Friday 9 March 2018

எண்ணங்கள்

எண்ணங்கள்.

எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. ஒரு முறை எண்ணிய உடனேயே அந்த எண்ணம் சக்தி படைத்ததாக மாறி விடுவதில்லை. ஒரு எண்ணம் திரும்பத் திரும்ப எண்ணப்படும் போது அது சக்தி பெற ஆரம்பிக்கிறது. அந்த சக்தி அதை செயல்படுத்தத் தூண்டுகிறது.

"ஆயிரம் முறை சொன்னால் யானையும் சாகும்" என்பர் பெரியோர். அதனால் தான் ஆலயங்களில் லட்ச்சார்ச்சனை, கோடியர்ச்சனை போன்றவைகள் நிகழ்கின்றன.

எண்ணங்களின் சக்தி அதே எண்ணங்கள் கொண்டவர்களை தன் பக்கம் ஈர்க்கிறது. மேலும் வலுப்பெறுகிறது. அது அலைகளாகப் பலரையும் பாதிக்கிறது. பலரையும் செயலுக்குத் தூண்டுகிறது.

எண்ணங்களை பிரம்மாக்கள் எனலாம். காரணம் அவை எண்ணியதை உருவாக்கும் சக்தி படைத்தவை. ஒரு எண்ணம் செயலாக முடியாமல் போகிறதென்றால் அதை விட சக்தி வாய்ந்த வேறொரு எண்ணம் அதனுடனேயே இருந்து போராடி அதனைப் பலமிழக்க வைத்திருக்கிறது என்று பொருள்.

எனவே நம் மனதில் அதிகமாக மேலோங்கி நிற்கும் எண்ணங்கள் எவையோ, அவையே இன்று நம்மை இந்த நிலைக்குக் கொண்டு சேர்த்த பெருமை உடையவை.

நம்முடைய இன்றைய நிலை திருப்திகரமாக இல்லையென்றால் முதலில் நம் எண்ணங்களை மாற்றவேண்டும். எண்ணங்கள் மாறுகிற போது அதற்கேற்ப எல்லாமே மாறும். இது மாறாத உண்மை.

Thursday 8 March 2018

மனம் சம்பந்தப் பட்டவை

நோய்களில் எழுபது சதவீதம் மனம் சம்பந்தப் பட்டவை தான்
ஆனால் அவற்றை உடல் மூலமாகத்தான் வெளிப் படுத்த முடியும்
ஆனால் நோயின் துவக்கம் என்னவோ மனத்தில்தான்
நோய் நீங்கி விட்டது என்கிற எண்ணத்தை மனதிற்குள் செலுத்தி விட்டால் நோய் மறைந்து விடும்
மனதிற்கு உடல் மீது அபாரமான பலம் உண்டு
உங்கள் உடலில் எல்லாவற்றையும் மனம்தான் நடத்திச் செல்கிறது
உங்கள் மனதை மாற்றுவதன் மூலமாக
உடலிலுள்ள எழுபத சதவீத நோய்களை மாற்ற முடியும்
உங்கள் மனம் உங்களை சில நோய்களுக்குத் தயாராக வைத்திருக்கிறது
சில நோய்களில் இருந்து உங்களைப் பாது காக்கிறது
உங்கள் மனம்தான் உங்கள் உலகம்
உங்கள் மனம்தான் உங்கள் ஆரோக்கியம்
உங்கள் மனம்தான் உங்கள் நோய்
நீங்கள் உங்கள் சொந்த மனதை தூக்கிப் போடுங்கள்
அப்போதுதான் எதார்த்தம் என்னவென்று தெரிய வரும்
அதன் பிறகு உங்கள் மனம் பிரபஞ்ச மனம் ஆகிறது
உங்கள் சொந்த மனம் உங்களிடம் இல்லாத போது உங்கள் உள்ளுணர்வே பிரபஞ்சமாகிறது
உங்கள் எல்லா பிரச்சினைகளுமே உள ரீதியானவை
உடலும் மனமும் இரண்டல்ல
உடலின் உள்பகுதி தான் மனம்
உடல் மனத்தின் வெளிப்பகுதி
உடலில் துவங்கும் எதுவும் மனத்திற்குள்
நுழைய முடியும்
அதே போல் மனத்தில் துவங்கி உன் உடலுக்குள் நுழைய முடியும் !!!!
ஓஷோ

Wednesday 7 March 2018

வாய்ப்பு

ஒரு அழகான இளைஞன் விவசாயி ஒருவனின் மகளை திருமணம் செய்ய விரும்பி அவனிடம் சென்று அனுமதி கேட்டான்.

