Thursday 30 August 2018

தீதும் நன்றும்

கேள்வி:-*
            தீதும் நன்றும் பிறர் தர வாரா
இதில் பிறர் நமக்கு செய்யும் சூழ்ச்சியினால்  தீதும் நன்றும் ஏற்படுகிறதா? இல்லை
அதற்கு முழு காரணம் தாம் மட்டுமா?

*பதில் :-*
            நாம் மற்றவர்க்கு செய்யும் விளைவே நம்முடைய இன்பமும் துன்பமும்.

யாராலும் நமக்கு இன்பத்தை கொடுக்க முடியாது.

அதைப்போலவே துன்பமும்.

உங்களிடம் வந்து சேர்வதெல்லாம் எதிரொலிதான்.பிரதிபலிப்புதான்.

குரல் உங்களுடையதுதான்.
பிம்பம் உங்களுடையதுதான்.

உங்களுடைய உருவத்தை பிரதிபலிக்கும் கண்ணாடிதான் மற்றவர்கள்.

நம் உருவம் அழகாக இல்லை என்றால் கண்ணாடியை குற்றம் சொல்ல முடியுமா.?

அதைப்போல நமது கர்மாவை நமக்கு பிரதிபலிக்கும் கண்ணாடியான மற்றவர்களை எப்படி குறை சொல்ல முடியும்.?

நீங்கள் அழகாக இருந்தால் அதற்கு
கண்ணாடி பொறுப்பல்ல.

நீங்கள் அழகற்றவராக இருந்தால் அதற்கும் கண்ணாடி பொறுப்பல்ல.

அழகும் அவலட்சணமும் கண்ணாடி காட்ட தோன்றா.

*தீதும் நன்றும் பிறர் தர வாரா.*

பயம்

சித்தர் ஒருவர் பாம்பு வளர்த்தார். எங்கு போனாலும் தன் வளர்ப்புப் பாம்போடுதான் வெளியே போவார். ஒரு நாள் வெளியூருக்குப் போய்க்கொண்டிருந்த சித்தர், நல்ல வெயில் நேரத்தில் ஒரு மரத்தடியில் படுத்துத் தூங்கினார். அருகே அவரது பாம்புக்கூடை.
சமர்த்துப் பாம்பு ஏனோ அன்று அந்தக் கூடையிலிருந்து தப்பிவிட்டது. பக்கத்திலிருக்கும் ஒரு வீட்டை நோக்கி ஊர்ந்து சென்றது.

அங்கே ஒரு இரண்டு  வயதுக் குழந்தை. தத்தக்கா புத்தக்கா என்று நடந்துவந்தது. இந்தப் பாம்பைப் பார்த்ததும், ‘ஐ பொம்மை!’ என்று பாய்ந்து பிடித்துவிட்டது.
அந்த நேரம் பார்த்து அந்தக் குழந்தையின் அம்மா வீட்டிலிருந்து வெளியே வந்தார். குழந்தை கையில் பாம்பைப் பார்த்துவிட்டு அலறினார். அதைக் கேட்டு எல்லோரும் ஓடி வந்தார்கள்.

ஆனால் அவர்களில் யாருக்கும் பாம்பை நெருங்கத் தைரியம் இல்லை. பாதுகாப்பான தூரத்தில் நின்றபடி ‘கண்ணு, அந்தப் பாம்பைக் கீழே போடு’ என்று அலறினார்கள். ‘கடவுளே, எங்க குழந்தையைக் காப்பாத்து’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.
இந்தச் சத்தம் கேட்டு சித்தர் எழுந்துகொண்டார். பரபரப்பாக குழந்தை கையில் பாம்பைப் பார்த்ததும், பதறாமல் அருகே சென்று அதைப் பிடித்துக் கூடையில் போட்டார்.
‘ஐயா, உங்களுக்கு பயமே இல்லையா?’ கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.
‘எதுக்கு பயம்? அந்தப் பாம்புக்குதான் ஏற்கெனவே பல் பிடுங்கியாச்சே!’
பாம்புக்குப் பல் பிடுங்கிவிட்டது என்பது தெரிந்த சித்தருக்கும் பயம் இல்லை. பாம்புக்கு விஷப்பல் உண்டு என்பதே தெரியாத பச்சைக் குழந்தைக்கும் பயம் இல்லை. இந்த இரண்டுக்கும் நடுவே சிக்கிக்கொண்டவர்கள்தான் அரைகுறை ஞானத்தால் பயந்து பதறி அவதிப்படுகிறார்கள்.
உங்கள் பயங்கள் எந்த வகை? அவற்றைப் போக்குவதற்கு நீங்கள் தேர்ந்தெடுப்பது சித்தரின்  வழியா? அல்லது குழந்தை வழியா?

