* என்று சொன்னார்கள்.🙂

அவர் சொன்னார் *"சரி, உங்களில் யாராவது உங்கள் குழந்தையை என் தோளில் உட்கார வைக்க முடியுமா?"*என்று 😱🤔

*"நான் குழந்தையை மறுபுறம் பாதுகாப்பாக அழைத்துச் செல்வேன்"* 

திகைப்பான மௌனம் நிலவியது.🤫

ஒவ்வொருவரும் அமைதியாகிவிட்டார்கள்😷

நம்பிக்கை வேறு🙂

சரணாகதி வேறு🙂

சரணாகதி என்றால் நீங்கள் முற்றிலும் சரணடைய வேண்டும்😇

இன்றைய உலகில் கடவுளிடம் சரணடைய மறுக்கிறோம்.🙏

நாம் கடவுளை நம்புகிறோம்😇

ஆனால் நாம் அவரை சரணடைகிறோமா?🤔

மிக அழகான செய்தி, மீண்டும் மீண்டும் சிந்திக்கத் தகுந்தது!🤔🤔

Monday 20 July 2020

எண் கணிதம்

*உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்து தான் உங்கள் குணத்தை தீர்மானிக்கிறதாம்!*

*ஜப்பான் நாட்டில் ஒரு விநோனதமான உளவியல் ஜோதிடத்தை நம்புகின்றனர். அதன்படி 3 என்ற எண் மிக முக்கியமான எண்ணாக பார்க்கப்படுகிறது.*

 *உங்கள் பெயரில் மூன்றாவதாக வரும் எழுத்திற்கும் உங்கள் குணத்திற்கும் அதிகமான தொடர்பு இருப்பதாக அந்த நாட்டு மக்கள் கருதுகின்றனர். அந்த வகையில் இந்த செய்தியில் எந்தந்தெந்த எழுத்திற்கு என்னென்ன பலன்கள் இருக்கிறது என வழங்கியுள்ளோம். உங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தில் என்ன குணங்கள் இருக்கிறது, உங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்களின் மூன்றாவது எழுத்தில் என்னென்ன குணங்கள் உள்ளது என பார்க்கலாம் வாருங்கள்.*

*A என்ற சொல் அதிகமாக வலிமை வாய்ந்தது. இவர்களுக்கு, தைரியம், உறுதி, மற்றும் பேராராட்டகுணம் இயற்கையாகவே இருக்கும், ஒரு சுழ்நிலையை இவர்கள் தீர்மானிப்பது போலவே கொண்டு செல்ல நினைப்பார்கள், மற்றவர்கள் இவர்களை வழிநடத்துவது இவர்களுக்கு அறவே பிடிக்காது.*

*B ஆக கொண்டவர்கள் மற்றவர்கள் பார்த்து பெருமைபடும்படி நடந்து கொள்வார்கள். இவர்கள் வாழ்க்கையில் எமோஷன், ஃபீலிங்ஸ், என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மனிதர்களை எப்படி கையாள வேண்டும் என்பதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள்.*

*C என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவதாக கொண்டவர்கள் சற்று வெள்ளந்தியானவர்கள். அதே நேரத்தில் அதிக திறமைசாலிகள், மற்றவர்களுடன் எளிதாக பழகிவிடுவார்கள். சமூகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் இருக்கும். அதே நேரத்தில் அவர்களை ஒருவர் மனதால் காயப்படுத்திவிட்டால் காயப்படுத்தியவரை பழி வாங்க அவர்கள் போடும் திட்டங்களை எல்லாம் மற்றவர்களால் யோசித்துக்கூட பார்க்க முடியாது. மற்றவர்கள் ஒரு வார்த்தை அவர்களை தவறாக பேசினால் கூட அதை அவர்களால் தாங்கி கொள்ள முடியாது. இவை எல்லாம் அவர்களின் பிறவி குணங்கள். அதே போல பேச்சில் உங்களை மிஞ்ச முடியாது. அடுத்து நடக்க விருப்பது குறித்து அவர்களுக்கு அவ்வப்போது ஒரு இன்டியூஷன் வரலாம்.*

*D என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது பெயராக கொண்டவர்கள் அனைவராலும் அதிகமாக விரும்பப்படுபவராக இருப்பார்கள். D என்ற எழுத்து சமநிலை, பாதுகாப்பு மற்றும் கடின உழைப்பை வழங்கும். நீங்கள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பீர்கள். எடுத்த இடத்தில் எழுத்த பொருளை வைக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருக்கும். வாழ்வின் அர்த்தையும் போக்கையும் நன்கு புரிந்து வைத்திருப்பீர்கள். அதனாலேயே பல இடங்களில் தலைமை பொறுப்பு உங்களுக்கு கிடைக்கும். அதே நேரத்தில் எதிலும் நீங்கள் படிவாதமாக விட்டுக்கொடுக்காமல் இருப்பீர்கள்.*

*E என்ற எழுத்தை பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் மற்றவர்கள் விரும்பும் நல்ல குணத்துடன் இருப்பார்கள். இவர்கள் இயற்கையாகவே கருணையுடனும், மென்மையாகவும் இருப்பார்கள். மிக கடினமான பிரச்னைகளையும் எளிதாக முடிப்பார்கள். இவர்களின் நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்பவர்கள் இவர்கள் அழகில் அசந்துதான் போவார்கள். ஆனால் இவர்கள் காதல் வாழ்வில் நம்ப முடியாத அதே நேரம் போனில் கடலை மட்டும் போடும் நபராக இருக்க அதிக வாய்ப்பு உண்டு, ஒரே நபரை நீண்ட நாட்கள் காதலிப்பது என்பது இவர்கள் அகராதியில் இல்லாத வார்த்தை.*

*F - என்ற சொல் இருக்கிறதா அவர்கள் மற்றவர்கள் மீது அக்கறை கொள்ளக்கூடிய அதே நேரத்தில் பொறுப்பு மற்றும் குடும்ப பாசம் அதிகம் மிகுந்த நபராக இருப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் இயற்கையாகவே தனிப்பட்ட வாழ்க்கையில் அதிக ஈடுபாட்டுடனும், அதிக ரொமான்டிக்காகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களின் இருக்கும் குழந்தைதனமும், வஞ்சமான எண்ணமும் தான் மோசனமான குணங்கள். இவர்களில் சிலர் போலியானவர்களாக இருக்கவும் வாய்ப்புகள் அதிகம்.*

*G- என்று இருந்தால் அவர்கள் புதிதான விஷயங்களை செய்வதில் எப்பொழுதும் அதிக விருப்பத்துடன் இருப்பார்கள். அவர்களின் விருப்பதிற்கு ஏற்பவே அவர்களின் வாழ்வை வாழ நினைப்பார்கள். இவர்கள் சற்று புத்திசாலியாகவும், விரைவாக சிந்திப்பவருமாக இருப்பார்கள். ஒருவர் சொல்வது உண்மையா இல்லை என்பதை கண்டுபிடிப்பதில் கை தேர்ந்தவர்கள் இவர்கள்.*

*H - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் அதிக பிராக்டிக்கல் மைண்ட் உடையவர்கள் மேலும் சற்று மூர்க்க குணமும் அதிகமாக இருக்கும். தொழில் செய்ய ஏற்ற நபர்கள் இவர்கள் தான். இதனால் இவர்களிடம் சிறந்த தலைமை பண்பும் இருக்கும். பொறுமையும், பொறுப்புணர்ச்சியும் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். வெற்றிக்காக அதிகமாக உழைப்பார்கள். ஆனால்கள் உறவுகளில் இவர்கள் சற்று போசஷிவ் மற்றும் சுயநலம் மிக்கவராக இருப்பார்கள்.*

*I - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் புனிதமான எண்ணங்களையும், கனிவான மனதையும் கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த முடிவையும் ஆழமாக யோசித்த பின்பு தான் முடிவு செய்வார்கள். அதிகமாக மற்றவர்களுக்கு உதவி செய்து இவரது இயற்கை குணம். இவர்களுக்கு அதிர்ஷ்டம் சற்று குறைவு தான். இவர்களின் மோசமான குணம் அவ்வப்போது இவர்களது செயல் மற்றவர்களை எரிச்சலூட்டும். ஆனால் இவர்கள் எளிதில் மற்றவர்களிடம் ஏமாந்து போவார்கள்.*

*J - என்ற எழுத்தை தங்களது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் இயற்கையாகவே அவர்கள் இருக்கும் சூழநிலைகளை உணர்ந்து அதற்கு ஏற்றார் போல் செயல்படுபவர்கள். வாழ்வில் அவர்களுக்கு ஒரு விஷயம் வேண்டும் என்றால் அதற்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருப்பார்கள். தன்னம்பிக்கையும், தீர்மானமும் இவர்களிடம் அதிகமாக காணப்படும். வாழ்க்கை துணையை புரிந்து கொண்டு செயல்படுவார்கள்.*

*K - என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் பல இடங்களில் மற்றவர்கள் கவனத்தை அதிகமாக ஈர்ப்பார்கள். ஒரு பிரச்னை ஏற்பட்டால் அதில் இருவரையும் சமாதானப்படுத்துவது இவராக தான் இருக்கும். மற்றவர்கள் மீது அதிக அக்கறைகளை கொண்டிருப்பார். இதனால் உறவுகளில் இவருக்கு விளையாட்டு பிடிக்காது. தனது வாழ்க்கை துணையின் அன்பு என்றும் உறுதியானதாக இருக்க வேண்டும் என நினைப்பவர்.*

*L - என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் தங்களது வாழ்க்கையையும் சக மனிதர்களையும் பார்க்கும் விதமே வித்தியாசமானதாக இருக்கும். இந்த உலகிலேயே இவர்களுக்கு முக்கியமான நபர் இவர்களது வாழ்க்கை துணை தான். இவர்களுக்கு இயற்கையாவே நகைச்சுவை உணர்வு சற்று அதிகமாக இருக்கும்.*

*M - என்ற சொல்லை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் இயற்கையாகவே உண்மையாகவும், கடும் உழைப்பாளியாகவும் இருப்பவர். சிலர் போதைக்கு அடிமையானது போல் இவர்கள் உழைப்பிற்கு அடியானவர்கள். இவர்கள் மற்றவர்களிடம் சென்று உதவி கேட்க பிடிக்காது எதுவாக இருந்தாலும் தானாவே செய்து கொள்வார்கள். இவர்களின் பொறுமைய ஒருவர் சோதித்தால் அவ்வளவு தான் கடும் கோபக்காரர்களாக மாறிவிடுவார்கள்.*

*N - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் எதை செய்தாலும் சரியாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவர்கள். மேலும் இவர்கள் இயற்கையாகவே மற்றவர்களுடன் நன்கு பழகும் குணத்தை கொண்டவர்கள். இவர்கள் ஆட்டு மந்தை போல செயல்படமாட்டார்கள். ஆட்டு கூட்டத்தில் தனியாக தெரிய வேண்டும் என நினைப்பார்கள்.*

*O- என்ற ஆங்கில எழுத்தில் தங்கள் பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் மற்றவர்களிடம் அதிகம் அன்பு காட்டும் நபராக இருப்பார்கள். மற்றவர்களுக்கு கற்றுதருவதில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவும் ஆர்வம் காட்டுவார்கள்.*

*P - என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் பெரும்பாலும் எல்லாவிஷயங்களிலும் முதன்மையாக இருக்க விரும்புவார்கள். இயற்க்கையாவே இவர்கள் பிடிவாதக்கார்களாக இருப்பார்கள். ஆனால் சுற்றியுள்ளவர்களை எப்பொழுதும் சந்தோஷமாகவே வைத்திருக்க விரும்புவார்கள். ஆனால் இவர்கள் சற்று சுயநல சிந்தினையுடன் உடையவர்கள். ஆதே நேரத்தில் நல்ல நகைச்சுவை உணர்வுகள் இவர்களுக்கு இருக்கும்.*

*Q - என்ற எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் தங்கள் வாழ்வில் உண்மையாகவும், நேர்மாகவும் வாழ நினைப்பாவர்கள். அவர்கள் நட்பாக பழகவும், அறிவுரைகள் கேட்கவும் சிறந்த நபர்கள். எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் எதையும் விட்டுக்கொடுக்கமாட்டார்கள். மற்றவர்கள் ஒரு பாதையில் சென்றால் இவர்கள் வேறு பாதையில் செல்லவிரும்புவார்கள். இவர்களுக்கு கூச்ச சுபாவமும் இருக்கும்.*

*R - என்ற எழுத்தை தங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் நல்ல ஞானம் உடையவர்கள் அதே நேரத்தில் இவர்களுக்கு இரக்க குணமும் அதிகமாக இருக்கும். மற்றவர்களின் கஷ்டங்களை போக்குபவராக இருப்பார்கள். இவருக்கு பிடித்தவர்களுக்கு உதவி செய்ய எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். ஆனால் முன்கோபம் இவர்களின் மோசமான குணம்.*

