Tuesday 30 August 2016

புரிதல்களும், வாழ்க்கையும்

தவளைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த ஒருவன்.

"தாவு"என்று சொன்னால் தாவும்படி பழக்கியிருந்தான் அவன் தவளையை.

ஆராய்ச்சியில்,

ஓர் காலை வெட்டி விட்டு "தாவு"என்றான்,
தாவியது.

இரண்டாம் காலை வெட்டி விட்டு"தாவு"என்றான்,
வலியோடு தாவியது.

மூன்றாம் காலை எடுத்தும் " தாவு" என்றான்,
மிகுந்த வலியோடு ஒற்றைக் காலால் தாவியது.

நான்காம் காலையும் வெட்டி விட்டு "தாவு"என்றான்,
நகர முடியாமல் பரிதாபமாய் படுத்துவிட்டது.

மறுபடி தாவச் சொல்லி கத்திக் கொண்டேயிருந்தான்,
அதனிடமிருந்து அசைவேயில்லை!

தன் ஆராய்ச்சி முடிவை இப்படி எழுதினான்,
"நான்கு கால்களையும் வெட்டி எடுத்து விட்டால்,
தவளைக்கு காது கேட்காது" என்று.

நிகழ்கால சமூகத்தில்
இப்படித் தான் சிலரின் புரிதல்களும், வாழ்க்கையும் உள்ளது.

உங்களிடம் என்ன இருக்கு

கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் பிரிக்கப்பட்டபோது, இரண்டுக்கும் இடையில் ஒரு பெரிய சுவர் எழுப்பப்பட்டது.

ஒருநாள் கிழக்கு பெர்லினில் இருந்தவர்கள் நிறைய 
குப்பைகளை கொண்டுவந்து மேற்கு ஜெர்மனி எல்லைக்குள் கொட்டிவிட்டு சென்றுவிட்டனர்.

ஆனால் மேற்கு ஜெர்மனிகாரர்கள் பதிலுக்கு என்ன செய்தார்கள் தெரியுமா..?

ஒரு லாரி நிறைய ரொட்டிகள் பழங்கள் , மளிகை பொருட்களை எடுத்து வந்து அழகாக எல்லையில் அடுக்கி வைத்துவிட்டு சென்றனர். அதன் மேல், *தன்னிடம் உள்ளதையே ஒருவன் கொடுப்பான்* என்ற வாசகம் அடங்கிய அட்டையை வைத்துவிட்டு சென்றுவிட்டனர்..

உண்மைதானே .. உங்களிடம் உள்ளதைத்தானே பிறருக்கு தருவீர்கள்..

என் இனிய நண்பனே, உன்னிடம் என்ன உள்ளது ?

*அன்பா , வெறுப்பா, பிறருக்கு நீ எதை தரப்போகிறாய், வன்முறையா, அமைதியா, மரணத்தையா அல்லது நிம்மதியான வாழ்வையா*

உன் இத்தனை ஆண்டு வாழ்க்கையில் எதை நீ பெற்றாய்..?

ஆக்கும் சக்தியையா, அழிக்கும் தன்மையையா ?
பணத்தை சம்பாதிக்கும் வித்தையையா , அல்லது கொள்ளையடிக்கும் தந்திரத்தையா..?

நல்லவைகளை கண்டறியும் நல்லறிவையா, தீயவைகளை தரும் தொழில்நுட்பமா..

தன்னிடம் உள்ளதைத்தானே பிறருக்கு தருவான் மனிதன்..
உங்களிடம் என்ன இருக்கு.. எதை தரப்போகிறீர்கள்..
*#சிந்தியுங்கள்..*

கஜூராஹோ மற்றும் கோனார்க

கஜூராஹோ மற்றும் கோனார்க் பற்றி ஓஷோ;

இந்த உலகத்தில் இருக்கும் கோயில்களிலேயே, மிகவும் புனிதம் நிறைந்த கோயில்கள் : கஜூராஹோ மற்றும் கோனார்க் ஆகிய கோயில்கள்தான். மற்ற கோயில்கள் அனைத்தும் மிகச் சாதாரணமானது, பொய்யானது. மேற்சொல்லிய இரண்டு இடங்களில் உள்ள கோயில்கள்தான், உங்களுக்கு வேறுவிதமான செய்திகளை அறிவிக்கின்றன. அது சாதரணமானது அல்ல. மிகவும் முக்கியம் வாய்ந்தது. ஏனென்றால், அவை உண்மை. அவற்றுடைய செய்திகள் என்ன?