"நாம் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை, தீய எண்ணம் ஒன்றைதவிர" என்கிறார் வேதாத்திரி மகரிஷி.இதை அவரது வார்த்தைகைளில்  கேட்போமா?

"தீய எண்ணங்களைக் கண்டு பயப்பட வேண்டும்.நீங்களே முயற்சி செய்து ஒரு நல்ல எண்ணத்தைத் தொடர்ந்து மனதில் வைத்திருங்கள்.தீய எண்ணம் வருவதற்கு இடமிருக்காது. எந்நேரமும் ஏதேனும் ஒரு சங்கற்பத்தை மனதில் சுழலவிட்டுக் கொண்டு இருந்தாலுங்கூட அது தீய எண்ணத்தை விலக்கும்.
அன்பர்களே! தீய எண்ணத்திற்கு ஒருபோதும் மனதில் இடம் அளிக்காதீர்கள்.நல்ல எண்ணத்தைத் தேடிப்பிடித்து மனதில் ஏற்றி வையுங்கள்.உங்கள் மனதில் அடிக்கடி வந்து போகும் எண்ணங்களையும் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களையும ஆராயுங்கள். விழிப்புநிலை, எண்ண ஆராய்ச்சியை வளப்படுத்தும். எண்ண ஆராய்ச்சி, விழிப்பு நிலையை ஊக்குவிக்கும்".

Tuesday 28 August 2018

Financial planning

*For proper financial planning you must know all these 10 formulas .*
*1. Compound Interest*
Formula:
A = P * (1+r/t) ^ (nt)
Where
A = amount after time t
P = principal amount (your initial investment)
r = annual interest rate (divide the number by 100)
t = number of years
n = number of times the interest is compounded per year
*2. Post Tax Return*
Formula:
Return = Interest rate - (Interest rate*tax rate)
*3. Inflation*
Formula:
Future Amount=Present amount*(1+inflation rate)^number of years
*4. Purchasing Power*
Formula:
Future Value=Present value/(1+inflation rate)^number of years
*5. Effective Annual Rate*
Formula: Effective Annual Rate = (1+(r/
n))^n)-1*100
Where
r = nominal return divided by number of times compounding is done in a year
n = number of times compounding is done in a year
*6. Rule of 72*
The thumb rule is divide 72 by the interest rate
EXAMPLE
If you are assuming a 12 per cent return on your investment,
the number of years in which the money will double is
= 72/Interest rate = 72/12 = 6 years
*7. Compounded Annual Growth Rate (CAGR)*
Formula:
CAGR=((FV/PV)^(1/n)) - 1
Where
FV is the investment's ending/maturity value
PV is the investment's beginning/opening value
n is the duration in years
*8. Loan EMI*
Formula:
EMI= (A*R)*(1+R) ^N/ ((1+R) ^N)-1)
Where
A = Loan amount
R = Interest rate
N = Duration
*9. Future Value of SIP*
Formula:
S = R((1+i)^n-1/i) (1+i)
Where
S = Future value of investment
R = Regular monthly investment
i = Interest rate assumed /12
n = Duration (number of months or number of years *12)
*10. Liquidity Ratio*
Formula:
Liquidity Ratio = Total liquid assets/Total current debt

நவ கிரக தியானம்

நம் பிரச்னையை நாமே தீர்த்து கொண்டு நம் வாழ்வில் சந்தோஷத்துடனும் ஆரோக்கியத்துடனும் வாழ் வாங்கு வாழ எளிய நவ கிரக தியான பயற்சி.

என்னடா நம்ம சாப்பாட்டுக்கே கஷ்டபடுறோம்.

இவன் என்ன தியானம் செய்ய சொல்றனேனு நினைக்காதிங்க!

தற்போது நீங்கள் எப்படிபட்ட பிரச்சனைகள் கஷ்டங்கல இருந்தாலும் சரி இந்த வழி முறை மூலம் நிச்சயம் தீர்வு கிடைக்கும்.