*S- என்ற எழுத்தை தங்களின் பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் அதிக நம்பகத்தன்மை கொண்டவர்கள். இவர்களின் திறமை மற்றும் அழகு அவர்கள் இருக்கும் இடத்தில் அவர்களை ஈர்க்க வைக்கும். இவர்கள் பணக்கார்களாக ஆசைப்படுவார்கள். அதனால் பணம் சம்பாதிப்பதிலும் சேர்ப்பதிலும் இவர்களை மிஞ்ச ஆட்கள் இல்லை.*

*T - என்ற ஆங்கில எழுத்தை தனது பெயரில் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் டிப்ளமேட்டிக்காக செயல்படுபவர்கள். இருவருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால் அதை தீர்த்து வைப்பதில் இவர்களது பங்கு முக்கியமாக இருக்கும். இவர் அதிர்ஷ்டத்தை விட உழைப்பை அதிகம் நம்புவார்கள். இவர்களது வெகுளித்தனமும், உதவி செய்யும் குணமும் மற்றவர்களை ஈர்க்கும். புதுமையை விரும்பும் இவர்கள் பழைய விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் இருப்பார்கள்.*

*U- ஆங்கிலத்தில் என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் கடினமான உழைப்பாளிகள். இவர்கள் சொகுசாகவும், வசதியாகவும் வாழ விரும்புவார்கள். இவர்களுக்கு எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்று தெளிவாக தெரியும். புதிய புதிய விஷயங்களில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு செல்ல அவர்கள் விரும்பும் நபரை பிரியவும் தயங்கமாட்டார்கள்.*

*V- என்ற எழுத்தை தங்கள் பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் உண்மையான மனிதர்களாக இருப்பார்கள். இவர்களது அதிக நியாபக திறன் இருக்கும். சின்ன விஷயத்தையும் அதிக நாட்கள் நியாபகமாக வைத்திருப்பார்கள். உறவுகளின் சற்று போசஷிவ்வானவர்கள் இவர்கள். கடின உழைப்பாளியான இவர்கள் அவ்வப்போது கிசுகிசுகளிலும் சிக்குவார்கள். மற்றவர்களை சார்ந்து வாழ்ந்தாலும், அவர்களை மற்றவர்கள் சார்ந்து வாழ்ந்தாலும் அதற்கு ஏற்றார் போல் நடந்துகொள்வார்கள்.*

*W - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக உள்ள நபர்கள் பெரும்பாலும் மன தள்ளட்டத்துடனேயே காணப்படுவார்கள். அவர்களுக்குள் தான் சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டோமோ என்ற பயம் எப்பொழுதுமே இருக்கும். எப்பொழுதுமே ரெஸ்ட்லெஸாக காணப்படுவார்கள்.*

*X - என்ற ஆங்கில எழுத்தை தனது பெயரின் மூன்றாம் எழுத்தாக கொண்டவர்கள் எப்பொழுதும் ஒரு கமிட்மென்டிற்குள் வர விரும்பமாட்டார்கள்.*

*Y- என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவர்கள் கவனமுடன் செயல்படுபவராக இருப்பார்கள். இவர்களில் பலர் பணக்கார வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க விரும்புவார்கள். அவர்களது சொந்த இடத்தில் இருக்க தான் விரும்புவார்கள். மற்றவர்களுடன் எளிதில் சேர்ந்து விட மாட்டார்கள்.*

*Z - என்ற எழுத்தை தனது பெயரின் மூன்றாவது எழுத்தாக கொண்டவருக்கு உடலில் அதிக ஸ்டாமினா மற்றும் வில் பவர் இருக்கும். அவர்கள் இலக்கை நோக்கி பயணிப்பவர்கள். அதனால் இவர்கள் அலுவலகத்தில் சிறப்பான ஆளாக அவர்களின் பாஸால் பார்க்கப்படுபவர். அதிக நம்பிக்கை மற்றும் ஒற்றுமை குணம் கொண்டவர்கள். இவர்களிடம் இருந்துதான் ஒரு வேலையை எப்படி செய்து முடிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.*

இலை

*“கடைசி இலை’ (Last leaf ) என்பது ஓர் ஆங்கிலக் கதையின் தலைப்பு*

இதன் கதாநாயகன் ஒரு நோயாளி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேருகிறான்.

அவன் மனதில் அணுவளவு கூட தாம் குணமடைவோம் என்ற நம்பிக்கையில்லை. இதனால் மனமும் பாதிக்கப்பட்டு விட உட்கொள்ளும் மருந்தினால் எவ்வித நன்மையும் ஏற்படவில்லை.

ஆனால் அவனைப் பேணும் செவிலிப்பெண் மட்டும் நம்பிக்கையுடன் அவனை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறாள்.

அவனது அறையின் வெளியில் ஒருமரம் தனது இலைகளைத் தினமும் உதிர்த்துக் கொண்டே வருகிறது. அந்தக் காட்சி அவனை மிகவும் பாதித்தது.

அதைச் சுட்டிக்காட்டி அதைப்போல தானும் செத்துக் கொண்டிருப்பதாக புலம்ப ஆரம்பிக்கிறான்.

மரத்தின் ஓர் இலையைத் தவிர அனைத்து இலைகளும் உதிர்ந்து போகின்றன.

அந்தக் கடைசி இலை விழும் போது தானும் இறந்து விடுவோம் என அஞ்சுகிறான். சோகத்தின் பிள்ளையாய் மாறிக்கொண்டே வருகிறான்.

செவிலி எவ்வளவு தைரியம் சொல்லியும் அவன் நம்பவில்லை.

நாளைக் காலை கடைசி இலை உதிரும் போது தானும் உதிர்வோம் என்றே நம்பினான்.

பொழுது விடிந்தது. என்ன ஆச்சரியம்! அந்த ஒற்றை இலை உதிரவில்லை.!

இதைக்கண்டதும் அவனுக்கு மகிழ்ச்சி பிறந்து விட்டது.

நம்பிக்கை விதை முளைவிட்டது. அந்த ஒற்றை இலைபோல் தானும் வாழலாம் என எண்ண ஆரம்பித்து விட்டான்.

மருத்துவரோடும், மருந்துகளோடும் நன்கு ஒத்துழைத்தான். விரைவில் குணமடைந்தான்.

அவன் வீட்டுக்குச் செல்லும் நாள் வந்தது. செவிலி வந்து அவனை மரத்தருகில் அழைத்துச் சென்றாள். அந்த ஒற்றை இலையைப் பறித்து அவனிடம் தந்தாள்.

அது வெறும் துணியில் வரையப்பட்ட செயற்கை இலை என்பது தெரிகிறது.

அதை அந்தச் செவிலி, மரத்தின் கடைசி இலை உதிர்வதற்கு முன் ஓர் ஓவியனைக் கொண்டு வரைந்த இலையை மரத்தில் பொருத்தியிருந்தாள். அது அவனது நம்பிக்கையை வளர்க்கும் கருவியாகி வெற்றி பெற்றது.

பார்த்தீர்களா! நம்பிக்கை என்னென்ன செய்கிறதென்று! திடமான உள்ளமும், தன்னம்பிக்கையும் இருந்தால், உடலென்ன, உலகையே வென்று காட்டலாம்.

இதை உண்மையென்று நம்புங்கள். உடலும், உள்ளமும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை.

அங்கே சிறு நம்பிக்கைத் தூறல் பட்டாலே போதும். செடிகளும், பூக்களும் பூத்துக்குலுங்க ஆரம்பித்து விடும்.!!!

This is what--we all of us need now --in this covid pandemic time.

    இதுவும் கடந்து போகும்.


*இனிய காலை வணக்கம்*🙏🏻😊

Sunday 19 July 2020

விருப்பம்

நீங்கள் எதை வெளிப்படுத்த விரும்புகிறீர்களோ அல்லது உருவாக்க விரும்புகிறீர்களோ அதை நீங்கள் நம்பும்போதெல்லாம் உங்களால் முடியும்.  உங்கள் உண்மையான ரகசிய ஆசைகள் ஒருபோதும் மாறாது.

நீங்கள் விரும்பும் அனைத்தையும் வைத்திருக்க முடியும் என்றும் நீங்கள் அதற்கு தகுதியானவர் என்றும் நம்புங்கள், அது உங்களிடம் வருவதைப் பாருங்கள்.  எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கண்டுபிடிக்க முயற்சிக்கும்போது நீங்கள் அவநம்பிக்கையிலும் தகுதியற்ற தன்மையிலும் சிக்கிக்கொள்வீர்கள்.  நிம்மதியாக இருங்கள், நீங்கள் விரும்புவதைப் பற்றி சிந்திக்கும்போது கிடைக்கும் உணர்வுகளை அனுபவிக்கவும்.  பிரபஞ்சம் நீங்கள் வெளியேற்றும் ஆற்றலை உணர்ந்து, நீங்கள் விரும்பும் அனைத்தையும் உங்களிடம் கொண்டு வரும்.

உங்கள் வேலை ஒன்று மட்டுமே உங்கள் விருப்பங்களில் தெளிவாக இருக்க வேண்டும். மற்றும் உங்கள் எதிர்மறை உணர்வுகளுடன் கலக்காதீர்கள்

நீங்கள் தகுதியானவர் என்று நம்புங்கள், மேலும் பிரபஞ்சம் அதை எவ்வாறு வழங்குகிறது என்பதைப் பாருங்கள்.

Saturday 18 July 2020

நண்பர்கள்

*நல்ல நண்பர்கள் ஏன், எதற்காகத்  தேவை ?*
               தடுமாறும் போது தாங்கிப்பிடிக்க ஒரு நண்பன் தேவை !

தடம்மாறும் போது தடம்மாறாமல் உடன் இருக்க ஒரு நண்பன் தேவை !

ஆறுதல் சொல்ல அருகிலேயே சில நண்பர்கள் தேவை !

அன்புடன் பேச எப்போதும் சில நண்பர்கள் தேவை !

அவ்வப்போது அரவணைத்துச்செல்ல சில நண்பர்கள்  தேவை !

அதட்டி உருட்டி மிரட்டி நம்மை காத்து நிற்க ஒரு முரட்டு நண்பனும் தேவை ! 

துன்பத்தில் தோளில் சாய்ந்து கொள்ள, சாய்ந்து அழ ஒரு உற்ற நண்பன் தேவை  !

ஊர் சுற்றிவர உருப்படியான, உலகம் தெரிந்த சில நண்பர்கள் தேவை !

நாம் எது சொன்னாலும் நம்பிக்கை விசுவாசத்துடன்  அப்படியே ஏற்றுக்கொள்ள சில நண்பர்கள் தேவை !

எதிர்த்துப்பேசி, பின் பக்குவமாய் எடுத்துச் சொல்லும் எதார்த்தமான சில  நண்பர்கள் தேவை !  
                *இவை எல்லாம் ஒட்டுமொத்தமாய்  உள்ள சிலர் நமக்கு நண்பர்களாக  இருந்தால் உலகில் இதைவிட சிறந்தது ஏதும் இல்லை* 