நீங்கள் அந்தக் கோயிலில் இருந்தால், அந்தக் கோயிலின் வெளிச்சுற்றில் எல்லாவிதமான உடலுறவு நிலைகளைக் காணலாம். அதாவது ஆண்களும், பெண்களும் பலவித நிலைகளில் உடலுறவில் ஈடுபட்டிருப்பதைக் காணலாம். அந்த நிலைகள் நடக்கக் கூடியதாகவும் இருக்கலாம் அல்லது நடக்க முடியாமலும் இருக்கலாம். அதை உங்களால் ஏற்றுக்கொள்ளும் நிலையிலும் இருக்கலாம். ஏற்க முடியாமலும் இருக்கலாம். அந்தச் சுவற்றின் எல்லா இடங்களிலும், உடலுறவு சிலைகள்தான்! முதலில் அவற்றைப் பார்க்கும்பொழுது, ஒருவனுக்கு அதிர்ச்சி ஏற்படுவது சகஜம். என்ன அசிங்கம் என்று அவன் முகம் சுளிக்கக்கூடும்! அதிலிருந்து ஒருவன் வெளியேறவே நினைப்பான். அவைகளை நிந்தனை செய்வான். ஒருவன் தன் கண்களை கீழே தாழ்த்தக்கூடும். ஆனால், அந்த செய்கையிளெல்லாம் அந்தக் கோயிலால் நேர்ந்தது அல்ல. அவை அனைத்தும் உங்கள் உள்ளே உள்ள பாதிரியார்களாலும் மற்றும் அவர்களால் ஏற்படுத்திய சிறையினாலும்தான்.

அதன் உள்ளே செல்லுங்கள். நீங்கள் அந்தக் கோயிலின் உள்ளே செல்லும்பொழுதே, அந்தச் சிலைகளின் எண்ணிக்கை குறைவதைக் காணலாம். அந்த அன்புநிலை மாறுவதைக் காணக்கூடும். அந்தக் கோயிலின் வெளிச்சுவர் முழுவதும் உடலுறவு சிலைகள்தான். ஆனால், உள்ளே நுழையும்பொழுது, காம இச்சை மறைந்து, வெறும் அன்பு மட்டும் இயங்குவதைப் பார்க்கலாம். ஆண்-பெண் இருவரும் மிகுந்த ஆழமான காதலில் இருப்பதைக் காணலாம். அவர்கள் இருவரும் ஒருவர் கண்களை, மற்றவர் ஆழமாகப் பார்த்துக்கொண்டும், கைகளை அன்புடன் கோத்துக்கொண்டும், மற்றபடி வேறுவிதங்களில் தொடாமலும் இருப்பதைக் காணலாம். அந்தக் கோயிலின் உள்ளே இன்னும் மேலே செல்லுங்கள்--அந்த ஜோடிகள் மறைந்தேவிட்டிருப்பார்கள். இன்னும் உள்ளே செல்லுங்கள். ....வெறும் சூன்யம்தான்.

அந்தக் கோயிலின் உள்மையத்தில்--கீழை நாட்டில் அழைக்கப்படும் GHARBA (கர்ப்பா) அதாவது கர்ப்பப்பை (WOMB) இருப்பதாக அர்த்தம். அங்கே எந்த ஒரு சிறு உருவமும் கிடையாது. அந்த வெளிச்சுற்றில் உள்ள கூட்டங்கள் மறைந்துவிட்டன. அதன் உள் மையத்தில், ஒரு ஜன்னல் கூட கிடையாது! வெளியிலிருந்து எந்த வெளிச்சமும் உள்ளே வராது. அங்கே ஒரே இருட்டாகத்தான் இருக்கும். அங்கே அமைதியும், நிசப்தமும் நிலவும். அங்கே எந்தக் கடவுள் சிலையும் இருக்காது. அது வெற்றிடம்தான். அது ஒன்றும் அற்றநிலைதான்!