நீங்கள் யாரிடமும் போக வேண்டாம்.

பணம் செலவு செய்ய வேண்டாம்.

தினமும் எப்போது நேரம் கிடைக்குமோ அப்பொழுது செய்யலாம்.

மிகவும் சுலபமான வழிமுறை
கை மேல் பலன்.

முதலில் கிழக்கு பக்கம் தரையில் மேட் அல்லது துணி போட்டு உங்கள் வசதிக்கு ஏற்றார் போல் அமருங்கள் சேர்,சோபாவில்லும், அமரலாம்.
பிறகு கண்களை மூடுங்கள்.

மூச்சு காற்றை ஆழ்ந்து பதினோரு முறை சுவாசியுங்கள்.

அடுத்ததாக உங்களுக்கு தற்போது நியாமாக
என்ன வேண்டுமோ அதை கோரிக்கை வையுங்கள். அதை மூன்று முறை கூறுங்கள்.

பிறகு ஒவ்வெரு கிரக நாயகர்களுக்கும் நாம் தனி தனியாக ஆத்மார்த்தமாக நன்றி கூறவேண்டும்.

1)சூரிய பகவானுக்கு நன்றி நன்றி நன்றி
2)சந்திர பகவானுக்கு நன்றி நன்றி நன்றி
3)அங்காரக பகவானுக்கு நன்றி நன்றி நன்றி
4)புதன் பகவானுக்கு நன்றி நன்றி நன்றி
5) குரு பிரகஸ்பதி பகவானுக்கு நன்றி நன்றி நன்றி
6)சுக்கிர பகவானுக்கு நன்றி நன்றி நன்றி
7)சனிஈஸ்வர பகவானுக்கு நன்றி நன்றி நன்றி
8)ராகு பகவானுக்கு நன்றி நன்றி நன்றி
9)கேது பகவானுக்கு நன்றி நன்றி நன்றி.

மெதுவாக கண்களை திறக்கவும்.

இப்படி நாம் கூறிய உடனேயே நம் மூளையில் இருந்து வெளிப்படும் மின் காந்த அலைகள் அந்த அந்த கிரக ஒளி கதிர்களுடன் இணைத்து.நம் ஜாதகத்தில்
கிரக நிலைகளுக்கு ஏற்றார் போல நன்மை களை வாரி வழங்குவார்கள்.

எப்படி என்று கேட்கிறீங்களா?
நமக்கு ஒருவர் பரிசு கொடுத்தா நன்றி சொல்லுவோம். இங்கே கொடுப்பதற்கு முன்பே நன்றி சொல்லிட்டோம்.

அதனால் அவர்கள் கண்டிப்பாக கொடுப்பார்கள் நம்பிகையுடன் முயற்சி செய்து பலன் அடைவோம்.

இதற்க்கு தட்சணை எது தெரியுமா இதை பின் பற்றி பலன் அடைந்தால் அதுவே நீங்கள் இந்த ப்ரபஞ்சத்திற்கு கொடுக்கும் தட்சணை.

உங்களுக்கு பிடித்து இருந்தால் அனைவருக்கும் பகிருங்கள்.
நன்றி நன்றி நன்றி.

Monday 27 August 2018

மன்னிப்பு - ஜென் கதை

மன்னிப்பு''..(ஜென் கதை..)
.............................................

பான்கெய் என்ற ஜென் மாஸ்டர். தன்னுடைய சிஷ்யர்களுக்குப் போதனை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கே ஒரு பூசாரி வந்தார். உள்ளூர்க் கோவிலில் வழிபாடு நடத்துகிறவர் அவர். புத்தர்மீதோ ஜென்மீதோ அவருக்கு நம்பிக்கை இல்லை.

ஆகவே, அவர் புத்தரை இழிவுபடுத்திப் பேசினார். ‘ஜென் என்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம்’ என்றார்.

பான்கெய் அவரைக் கண்டிக்கவோ மறுக்கவோ இல்லை. ஐயா, உங்களுக்கு என்ன பிரச்னை?’ என்றார் அமைதியாக.

எங்களுடைய சாமி என்னென்ன அதிசயங்கள் செய்திருக்கிறது, தெரியுமா?’