_*அந்த சிலரை காலமெல்லாம் கைகோர்த்துக் கொள்ளுங்கள் !*_

Thursday 16 July 2020

சுட்டது

2000 மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள்!
 புதிய வயது என்ற வார்த்தையை நீங்கள் அறிந்திருக்கலாம், மேலும் கும்பத்தின் வயது விடியலைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம் அல்லது படித்திருக்கலாம்.  இதன் பொருள் என்னவென்றால், நாம் ஒரு வயதை (மீனம்) விட்டுவிட்டு, புதிய வயதில் (கும்பம்) நுழைகிறோம்.  இது ஒவ்வொரு இரண்டாயிரம் வருடங்களுக்கும் நடக்கிறது - கடைசியாக கிறிஸ்துவின் வருகையுடன் ஒத்துப்போகிறது.  அக்வாரிஸின் வயது பண்டைய மாயன்கள் நாட்காட்டியை அடுத்த பெரிய சுழற்சிக்கான கணிப்புடன் பிரதிபலிக்கிறது.
 பூமியின் இந்த வரலாற்று சீரமைப்பு மூலம், சூரியனும் பிரபஞ்சமும் "ஆன்மீக வளர்ச்சிக்கான வாய்ப்பின் சாளரம்" என்ற பெரியதை நம்மிடம் கொண்டு வருகின்றன.  இந்த புதிய யுகத்தை நம் குழந்தைகள் எவ்வாறு கையாள்வார்கள் என்பதையும், பெற்றோர்கள் நம் நனவின் பரிணாம வளர்ச்சியை எவ்வாறு மாற்றியமைக்க வேண்டும் என்பதையும் தீர்மானிப்பதில் நியூமராலஜி ஒரு முக்கிய காரணியாக இருக்கும்.  நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கிரக பூமியில் மாற்றம் நிகழும்.
 கடந்த 10 - 20 ஆண்டுகளில் அறிவியல், கணினிகள் மற்றும் தொழில்நுட்பம் போன்ற சில முக்கிய முன்னேற்றங்களை நீங்கள் கவனித்திருப்பீர்கள், இவை அனைத்தும் இப்போது நம் சமூகத்தின் முதுகெலும்பாக உருவாகின்றன.  யுஎஃப்ஒக்கள், மாற்று மருத்துவம், ஜோதிடம், சைவம் மற்றும் முன்னர் விசித்திரமான அல்லது வெறித்தனமாக கருதப்பட்ட பிற பாடங்கள் பிரபலமடைந்து வருகின்றன, மேலும் அவை அனைத்தும் அக்வாரிஸின் அடையாளத்துடன் தொடர்புடையவை.  இந்த பாடங்கள் மேலும் மேலும் பொதுவானதாகிவிடும், மேலும் ஜோதிடம் மற்றும் பிற 'மாய' சுய உதவி மற்றும் புரிதல் முறைகள் புதிய யுகத்திற்கான தயாரிப்பில் மக்கள் தங்கள் ஆன்மீக மனப்பான்மையுடன் ஒத்துப்போக உதவும்.
 இதன் மூலம் புதிய தலைமுறை குழந்தைகள் கும்பத்தின் வயதில் பிறக்கிறார்கள்.  இந்த குழந்தைகள் அனைவரும் அதிக சமாதானத்தை உருவாக்குபவர்களாகவும், அன்பானவர்களாகவும், ஆன்மீகவாதிகளாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக மனநோயாளிகளாகவும் இருப்பார்கள்.  அவர்களின் டி.என்.ஏ - 2013 முதல் வார்டுகள் - முழுமையாக செயல்படுத்தப்படும், மேலும் நாங்கள் உண்மையிலேயே யார் என்ற அறிவையும் உண்மையையும் அவர்களுடன் கொண்டு வருகிறோம்.  இந்த குழந்தைகளின் ஒதுக்கீடு கணினிகள், கால்குலேட்டர்கள் மற்றும் ஐபோன் போன்றவற்றைச் சார்ந்தது.  வினாடி வினாக்கள் அல்லது பலகை விளையாட்டுகள் போன்றவற்றைச் செய்ய நாம் அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும், எனவே அவர்கள் தொடர்ந்து தங்கள் மனதைப் பயன்படுத்துகிறார்கள், அவர்கள் 2000 முதல் 2012 வரை பிறந்த குழந்தைகள். இருப்பினும் 2030 முதல் 2039 வரை பிறக்கும் குழந்தைகள் அவ்வளவு சார்ந்து இருக்க மாட்டார்கள்.
 மற்றவர்கள் தள்ளிப்போட்டுபவர்களாக இருப்பார்கள், பழைய வாழ்க்கை முறைகளை இன்னும் கடைப்பிடிக்கும் பெற்றோரிடம் விரக்தியடைவார்கள், அவர்கள் எந்தவிதமான போர்களையும் ஏற்க மாட்டார்கள்.  இந்த விஷயங்கள் சோம்பேறிகளாகவோ அல்லது விரக்தியடையவோ கூடாது என்று கற்பிக்கப்பட வேண்டும்.  அவர்களில் பெரும்பாலோர் எல்லா நேரத்திலும் நிதானமாக இருக்க விரும்புவார்கள்.  கொலைகள், கற்பழிப்பு, பொய்கள், வன்முறை மற்றும் வாதங்களுடன் உரத்த ரவுடி சத்தம் அல்லது உரத்த இசை கடந்த காலத்தின் ஒரு விஷயமாக இருக்கும்.  நமக்குத் தெரிந்த உலகம் இனி இருக்காது.  அமைதி கிரகத்தை ஆளும்!
 இந்த குழந்தைகள் அவர்களுடன் கொண்டு வரும் சில பலவீனங்களுக்கு மேலே உயரவும், அவர்களின் இயல்பான பலத்தை அதிகரிக்கவும் கற்றுக்கொள்ள நாங்கள் உதவ வேண்டும், ஆனால் ஆன்மீகம் மற்றும் பிற்பட்ட வாழ்க்கை பற்றிய அன்பு, அமைதி மற்றும் அறிவை அவர்கள் ஒருபோதும் மாற்ற முடியாது.  கும்பத்தின் யுகத்திற்கு மீண்டும் பூமிக்கு அவதரித்தார்.  அவர்கள் கிரகத்தை அமைதி, அன்பு மற்றும் நல்லிணக்கத்திற்கு இட்டுச் செல்வார்கள்.  மனித இனத்தின் உண்மையான அவதாரங்கள்.
 

அமைதி

நீங்கள் தற்போது வாழவில்லை என்றால், நீங்கள் மாயையில் வாழ்கிறீர்கள். 
இது நிகழ்காலத்தில் வாழ ஒரு நல்ல காரணம் என்று தோன்றுகிறது, இல்லையா?  ஆனால் இன்னும் வரவிருக்கும் விஷயங்களைப் பற்றி நாம் எவ்வளவு அடிக்கடி கவலைப்படுகிறோம், எவ்வளவு நேரம் கடந்துவிட்டாலும், நாம் செய்த தவறுகளுக்கு எத்தனை முறை நம்மை அடித்துக்கொள்கிறோம்?  பதில் அதிகம்.  நிகழ்காலத்தில் வாழ்வது உங்கள் உணர்ச்சி நல்வாழ்வில் வியத்தகு விளைவை ஏற்படுத்தும் என்பது மட்டுமல்லாமல், அது உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். நீங்கள் சுமக்கும் மன அழுத்தத்தின் அளவு உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது நீண்ட காலமாக அறியப்படுகிறது.  நீங்கள் தற்போது வாழ்கிறீர்கள் என்றால், நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.  நீங்கள் வாழ்க்கையை இப்போதே ஏற்றுக்கொள்கிறீர்கள், அது எப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் விரும்புவதைப் போல அல்ல.  நீங்கள் ஏற்றுக்கொண்டு வாழும்போது, ​​எல்லாமே முழுமையானது என்பதை நீங்கள் உணருகிறீர்கள்.  நீங்கள் செய்த தவறுகளுக்கு நீங்கள் உங்களை மன்னிக்க முடியும், மேலும் நடக்க வேண்டிய அனைத்தும் நடக்கும் என்பதை அறிந்து உங்கள் இதயத்தில் அமைதி பெறலாம் !!

பலம்

“நம்பிக்கை என்பது மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது அல்ல - இது உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான்.” 

நீங்கள் உங்களை ஏற்றுக்கொண்டதும், மற்றவர்கள் உங்களைச் சரிபார்க்க நினைப்பதை அனுமதிப்பதை நிறுத்தியதும், நீங்கள் உடனடியாக உங்கள் சுய மதிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு அடுத்த முடிவுக்குத் தயாராக இருப்பீர்கள்.

இது உங்களின் சிறப்பு மற்றும் தனித்துவமான விஷயங்களை வித்தியாசமாக மாற்றும் உங்கள் பகுதிகளை அடையாளம் காணவும், கொண்டாடவும், நேசிக்கவும்.
 உங்கள் பரிசுகள், திறமைகள் மற்றும் தனித்துவமான வாழ்க்கை அனுபவங்களின் உண்மையான பட்டியலை எடுக்க சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.  அதை தழுவி அவர்களுக்கு நன்றியுடன் இருங்கள்.  உங்கள் வாழ்க்கையில் இப்போது நீங்கள் இருக்கும் இடத்திற்கு உங்களை அழைத்து வந்த பலவற்றை நீங்கள் ஏற்கனவே கடந்துவிட்டீர்கள்.  நீங்கள் ஏற்கனவே அனுபவித்த வெற்றிகளையும் சாதனைகளையும் முழுமையாக அடையாளம் காணவும். 

நீங்கள் அதிக சுய-விழிப்புணர்வு பெறும்போது, ​​மூன்றாவது முடிவு உங்கள் பலங்களையும் பலவீனங்களையும் சரியான கண்ணோட்டத்தில் பார்க்கிறதா என்பதை உறுதிப்படுத்துவது.


Wednesday 15 July 2020

எதிர்வினை

எந்த ஒரு செயலும் எதிர்வினையும் எப்போதும் இருக்கும்;  ஒரு முன்கூட்டியே ஒரு செயலை செய்தல் அல்லது பின்வாங்கல்;  உயரும் அல்லது மூழ்கும்.  மேலே அல்லது கீழே.இது பிரபஞ்சம், சூரியன், உலகங்கள், ஆண்கள், விலங்குகள், மனம், ஆற்றல் மற்றும் விஷயம் ஆகியவற்றின் விவகாரங்களில் உள்ளது.  

இந்த சட்டம் உலகங்களை உருவாக்குவதிலும் அழிப்பதிலும் வெளிப்படுகிறது.இந்த கோட்பாட்டைப் புரிந்துகொண்டு, அதன் உலகளாவிய பயன்பாட்டைக் நமக்கு முன்பு இருந்தவர்கள் கண்டறிந்துள்ளனர், மேலும் பொருத்தமான சூத்திரங்கள் மற்றும் முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் அதன் விளைவுகளைத் தங்களுக்குள் சமாளிக்க சில வழிகளையும் கண்டுபிடித்துள்ளனர்.  

அவை நடுநிலைப்படுத்தலின் மூலம் கோட்பாட்டை ரத்து செய்யவோ அல்லது அதன் செயல்பாட்டை நிறுத்தவோ முடியாது, ஆனால் கோட்பாட்டின் தேர்ச்சியைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அதன் விளைவுகளைத் தங்களைத் தாங்களே தப்பித்துக் கொள்வது எப்படி என்பதை அவர்கள் கற்றுக்கொண்டார்கள்.

அதைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அவர்கள் கற்றுக்கொண்டார்கள்.எந்தவொரு சுய-தேர்ச்சியையும் பெற்ற அனைத்து நபர்களும் இதை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அறியாமலேயே செய்கிறார்கள் ஆனால் இதில் தேர்சி பெற்றவர்கள் இதை கவனமுவுடன் செய்கிறார், மற்றும் அவரது விருப்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம்,மன உறுதிப்பாட்டின் அளவை அதிகமாக அடைகிறார்.

 ஒரு ஊசல் போல இந்த கோட்பாடு மற்றும் துருவமுனைப்பு ஆகியவை நெருக்கமாக நுணுக்கமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன, மேலும் அவற்றை எதிர்ப்பது, நடுநிலையாக்குவது மற்றும் பயன்படுத்துதல் ஆகியவை உங்கள் அளவுகளை பொருத்தே.

பொறுமை

பொறுமையாக இருக்க கற்றுக்கொள்வது சில நேரங்களில் மிகவும் வெறுப்பாகவும் தொந்தரவாகவும் இருக்கும்.  இந்த தருணங்களில் தான் சோதனை உண்மையிலேயே தொடங்குகிறது,

வாழ்க்கை என்பது ஒரு மர்மமாகவே இருக்கும், அது பற்றிய அழகான விஷயம்.  நீங்கள் விரும்பும் விஷயங்கள் நீங்கள் அதை அனுமதிக்கும்போது மட்டும் தான் உங்களிடம் வரும். 

பிரபஞ்சத்தை வழங்க நீங்கள் மட்டுமே நம்ப வேண்டும், அவ்வளவு தான் உங்கள் வேலை முடிந்தது. 

பற்றாக்குறையைப் பார்க்கும்போது விவரங்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும்போது, ​​உங்களுக்காக ஏற்கனவே வரிசையாக நிற்கும் பல வழிகளைக் காண முடியாது.  

நம்புங்கள், தொடர்ந்து அமைதியாக இருங்கள்.

சூரியன்

இந்த பண்டைய நுட்பத்தை ஏன், எப்படி மறந்தோம்?

 உலகெங்கிலும் உள்ள கலாச்சாரங்களில், சூரியனை உயிரைக் கொடுப்பவராக வணங்கப்படுகிறார்;  எகிப்தியர்களால் ரா என அழைக்கப்படுகிறது, வேதங்களில் சூர்யா, கிரேக்க புராணங்களில் ஹீலியோஸ் அல்லது அப்பல்லோ, மற்றும் இன்கான் இன்டி, சூரியன் உலகின் அனைத்து முக்கிய மதங்களிலும் ஆரம்பகால கடவுள்களாக இடம்பெறுகிறது.  சூரியனைப் பார்ப்பது என்பது மாயன்கள், பண்டைய எகிப்தியர்கள், ஆரம்பகால இந்தியர்கள் கடைப்பிடிக்கும் ஒரு பழங்கால கலை.  சூரியனால் நோய்களைக் குணப்படுத்த முடியும், உணவின் தேவையை நீக்க முடியும், மற்றும் டெலிபதி போன்ற அசாதாரண சாதனைகளை சாத்தியமாக்கும் என்று அவர்கள் நம்பினர்.  அது சாத்தியமற்றது மற்றும் புராணமாக இருந்தாலும், அறிவொளி பெற்றவர்கள் திறன்களைக் கொண்டிருந்தனர் மற்றும் அவற்றைப் பயன்படுத்தினர்.