அதற்கு அந்த விவசாயி அந்த இளைஞனைப் பார்த்து சொன்னான். இளையனே நீ என்மகளை மணக்க விரும்பினால், நான் வளர்க்கும் மூன்று காளைகளை அடுத்தடுத்து அவிழ்த்து விடுவேன்.
அதில் ஏதாவது ஒன்றின் வாலை நீ தொட்டால் போதும், என் மகளை மணமுடிக்க சம்மதிக்கிறேன் என்று சொல்ல அவனும் ஒத்துக் கொண்டான்.

மாடுகள் அடைக்கப்பட்டிருந்த தொழுவத்தின் கதவுகள் திறந்தது.

முதலில் ஒரு மாடு வந்தது. மிகவும் முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட அந்த மாடு சீறியபடி பாய்ந்து வந்தது.

அதைப் பார்த்த இளைஞன் வாலைப் பிடிக்க தயங்கி அடுத்த மாட்டை பார்க்கலாம் என்று விட்டு விட்டான்.

சிறிது நேரத்தில் அதை விட பெரிய மாடு வெளியே ஓடி வந்தது. பார்க்கவே பயங்கரமான தோற்றம்.
அவனைக் முட்டி மோதி கொல்வதற்காக கடும் வேகத்துடன் ஓடி வந்தது. இளைஞன் அச்சப்பட்டு இதுவும் வேண்டாம் , மூன்றவதைப் பார்க்கலாம் என்று முடிவு செய்து வேகமாக ஓடி பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டான்.

ஓடி வந்த மாடு அதே வேகத்தில் வேலிக்கு வெளியே ஓடிச் சென்றது.

மூன்றாவது முறையாக கதவு திறக்க, அப்போது வெளியே வந்த மாட்டைப் பார்த்து இளைஞன் முகத்தில் புன்சிரிப்பு வந்தது.

அவன் வாழ்க்கையில் பார்த்ததில் இதுவே மிகவும் பலவீனமான மாடு. எலும்பும் தோலுமாய் பார்ப்பதற்கே பரிதாபமாக ஓட முடியாமல் ஓடி வந்தது.

இந்த மாட்டை விடக்கூடாது. இதைத்தான் நான் பிடிக்க வேண்டும் என்று தீர்மானித்து அதன் வாலைத் தொட தயாராக இருந்தான்.

மாடு அருகில் வந்ததும், ஒரு தாவு தாவி மாட்டின் வாலைத் தொடப்போனான். ஆனால் அதிர்ச்சி அடைந்தான். ஆம்.அந்த மாட்டுக்கு வாலே இல்லை.

நமது வாழ்க்கையும் இப்படித்தான். அது பல வாய்ப்புகளை நமக்கு வழங்குகிறது.

சில வாய்ப்புகள. எளிதாகத் தோன்றலாம். சில வாய்ப்புகள் கடுமையாக இருக்கலாம். ஆனால் எளிதானவற்றைக் கண்டு ஆசைப்பட்டு, மற்றது கடுமையாக உள்ளது என்று நம்பி அதைத் தவற விட்டால் (அதில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும்)
அந்த வாய்ப்பு மறுபடியும் நமக்கு வராது.

ஆகவே, வாய்ப்புகளை பயன் படுத்துவதில்தான் உங்கள் திறமை இருக்கிறது...

Sunday 4 March 2018

சகல பிரச்னைகளுக்கும் இது தான் வழி.