‘தெரியவில்லை, சொல்லுங்கள்!’என்றார் ஜென்..

’அவர் நீர்மேல் நடப்பார், தீயை அள்ளி விழுங்குவார், அவர் ஒரு சொடக்குப் போட்டால் தங்கம் கொட்டும், நடனம் ஆடினால் பூமியே நடுங்கும்!’ என்றார் பூசாரி

இதுபோல் எந்த அதிசயமும் செய்யாத உங்கள் புத்தரையோ மற்ற ஜென் துறவிகளையோ கடவுள் என்று எப்படி என்னால் ஏற்றுக்கொள்ளமுடியும்?’

நீங்கள் நினைப்பது சரிதான் ஐயா’ என்றார் பான்கெய்.

ஆனால்,

எங்களால் வேறொரு பெரிய அதிசயத்தைச் செய்யமுடியும்.’

‘அதென்ன?’என்றார் அந்த பூசாரி..

அமைதியாகச் சொன்னார் பான்கெய்.

‘யாராவது தப்புச் செய்தால், எங்களுக்குத் துரோகம் இழைத்தால், அவமானப்படுத்தினால், அவர்கள்மீது எந்த வன்மமும் மனத்தில் வைத்துக்கொள்ளாமல் முழுமையாக மன்னித்து விடுவோம்!’

ஆம்.,நண்பர்க்ளே.,

மன்னிப்பு கேட்பது சமரசமாவதற்கு திறவுகோல்
மன்னிப்பு கேட்பது வலிமைமிக்கது. வன்முறையின்றி சச்சரவுகளை தீர்க்கிறது💐🙏🏻🌸

Saturday 25 August 2018

மன அழுத்தம்

மனஅழுத்தம் இன்றி வாழ சில வழி முறைகள்.

* காலையில்  முன்னதாகவே எழுந்துவிடுங்கள்.

* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

* காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.செய்யவேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.

* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

* வேலை செய்யாதவைகளைக் கட்டி அழாதீர்கள். சரி செய்ய முயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும்.

* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதை- இதைச் செய்வேன் என்பது போன்றவை.

* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

* சற்று நேரம் கைபேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்தத்தொந்தரவும இன்றி.

* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் , ‘மன்னிக்கவும்..  என்னால்செய்ய இயலாது’ என்று சொல்லப்பழகுங்கள்.

* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

* எளிமையாக வாழுங்கள்.

* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.

* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தை த்தரும்.

* ஆழமாக , நிதானமாக  மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்.

* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

* பிறருக்காக எதையேனும   செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

* என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

* உங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

*மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப் படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை வாழலாம்!

Tuesday 21 August 2018

டென்ஷனை தவிர்க்க

*டென்ஷனை தவிர்ப்போம்.*
*--------------------------*

*இதுவே நம் சிந்தனையாக இருக்கட்டும்;*

*ஒரு கப்பல் புயலில் மாட்டிக்கொண்டபோது, அதில் பயணித்த அனைவரும் இறைவனை வழிபட தொடங்கினர்.*

*ஒரு ஞானி மாத்திரம் ஏதும் செய்யாது இருந்தார்.*

*அவரை அனைவரும் பைத்தியம் என்று கேலி பேசினர்.*

*அந்த ஞானி சொன்னார், "'எனக்கு கடவுளிடம் எந்தவியாபாரமும் இல்லை. நம்மை காப்பாற்ற வேண்டுமா? மூழ்கடிக்க வேண்டுமா? என்பது இறைவன் கவலைப்பட வேண்டிய ஒன்று. அது என்னுடைய கவலை இல்லை. நான் பிறப்பதற்கு அவரிடம் கேட்கவில்லை. திடீரென இந்தபூமிக்கு நான்வந்தேன். ஆகவே, மரணத்தைப்பற்றியும் நான் கேட்கமுடியாது. எப்போது பிறப்பு என்கையில் இல்லையோ, மரணத்தைப்பற்றி மட்டும் எப்படி என் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும்?’ என்று.*

*இதுதான் வாழ்க்கை. நமது கையில் ஒன்றும் இல்லை. வேண்டும் என்றால் முயற்சித்து பார்க்கலாம். ஆனால் அதற்கு தகுந்தபலனை இறைவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அதாவது கடமையை செய்ய (கீதையின் சொற்படி) இறைவனிடம் பலனை ஒப்படைத்துவிட வேண்டும்.*