 சூரியனை வணங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட நடைமுறை உள்ளது, அதாவது சூரியனைப் பார்ப்பது.  பொதுவாக சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது நடைமுறையில் இருக்கும், சூரிய ஒளியை வெறுங்காலுடன் நின்று பத்து விநாடிகள் சூரியனைப் பார்ப்பார்கள், மேலும் மெதுவாக அந்த நேரத்தை அதிகரிக்கும், ஒவ்வொரு நாளிலும் இன்னும் பத்து வினாடிகள்.

 வரலாற்றாசிரியர்கள் அல்லது தத்துவவாதிகள் மட்டுமல்ல, விஞ்ஞானிகளும் சூரியனின் அசாதாரண சக்திகளை ஒப்புக் கொண்டுள்ளனர், ஒரு உதாரணம் நிகோலா டெஸ்லா ஒரு காலத்தில் சொன்னார்,

 "என் கருத்து என்னவென்றால், வாழ்க்கையின் வளர்ச்சி என்பது இருப்பு வடிவங்களுக்கு வழிவகுக்க வேண்டும், அவை ஊட்டச்சத்து இல்லாமல் சாத்தியமாகும், அதன் விளைவாக வரம்புகளால் கட்டுப்படுத்தப்படாது.  ஒரு வாழ்க்கை ஏன் அதன் வாழ்க்கை செயல்பாடுகளின் செயல்திறனுக்குத் தேவையான அனைத்து சக்தியையும் சுற்றுச்சூழலிலிருந்து பெறமுடியாது, உணவு நுகர்வுக்கு பதிலாக, மற்றும் ஒரு சிக்கலான செயல்முறையால், ரசாயன சேர்க்கைகளின் ஆற்றலை உயிர்வாழும் வகையில் மாற்றுகிறது  ஆற்றல்? ”

 நவீன உலகில், இந்த செயல்முறை பிரபலப்படுத்தப்பட்டு, HRM நிகழ்வு என மறுபெயரிடப்பட்டது, ஹிரா ரத்தன் மானேக் அதைத் தானே பயிற்சி செய்து நாசாவால் பரிசோதித்தார்.  உலகிற்கு அவற்றின் செயல்திறனை நிரூபிக்க சோதனைகள் மற்றும் பிழைகள் மூலம் இந்த யோசனைகளை புத்துயிர் பெற ஏராளமான மக்கள் முன்முயற்சி எடுத்துள்ளனர், விஞ்ஞான ரீதியாக மதிப்பிடப்பட்ட முடிவுகளை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு நம்பகமான அடித்தளங்களை உருவாக்குகிறார்கள்.

 சூரிய ஒளியின் விஞ்ஞான நன்மைகள் பின்வருமாறு:

     இது ஆற்றல் அளவை அதிகரிக்கிறது.  சூரிய ஒளியானது பினியல் சுரப்பிகளைத் தூண்டுகிறது, மேலும் மெலடோனின் மற்றும் செரோடோனின் போன்ற ‘மகிழ்ச்சியான-ஹார்மோன்களின்’ சுரப்பை மேம்படுத்துகிறது, அவை ஆற்றல் மட்டங்களை அதிகரிப்பதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.  இது உடலுக்கு அதிக வலிமையையும் சுறுசுறுப்பையும் தருகிறது.
     இது பினியல் சுரப்பியின் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.  நாம் வயதாகும்போது நமது பினியல் சுரப்பி காலப்போக்கில் சுருங்குகிறது.  ஆனால் சூரியனைப் பார்ப்பது பினியல் சுரப்பி அதற்கு பதிலாக வளர காரணமாகிறது.  “மூன்றாவது கண்” என்றும் அழைக்கப்படும் பினியல் சுரப்பி உடலில் உள்ள ஹார்மோன்களின் சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் இனப்பெருக்க உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.  வரலாறு மற்றும் புராணம் முழுவதும், "மூன்றாம் கண்" திறப்பு பற்றிய குறிப்புகள் உள்ளன, இது விரிவாக்கப்பட்ட பினியல் சுரப்பியின் ஒரு குறிப்பு என்று நம்பப்படுகிறது.
     சூரிய ஒளியைப் பார்த்தால் உடலின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய முடியும், மேலும் உணவை உட்கொள்ளும் தேவையை குறைக்கலாம், இது ஆரோக்கியமான எடை இழப்பை ஏற்படுத்துகிறது.  நமது அறிவொளி பெற்ற மூதாதையர்கள் உடல் மற்றும் வலிமையின் நீண்ட ஆயுளை அதிகரிக்க சூரியனின் சக்தியை திறமையாக தட்டினர்.

 பண்டைய நாகரிகங்கள் உலகின் பல ரகசியங்களை கண்டுபிடித்து அவற்றை அவற்றின் நன்மைக்காக தேர்ச்சி பெற்றிருந்தன.  நவீன உலகம் இந்த கோட்பாடுகளையும் கருத்துகளையும் கேலிக்குரியதாகவும் வழக்கற்றுப் போய்விட்டதாகவும் நிராகரித்துள்ளது, இதனால் பிரபஞ்சத்தின் ஆற்றல்களைத் தட்டிக் கேட்கும் சக்தியையும், இயற்கை நமக்கு வைத்திருக்கும் பரிசுகளையும் மறுக்கிறது.

 புதுப்பிப்பு: புற ஊதா கதிர்வீச்சு விழித்திரையை சேதப்படுத்தும் என்பதால் சூரியனைப் பார்ப்பது ஆபத்தானது என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ஆனால் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது புற ஊதா குறியீடு பொதுவாக ஜீரோ என்று உங்களுக்குத் தெரியுமா?
 இதன் பொருள் என்னவென்றால், சூரியனுக்கு இன்னும் ஆரஞ்சு பளபளப்பு இருக்கும் போது காலையில் முதல் ஒரு மணி நேரத்திலும், மாலை கடைசி மணி நேரத்திலும் சூரியனைப் பார்ப்பது முக்கியம்.

கபாலியன்

 கோட்பாடுகள் ஏழு; இவற்றை அறிந்தவர்,  மந்திர விசையை வைத்திருக்கிறார், அவர்கு எப்போதும் அனைத்து கதவுகளும் திறந்திருக்கும்.

 1. MIND மனநிலையின் கொள்கை - "எல்லாம் மனம்; பிரபஞ்சம் மே மனநிலை."

 2. CORRESPONDENCE இன் கொள்கை - "மேலே, எதுவோ அதுவே கீழே; கீழே, மேலே."

 3. VIBRATION இன் கொள்கை - "எதுவும் இல்லை; எல்லாம் நகர்கிறது; எல்லாம் அதிர்வுறும்."

 4. POLARITY இன் கோட்பாடு - "எல்லாமே இரட்டை; எல்லாவற்றிலும் துருவங்கள் உள்ளன; எல்லாவற்றிற்கும் அதன் ஜோடி எதிரொலிகள் உள்ளன; போன்றவை ஒரே மாதிரியாக இருக்கின்றன; எதிரொலிகள் இயற்கையில் ஒரே மாதிரியானவை, ஆனால் அளவிலேயே வேறுபடுகின்றன; உச்சநிலைகள் சந்திக்கின்றன;  உண்மைகள்; எல்லா முரண்பாடுகளும் சமரசம் செய்யப்படலாம். ”

 5. RYTHM இன் கோட்பாடு - "எல்லாமே வெளியேறுகிறது, வெளியே செல்கிறது; எல்லாவற்றிற்கும் அதன் அலைகள் உள்ளன; எல்லாமே உயர்ந்து வீழ்ச்சியடைகின்றன; ஊசல்-ஊஞ்சல் எல்லாவற்றிலும் வெளிப்படுகிறது; வலதுபுறமாக ஊசலாடுவதற்கான அளவீடு  இடது; ரிதம் வலது ஈடுசெய்கிறது. "

 6. CAUSE மற்றும் EFFECT இன் கோட்பாடு - "ஒவ்வொரு காரணத்திற்கும் அதன் விளைவு உண்டு; ஒவ்வொரு விளைவுக்கும் அதன் எதிர் காரணம் உண்டு; எல்லாமே சட்டத்தின்படி நடக்கிறது; வாய்ப்பு என்பது சட்டத்திற்கு ஒரு பெயர் மட்டுமே ஆனால் அங்கீகரிக்கப்படவில்லை; பல காரணங்கள் இதில் உள்ளன, ஆனால் எதுவும் சட்டத்திலிருந்து தப்பவில்லை  . ”

 7. பாலினத்தின் கொள்கை - "பாலினம் எல்லாவற்றிலும் உள்ளது; எல்லாவற்றிலும் அதன் ஆண்பால் மற்றும் பெண்பால் கோட்பாடுகள் உள்ளன; பாலினம் எல்லாவற்றிலும் வெளிப்படுகிறது."

 ~ தி கைபாலியன்

கணக்கு

"நீங்கள் ஒரு வாழ்நாளின் சாகசத்தைத் தொடங்குவதற்கு முன்  - நீங்கள் முதலில் ஒரு கணித புதிர்ல் தேர்ச்சி பெற வேண்டும்.

கபாலா (எஸோதெரிக் யூத மதம்) எண்களின் முக்கியத்துவத்தை உள்ளடக்கியது மற்றும் எண்களைப் பாராட்டாமல் நீங்கள் அதை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியாது.  இருப்பினும், கணிதத்தின் கொள்கைகளில் ஒட்டிக்கொள்வதை விட யூத மாயவாதத்தின் அடிப்படையில் எண்களை விளக்குவதை இது தேர்வு செய்கிறது.

பிரபஞ்சத்தின் மர்மங்கள் அனைத்தும் உண்மையில் ஒரு கணித கேள்வியாகக் குறைக்கப்படலாம்.

முதல் நவீன தத்துவஞானியான டெஸ்கார்ட்ஸ், இந்த விஷயம் “நீட்டிக்கப்பட்டுள்ளது”, அதே சமயம் மனம் “விரிவாக்கப்படாதது” என்று முன்மொழிந்தார்.  இதன் மூலம் அவர் இரு களங்களை கணித ரீதியாக பிரித்தார்;  ஒன்று பூஜ்ஜியத்தை விட அதிகமான பொருள்களைக் கொண்டது (பொருள் பொருள்கள்), மற்றொன்று பூஜ்ஜியத்தின் (மன பொருள்கள்) அளவைக் கொண்ட நிறுவனங்களைக் கொண்டது.

தத்துவம், விஞ்ஞானம் மற்றும் மதம் முழுதும் பூஜ்ஜிய அளவிலான நிறுவனங்களின் இருப்பைச் சுற்றியே உள்ளன,


எதிர் ஆற்றல்

நீங்கள் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும், பின்னர் நீங்கள் உங்கள் வாழ்க்கைக்குள் செல்லலாம்.

உங்களை பற்றி கண்டுபிடிப்பதற்கான பயணம் நீண்ட மற்றும் சவாலான ஒன்றாகும்.  உங்கள் வடிவங்கள் மற்றும் தூண்டுதல்களை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால் தொடர்ந்து அதே சோதனை மற்றும் சவால்களைத் தொடருவீர்கள்,

மனிதர்களாகிய நமக்குள் இரண்டு எதிர் ஆற்றல் இருக்கிறது, அது ஆண்பால் மற்றும் பெண்பால்.  இரு ஆற்றல்களும் நம்மை சீரானதாக வைத்திருப்பது நமது பொறுப்பு,

ஆண்பால் ஆற்றல் என்பது பூமிக்குட்பட்ட ஆற்றல், இது விஷயங்களின் தர்க்கரீதியான பக்கமாகும்.  ஈகோ ஆண்பால் ஆற்றலால் உருவாக்கப்பட்டது, ஏனெனில் ஆண்பால் ஆற்றலின் ஒரே நோக்கம் அடித்தளமாக இருப்பது மற்றும் அதில் உயிர்வாழ்வது.  நாம் ஈகோவைப் பற்றி பயப்படவோ அல்லது  வெளியேற்றவோ முயற்சிக்கக் கூடாது,

பெண்பால் ஆற்றல் என்பது உள்உணர்வுகள் மற்றும் நீங்கள் உணருவதைப் புரிந்துகொள்வது.  பெண்பால் ஆற்றலின் ஒரே நோக்கம் இன்னும் சிலவற்றை உருவாக்குவது ஆகும்,அது எப்போதும் இயக்கத்தில் இருக்கும். 
உணர்ச்சிவசப்படுவதும் உங்களை உணர அனுமதிப்பதும் இது தான்.உங்களை உணரவும் நம்பவும்,  உருவாக்கவும் பெண்ணுணர்வால் அனைவருக்கும் உள்ளுணர்வு என்ற ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 


தெளிவு

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஈர்க்க விரும்புவதைப் பற்றி முற்றிலும் தெளிவாக இருக்க வேண்டும்.  கவனம் செலுத்துவது என்பது எப்போதும் நீங்கள் விரும்புவதைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பது மற்றும் நீங்கள் விரும்பும் விஷயங்களிலிருந்து கவனம் செலுத்துவது.