இயல்பாக
வாழ்க்கையை
அதன் போக்கில்
விடுங்கள்
🌼🌸🌼
கன்பூசியஸ் என்ற மகான் லூலியாங் என்ற மாபெரும் நீர்வீழ்ச்சியை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

அது சுமார் 200 அடிக்கு மேலே இருந்து விழுந்து கொண்டிருக்கிறது -

அதனுடைய நுரை சுமார் 15 மைல் தூரம் வரை செல்கிறது. அவ்வளவு வேகம்.

பலவீனமான மென்மையான பொருட்கள் அந்த நீர்வீழ்ச்சியில் பட்டால் உயிரோடு இருக்காது.

இருந்தாலும், அதனுள் ஒரு கிழவன் செல்லுவதை கன்பூசியஸ் பார்த்து விட்டார்.

அந்த கிழவனுக்கு கண் தெரியவில்லையா? அல்லது தற்கொலையா என்று திகைத்துவிட்டார்.

சீடர் ஒருவரை அழைத்து " ஓடிச் சென்று அந்த கிழவனை காப்பாற்றுங்கள்" என்றார்.

ஆனால் அந்த கிழவன் அந்த நீர்வீழ்ச்சியில் விழுந்து சுமார் 100 அடி தூரத்தில், நீர் சொட்ட சொட்ட எழுந்து ஆற்றின் வேகத்திலேயே சென்று கரையில் ஒதுங்கி ஏறினான்.

கன்பூசியஸ் ஆச்சரியப்பட்டு அந்த கிழவனிடம் ஓடிச் சென்று கேட்டார்.

இந்த சக்தி வாய்ந்த நீர்வீழ்ச்சியில் விழுந்து எப்படி கரை ஏறினீர்கள்?

அதற்கு அந்த கிழவன்" நான் எதுவும் எதிர்த்து செய்ய மாட்டேன். அப்படி எதிர்க்கவும் எனக்கு தெரியாது'

அந்த சுழற்சியின் போக்கிலேயே, எந்தவித மறுப்பும் சொல்லாமல் செல்வேன். பிறகு சுலபமாக வெளியே வந்து விடுவேன்." என்றான்.

மனிதனின் சகல பிரச்னைகளுக்கும் இது தான் வழி.

🌷🌼🌷

அன்பை சம்பாதியுங்கள்.

ஒரு மனிதர் சாலை ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தபோது தெரியாமல் இன்னொரு நபர் மீது இடித்துவிட்டார். ஐயோ… தெரியாமல் இடித்து விட்டேன் மன்னித்து விடுங்கள் என்று இவர் சொல்ல, பரவாயில்லை என்று அவர் சொல்ல இருவருமே கண்ணியத்துடனும் புன்னகையுடனும் விடைபெற்றார்கள். அவர்களிடையே மனஸ்தாபத்துக்கான காரணமில்லாமல் போயிற்று.

அன்று அவர் வீட்டுக்கு வந்தார்.

இரவு உணவு முடித்து திரும்புகையில் அவருடைய மகன் அவருக்குப் பின்னால் நின்றிருந்தான், கைகளைப் பின்னால் கட்டியபடி. தந்தை திரும்புகையில் அவனைத் தெரியாமல் இடித்து விட்டார்.

‘வழியில் நிற்காதே.. ஓரமாய்ப் போ..’ அவருடைய வார்த்தையில் அனலடித்தது. சிறுவன் முகம் வாடிப்போய் விலகினான். அவனுடைய கண்களில் சோகத்தின் நதி முளைத்தது. அது இமை ஓரங்களை இடித்து தரையிறங்கத் துவங்கியது.

இரவு தூங்குகையில் அவர் மனதுக்குள் ஒரு சிந்தனை ஓடியது. வழியில் யாரோ ஒருவரிடம் நாகரீகமாகவும், அன்பாகவும் நடந்து கொள்ளத் தெரிந்த எனக்கு சொந்த மகனிடம் அப்படி நடந்து கொள்ளத் தெரியவில்லையே என்று மனதுக்குள் எண்ணினார். நேராக எழுந்து மகனின் படுக்கையறைக்குச் சென்றான்.