*அனைவரும் இதனைப்புரிந்து கொண்டால். வாழ்க்கை எப்போதுமே டென்ஷன் இல்லாமல் இருக்கும்.*

எதையும் அடைய

நீங்களோ, உங்கள் குழந்தைகளோ, இந்த பூமியில் வாழ முதல் தகுதியும், கடைசி தகுதியும் , தேவையானதும், வாழ்வதற்கும் ஒன்றே ஒன்று தான்...
.
அன்பு மட்டும் தான் ... அன்பு தான் இருக்கும் அலைவரிசைகளில் மிக உயர்ந்த மற்றும் சக்தி வாய்ந்த அலைவரிசை...
.
உலக புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் நிகோலா டெஸ்லா எத்தனையோ அறிவியல் கண்டுபிடிப்புகளை தந்திருந்தாலும் அவற்றுள் " நேர்மறையான ஆற்றல் " தான் அவரின் முக்கியமான மற்றும் நல்ல கண்டுபிடிப்பு
.
எதிர்மறையான ஆற்றலை விட நேர்மறையான ஆற்றலுக்கு தான் நூறு மடங்கு அதிக சக்தியும், அலைவரிசையும் உள்ளதை நிருபித்து காட்டினார்.
.
அன்பு தான் இருக்கும் அலைவரிசைகளில் மிக உயர்ந்த மற்றும் சக்தி வாய்ந்த அலைவரிசை...
.
நீங்கள் பேசும் ஒவ்வொரு நேர்மறையான அன்பான வார்த்தைகளும் உங்கள் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி தருகிறது.
.
உங்களுடைய வலிமையான நேர்மையான உணர்வுகள் தான் நல்ல வாழ்க்கைக்கான இணைப்பு பாலம்...
.
அன்பு, சந்தோஷம், பரவசம், பேரானந்தம், மகிழ்ச்சி, நம்பிக்கை, நன்றி உணர்தல், புன்னகை தான் உங்களுடைய வலிமையான நேர்மறையான உணர்வுகள்.
.
உங்களுடைய வலிமையான நேர்மறையான உணர்வுகள் மூலம் நீங்கள் எதையும் அடையலாம்...அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும்...

Monday 20 August 2018

மனம்

மனம் கடுகுப் பொட்டலம் போன்றது. அதை நாலாபுறமும் சிதற விட்டால் ஒன்று சேர்ப்பது கடினம். இளம்மூங்கில் எளிதாக வளைவது போல, இளமையிலேயே மனதை நல்ல விஷயங்களில் செலுத்துவது அவசியம் நான் என்னும் அகங்காரத்தை அழித்து விட்டவன் கடவுளின் காட்சியைப் பெற்று மகிழ்வான்.  கடவுள் கற்பக மரம் போல கேட்டதையெல்லாம் .கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றார்... நல்லவா்களின் கோாபம் நீடித்திருப்பதில்லை. தண்ணீரி்ல் இட்ட கோலம் போல உடன் மறையும்....
நல்ல மனிதா்களின் சோ்க்கை நாளும் உங்களை உயா்த்தும்.
குடும்ப வாழ்வில் இருந்து கொண்டு, கடவுள் மீது பக்தி செலுத்துபவனே வீரம் மிக்கவன்.  மனதில் நல்ல எண்ணம் இருந்தால் தான் துாயபக்தி உண்டாகும் . கடவுள் என்னும் எஜமானனுக்கு பணிவிடை செய்து வாழ்வது தான் பிறவிப்பயன்.  படிப்பதை விட கேட்டு அறிவது உயர்ந்தது. நேரில் கண்டு உணர்ந்து கொள்வது இன்னும் சிறந்தது.. மேலும் விவேகம் இல்லாதவனுக்கு எத்துணை சாஸ்திர ஞானம் இருந்தாலும்  அதனால் பயன் ஒன்றுமாகப் போவதில்லை... விவேகத்தை கடைபிடியுங்கள்.. நீங்கள் உங்கள்  தேவைகளை  கேட்காமலே அள்ளித்தர இறைவன் இருக்கின்றான்.
இன்றைய நற்சிந்தனைகளின் வழிநடப்போம்..