 கவனம் செலுத்துவது என்பது தற்போது உங்களுக்கு வேண்டும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்,   நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அவ்வளவு விரைவாக உங்கள் ஆற்றலை நீங்கள் விரும்பும் விஷயத்தில் செலுத்துகிறீர்கள்.  உங்கள் ஆற்றல் மற்றும் உங்கள் கவனத்துடன் நீங்கள் விரும்புவதைப் பெறுவதற்கான நேரத்தை நீங்கள் தீர்மானிக்கிறீர்கள். 

பயத்தை விடுவித்து, நீங்கள் செய்ய நினைக்கும் அனைத்தையும் செய்ய நீங்கள் திறமையானவர் என்று நம்புங்கள்.

நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை, எனவே நீங்கள் அதை சொந்தமாக செய்ய வேண்டியதில்லை, நீங்கள் எப்போதும் உங்கள் ஆற்றல் முலமே வெளிகாட்டப்படுகின்றீர்கள்.

பொறுமையாக இருங்கள்.  நீங்கள் விரும்புவது அல்லது விரும்புவது அதன் பாதையில் உள்ளது என்று நம்புங்கள்.

நேரம் எப்படியிருந்தாலும் அது ஒரு மாயை, எனவே நேரத்தை நீங்கள் பார்க்க முடியாது, 

நீங்கள் வேலையைச் செய்துள்ளீர்கள். அதாவது உங்கள் விருப்பத்தை கூறியுள்ளீர்கள் .இப்போது உட்கார்ந்து ஓய்வெடுங்கள், இப்போது நீங்கள் திருப்திபடுங்கள், பிரபஞ்சம் உங்கள் விருப்பங்களை உங்களிடம் எவ்வாறு கொண்டு வருகிறது என்பதை நீங்கள் காண்பீர்கள்.நேரம் எப்படியிருந்தாலும் அது ஒரு மாயை, எனவே நேரத்தை நீங்கள் பார்க்க முடியாது.

வெற்றி

நிம்மதியாக இருங்கள்.  வெற்றி பல்வேறு வடிவங்களில் வருகிறது, மேலும் ஒவ்வொரு நாளும் பல வெற்றிகரமான நிகழ்வுகள் உள்ளன.  ஒவ்வொரு கணத்திலும் நீங்கள் அறிந்திருக்கும்போது, ​​

வெற்றியின் உணர்வு இயல்பாகவே வரும்.  நாம் செய்யும் எல்லாவற்றிலும் ,நாம் ஏற்கனவே வெற்றிகரமாக இருப்பதைக் காண்கிறோம்.  ஒருமுறை நாம் சிந்திக்கத் தொடங்கினால், நாம் மூலத்திலிருந்து நம்மைப் 
 பிரித்து, நமக்கு சொந்தமில்லாத எதிர்மறை நம்பிக்கைகளுடன் ஒட்டிக்கொள்கிறோம்.

நாம் யார் என்ற உண்மையை எதிர்க்கும்போது நாம் கஷ்டப்படுவதைத் தேர்வு செய்கிறோம்.  நாம் நினைப்பதை விட சக்திவாய்ந்தவர்கள்.  நாம் நம் உடல்கள் அல்ல, மனித வடிவத்தில் வெளிப்படுத்தும் மூல ஆற்றல்.  நாம் எந்த வழியில் தேர்வு செய்தாலும் சேவை செய்ய உருவாக்கப்பட்ட ஒரு பிரபஞ்சத்தில் நாம் வாழ்கிறோம்.  எனவே புத்திசாலித்தனமாக தேர்வு செய்யவும் அனைத்தையும் .

அன்பின் பண்டைய அறிவையும், உயர்ந்த சிந்தனை முறையையும் உலகத்துடன் பகிர்ந்து கொள்வது உங்கள் வேலை.  உலகம் பயம் சந்தேகம் மற்றும் அவநம்பிக்கை நிலையில் உள்ளது, இதை களைய நீங்கள் ஒளியை நேசிக்க வேண்டும்.

ஈர்ப்பு விதி

நீங்கள் விரும்புவதை நீங்கள் எவ்வளவு அதிகமாக நம்புகிறீர்களோ அது உங்களுக்கு விரைவாக வரும்.

உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் சமநிலையாக இருக்க வேண்டும் அதன் மூலம் நீங்கள் விரும்புவதைப் பெற முடியும்.

ஈர்ப்பு விதி தினமும் வேலை செய்யாது, அது ஒருபோதும் நிற்காது.  நீங்கள் விரும்புவதை நீங்கள் பெறவில்லை என்றால், உங்கள் அதிர்வுகளை சரிசெய்யவும்.  எல்லாம்மே அதிர்வுகள்தான்.

நீங்கள் எதை ஈர்க்க விரும்புகிறீர்களோ அதை நீங்கள் விரும்புவதை நம்பும்போது அதைப் பெற முடியும்.  அது உங்கள் நம்பிக்கை மூலம், நம்பிக்கை என்பது பிரபஞ்சத்தில் நீங்கள் வைத்திருக்கும் ஆற்றலாகும், அது உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கொண்டு வரும்.  

எனவே உங்கள் அதிர்வுகளை சரிசெய்து, நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெற்று சிறப்புடன் வாழ்க.

ஞானம்

உண்மையான ஆன்மீக ஞானம் என்பது ஒரு அர்த்தத்தில் இலவசம், ஏனெனில் அது உள்ளிருந்து வருகிறது.  இருப்பினும், அத்தகைய ஞானத்திற்கு எப்போதும் ஒரு செலவு இருக்கிறது, செலவு உங்கள் சொந்த தகுதி.  எப்போதும் ஒரு சமமான பரிமாற்றம் இருக்க வேண்டும், எந்த ஞானமும் ஒருபோதும் சுதந்திரமாக வழங்கப்படாது.

நீங்கள் ஒரு ஆசிரியரை, ஒரு குருவை, ஒரு வழிகாட்டியை அல்லது வேறு எதையாவது நாடினால், ஒருவர் அமைதியாக இருக்க வேண்டும், முடிந்தவரை அடிக்கடி செல்ல வேண்டும்.  அப்போதுதான் நம் உள் தெய்வீகத்தை வளர்த்து, உயிரைக் கொடுக்க முடியும்.  

தீபாவளி இந்து மதத்தில் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றான "தீபோத்ஸவம்" (விளக்குகளின் திருவிழா) என்றும் அழைக்கப்படுகிறது.  ஆன்மீக ரீதியில் இருளின் மீது ஒளியின் வெற்றியைக் குறிக்கிறது, தீமைக்கு நல்லது, அறியாமைக்கு மேலான அறிவு, விரக்தியின் மீது நம்பிக்கை.

எரியூட்டப்படுவதற்கு காத்திருக்கும் நம் அனைவருக்கும் ஒளியின் தீப்பொறி உள்ளது.  இது மதக் கோட்பாடுகளுக்கு வெளியே உள்ள உண்மையான ஒற்றுமை .நமக்கு உள் ஒளியை அளிக்கும் இது.




கடந்த காலமும் நாளையும்

ஒரு மனிதன் தனது உணர்வுகள் அல்லது தனது எண்ணங்களால் தன்னை கட்டமைத்து கொண்டால் அந்த மனிதனை எந்த விதத்திலும் அடக்கவும் , அவளை வெல்லவும் இந்த பிரபஞ்சத்தில் முடியாது. ஏன் என்றால் அங்கு அவன் தான் இராஜா.

"முட்டாள்தனமாக இரண்டு வழிகள் உள்ளன. உண்மை என்று நம்புவது ஒன்று, உண்மை எது என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பது."

பொருட்கள் முதல் ஆன்மீகம் வரை பல பரிமாண நிலைகளில் இது ஒரு பிரச்சினை.  அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.  

மறைக்க விரும்பும் ஒன்று வெறும் பார்வையில் வைக்கப்பட்டுள்ளது.  எங்கு பார்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்தால் சரியாக இருக்கும்.

உங்களுக்கு முன்னால் இருப்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியாவிட்டால், உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளப் போவதில்லை. 

அமானுஷ்யத்தை நாம் புறக்கணிக்க முடியாது, ஏனெனில் அது எதிர்மறையானது.

இது பிரபஞ்சம், மனித ஆன்மா மற்றும் இயற்கை சட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய தகவல்கள் மட்டுமே உள்ளது.  அமானுஷ்யம் என்ற சொல்லுக்கு வெறுமனே பார்வையில் இருந்து மறைக்கப்பட்ட ஒன்று அர்த்தம்.

ஆனால் இந்த வார்த்தைகளை மக்கள் கேட்கும்போது எதிர்மறை அர்த்தங்களும் தவறான எண்ணங்களும் அதனுடன் வருகின்றன.  அமானுஷ்யம் என்பது லத்தீன் பெயர்ச்சொல் அதாவது கண் என்று பொருள்படும், மற்றும் லத்தீன் வினைச்சொல்     ocultare  என்பதிலிருந்து பெறப்பட்டது. 

நம்மைப் பற்றிய இந்த அறிவு மற்றும் நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பது மனிதகுலத்தின் பொதுவான புழக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, சுயநல பயன்பாட்டிற்காக 
தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  இது சமூகத்தில் ஒரு சக்தி வேறுபாட்டை உருவாக்கியுள்ளது.  அந்த அறிவை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது நமக்கு நல்லது அல்லது கெட்டது. 

ஒழுங்கு மற்றும் நன்மை, அன்பு மற்றும் சுதந்திரம் அல்லது குழப்பத்தையும் தீமையையும் உருவாக்க வேறுபட்ட நன்மைகளைப் பெறுவதற்கு சக்தியைப் பயன்படுத்துவதற்காக இவைகள்இருக்கலாம். 

இவ்வாறு பயன்படுத்தப்பட்ட உத்திகளைப் புரிந்துகொள்ள, நமக்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள எதிர்மறையைப் பார்க்க வேண்டும், அப்போது தான் ஏதாவது செய்யக்கூடிய நிலையில் நாம் இருக்க முடியும்.

இந்த அறிவின் நேர்மறையான அம்சங்களைப் புரிந்துகொண்டு கையாளுபவர்கள், அதை அறியாதவர்களுக்கு எதிராக ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டுமென்றே தேர்வு செய்கிறார்கள்.  கையாளுதல் தந்திரங்கள் அறியப்படும்போது, ​​அது பொது அறிவு, அறிவாக மாறும்,

அப்போதுதான் மனிதகுலம் எப்போதும் சுதந்திரமாக இருக்கும்.  இந்த அறிவை நாம் மறைத்து வைக்கும் போது, ​​அமானுஷ்யம். ஆனால் இனி அமானுஷ்யமல்ல.







குறியீடு

நாம் நாம்மை முறைப்படுத்த விரும்பினால், அனைத்து புராணங்களும் கண்டுபிடிப்புகளும் குறியீட்டுகள் மூலம் உருவனவை என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும்.

எப்படி எனில் நமக்கு வெளியே ஒரு கடவுளும் இல்லை நமக்குள் தான் உள்ளது என்பதனை தெரிந்து கொண்டது போல.

நாம் எதிர்கொள்ளும் சவால் என்னவெனில் நம்மிடையை ஏற்கனவே உள்ளஹிப்னாஸிஸ் மற்றும் அறியாமை தான்

நமது உடல் இயல்பு, ஆளுமை போன்றவை.  இயந்திர இயல்பின் ஒரு அம்சம், 

இதில் பயம், பேராசை, பெருமை, பொறாமை, குற்ற உணர்வு, காமம் மற்றும் பல இயந்திர உதிரி பாகங்கள் உள்ளது.

நம்முடைய வாழ்க்கையில் சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு இவற்றால் நாம் ஈர்க்கப்படலாம்,

இது நம்மைச் சோதிக்கவும் மற்றும் நமது கடந்த கால தவறுகளைப் பற்றி நமக்குக் கற்பிக்கும் மட்டுமே.

இதனால் நாம் நம்மை அறிந்து கொள்ளலாம், அல்லது உளவியல் ரீதியாக இறந்துபோகலாம்,

 

Tuesday 14 July 2020

நட்சத்திரம்

"நாம் நட்சத்திரப் பொருட்களால் ஆனவர்கள்" என்று கார்ல் சாகன் பிரபலமாகக் கூறியபோது, ​​அவர் நகைச்சுவையாகச் சொல்லவில்லை, உண்மை என்னவென்றால், நம் அனைத்து மனிதர்களிடையே அகிலம் மறைக்கப்பட்டுள்ளது. நாம் இங்கே பூமியில் கீழே இருக்கிறோம், அதில் பிரபஞ்சம்  வானங்கள் மேலே உள்ளன.

இது இயற்கையின் ஆதிக்கத்திற்கு எதிராக செயல்படுகிறது மற்றும் இயற்கை தூண்டுதலுக்கு மாறாக தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. 

உலகத்தை வென்ற பல நபர்களுக்கு இது தெரிந்து உள்ளது.

இது நாம் வாழும் இருளில் உண்மையான ஒளியைக் காண ஒரு கண் உள்ளவர்களுக்கு தெளிவாகத் தெரியும்.