உள்ளே மகன் தூங்காமல் விசும்பிக் கொண்டிருந்தான். அவனுடைய கண்கள் சிவந்திருந்தன. அவனருகில் மண்டியிட்ட தந்தை
‘என்னை மன்னித்துவிடு நான் உன்னிடம் அப்படிப் பேசியிருக்கக் கூடாது..’ என்றார்.

சிறுவன் திரும்பினான். சிறுவனின் கண்களிலிருந்த கவலை சட்டென்று மறைந்தது. எழுந்து உட்கார்ந்தான். வேகமாக கட்டிலிலிருந்து கீழே குதித்து கட்டிலினடியில் வைத்திருந்த பூங்கொத்தை தந்தையின் கையில் வைத்தான்.

‘இதென்ன ?’ தந்தை வியந்தார்.

இன்றைக்கு வெளியே நடந்து கொண்டிருந்தபோது இந்தப் பூக்களைப் பார்த்தேன். பல நிறங்களில் இருந்த பூக்களைப் பொறுக்கி உங்களுக்காக ஒரு மலர்க்கொத்து செய்தேன். அதிலும் குறிப்பாக உங்களுக்கு நீல நிறம் பிடிக்கும் என்பதற்காக அதை நிறைய சேகரித்தேன். அதை உங்களிடம் ரகசியமாகச் சொல்வதற்காகத் தான் உங்கள் பின்னால் வந்து நின்றேன்… சிறுவன் சொல்ல தந்தை மனம் உடைந்தார்.

சிறுவனையும் மலர்களையும் ஒருசேர அணைத்த அவருடைய கண்களில் கண்ணீர் வழிந்தது.

ஒரு மழலையின் அன்பைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் தான் இருந்ததற்காக அவர் வருந்தினார்.

குடும்பம் என்பது கடவுள் நமக்காக பூமியில் ஏற்பாடு செய்திருக்கும் சொர்க்கம். அதை சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் நம்முடைய செயல்களில் தான் இருக்கிறது.

பணத்துக்கான ஓட்டங்களில் நாம் இழந்து கொண்டிருப்பது ஆனந்தத்தின் நிமிடங்களை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு வேளை நாம் நாளை இறந்து போக நேரிட்டால் அலுவலகம் இன்னொரு திறமை சாலியை சில நாட்களில் கண்டு பிடிக்கும். குடும்பம் அப்படியல்ல. ஏற்படும் இழப்பு ஆழமாய்த் தைத்த முள் போல நினைவுகளால் நிமிண்டும் போதெல்லாம் வலித்துக் கொண்டே இருக்கும்.

வாழ்க்கையில் எல்லாம் இருந்தாலும் அன்பினால் நிரப்பப்படாவிட்டால் அது வெறுமையாகவே இருக்கும். பணமே மகிழ்ச்சியைத் தரும் என்பது தலைமுறைக்குத் தரப்பட்டிருக்கும் தவறான பாடம். மகிழ்ச்சியை சதுர அடிகளில் வாங்க முடியாது. எனவே தான் ஏழைகளால் மகிழ்ச்சியாய் இருக்க முடிந்த அளவுக்கு பணக்காரர்களால் நிம்மதியாக இருக்க முடிவதில்லை.

குடும்பங்களில் அதிக நேரம் செலவிடுங்கள்.
அன்பை அதிகமாய் சம்பாதியுங்கள்.

Friday 2 March 2018

மகிழ்ச்சி

நார்மன் வின்சென்ட் பீலே என்ற உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் *“The power of positive thinking”* என்ற புத்தகத்தில் அவர் வாழ்வில் நிகழ்ந்த  நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி குறிப்பிடுகிறார் !

தோல்வி மேல் தோல்வி அடைந்து விரக்தியின் விளிம்பில் இருந்த ஒருவர் பீலேவை சந்திக்க வருகிறார் !