Saturday 18 August 2018

மெளனம்

மௌனம் எனும் மகாசக்தி.,

ஒரு எந்திரம் மிக நன்றாக வேலை செய்யும் நிலையில் இருக்கும் போது சத்தம் மிகக் குறைவாகவே இருக்கும். அதன் வேலை செய்யும் திறன் பழுதுபடும் போது தான் சத்தம் அதிகரிக்கத் துவங்கும். இது எந்திரத்திற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் பொருந்தும். நிறைய சாதித்தவர்கள், மனித சமுதாயத்தில் தங்கள் காலடித் தடங்களைப் பதித்து விட்டுப் போனவர்கள் வாழ்க்கையை ஆராய்ந்தோமானால் அவர்கள் ஓயாமல் பேசுபவர்களாக இருப்பதில்லை. 'நான் இப்படி செய்யப் போகிறேன்', 'நான் அப்படி சாதிக்கப் போகிறேன்' என்றெல்லாம் வாய் கிழிய சொல்லிக் கொண்டு இருப்பதில்லை. வம்பு பேசுபவர்களாகவோ அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அலசுபவர்களாகவோ, விமர்சித்து மகிழ்பவர்களாகவோ இருப்பதில்லை. அவர்களுக்கென்று வாழ்க்கையில் குறிக்கோள் இருக்கிறது. அதில் தான் அவர்களுக்கு முழுக்கவனமும், உற்சாகமும் இருக்கிறது. அவர்களிடம் தேவையற்ற பேச்சுகளுக்கு நேரமோ மனமோ இருப்பதில்லை.

அமைதியாக இருக்கும் போது தான் தெளிவாக சிந்திக்க முடிகிறது. தெளிவாக சிந்தனைக்குப் பின் பிறக்கும் செயல்களே சிறப்புறுகின்றன. எதிலும் நமது முழுத் திறமையும் வெளிப்பட வேண்டுமானால் மனதை ஒழுங்குபடுத்தி, அனைத்து சக்திகளையும் நாம் ஒருமுகப்படுத்த வேண்டும். இது பேசிக் கொண்டே இருக்கும் சந்தர்ப்பங்களில் சாத்தியமாவதில்லை. மௌனம் நமது சக்திகளை விரயமாக்காமல் சேமிக்க உதவுகிறது. ஓயாமல் பேசிக் கொண்டிருக்கையில் நமது நேரத்தையும், சக்திகளையும் விரயமாக்குவதுடன், அடுத்தவர்களைத் தொந்தரவும் செய்கிறோம். சொல்ல வேண்டி இருக்காத, பின்னால் நம்மை வருந்த வைக்கிற எத்தனையோ விஷயங்களைச் சொல்லியும் விடுகிறோம்.

நிறுத்தாமல் பேசுபவர்கள் மற்றவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். ஒரு முறை வின்ஸ்டன் சர்ச்சிலை ஒரு விருந்தில் சந்தித்த ஒரு மூதாட்டி சொன்னார். "நான் என் பேரனைப் பற்றி உங்களிடம் சொன்னதில்லை என்று நினைக்கிறேன்". வின்ஸ்டன் சர்ச்சில் "தாங்கள் சொன்னதில்லை. அதற்காக நான் தங்களுக்கு நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்" என்று சொல்லி அங்கிருந்து வேகமாக நகர்ந்து விட்டார். மற்றவர்களுக்குத் தேவையில்லாதையும், விருப்பமில்லாததையும் சொல்லாமல் நாமும் மற்றவர்களின் நன்றிக்குரியவர்களாவோமாக.

ஒரு கிரேக்க ஞானி சொன்னதைப் போல் "உங்கள் பேச்சு மௌனத்தை விடச் சிறப்பாக இருக்குமானால் மட்டுமே பேசுங்கள். இல்லையேல் மௌனமே நல்லது". உண்மையில் மேற்போக்காக நாம் வாழும் போது தான் அதிகமாய் வாக்குவாதங்களில் ஈடுபடுகிறோம்; அடுத்தவர்களை விமரிசிக்கிறோம்; சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகிறோம். சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்கிறோம். ஆனால் வாழ்க்கையில் ஆழமான நிலைகளை அடையும் போது இயல்பாகவே பேச்சு குறைந்து விடுகிறது.