கருதப்படுவதற்கான காரணம், நம்முடைய ஒவ்வொரு டி.என்.ஏவிலும் 'பாஸ்பரஸ்' என்று அழைக்கப்படும் பெரும்பாலும் புரிந்து கொள்ளப்படாத ரசாயன கலவைதான். பாஸ்பரஸ் வாழ்க்கைக்கு இன்றியமையாதது மற்றும் பாஸ்பேட் டி.என்.ஏவின் ஒரு அங்கமாகும்  , ஆர்.என்.ஏ, ஏடிபி மற்றும் அனைத்து உயிரணு சவ்வுகளையும் உருவாக்கும் பாஸ்போலிப்பிட்கள்.

  பாஸ்பரஸ் இல்லாமல், மனிதர்களாகிய நாம் வெறுமனே மனிதர்களாக இருக்க மாட்டோம், ஏனென்றால் நமது கனவும் நமது ஆன்மீக ஆற்றலும் இது இல்லாவிடில் இருக்காது.  பாஸ்பரஸைக் கொண்டிருக்கும் நமது டி.என்.ஏ மூலம்தான், நாம் உலகில் தோன்றி வாழ முடிகின்றது. வெளிச்சத்தில் மட்டுமே வாழ நாம் யார்?

உண்மைகள் என்னவென்றால், இந்த இருள் முழு நேரத்திற்குள் நாம் எப்போதுமே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று பார்க்காமல் நம்மை முட்டாளாக்க முயற்சிக்கிறது. 
கடவுளை அறிந்த ஒருவர், அதிகாரங்களால் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்,

உண்மைகள் என்னவென்றால், நாம் நட்சத்திர குப்பைகளால் ஆனவர்கள்.

 பாஸ்பரஸ் வடிவத்தில் உங்களுக்குள் மறைந்திருக்கும் நட்சத்திர தூசி தான் வாழ்க்கைக்கு இன்றியமையாதது.

ஏற்கனவே கூறியுள்ளேன்.  பாஸ்பேட் டி.என்.ஏ, ஆர்.என்.ஏ, ஏ.டி.பி மற்றும் அனைத்து உயிரணு சவ்வுகளையும் உருவாக்கும் பாஸ்போலிப்பிட்களின் ஒரு அங்கமாகும்.  இது நமது டி.என்.ஏவில் உள்ள இந்த ‘தீப்பொறி’ தான் நம்மை மனிதனாக்குகிறது.  

மனிதனின் வீழ்ச்சி என்பது வெறுமனே இந்த ஒளியிலிருந்து விலகுவதாகும்.

உண்மையான ஒளியைத் தேடுவதற்கு மாறாக பதில்களைத் தேடும் போது நாம் ஒவ்வொருவரும்  வீழ்ச்சி அடைகின்றோம் எப்படி எனில் சமூகத்தில் பொருளாதாரத்தில் - மன அளவில் - வியாபார அளவில் - வெற்றி பெறுவது இப்படி சொல்லி.கொண்டே போகலாம்.

உங்களுக்கு உள்ளிருந்து எழும் உணர்வுகளால் நீங்கள் பிரபஞ்சத்துடன்  உறவாடும் போது உங்கள் தேவையை அது அறிந்து கொள்ளும்.

கிரகங்களும் நட்சத்திரங்களும் தங்கள் ரகசியங்களை நம் காதுகளில் கிசுகிசுக்கத் தொடங்குவது  எப்போது தெரியுமா பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ளும் போது.

நீங்கள் பிரபஞ்சத்துடன்  இணைந்திருக்கும்போது உங்களுக்கானதை பிரபஞ்சம் வெளிக்காட்டும் அப்போது நீங்கள் ஆச்சரியத்தில் அதிர்ந்து உறைந்து போய் விடுவீர்கள் நீங்கள் நம்பினாலும் நம்பாமல் போனலும் இது தான் உண்மை.

பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் உள்ளன, அவை மனிதனின் கை தொடும் அளவுக்கு குளிராகவே இருக்கின்றன.

துடிக்கும் ஒவ்வொரு இதயமும், வானத்தில் மின்னும் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒன்றே உங்களுக்கான நட்சத்திரத்தை பின்பற்றுங்கள்.

"நாம் அனைவரும் கடவுளை காண முடியாது, ஏனென்றால் நாம் ஏற்கனவே முற்றிலும் கடவுளின் முன்னிலையில் இருக்கிறோம். நம்மிடம் இல்லாதது விழிப்புணர்வு மட்டுமே."
இது ஒரு ஆழமான, மிகவும்தனிப்பட்ட பயணம்.  நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், நீங்கள் வேலையைச் செய்ய வேண்டும்.  அமைதியும் அன்பும் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்.

கற்றல்

உங்கள் உடலை வேலை செய்ய வைப்பதன் மூலம் நீங்கள்  கற்றுக்கொள்ளுங்கள்.  உங்கள் மூளை ஒத்திசைவுகளை மாற்றியமைக்க டி.என்.ஏவை உங்கள் 
செயல்படுத்துங்கள்,

கருப்பு எல்லா வண்ணங்களையும் மறைக்கிறது,

உங்கள் கனவுகளுக்கு தெளிவுபடுத்துவதற்கான திறவுகோலாகும், அதிர்வு.

உங்கள் மூச்சை உயர்த்துவதன் மூலம் உங்கள் இரண்டாவது மரணத்தை ஏமாற்றலாம். 

இந்த தத்துவமானது இந்த பிரமாண்டமான புத்தகமான பிரபஞ்சத்தில் எழுதப்பட்டுள்ளது, இது தொடர்ந்து நம் பார்வைக்கு படும் படி திறந்திருக்கும்.

“ஆனால் ஒருவர் முதலில் மொழியைப் புரிந்துகொண்டு, அது இயற்றிய எழுத்துக்களைப் படிக்கக் கற்றுக் கொள்ளாவிட்டால் புத்தகத்தைப் புரிந்து கொள்ள முடியாது.

இது கணித மொழியில் எழுதப்பட்டுள்ளது, அதன் எழுத்துக்கள் முக்கோணங்கள், வட்டங்கள் மற்றும் பிற வடிவியல் புள்ளிவிவரங்கள், அவை இல்லாமல் ஒரு வார்த்தையை புரிந்து கொள்வது மனிதனால் இயலாது;  இதை பற்றி தெரியாமல் பலர் சுற்றித் திரிகின்றார்கள். ”

நெருப்பும் நீரும் சேர்ந்தது தான் வானம்.அண்டவியல் வெளிப்படையானது. படைப்பின் முதல் வரிசை பிரிக்கும் செயலில் தொடங்குகிறது,
ஆவி “தண்ணீருக்கு மேல் வளர்கிறது” என்று சொல்லப்படுகிறது,அதாவது இயக்கம்  மற்றும் பிளவுகளுக்கு இடையிலான உராய்வு. 

நிரந்தர இயக்கம் ஒரு சிறப்பு மிக்க சக்தியாகும், இதை அதன் எண்களால் வெறுமனே காட்ட முடியும்.

ஒரு சிக்கலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, 
இயக்க செயல்பாட்டின் வேகத்தை குறைக்காமல் உங்கள்  ஒளியின் அளவை வேறு திசையில் மாற்ற வேண்டும்.


விருப்பம்

ஒருவர் புருவங்களுக்கிடையில் அரை திறந்த கண்களுடன் நீண்ட நேரம் கவனம் செலுத்தினால்,

படிப்படியாக, காலப்போக்கில், ஆன்மீகக் கண்ணை நீங்கள் காணத் தொடங்குவீர்கள், 

கண்ணை விருப்பப்படி நீங்கள் காண முடிந்தவுடன், நீங்கள் அதிவேக மனதை உணர்ந்து கொள்வீர்கள்  ஒளியின் கதிர்கள், அதனுடன் அனைத்து விஷயங்களும் உருவாகி உங்களுக்குள் வெள்ளம் போல் பாய்ந்து உங்கள் சக்தி அபரிதமாகும் அப்போது உங்கள் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.

பண்டைய உலகின் பிரகாசமான மனம் கொண்டவர்கள் பலர் இருந்தனர், அவர்களுடைய மதிப்புமிக்க கையெழுத்துப் பிரதிகளில் பெரும்பாலானவை அவர்களுடன் சேர்ந்து அழிக்கப்பட்டது இந்த சக்தி ஆற்றலினை மறைக்கவே.

புரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள முயற்சிக்கும் போது பிரபஞ்சம் உங்களுடன் ஒத்திசைந்து உங்களுடன் சேர்ந்து நடனமாடும். பின் நடப்பதனை பார்த்து நீங்கள் ஆச்சிரியத்தில் உறைந்து போய் விடுவீர்கள் அல்லது பிரபஞ்சத்துடன் ஒன்றாகி விடுவீர்கள்.

ஆற்றல்

ஒவ்வொரு அணுவும் தன்னுடைய வைத்திருக்கும் அசல் தெய்வீக சக்தியை .

சிவன் ஒரே நேரத்தில் படைப்பு மற்றும் அழிவின் சக்தியைக் கொண்டிருக்கிறான்.  நாம் துவக்கத்தில் நுழைந்தால், நமக்குள் இருக்கும் நெருப்பு மெதுவாக உருவாகத் தொடங்குகிறது.

இறுதியான விஷயம் நெருப்பு.  இதை நன்கு புரிந்துகொள்ள, உடல், உடல் ஒரு உயிரினம் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது உறுப்புகளால் உருவாகிறது.  ஒவ்வொரு உறுப்பு உயிரணுக்களாலும், ஒவ்வொரு உயிரணு மூலக்கூறுகளாலும், ஒவ்வொரு மூலக்கூறும் அணுக்களாலும் உருவாகின்றன.  நாம் அணுவை சிதைக்கும்போது, ​​நெருப்பை விடுவிப்போம்.  எனவே, நாம் அமுக்கப்பட்ட நெருப்பு, அமுக்கப்பட்ட ஆற்றல். 

நம்  ஆற்றலை நாம் உணர்வுபூர்வமாகத் தேர்ந்தெடுக்கும்போதும், ​​நம் உள்ளத்தை வெல்வதன் மூலம்மும் நமது ஈகோவை அகற்றுவோம்.



ஏன்

ரகசியம். அதைக் கற்றுக்கொள்வதில் நாம் எவ்வாறு சோகமாக இருக்க முடியும்?

 நாம் அனுபவிக்கும் சோதனைகள் மற்றும் எதிர்ப்புகள் நாம் அவற்றின் அடியில் இருக்கும்போது நமக்கு கடினமாகின்றன, ஆனால் அவை நாம் மேலே உயரும்போது அவை ஏறும் ஏணிகளாகின்றன, மேலும் அவற்றின் பொருளாக மாற்றும் ஞானத்திற்கு நம்முடைய உயரமும் குணமும் தவிர வேறு எந்த முடிவும் இல்லை, அந்த கொடூரமல்ல  மற்றும் பழிவாங்கும் நோக்கம் பொதுவாக மோசமானவர்களால் கூறப்படுகிறது.

 அடிப்படை உண்மை பயிற்றுவிக்கப்பட்ட எல்லா மனிதர்களும் ஒரே மொழியைப் பேசுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் ஒரே நாட்டில் வசிப்பவர்கள். "

நட்சத்திரம்

"மேஜிக் உங்களைச் சுற்றியே இருக்கிறது ... இது உங்கள் மூச்சில், உங்கள் வார்த்தைகளில், அது உங்கள் இருப்பு. மேஜிக் என்பது சில விசித்திரக் கதை அல்ல, இது கண்களைக் கொண்டவர்களுக்கு ஒரு வாழ்க்கை அனுபவமாகும். நீங்கள் ஒரு மந்திரத்தை கற்பனை செய்ய தேவையில்லை  மேஜிக் உண்மையானது என்று நம்புவது. சின்னங்கள் உங்களைச் சுற்றிலும், வெற்றுப் பார்வையில் ஒளிந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு முறையும் உங்கள் மறைக்கப்பட்ட சுயத்தை, உங்கள் இருளை, உங்கள் ஈகோவை நீங்கள் வெல்லும் போது, ​​நீங்கள் ஒரு மந்திரவாதி. நீங்கள் சொல்லும் ஒவ்வொரு எண்ணமும் ஒலியும் தயாரிப்பில் மந்திரம். அனைத்தும்.  நீங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான் அது உங்கள் நம்பிக்கை. "
எல்லா அறிவும் நட்சத்திரங்களிலிருந்து (யுனிவர்சல் மைண்ட்) வருகிறது.  மனிதர்கள் கருத்துக்களை கண்டுபிடிப்பதில்லை அல்லது உருவாக்குவதில்லை;  கருத்துக்கள் உள்ளன, அதனால் அவற்றைப் புரிந்துகொள்ள முடிகிறது.  உலகில் இசை பேராசிரியர்கள் அனைவரும் ஒரே நாளில் இறந்துவிட்டால், சொர்க்கம், இசையின் அசல் ஆசிரியராக இருப்பதால், இறக்க மாட்டார், மேலும் இது மற்றவர்களுக்கு இந்த கலையை கற்பிக்கும்.