உள்ளே உள்ள மையம் ஒன்றும் அற்ற நிலைதான்; வெளிச்சுற்றின் வெளிப்பாடு கொண்டாட்டம்தான். உள்ளே உள்ளநிலை தியானம், மற்றும் சமாதி நிலை; வெளிச்சுற்றின் வெளிப்பாடு காம உணர்வு. மனிதனிடம் அமைந்த முழு வாழ்க்கையின் தன்மையே இவைகள்தான்.
ஆனால் நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வெளிச்சுற்றை அழித்தால், நீங்கள் உள்மையத்தையும் அழித்தவராவீர்கள். ஏனென்றால், அந்த ஆழமான, நிசப்தமான உள்மையநிலை, வெளிச்சுற்றுச்சுவர் இல்லாமல் இருக்க முடியாது. ஒரு புயலின் மையம், புயல் இல்லாமல் இருக்க முடியாது. பொதுவாக, வெளிச்சுற்று இல்லாமல், உள்மையம் இருக்க முடியாது. அவைகள் இரண்டும் இணைந்தே இருக்க வேண்டும். ஓஷோ

Monday 29 August 2016

கோபம்

கோபம் வந்தால் வெற்று படகாய் மாறு

நீ படகில் சென்று கொண்டிருக்கிறாய்.

எதிரே மற்றொரு படகில் வந்து மோதும் போது அவர் மேல் கோபப்படுகிறாய்.

ஏனெனில் கோபம் கொள்ள ஒரு நபர் இருக்கிறார்.

அதுவே ஒரு காலியான படகு மோதும் போது
சூழ்நிலையை சரிசெய்கிறாய்.

அதன்மீது கோபப்பட மாட்டாய்.

ஏனெனில் அங்கே கோபம் கொள்ள நபர் யாரும் இல்லை.

வெறுமையே உள்ளது.

நீ வெறுமையாக இருக்கும்போது
உன்மேல் யாராலும் கோபப்பட முடியாது.

அது உன்னையும் தாக்காது.

வெற்றுப்படகாய் மாறிவிடு

~ ஓஷோ ~

Tuesday 23 August 2016

ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...

Who will cry when you die?" - ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்...

அதாவது,
"நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்...
“நீ பிறந்த போது, நீ அழுதாய்... உலகம் சிரித்தது...
நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்...

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்...

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலை படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழ பழகுங்கள்.
வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள்.
அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள்.
எங்கு சென்றாலும், பிரயாணத்தின் போதும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும். ஆகவே தேவையான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யுங்கள்.

11. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

12. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும், நல்ல நட்பும் கிடைக்கலாம்.

13. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

14. எதிலும் தனித்துவமாக இருங்கள். பிறர் செய்வதையே வித்தியாசமாக, நேர்த்தியாக செய்யுங்கள்.

15. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

16. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

17. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

18. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

19. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே!
"ஆணவம் ஆயுளை குறைக்கும்..."

Saturday 20 August 2016

உழைப்பும் ஒருவகை தியானம்.

✋🏻 *உழைப்பும் ஒருவகை தியானம்..*💪🏼

🎋ஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை. அதனால் அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்கும்.

ஒருநாள் திடீரென்று ""இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா?'' என்று அதற்கு சந்தேகம் வந்தது. பின்னர் தானாகவே, "இறைவனுக்கு எல்லாம் தெரியும்" என்று சமாதானம் செய்துகொண்டது.

ஒருநாள் அந்தக் கழுகு, ""இன்று எனக்கு உணவு கிடைக்குமா? இறைவன்தான் எல்லோருக்கும் படியளப்பவன் ஆயிற்றே...'' என்று யோசித்தது. உணவு கிடைக்குமா? என்ற சந்தேகம் வந்ததும் அந்தக் கழுகு அமர்ந்து தியானம் செய்யும் பாறை மீது நின்று, "இறைவா, இன்று எனக்கு உணவு கிடைக்குமா?'' என்று பெரிய குரலெடுத்துக் கூவியது.

உடனே விண்ணிலிருந்து ஒரு குரல், "உனக்கு இன்று உணவு உண்டு'' என்று பதில் கூறியது.
மிக்க மகிழ்ச்சியுடன் "இன்று இரை தேடும் வேலை இல்லை, எப்படியும் உணவு கிடைத்துவிடும்'' என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப் பாறை மீது அமர்ந்திருந்தது.
நேரம் செல்லச்செல்ல கழுகுக்குப் பசி வரத் தொடங்கியது. ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறை தியானத்திலேயே அமர்ந்திருந்தது.

மதியம் ஆயிற்று, மாலையும் போயிற்று. இரவு வந்துவிட்டது.
"நம்மை இறைவனே ஏமாற்றிவிட்டாரே'' என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு.