நாம் பேசிக் கொண்டிருக்கும் போதும், மற்றவர்களின் இரைச்சலைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் நமக்குள்ளே இருந்து மெலிதாகக் கேட்கும் ஒரு குரலைக் கேட்க முடிவதில்லை. அந்தக் குரலைக் கேட்கவும் அதன் படி நடக்கவும் முடிந்தால் மட்டுமே ஒவ்வொருவனும் தன் தனித்தன்மையை அறிய முடியும். தன் தனித்தன்மையை அறிய முடியாதவன் அடுத்தவர்களின் கருத்துகளின் படி வாழவும் செயல்படவும் முற்படுகிறான். அப்படி வாழப்படும் வாழ்க்கை இரண்டாம்தர மூன்றாம்தர வாழ்க்கையாகவே இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆகவே எதிலும் முத்திரை பதிக்க விரும்புபவர் யாராயினும் முதலில் பேச்சைக் குறைத்து தங்கள் உள்ளே ஒலிக்கும் குரலைக் கவனிக்க ஆரம்பிப்பது அவசியம்.

எனவே முதலில் நமக்கும் மற்றவர்களுக்கும் பயன் தராத தேவையில்லாத பேச்சுகளை குறைத்துக் கொள்வோம். இதன் மூலம் அடுத்தவர்களும் இத்தகைய பேச்சுகளை நம்மிடம் தாங்களாகக் குறைத்துக் கொள்வார்கள். ஏனென்றால் ஒரு கை ஓசை இருக்க முடியாதல்லவா? இது பல பிரச்சினைகளை தவிர்க்கவும், நம்மைச் சுற்றி ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்கவும் பெரிதும் உதவும்.

பலரும் மௌனம் என்று குறிப்பிடுவது வாய் மூடியிருப்பதையே என்றாலும் மௌனத்தையே என்றாலும் இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இதைக் காட்டிலும் உயர்ந்த மௌனம் இன்னொன்று உள்ளது. அது உள்ளே நிகழும் மௌனம். மனமும் அமைதியடையும் போதே அந்த மௌனம் சாத்தியமாகிறது. வாய் மூடி இருந்தாலும் மனம் ஓயாமல் ஏதாவது சொல்லிக் கொண்டிருந்தால் வெளிப்புற மௌனத்தால் பெரிய அளவு பலன்களை நாம் எதிர்பார்க்க முடியாது. உட்புறமும் மௌனத்தை அனுசரிக்க முடிந்தால் அதனால் கிடைக்கும் பலன்கள் அளவில்லாதவை. இந்த உள்புற மௌனத்தை அடைய தியானம், ஆத்மவிசாரம் ஆகியவை உதவுகின்றன.

ஒவ்வொரு முக்கியமான செயலைச் செய்யும் முன்னும் ஓரிரு நிமிடங்கள் மௌனமாய் இருப்பது சிதறும் சக்திகளைச் சேர்த்து ஒழுங்குபடுத்த உதவுகிறது. இப்படி ஒழுங்குபடுத்தப்பட்ட சக்திகளை முறையாகப் பயன்படுத்தி ஒரு செயலைச் செய்யும் போது அது மிகச் சிறப்பாக அமைவதில் ஆச்சரியமில்லை. மேலும் எல்லா புதிய பரிமாணங்களும், ஆழமான அர்த்தங்களும் நமக்குப் புலனாவது நாம் இப்படி மௌனமாக இருக்கும் போது தான். நம் உண்மையான தேவை என்ன, அதற்கு என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கு குழப்பமில்லாமல் தெளிவாக விடை காண்பது இந்த ஆழமான மௌனத்தின் போது எளிதாகிறது. அதற்கான பெரும் சக்தியும் இந்த மௌனத்தில் நம்முள் பிறக்கிறது. ஒரு பெரும் சூறாவளியின் சகல சக்திகளுக்கும் மூலம் அதன் அமைதியான மையத்தில் இருப்பது போல எல்லா சாதனைகளையும் புரியத் தேவையான மகா சக்தியை நம்முள்ளே பிறக்கும் அந்த மௌனத்தில் நாம் காண முடியும்.

மௌனத்தை விட சிறப்பானதாக இருந்தால்
வார்த்தைகளை
பயன்படுத்துங்கள்.....🌹🌹🌹

ஓஷோவிடமிருந்து...