 ஆண்கள் இன்னும் புரிந்து கொள்ளாத பல யோசனைகள் உள்ளன;  பல நட்சத்திரங்கள் பூமியுடன் ஒரு தொடர்பை உருவாக்க இன்னும் வெகு தொலைவில் உள்ளன.  நட்சத்திரங்கள் மற்றும் கருத்துக்களின் சாம்ராஜ்யம் எல்லையற்றது, எனவே கண்டுபிடிப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் ஆதாரம் இன்னும் தீர்ந்துவிடவில்லை.

 

ஊசல் மனம்

எந்த ஒரு செயலுக்குமம் எதிர்வினையும் எப்போதும் இருக்கும்;  ஒரு முன்கூட்டியே செய்ய நினைக்கும் செயல் மற்றும் பின்வாங்கல்;  உயரும் மற்றும் மூழ்கும்.  இது பிரபஞ்சம், சூரியன், உலகங்கள், ஆண்கள், விலங்குகள், மனம், ஆற்றல் மற்றும் விஷயம் ஆகியவற்றின் விவகாரங்களில் உள்ளது.  இந்த சட்டம் உலகங்களை உருவாக்குவதிலும் அழிப்பதிலும் வெளிப்படுகிறது.இந்த கோட்பாட்டைப் புரிந்துகொண்டு, அதன் உலகளாவிய பயன்பாட்டைக் கண்டறிந்துள்ளனர், மேலும் பொருத்தமான சூத்திரங்கள் மற்றும் முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் அதன் விளைவுகளைத் தங்களுக்குள் சமாளிக்க சில வழிகளையும் கண்டுபிடித்துள்ளனர்.  அவை நடுநிலைப்படுத்தலின் மூலம்கோட்பாட்டை ரத்து செய்யவோ அல்லது அதன் செயல்பாட்டை நிறுத்தவோ முடியாது, ஆனால் கோட்பாட்டின் தேர்ச்சியைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அதன் விளைவுகளைத் தங்களைத் தாங்களே தப்பித்துக் கொள்வது எப்படி என்பதை அவர்கள் கற்றுக்கொண்டார்கள்.அதைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அவர்கள் கற்றுக்கொண்டார்கள்.எந்தவொரு சுய-தேர்ச்சியையும் பெற்ற அனைத்து நபர்களும் இதை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு, அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அறியாமலேயே செய்கிறார்கள் ஆனால் மாஸ்டர் இதை நனவுடன் செய்கிறார், மற்றும் அவரது விருப்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம்,மன உறுதிப்பாட்டின் அளவை அடைகிறார்  ஒரு ஊசல் போல,இந்த கோட்பாடு மற்றும் துருவமுனைப்பு ஆகியவை நெருக்கமாக நுணுக்கமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன, மேலும் அவற்றை எதிர்ப்பது, நடுநிலையாக்குவது மற்றும் பயன்படுத்துதல் ஆகியவை உங்கள் அளவுகளை பொருத்தே

பிரபஞ்சம்+மனம்

"எல்லாமே மனம்; அது பிரபஞ்சம்."இதில் நாம் வாழ்கிறோம், நகர்கிறோம், நம் இருப்பைக் கொண்டிருக்கிறோம்.பிரபஞ்சத்தின் விதிகளை உடனடியாகப் புரிந்துகொள்ளவும்,புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக இடையூறாகப் பயன்படுத்துவதற்கு இயக்கப்பட்டிருக்கின்றோம்.பிரபஞ்சத்தின் மன இயல்பின் உண்மையை புரிந்துகொள்பவர் வர்கள் நன்கு முன்னேறியுள்ளார்கள்."மாஸ்டர்-கீ உங்களிடம் இருப்பதால்,  மனம் மற்றும் மன அறிவின் கோவிலின் பல கதவுகளைத் திறந்து, சுதந்திரமாகவும் புத்திசாலித்தனமாகவும் நுழையலாம். அவைகள் "ஆற்றல்," "சக்தி" மற்றும் உணர்வுகள்.இந்த மாஸ்டர்-கீ இல்லாமல்,  கோயிலின் பல கதவுகளை வீணாகத் தட்டுவது சாத்தியமற்றது.

கோயிலின் அனைத்து கதவுகளும் திறக்கப்படுவதற்கு முன்பு, இவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் அவை அதிர்வுக்கான கொள்கை
    
எதுவும் இல்லை;  எல்லாம் நகர்கிறது;  எல்லாம் அதிர்வுறும்.

 இந்த கோட்பாடு "எல்லா இயக்கத்திலும் உள்ளது" என்ற உண்மையை உள்ளடக்குகிறது;  "எல்லாம் அதிர்வுறும்";  "எதுவும் ஓய்வில் இல்லை";  நவீன விஞ்ஞானம் ஒப்புதல் அளிக்கும் உண்மைகள், ஒவ்வொரு புதிய விஞ்ஞான கண்டுபிடிப்பும் சரிபார்க்க முனைகின்றன, ஆயினும் இந்த  கோட்பாடு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பண்டைய எகிப்தின் முதுநிலை ஆசிரியர்களால் அறிவிக்கப்பட்டது.அனைத்தும் அதிர்வுகளில் உள்ளன - அதிக அதிர்வு, அளவில் அதிக நிலை.அதிர்வு என்பது எல்லையற்ற தீவிரத்தன்மை மற்றும் வேகத்தில் உள்ளது, அது நடைமுறையில் ஓய்வில் உள்ளது - உதரணமாக வேகமாக நகரும் சக்கரம்.துருவங்களுக்கு இடையில், மில்லியன் கணக்கான மாறுபட்ட அளவிலான அதிர்வு உள்ளது. எலக்ட்ரான், அணு மற்றும் மூலக்கூறு முதல் உலகங்கள் மற்றும் பிரபஞ்சங்கள் வரை அனைத்தும் அதிர்வுறும் இயக்கத்தில் உள்ளன. இந்த கோட்பாட்டைப் புரிந்துகொள்வதன் மூலம், (பொருத்தமான சூத்திரங்களுடன்)சொந்த மன அதிர்வுகளையும் மற்றவர்களையும் கட்டுப்படுத்த இது உதவுகிறது.  இயற்கை நிகழ்வுகளை வெல்வதற்கும் இந்த கோட்பாடு பல்வேறு வழிகளில் பயன்படுத்துகிறது.  "அதிர்வு கோட்பாட்டைப் புரிந்துகொள்பவர், அதிகாரத்தின் செங்கோலைப் புரிந்துகொண்டார்" என்று பழைய எழுத்தாளர்களில் ஒருவர் கூறுகிறார்.

Sunday 5 July 2020

நிதானம்

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......,
 " தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!!

"அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!

  "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!!

"சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!!

 "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. 

"அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!!

 இருந்தும் கோபம் தாளாமல்.....,

  "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது.

"எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!!

 "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"....,
 "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!!

அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. 

உடனே...,
  " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,

  " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!!

 மற்ற நாய்களும் குறைத்தது.

 " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்....,

 " வெறி பிடித்து தொண்டை கிழிய குரைத்து கொண்டே மயங்கியது"....!!

"இறுதியில் அந்த நாய் பயத்தில் இறந்தே போய் விட்டது".......!!

"இறந்து போன அந்த நாய் கொஞ்சம் கவனித்து இருந்தால்"........,
 அதற்கு புரிந்திருக்கும். 
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

1. தான் நுழைந்தது....,
 " நூற்றுக் கணக்கான கண்ணாடிகளை கொண்ட அறை என்று "......,

2. தன்னை சுற்றி இருந்தது........,
" தனது பிம்பங்கள் தான் என்று"...., 

3. குரைத்தது சுற்றி இருந்த நாய்கள் அல்ல......,
   "தன் குரலின் எதிரொலி தான் என்று"......, 

        நீதி: 
         ```````
  "இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது".....!!
  
நாம் கோபப்பட்டால்....,
 " பதிலுக்கு கோபம் கிடைக்கும்".....!!

  அன்பு செலுத்தினால்.....,
    " அன்பு கிடைக்கும்"......!!

"நீ எதை விதைக்கிறாயோ"....,
  "அதுவே முளைக்கும்"...!!

      

Friday 3 July 2020

ரெயின் கோட்டும் நானும்

படிக்கவும். படித்த உடன் மறந்து விடவும்.     -அப்பா இந்தா உன்னோட ரெயின்கோட் இதை இப்ப போட்டுக்கப்பா - நான் ஏன்டா ரெயின்கோட் போட்டுகோனும் வீட்டு குள்ளதானே இருக்கோம் அப்புறம் எதுக்கு நான்ரெயின் கோட் போடணும் - இப்ப போட்டுக நாளைக்கு மழை வரும் - நாளைக்கு தானே மழை வரும் நாளைக்கு வெளியில போகும்போது போட்டுகிறேன் - இப்ப வீட்ல இருக்கில இப்பவே போட்டுக்க - நாளைக்கு மழை வராட்டி உன்ன என்ன பண்றது - நாளைக்கு வராட்டி நாளை கழித்து வரும்பா - டேய் என்னை கடுப்பேத்தாதே - அப்ப நீ என்னை கடுப்பேத்தும் போது எனக்கு எப்படி இருக்கும் - என்னப்பா சொல்லுறே - சரி விடு - அப்படி எல்லாம் விட முடியாது என்னனு சொல்லு – நான் சொல்லுறேன் மழை வரும்  ரெயின் கோட் போட்டுகனு நீ முடியாது வீட்ல தானே இருக்கிறேன் நீ வெளியில  மழையில் போகும் போது போட்டுகிறனு சொல்லுற - அதுக்கு - நான் வெளிய போய் விளையாடுறேனு சொன்னா புக்கை படி ஹோம் வொர்க் செய்னு சொல்லுற - அப்படி இல்லடா நீ செல்லுறது வேற நான் சொல்லுறது வேற -நான் சொல்லுறது உன்னோட அறிவை வளர்க்க ,நீ சொல்றது முட்டாள்தனமானது - அது எப்படி? நம்ம வீட்டு வந்து சாப்புடுற புறாக்கு அறிவு இருக்கா இல்லையாப்பா? - அதுக்கு அறிவு இருக்குறதுனாலதான்டா பசிச்சா இங்க போனா சாப்பாடு கிடைக்கும்னு வருது-அப்ப எனக்கு அறிவு இல்லைனு சொல்லுறியாப்பா - அப்படி சொல்லல அதை விட நீ புத்திசாலி அதனால தான் உன்னை படினு சொல்லுறேன் - சரிப்பா நான் படிச்சு டாக்டார் ஆகிறேன் - குட் போய் படி- அப்ப இந்த ரெயின் கோட்ட போட்டுக் கப்பா - வீட்ல இருக்கும் போது ரெயின் கோட் போட்டா வேர்க்கும் டா - வேர்க்கம இருக்குறதுக்கு ஏசி போட்டு கலாம் பா - சரி நீ சொல்லுற மாதிரி ஏசி போட்டு நான் ரெயின் போட்டுகிறேன் எனக்கு வேர்க்காது  கரண்ட் பில் யார் கட்டுவா -அதுக்கு தான் நீ பிசினஸ் பன்னுறில அதுல கட்டு சரியா-இல்லடா யாராவது நம்ம வீட்டுக்கு வந்தா என்னை கேவலமா பார்பாங்கடா ஏசி போட்டு ரெயின் கோட்டு போட்டு உட்கார்ந்து இருக்கிறதை பார்த்தா - ஏசி எதுக்குப் பா வேர்க்காம இருக்குறதுக்கு தானே வரவங்ககிட்ட சொல்லு - இல்லடா உனக்கு நான்  புரியுற மாதிரி சொல்லுறேன் வீட்ல இருந்து கிட்டு ரெயின் கோட் போட்டா அப்பாக்கு வேர்த்து சளி புடிக்கும் அப்புறம் டாக்டர் கிட்ட போகனும் ஊசி மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடனும்.இது நமக்கு தேவையடா அதுக்கு பதிலா மழை வரும் போது நான் மழையில் வெளியே செல்லும் போது போட்டுகிறேன் -அதெல்லாம் முடியாது இப்பவே ரெயின் கோட் போடு சளி புடிக்காதுப்பா அதுதான் ஏசி போட்டு இருக்கோம்ல -டேய் நீ லுசா டா - நீ தான்பா லுசு -ஏண்டா இப்படி படுத்துறே, சரி உன்கிட்ட ஒரு கேள்வி புறா எல்லாம் ரெயின் கோட் போட்டுட்டா இப்ப இங்கு இருக்கு. -புறாவை விட நான் அறிவாளி நீதானே சொன்னே | -இன்னைக்கு எனக்கு சத்ய சோதனை டா -சரிடா புறாவின் குழந்தை அப்பா புறாவை எப்பவாது ரெயின் கோட் போட சொல்லி இருக்கா - அப்பா புறா குழந்தைக்கு தெரியும் மழை பெய்யும் போது நம்ம அப்பா வெளியே போகதுனு - ஆனா நீ போவில - நானும் புறாவும் ஒன்னடா ,அது பறக்கும் ,எங்க வேணா போகும் என்ன வேணா அதுக்கு பிடிச்சத சாப்பிடும் அப்புறம் செத்து போய்டும் - அப்ப நீ சாக மாட்டியப்பா - எனக்கும் வயசு முடிஞ்சு போச்சுன்னா செத்து போய்டுவேன் - புறாக்கு வயசு. முடிஞ்சு போச்சுனாலும் செத்துரும்டா - உனக்கும் வயசு முடிஞ்சு போச்னா நீ செத்த்துருவ அப்படி தானேப்பா - ஆமண்டா சாமி உனக்கு புரிய வைக்குறதுக்குள்ள எனக்கு உசுரு போய் உசுரு வந்துருச்சு - உசுரு போனா வருமாப்பா - வரும்டா - உசுருன்னா என்னப்பா - பயம் டா - பயம்னா என்னப்பா - நீ நான் சொன்னா அடங்கமட்டே இரு நீ ஹோம் ஒர்க் பண்ணலைனு உங்க ஸ்கூல் மிஸ் அப்புறம் பிரின்சுபாலுக்கு போன் பண்ணி இப்பசொல்ல போறேன்  - வேண்டாப்பா பிளிஸ் சொல்லிடாதே பிளில் பிளஸ்பா- இதுக்கு பேர் தான் பயம் புரிந்ததா என் மகனே. உன்னை என்னிடம் சரணடைய உன்னிடம் உள்ள *பலவீனத்தை* நான் பயன்படுத்தினே் உனக்குள் ஓர் மாற்றம் ஏற்பட்டதா இதுக்கு பேர் தான் *பயம்*- சரிப்பா இந்தா உன்னோட ரெயின்கோட் இப்ப போட்டுக்க - கதையின் தொடர்ச்சி முதலில் இருந்து படிக்கவும்.