அப்போது ஒரு குரல் கேட்டது. "என்ன குழந்தாய். சாப்பிட்டாயா?'' என்றதைக் கேட்டதும், கழுகுக்கு அழுகை வந்துவிட்டது.
"குழந்தாய் சற்று திரும்பிப் பார். உன் பின்னாலேயே உனக்கான உணவு இருக்கிறது'' என்றது.
கழுகு பின்னால் சென்று பார்த்தது. அங்கே ஒரு பெரிய எலி இறந்துகிடந்தது. கழுகு புன்னகை புரிந்தது.

இறைவனிடம் , "இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?' என்றது.
அதற்கு இறைவன் பதிலளித்தார்..
"குழந்தாய், உனக்குரிய நேரத்தில் உணவு வந்துவிட்டது. நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய். திரும்பிப் பார்க்கும் முயற்சிகூடச் செய்யாமல் உணவு எப்படிக் கிடைக்கும்?"

கடுகளவேனும் முயற்சி வேண்டும். ஒரு வேளை உணவுகூட உழைக்காமல் உண்ணக்கூடாது. அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும்'' என்று கழுகுக்கு ஆசி கூறி மறைந்தார் இறைவன்.

அன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக் கடமையைச் செய்யத் தொடங்கியது..

தெய்வ நம்பிக்கை எல்லோரிடமும் இருக்க வேண்டும் ஆனால் தெய்வத்தை நம்பியே ஒரே இடத்தில் இருந்து விடக்கூடாது. முயற்சி இல்லாமல் எதுவும் கிடைப்பது இல்லை..

உங்களால் சாதிக்க முடியும்.*

*உங்களை நம்புங்கள் நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும்.*

1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம்.  அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.

5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.

7.முப்பதுகளைக் கடக்கும் முன்,       மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.

8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே     இருக்கட்டும்.

11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.

12. சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.

13. ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.

14.  அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.

15. மற்றவர்களின் தவறுகளை மன்னியுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.

16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.

17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.

19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.

20. உங்கள் நேரத்திற்கும், மற்றவர்கள் நேரத்திற்கும் உரிய மரியாதை கொடுங்கள்.

21. உங்களிடம் இல்லாத தகுதிகள் இருப்பதாக நம்பவோ நம்ப வைக்கவோ முயலாதீர்கள்.

22. உங்கள் திறமைகளை நீங்களே விவரித்துக் கொள்ளாதிர்கள். உரிய நேரத்தில் நிரூபியுங்கள்.

23. மேடைக் கூச்சம், கேமரா கூச்சம் இல்லாமல் இருங்கள்.

24. தண்ணீரையும் மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும் எதிர்காலத்திற்காக சேர்க்கும் சொத்துக்கள்தான்.

25. உங்கள் தனிப்பட்ட           நம்பிக்கைகளையும் பழக்கங் களையும் மற்றவர்கள் மேல் திணிக்காதீர்கள்.

_உங்களை நம்புங்கள் நிச்சயம் உங்களால் சாதிக்க முடியும்._

நன்றியுணர்ச்சி

*முதலாளி*

சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக் கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்.”

“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை. வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.”

“வேறு ஒண்ணா…? ஏதுவா இருந்தாலும் சரி என் பிரச்னை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன்.

“உன்னை என்னுடைய பிஸ்னஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.”

“என்னது பிஸ்னஸ் பார்ட்னரா

ஆமாம்… எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம். உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன். நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்!”

“முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு” என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.

“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்…? உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.

“இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்”

அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.

“என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான்.

“ஆமாம்ப்பா உனக்கு 90% எனக்கு ஜஸ்ட் 10% போதும். எனக்கு பணம் தேவையில்லை. அது நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காகத் தான்.”

“எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்” அடுத்தநொடி பிச்சைக்காரன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்துவிட்டான்.

இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது.

ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான்.

புத்தம்புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான். கழுத்தில் மைனர் செயின் அணிந்துகொண்டான். இரவு பகலாக லாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.

ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிஸ்னஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான்…. “என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. உழைப்பு எல்லாம் என்னோடது. இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான்.

அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட  பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார்… “உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்!” என்று ரூல்ஸ் பேசினான்.

அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்?

ஒரு செகண்ட் யோசியுங்களேன்….

இது தான் நமது எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறது.

ஆண்டவன் தான் பிஸ்னஸ் பார்ட்னர். நாம் தான் அந்த புதுப்பணக்காரன் (?!).

ஆண்டவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை.

ஒவ்வொரு நொடியை.

நாம் விடும் ஒவ்வொரு மூச்சை.

ஐம்புலன்களை நமக்கு கொடுத்து அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல்கள் கொடுத்தான் இறைவன்.