_தனது வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் தான் சிரத்தையுடன் சிரமப்பட்டு செய்யும் செயல்கள் கூட துன்பமயமாக இருக்கிறது என்றும் பீலேவிடம் புலம்பினார் !_

பீலே அவரிடம் ஒரு துண்டு காகிதத்தை எடுத்து அதன் நடுவே கோடு ஒன்றைப் போட்டுக் கொடுத்தார்.

*கோட்டுக்கு வலது பக்கம் அவருடைய வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளையும் கோட்டுக்கு இடது பக்கம் துன்பமயமான நிகழ்வுகளையும் எழுதச்சொன்னார்.*

வந்தவரோ “என் வாழ்க்கையை பொறுத்த வரையில் *வலது பக்கம் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. வலது பக்கம் காலியாகவே இருக்கப் போகிறது”* என்று புலம்பிக் கொண்டு அந்த துண்டு காகிதத்தை வாங்கினார்.

சிறிது நேரம் கழித்து காகிதத்தை வாங்கிப் பார்த்த போது *வலது பக்கம் காலியாகவே இருந்தது.*

இப்போது பீலே சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். “உங்களுடைய மகன் எப்போது ஜெயிலில் இருந்து வந்தான்?” என்று பீலே கேட்டார்.
அதற்கு அவர் *'எனது மகன் ஜெயிலுக்கே போகவில்லையே'* என்று கூறினார். “இது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே. இதை வலது பக்கம் எழுதலாமே” என்றார்.

தொடர்ந்து “உங்களுடைய மனைவி உங்களை எப்போது விவாகரத்து செய்தார்?” என கேட்ட கேள்விக்கு *என் மனைவி என்னுடன் தான் இருக்கிறாள் என்றார்.*

“எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தீர்கள்?” என்ற கேள்விக்கு *'சாப்பிடாமல் நான் ஒருநாள் கூட இருந்ததில்லை'* என்று பதிலளித்தார்.

“உங்கள் வீடு தண்ணீரில் மூழ்கியபோது என்ன செய்தீர்கள்?” என்ற கேள்விக்கு *'என் வீடு பத்திரமாகத்தான் இருக்கிறது'* என்று பதில் கூறினார்.

இப்படி ஒவ்வொரு கேள்வியாக கேட்க கேட்க கோட்டின் *வலப்புறம் நிரம்பியிருந்தது.*

*இடது பக்கத்தில் எழுத இன்னும் இடமிருந்தது.*

கடந்த காலத்தில் *முழுக்க முழுக்க மகிழ்ச்சியான* நிகழ்வுகளைக் கொண்ட மனிதர் என்று இந்த உலகில் யாரும் இல்லை.

அதுபோல *முழுக்க முழுக்க துன்பமயமான* நிகழ்ச்சிகளை மட்டும் கொண்ட மனிதர் என்று யாரும் இல்லை.
*_இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை !_*

ஆனால் சிலர் ~துன்பமான நிகழ்வுகளை மட்டுமே கணக்கிலெடுத்து தங்களுடைய வாழ்க்கையை தாழ்த்திக் கொள்கிறார்கள்.

*~கடந்த காலம் நம் தலையை உடைக்கும் சுத்தியலாக இருக்கக்கூடாது.

~அது நம்மை முன்னோக்கி உந்தித் தள்ளும் தள்ளுபலகையாக இருக்க வேண்டும்.

*என்ன நடந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வேன் என்று முடிவெடுங்கள்.* மகிழ்ச்சியே நமது வாழ்க்கையின் வழியாக இருக்கட்டும்.

Thursday 1 March 2018

வெற்றிக்கனி

வெற்றிக்கனி உங்கள் கையில்

என்ன வேலை செஞ்சு என்ன பிரயோஜனம்! கஷ்டப்பட்டு உழைச்சேன்! பத்து பைசா வருமானம் உண்டா! உம்...'' என்று பெருமூச்சுடன் "உச்' கொட்டுபவர்கள் ஏராளம்.

இப்படிப்பட்ட நபர்களைப் பார்த்தார் ராபர்ட் ரிப்ளி என்னும் எழுத்தாளர். அமெரிக்காவைச் சேர்ந்தவர். "பீலிவ் இட் ஆர் நாட்' (நம்பினால் நம்புங்கள்) என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதினார்.