ரெயின் கோட்டும் நானும்

Saturday 27 June 2020

தெரியாதது எது?

வாழ்க்கை என்ன குதிரை பந்தயமா...???  

பிறர் ஒவ்வொருவரும், 

இதைச் செய்கிறார்கள்,

அதைச் செய்கிறார்கள், 

இதை சாதிக்கிறார்கள்',

நீ மட்டும் எப்படி நின்று விடுவது....???

போய்க்கொண்டேதான் இருக்க வேண்டியிருக்கிறது.

இன்னும் அதிக தூரம், 

அதிக வேகத்தில்,

இன்னும் அதிக கம்பீரத்தோடு, 

இன்னும் அதிக எழுச்சியோடு
என்று போய்க்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.

ஆனால் எங்கே போய்க் கொண்டிருக்கிறாய் என்பது மட்டும் தெரியவில்லை

எது சேரும் இடம் என்பது மட்டும் தெரிவதில்லை

எதை சாதிக்க வேண்டும்...???  

பணமா, கௌரவமா...???

அப்படித்தான் அவை நிறைய வந்தாலும்

அவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்றிருக்கிறாய்.....???

பெரிய வீட்டை வாங்கி வாழலாம்.

நீதானே வாழப்போவது....???

வீடல்லவே......!!!

சிறிய வீட்டில் நிம்மதி இல்லை என்றால்

பெரிய வீட்டில் அதிகமாக நிம்மதியை இழக்கப் போகிறாய்......!!!

உன்னைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது என்றால்

பணம் புகழை வைத்து என்ன செய்யப் போகிறாய்.....???

உலகம் முழுக்கத் தெரிந்தவன் ஆகலாம்

அதனால் ஆகப் போவதென்ன......???

உன்னுடைய உள்ளிருட்டு அப்படியேதான் இருக்கப் போகிறது 

*ஓஷோ* 

Monday 4 May 2020

கர்மம்

ஒரு அந்தணர், 
தெருவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். 
அவர் நெடு நேரம் தேடுவதைப் பார்த்த ஒருவர், 
ஐயா... என்ன தேடுகிறீர்கள்? என்று கேட்டார்.

சிவ பூஜைக்கு, 
வாழைப்பழம் வாங்குவதற்காக, 
ஓரணா வைத்திருந்தேன். 
அது கீழே விழுந்து விட்டது. 
அதைத்தேடிக் கொண்டிருக்கிறேன்... என்றார்...

பரவாயில்லை பூஜைக்கும் நாழியாகி விட்டது; நான் ஓரணா தருகிறேன்.

வாழைப்பழம் வாங்கி, 
பூஜையை முடித்துக் கொள்ளுங்கள்...என்று சொல்லி,

ஓரணாவைக் கொடுத்து விட்டுப் போய் விட்டார்.

அந்தக் காலத்தில் ஓரணாவுக்கு நாலு வாழைப்பழம்.

அவரும், 
ஓரணாவுக்கு வாழைப்பழம் வாங்கி வைத்து, பூஜையை முடித்தார்.

தேவேந்திரன், 
ஒரு நாள், தர்மராஜன் சபைக்கு வந்தான். எமதர்மன், தேவேந்திரனை உபசரித்து வரவேற்றான்.

சபையில், 
ஒரு ரத்ன சிம்மாசனமும், 
ஒரு தங்கத்தாலான சிம்மாசனமும், போடப்பட்டிருந்தது.

அந்த சமயம், 
இரண்டு தேவ விமானங்கள் வந்தன.

எமதர்மன், 
ஓடிப் போய் விமானத்திலிருந்த வரை வரவேற்று உபசரித்தான்.

ஒவ்வொரு விமானத்திலிருந்தும், ஒவ்வொரு புண்ணிய புருஷர் இறங்கினர்.

எமதர்மன், 
ஒருவரை, ரத்ன சிம்மாசனத்திலும், மற்றொருவரை, தங்க சிம்மாசனத்திலும், உட்கார வைத்தார்.

புண்ணிய புருஷர்களான நீங்கள் இங்கு வந்தது என் பாக்யம்... என்று சொல்லி,

அவர்களை, 
எமதர்மன் உபசரித்ததை பார்த்த தேவேந்திரன்,

எமதர்மனைப் பார்த்து,

இவர்கள் அப்படி என்ன புண்ணியம் செய்தனர்! 
அதிலும், 
ஒருவரை ரத்ன சிம்மாசனத்திலும், ஒருவரை தங்க சிம்மாசனத்திலும் உட்கார வைத்திருக்கிறீர்களே... 
என்று கேட்டார்.

அதற்கு எமதர்மன், 
இதோ தங்க சிம்மாசனத்தில் இருப்பவர், தினமும், சிரத்தையுடன் சிவ பூஜை செய்தவர்.

அந்த புண்ணியத்தினால், இவரை தங்க சிம்மாசனத்தில் உட்கார வைத்திருக்கிறேன்.

மற்றொருவரோ சிவ பூஜைக்கு உதவி செய்தவர்.

ஒரு நாள், 
சிவ பூஜைக்கு வாழைப்பழம் வாங்க, உதவி செய்தவர். அதனால், இவருக்கு ரத்ன சிம்மாசனம்... என்றான் எமதர்மன்.

தேவேந்திரன் ஆச்சரியப்பட்டு, 
சிவபூஜை செய்தவரை விட, 
சிவ பூஜைக்கு உதவி செய்தவருக்குத்தான் அதிக புண்ணியம் என்பதை தெரிந்து கொண்டேன்... என்று சொல்லி,

எமதர்மனிடம் விடை பெற்று, தேவலோகம் சென்றார்.

இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால்,

ஒரு சிவ பூஜை அல்லது கும்பாபிஷேகம் ஆகியவற்றை முன் நின்று நடத்துபவரை விட,

அதற்கு உதவி செய்பவர்களுக்கு புண்ணியம் அதிகம்.

அதனால் தான், 
எங்கேயாவது கும்பாபிஷேகம், திருப்பணி என்றால், என் பணமும் அதில் சேரட்டும்... என்று, 
பணம் கொடுத்து. புண்ணியத்தை சேர்த்துக் கொள்கின்றனர்.

ஆற்றுக்கும்,
தெய்வத் திருப்பணிகளுக்கும் சேவை செய்தாலும்,கைங்கர்யம் கொடுத்தாலும் புண்ணியம். கொடுத்து பாருங்கள்,

அந்த புண்ணியம் எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்வீர்கள்!.

கொடுக்க கொடுக்க மேன்மை அடைய வைப்பது தர்மம் மட்டுமே...செய்த தருமம் தலை காப்பது சத்தியம்.

Tuesday 31 March 2020

வீரம்

குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். 

அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. 

சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார். 

இப்போதெல்லாம் *அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை !*

*அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை !* 

நல்ல உடற்பயிற்சி , சத்தான உணவு , தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள்.

பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள். 

ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழைப் பெற்று விடுவார். 

எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது. 

குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார். 

உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள். 

எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும்.

*எனவே அவரை வீழ்த்துபவருக்க 10லட்சம் பரிசு கொடுப்பதாக வாக்களித்தார்கள்!* 

பெரிய தொகைதான், 

இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள். 

இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது.

இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின் காதிலும் விழுந்தது. 

10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை. 

இந்த நிலையில் அந்தப் புதிய இளைஞன் , தான் போட்டிக்கு வருவதாக முன்வந்தான். 

பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் மோத வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். 

அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான். 
வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார். 

போட்டியின் நாள் அறிவிக்கப் பட்டது.

புதிய இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான் . 

அவர்களிடம் தனக்காக உதவிச் செய்யும்படி சில விஷயங்களைக் கூறினான்.

அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லையென்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்ததால் அவன் சொன்னதை அப்படியே செய்தார்கள்.

அதில் ஒருவன், வீரரின் வீட்டுக்குப் பழங்களுடன் போய் அவர் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சொன்னான். 

அவரும் சந்தோஷமாக அவற்றைப் பெற்றுக் கொண்டு நன்றி சொன்னார். 

வந்தவன் திடீரென்று ,  "என்னய்யா ஆச்சு உங்களுக்கு ? 
பேசும் போதே இப்படி மூச்சு வாங்குதே. 

கல்லு மாதிரி இருந்தீங்களே ! 
உடம்பைப் பாத்துக்குங்க " என்று சொல்லிக் கிளம்பினான்.

"எனக்கு மூச்சு வாங்குதா ? நான் நல்லா தானே பேசுறேன் ? " . 

*அவருக்குக் குழப்பம் வந்துவிட்டது.*

மறுநாள் அதிகாலை, அவர் வீதியில் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திட்டப்படி இன்னொரு இளைஞன் அவருக்கு எதிர்ப்பட்டு வணங்கினான்.

"ஐயா, போட்டியில கலந்துக்கப் போறதா கேள்விப்பட்டேன். நான் உங்க தீவிர ரசிகன். 

இப்பவும் நீங்கதான் ஜெயிக்கப் போறிங்க. 

அதுல சந்தேகமே இல்லை. 

ஆனாலும் முன்னால உங்க ஓட்டத்துல இருந்த வேகமும் , வலிமையும் இப்ப இல்லையே ? உடம்பு சரியில்லையா?"

 என்று கேட்டுவிட்டு நகர்ந்தான்.

*'என்ன எல்லாரும் இப்படி கேக்குறாங்க?' இப்போது சிறிதாய் பயம் துளிர்விட்டது.*

போட்டி துவங்கும் நேரம் வந்தது. 

பலரும் வந்து அவருக்கு வாழ்த்து சொல்லி உற்சாகப் படுத்தினர்.

அவர் மேடையேறப் போகும் போது எதிராளியான இளைஞனின் நண்பனான மற்றொரு இளைஞன் கையில் பூங்கொத்துடன் வந்து அவரை வாழ்த்திக் கைகுலுக்கினான்.

*" என்னய்யா , எப்பவும் உங்க பிடி இரும்பு மாதிரி இருக்கும் இப்ப ரொம்பவும் தளர்ந்து போச்சே  என்னாச்சு உங்களுக்கு ? "*

 என்று கேட்டுவிட்டு விடைபெற்றான் . 

அவ்வளவுதான்  வீரர் முற்றிலுமாக சோர்ந்து போனார்.

போட்டி துவங்கியது . 

அவர் வேகமாய்த் தாக்குதலை ஆரம்பித்தாலும்


*இனம் புரியாத சோர்வு அவரை மேற்கொண்டது.* 

இளைஞனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பலவீனமாய் சரிந்தார். 

எல்லாரும் ஓடி வந்து இளைஞனின் சாதனையையும் , வீரத்தையும் பாராட்டினார்கள் . 

*அவனோ நன்றிப் புன்னகையோடு தன் நண்பர்களின் முகத்தை ஏறிட்டான்.

*பலப்படுவோம் எண்ணங்களால் , நம்பிக்கைகளால் !*

*உடல் அளவில் பலவீனப்பட்டாலும் மனதளவில் மிருகபலத்தோடு இருப்போம்.!*

*பிறரின் வார்த்தைகளால் பயப்படவும் வேண்டாம்.*

 பலவீனப்பட வேண்டாம் !
🤜🤛
👍🏻👍🏻
🙌🙌