அதுமட்டுமா? ஐம்புலன்கள் போதாது என்று கை, கால், இதயம், சிறுநீரகம், கல்லீரல் என விலை மதிக்கவே முடியாத நம் உடலுறுப்புக்கள் கொடுத்தான்.

இப்படி இறைவன் நமக்கு கொடுத்தவற்றை பட்டியலிட துவங்கினால்… அது முடிவே இல்லாமல் தான் போய்கொண்டிருக்கும்.

இவ்வளவு தந்த அவனுக்கு ஜஸ்ட் ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்.

அது கூட அவனது தேவைக்காக அல்ல.

அவன் தேவைகள் அற்றவன்.

நமது நன்றியுணர்ச்சிக்காக அதை எதிர்பார்க்கிறான்.

அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக.

*முதலாளி*

சார்… எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது. கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக் கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்.”

“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை. வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.”

“வேறு ஒண்ணா…? ஏதுவா இருந்தாலும் சரி என் பிரச்னை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன்.

“உன்னை என்னுடைய பிஸ்னஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.”

“என்னது பிஸ்னஸ் பார்ட்னரா

ஆமாம்… எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம். உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன். நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்!”

“முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு” என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.

“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்…? உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.

“இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்”

அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.

“என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான்.

“ஆமாம்ப்பா உனக்கு 90% எனக்கு ஜஸ்ட் 10% போதும். எனக்கு பணம் தேவையில்லை. அது நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காகத் தான்.”

“எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்” அடுத்தநொடி பிச்சைக்காரன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்துவிட்டான்.

இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது.

ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான்.

புத்தம்புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான். கழுத்தில் மைனர் செயின் அணிந்துகொண்டான். இரவு பகலாக லாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.

ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிஸ்னஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான்…. “என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. உழைப்பு எல்லாம் என்னோடது. இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான்.

அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட  பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார்… “உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்!” என்று ரூல்ஸ் பேசினான்.

அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்?

ஒரு செகண்ட் யோசியுங்களேன்….

இது தான் நமது எல்லார் வாழ்க்கையிலும் நடக்கிறது.

ஆண்டவன் தான் பிஸ்னஸ் பார்ட்னர். நாம் தான் அந்த புதுப்பணக்காரன் (?!).

ஆண்டவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை.

ஒவ்வொரு நொடியை.

நாம் விடும் ஒவ்வொரு மூச்சை.

ஐம்புலன்களை நமக்கு கொடுத்து அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல்கள் கொடுத்தான் இறைவன்.

அதுமட்டுமா? ஐம்புலன்கள் போதாது என்று கை, கால், இதயம், சிறுநீரகம், கல்லீரல் என விலை மதிக்கவே முடியாத நம் உடலுறுப்புக்கள் கொடுத்தான்.

இப்படி இறைவன் நமக்கு கொடுத்தவற்றை பட்டியலிட துவங்கினால்… அது முடிவே இல்லாமல் தான் போய்கொண்டிருக்கும்.

இவ்வளவு தந்த அவனுக்கு ஜஸ்ட் ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்.

அது கூட அவனது தேவைக்காக அல்ல.

அவன் தேவைகள் அற்றவன்.

நமது நன்றியுணர்ச்சிக்காக அதை எதிர்பார்க்கிறான்.

அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக.

நன்றியுணர்ச்சி மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?

இறைவனை வணங்குவதோ, பதிகங்களை படிப்பதோ, கோவிலுக்கு செல்வதோ, உழவாரப்பணி முதலானவற்றில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வதோ அல்லது சக மனிதர்களுக்கு உதவுவதோ –
இவை யாவும் செய்வது நமக்காக தான்.

நாம் நன்றியுடன் இருக்கிறோம் என்று காட்டத்தான்.

மற்றபடி இறைவனுக்கு அது தேவை என்பதால் அல்ல.... மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?

இறைவனை வணங்குவதோ, பதிகங்களை படிப்பதோ, கோவிலுக்கு செல்வதோ, உழவாரப்பணி முதலானவற்றில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வதோ அல்லது சக மனிதர்களுக்கு உதவுவதோ –
இவை யாவும் செய்வது நமக்காக தான்.

நாம் நன்றியுடன் இருக்கிறோம் என்று காட்டத்தான்.

மற்றபடி இறைவனுக்கு அது தேவை என்பதால் அல்ல....