அதில் அவர் சொல்கிறார். நான்கு பேர் ஆளுக்கொரு இரும்புத்துண்டை 250 ரூபாய்க்கு வாங்கினர்.

ஒருவன், அதை ஏதோ சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தினான். இன்னொருவன் அதை உருக்கி, குதிரைக்கு லாடம் செய்தான். அதை 2500 ரூபாய்க்கு விற்றான். இன்னொருவன் தையல் இயந்திரத்துக்கு தரமான ஊசிகள் செய்தான். அவை 2.5 லட்சம் ரூபாய்க்கு விலை போயின. இன்னொருவன் அதையே சக்தி வாய்ந்த இயந்திரம் ஒன்றுக்கு ஸ்பிரிங்குகளாகச் செய்து இரண்டரை கோடிக்கு விற்று லாபம் சம்பாதித்தான்.

ஆக, இரும்புத்துண்டு ஒன்று தான். அதை விதவிதமாக வடிவமைக்கும்போது, அதன் மதிப்பு பலமடங்கு பெருகுகிறது. இரும்பை வாங்கிய ஒருவன் அதைப்பற்றி சிந்திக்கவே இல்லை. எதற்காக வாங்கினானோ, அந்த வேலையை மட்டும் செய்து விட்டு ஒதுங்கி விட்டான். அதேபோன்ற இரும்புத்துண்டை வாங்கிய மற்ற மூவரும் அவரவர் சிந்தனை, திறமையைப் பொறுத்து ஆயிரம், லட்சம், கோடிகளாக மாற்றினர்.

நம் எல்லாருக்கும் திறமை ஒளிந்து கிடக்கிறது. அதை நாம் தான் வெளிப்படுத்த வேண்டும். சிந்திக்கும் திறன் மட்டும் வாழ்வை மாற்றிவிடாது. சிந்தனையை தைரியத்துடன் செயல்படுத்துவனே வாழ்வில் வெற்றி பெறுகிறான். இதற்கு கடவுளின் அனுக்கிரகமும் தேவை.

எனவே, காலையில் எழுந்ததும், ""நான் இன்று இன்ன வேலை செய்யப்போகிறேன், அதை நிறைவேற்ற நீ என்னோடு இரு,'' என்று கடவுளை வேண்டியபிறகு பணிகளைத் துவக்குங்கள்! கடவுள் உங்கள் பக்கம் நிச்சயம் இருப்பார். நீங்கள் வெற்றிக்கனிகளைப் பறித்து தள்ளூவீர்கள்

ஆழ்மன உத்திகள். .

நீங்கள். .  ஓய்வாக  இருக்கும் நேரம். ...   உங்கள்   மூச்சை   இரண்டொரு  நிமிடம்  கவனியுங்கள். .     பின். .

நீங்கள்  ஒவ்வொரு  முறை.
   மூச்சை   உள்ளே  இழுக்கும் போதும் .   செல்வத்தை  ஈர்க்கும்  சக்தி   .என் உடல் முழுவதும்   நிறைகிறது. . என மனதில்  நினையுங்கள். . ஆரோகியத்தை தரக்கூடிய  சக்தி  என் உடல் முழுவதும்  நிறைகிறது  . என நினையுங்கள்.
இளமையை தரக்கூடிய. சக்தி  என உடல் முழுவதும் நிறைகிறது.. என நினையுங்கள்
என் எண்ணங்களை எல்லாம்  நிறைவேற்றும் சக்தி   என் உடல் நிறைகிறது  என நினையுங்கள். .

இவ்வாறாக    தினமும்    காலையோ . மாலையோ   . ஒரு பத்து நிமிடம்  செய்து  விட்டு  .உங்கள்   உடல்    ஒரு புது உணர்வை  அடைந்து  விட்டதாக  உணந்து வாருங்கள்   உங்கள் வாழ்க்கையில்  இன்பங்கள் பெருகும்  .அற்புதங்கள்  பெருகும் .